நாட்டு நடப்பு

தமிழகம்: 125 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்!

    "நடைபெறும் 2011 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பிரபல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 679 வேட்பாளர்களில், 125 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இதில் 66 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்றும் தனியார் சேவை அமைப்பான தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் சார்பில் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அடுத்த ஆட்சி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் 2011 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை (ஏப்ரல் 13) நடைபெற உள்ளது. தமிழகத்தின் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 2,773 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் சுயேட்சைகள் அல்லாத பிரபல அரசியல் கட்சிகளான திமுக, காங்கிரஸ், பாமக, அதிமுக, தேமுதிக, பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் கமிஷனுக்குச் சமர்ப்பித்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் 679 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத் தகவல்கள் டெல்லியிலிருந்து செயல்படும் ஜனநாயக சீர்த்திருத்த இயக்கத்தின் சார்பில் திரட்டப்பட்டுள்ளது.
திரட்டப்பட்ட தகவல்கள், இந்த அமைப்பின் சார்பு நிறுவனமான தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் மூலம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. வெளியான தகவல்களிலுள்ள 679 வேட்பாளர்களில் 125 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 66 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள விவரங்களும் தெரியவந்துள்ளன.
வெளியிடப்பட்ட தகவல்களில் கிரிமினல் வழக்கு நிலுவையிலுள்ள வேட்பாளர்கள் விவரம் வருமாறு:
திமுக  - 119 வேட்பாளர்களில் 111 பேர் தேர்தல் கமிஷனுக்குப் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்துள்ளனர். இதில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதிமுக - 160 வேட்பாளர்களில் 144 பேர் தேர்தல் கமிஷனுக்குப் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்துள்ளனர். இதில் 43 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
காங்கிரஸ் - 63 வேட்பாளர்களில் 54 பேர் தேர்தல் கமிஷனுக்குப் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்துள்ளனர். இதில் 6 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பாஜக - 169 வேட்பாளர்களில் 19 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தேமுதிக - 7 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பாமக - 14 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
விடுதலைச் சிறுத்தைகள் - 10வேட்பாளர்களில்  3 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.




கொடி கட்டி பறக்கும் “பிச்சை பிசினஸ்”! அதிர்ச்சித் தகவல்


 [Image]கோவை: கோவையில் போக்குவரத்து நெரிசலான இடங்களில் வட மாநிலத்தவர்கள் பச்சிளம் குழந்தையுடன் பிச்சை எடுக்கும் காட்சி நம் மனதை நெகிழவைக்கும் அதே சமயம் அதன் பின்னணியை பார்த்தபோது அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.தினமும் 50 ரூபாய் கொடுத்தால் போதும்'  பச்சிளம் குழந்தைகள் தின வாடகைக்கு கிடைக்கும் என, விளம்பரம் ஒன்றுதான் இல்லை அந்தளவுக்கு “பிச்சை பிசினஸ்” கொடிக்கட்டிப்பறக்கிறது. கோவையில் குழந்தைகளை வாடகைக்கு வாங்கி, சாலைகளில் பிச்சையெடுக்க பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.முன்பெல்லாம் ஆதரவற்றோர், முதியோர், நோயாளிகள் மட்டுமே கையேந்தி வந்தனர். தற்போது, இளம் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள்கூட ரோட்டில் ஆங்காங்கு அமர்ந்தும் வழிபாட்டு தலங்களில் அமர்ந்தும் பிச்சை எடுப்பதையும் தாராளமாக காண முடிகிறது. இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய் தற்போது பச்சிளம் குழந்தைகளையும் பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்தி வருகிறது சில  கும்பல். கோவையில் முகாமிட்டிருக்கும் வடமாநில பெண்கள் சிலர், கையில் பச்சிளம் குழந்தைகளுடன் முக்கிய சாலை சந்திப்புகளில் நின்று, சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுத்து வருகின்றனர்.பச்சிளம் குழந்தைகளை இடுப்பில் அமரவைத்து பிச்சை எடுக்கும் பெண்கள், ஒரு சில குழந்தைகளின் கை, கால்களில் ரத்த காயக்கட்டுகளும் போடப்பட்டிருக்கின்றன. சில குழந்தைகளின் முகம், தோள் பகுதிகளில் வெளிப்படையாக காணும் வகையில் காயங்களும் உள்ளன.குழந்தைகளை பார்க்கும் பலரும் நோட்டுகளை கொடுத்து "புண்ணியம்' தேடிக்கொள்கின்றனர். இம்முறையில்  ஒவ்வொரு பெண்ணுக்கும் தினசரி சுமார் 500 ரூபாய் வரை கிடைப்பதாக கூறப்படுகிறது. பார்ப்போர் பரிதாபப்பட வேண்டுமே என்பதற்காக குழந்தைகளுக்கு செயற்கையான காயத்தை ஏற்படுத்துவதாகவும் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுவரை காவல்துறையில் யாரும் புகார் தர முன்வரவில்லை.மேலும் பிச்சை எடுக்க பயன்படுத்தப்படும் பச்சிளம் குழந்தைகள் வாடகைக்கும் விடப்படுகின்றனர். கோவை மாநகரில் காந்தி புரம், பார்க் கேட், வ.உ.சி., மைதானம், நேரு ஸ்டேடியம், சிவானந்தாகாலனி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வடமா நிலத்தவர்கள் அதிகளவில் சாலையோரங்களில் தங்கியுள்ளனர். இங்குள்ள பல பெண்கள் தங்களது குழந்தைகளை, பிச்சை எடுக்கும் பெண்களுக்கு நாள் வாடகைக்கு விடுவதாகவும், அதற்கு கூலியாக 50 ரூபாய் பெறுவதாகவும் கூறப்படுகிறது.இந்திய தண்டனை சட்டப்படி பிச்சை எடுப்பது குற்றமாகும். இச்செயலில் ஈடுபடுவோரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டு. எனினும், இது ஒரு சமூக, பொருளாதாரம் சார்ந்த பிரச்னை என்பதால்,"பிச்சை எடுத்தல் தடைச்சட்டத்தை' அமல்படுத்துவதில் காவல்துறையினர் தீவிர முனைப்பு காட்டுவதில்லை. பிச்சைக்காரர்களை பிடித்து மாநகராட்சி, அரசு காப்பகங்களில் அடைத்தாலும் தப்பி யோடிவிடுகின்றனர். இதனால்  காவல்துறையினரும், சமூக ஆர்வலர்களும் குழப்பமடைந்துள்ளனர்.இருப்பினும், குழந்தைகளை வாடகைக்கு விடுவதும், பிச்சை எடுக்க வைப்பதும், காயம் ஏற்படுத்தி துன்புறுத்துவதும் கொடூரமான குற்றங்களாகும். இதுபோன்ற குற்றங்களை தடுக்கவாவது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்



தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்



Election Q தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்2011 சட்டமன்ற தேர்தல் பல வித சர்ச்சைகளுக்கிடையே நடைபெற்று முடிவிற்காக காத்து இருக்கிறது. “வரலாறு காணாத” என்ற வார்த்தை தமிழக ஊடகங்களிடையே ரொம்ப பிரபலமானது. ஒன்றுமில்லாத விசயத்திற்குக்கூட பரபரப்பிற்காக இதை பயன்படுத்துவார்கள் ஆனால் இந்த முறை உண்மையாகவே அதற்கு தகுந்த மாதிரி முதல் முறையாக 77.8% வாக்கு சதவீதம் நடைபெற்று அரசியல் கட்சிகளை மட்டுமல்ல அனைவரையும் ஏகத்திற்கும் குழப்பி விட்டு இருக்கிறது. பரபரப்பாக நடந்த தேர்தல் கலாட்டாக்களில் நான் கவனித்தவைகளை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
குறிப்பு: நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல.
கலைஞர் Vs ஜெ
கடந்த பல தேர்தல்களாக இவர்களே மாறி மாறி வந்துள்ளனர். இந்த முறை கலைஞர் என்றால் அடுத்த முறை ஜெ இது தான் இது வரை நடந்துள்ளது. மக்களுக்கு வேறு சொல்லிக்கொள்ளும்படியான மாற்றுத்தலைவர் இல்லாததால் வேறு வழி இல்லாமல் இவர்கள் இவரையே மாற்றி மாற்றி தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பது ஒரு சோகமான நிகழ்வு.
இலவசம்
இலவசம் இந்தத்தேர்தலில் மிக முக்கிய இடம் பிடித்துள்ளது. இலவசம் என்பது (பொருட்களாக) முதலில் ஆரம்பிக்கப்பட்டது ஜெ ஆட்சியில் தான் என்று நினைக்கிறேன் (தவறு இருந்தால் சுட்டவும்) ஜெ பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுத்தது தான் ஆரம்பம். இது தேர்தலுக்காக இல்லாவிட்டாலும் மக்களிடையே தற்போதைய இலவச தாக்கத்தை போல பெரிய அளவில் ஏற்படுத்தாவிட்டாலும் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்று இருந்தது. ஜெ ஆட்சி முடியும் போது கூட பெரிய அளவில் எதிர்ப்பில்லை. இதனால் இதை சமாளிக்க கலைஞர் எடுத்த பிரம்மாஸ்திரம் தான் இலவச வண்ண தொலைக்காட்சி. கலைஞர் அறிவித்தாலும் ஜெ இது போல சென்ற தேர்தலில் குறிப்பிடும் படியாக எதையும் அறிவிக்கவில்லை. பிறகு பல இடங்களில் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெ தோற்று இன்று வரை மைனாரிட்டி திமுக அரசு என்று கூறிக்கொண்டு இருக்கிறார்.
இந்தத்தேர்தலிலும் கடந்த தேர்தலைப்போல எக்கச்சக்க இலவசங்களை தேர்தல் அறிக்கையாக கலைஞர் அறிவிக்க சென்ற முறை போல இந்த முறை எதுவும் கூறாமல் இருந்தால் பெரும் பாதிப்பு வரும் என்பதை உணர்ந்து ஜெ வும் வரைமுறையே இல்லாத அளவிற்கு இலவசங்களை அள்ளி விட்டார். புதிதாக பார்ப்பவர்கள் எதோ கிண்டலுக்கு கூறி இருப்பார்கள் என்று நினைக்கும் அளவிற்கு இருந்தது. கலைஞர் கடந்த தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை ஏறக்குறைய நிறைவேற்றி இருந்தது அவருக்கு கூடுதல் பலம். இவர்கள் இருவரும் அறிவித்த இலவசங்களை வட மாநில ஊடகங்கள் கிண்டல் செய்து நமது மாநிலத்தின் மானத்தையே வாங்கி விட்டன.
உள்ளே விஜயகாந்த் வெளியே வைகோ
கடந்த தேர்தலில் தற்போது ஜெ செய்ததைப்போல (இல்லாமல் நாகரீகமாக) கலைஞரும் வைகோவிற்கு “இதயத்தில்” மட்டுமே இடம் கொடுத்ததால் அங்கே இருந்து விலகி ஜெ அளித்த தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு அதிமுக கூட்டணியில் இணைந்தார். இணைந்ததோடு ஜெ செய்த அராஜகத்தை எல்லாம் பொறுத்துக்கொண்டு அமைதி காத்தார். ஜெ க்கு யாருமே துணை இல்லாத போது அவருக்கு பக்க பலமாக இருந்தார் குறிப்பாக ஈழப்பிரச்சனை ஏற்பட்ட போது கூட சமாளித்து வந்தார் காரணம் ஈழத் தமிழர்கள் விசயத்தில் ஜெ முன்பு என்ன பேசினார் பின் எப்படி பல்டி அடித்தார் அனைவரும் அறிந்தது. இப்படி எந்த சூழ்நிலையிலும் பிரியாமல் இருந்த வைகோ வை படு கேவலமாக நடத்தி வெளியே அனுப்பினார் (வைகோ விற்கு இது தேவை தான் என்பது சிலர் வாதம்). அவர் கேட்ட சீட்டை கொடுக்காததோடு காக்க வைத்து வேறு கூட்டணியிலும் இணைய முடியாமல் செய்து விட்டார். இதன் பிறகு விஜயகாந்த் பல வித போராட்டங்கள் சண்டைகளுக்கிடையே 41 சீட்டைப் பெற்றார். பல காலம் அரசியலில் இருக்கும் வைகோ தற்போது வந்த விஜயகாந்துடன் போட்டி முடியாதது வருத்தமளிக்கும் விஷயம்.
வைகோவை வெளியேற்றியது ஜெ க்கு பலமா பலவீனமா?
நிச்சயம் பலவீனம் தான் காரணம் அதிமுக கூட்டணியில் ஜெ வைத் தவிர உறுதியாகப் பேச நபர் இல்லை. வைகோ இருந்து இருந்தால் மேடைகளில் வெளுத்து வாங்கி இருப்பார். வைகோ ஒரு சிறந்த பேச்சாளர் என்பதை எவரும் மறுக்க முடியாது. தன்னுடைய வாதங்களை அது சரியோ தவறோ ஆணித்தரமாக வைப்பார். கேட்பவர்களை தன் வாதங்களை ஏற்றுக்கொள்ளும்படி அவரது பேச்சு அமைந்து இருக்கும். இது நிச்சயம் அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்து இருக்கும். அதுவுமில்லாமல் வைகோ மீது மற்ற அரசியல்வாதிகள் அளவிற்கு மக்களுக்கு வெறுப்பில்லை. இன்னும் பலர் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இருப்பதில் நல்ல அரசியல்வாதி என்று கூற்றைக்கொண்டுள்ளனர்.
விஜயகாந்த்
Election 4 தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்கடவுளுடன், மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று கூறிக்கொண்டு இருந்த கேப்டன் பின் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். இதற்கு தனியாக நின்று வெற்றி பெற முடியாது மற்றும் கட்சி செலவு அதிகம் ஆகிக்கொண்டு செல்வது காரணமாகக் கூறப்படுகிறது. கூட்டணிக்கு முன்பு கேப்டனை ஜெ குடிகாரர் என்றும் அவர் தான் எனக்கு ஊத்திக்கொடுத்தார் என்று விஜயகாந்தும் கேவலமாக சண்டை இட்டுக்கொண்டார்கள். கேப்டன் குடிகாரர் என்ற பிரச்சனை தேர்தலில் ஆரம்பிக்க பிள்ளையார் சுழி போட்டதே ஜெ தான் என்று நினைக்கிறேன்.
குழப்பமான அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
ஜெ கூட்டணி கட்சிகள் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டது கூட்டணி கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் கூட்டணியை முறித்து மூன்றாவது அணி அமைக்கும் அளவிற்கு சென்று விட்டது. ஜெ அறிவிப்பைப் பார்த்து அதிமுக தொண்டர்களே மிரண்டு விட்டனர் மற்றவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பின்னர் விஷயம் விபரீதம் ஆவதை உணர்ந்த அதிமுக முக்கிய தலைகள் ஜெ விடம் பேசி பின் கூட்டணிக்கட்சிகளை சமாதானப்படுத்தினர். இது மக்களிடையே ஜெ மீது ஒரு வெறுப்பை கொண்டு வந்தது. ஜெ இன்னும் திருந்தவே இல்லை என்பதை நிரூபிப்பது போல இருந்தது.
ஜெ க்கு விஜயகாந்த் பலமா? பலவீனமா?
கூட்டணிக்கு முன்பு என்றால் நிச்சயம் பலம் மட்டுமே என்று கூறி இருக்கலாம் ஆனால் தற்போது கேப்டன் செய்த பல சொதப்பல்கள் பலம் + பலவீனம் என்று கூறும் அளவிற்கு வந்து விட்டது. சென்ற தேர்தலில் மிகச்சிறப்பாக பிரச்சாரம் செய்து 8% வாக்குகளைப் பெற்றவரா இவர்! என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இவரது பல நடவடிக்கைகள் இருந்தன.
வேட்பாளரை அடித்ததாக எழுந்த சர்ச்சையை அதோடு விடாமல் நான் அடித்தால் மகாராஜா ஆவார் என்று கூறி மேலும் சொதப்பியது, அதிமுகவையே தவறுதலாக விமர்சித்தது, அதிமுக, விஜய் மக்கள் கட்சி நபர்களிடம் கடுமையாக நடந்து கொண்டது என்று ரொம்பவும் சொதப்பி விட்டார். இவர் பேசாமல் இருந்தாலே போதும் என்கிற அளவிற்கு சில நேரங்களில் ஆனது. இருப்பினும் ஜெ க்கு பிறகு அவரது கூட்டணியில் விஜயகாந்த் பேச்சிற்கே அதிக வரவேற்பு இருந்தது. இந்த சொதப்பல்களை தவிர்த்து இருந்தால் மேலும் பல வாக்குகளைப் பெற்று இருக்கலாம். இதற்கு முழுக்காரணமே விஜயகாந்த் தான் வேறு யாருமல்ல. விஜயகாந்த் செல்லும் இடங்கள் எல்லாம் திமுக கூட்டணி கட்சிக்காரர்கள் பேசுவதை விட அதிகமாக கேப்டன் பேசுவதை கவர் செய்து ஒன்றுமில்லாத விஷயங்களைக்கூட பூதாகரமாகக் கூறி சன் டிவி செய்த டேமேஜ் ம் ஒரு காரணமாகக் கூறலாம்.
விஜயகாந்த் Vs வடிவேல்
Vadivel praise Captain தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்இந்தத்தேர்தலில் அறிவிக்கப்படாத ஹீரோ வடிவேல் தான். முதல் முறையாக கலைஞரை வைத்துக்கொண்டு மிகவும் கீழ்த்தரமாக பேசி நடந்து கொண்ட வடிவேல் அதன் பிறகு சுதாரித்து ஒவ்வொரு இடத்தில் பேசும் போதும் கேப்டன் மானத்தையே வாங்கி விட்டார். கேப்டன் இதற்கு எந்தவிதமான பதிலும் அளிக்காததால் அவரை சீண்டும் படி மீண்டும் மீண்டும் அவரை உசுப்பேத்திக்கொண்டே இருந்தார் ஆனாலும் கேப்டன் எதற்கும் பதில் தரவில்லை. வடிவேல் உஷாராக ஜெ வை தாக்காமல் கேப்டனை மட்டுமே தாக்கி வந்தாலும் அதிமுக கூட்டணியை வாரிக்கொண்டு இருந்தார்.
கேப்டனை வடிவேல் போட்டு வாங்கியது ஜெ க்கு நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருந்து இருக்கும் ஆனால் இவரது கூட்டணியையும் வாரிக்கொண்டு இருந்ததால் பின்னர் இவருக்கு “ஆப்பு” இருக்கலாம் என்று கருதப்படுகிறது. “தண்ணீரில்” மிதப்பவன் எல்லாம் கேப்டன் அல்ல. நீ கிங் மேக்கர் அல்ல ட்ரிங்க் மேக்கர் என்றது பலத்த வரவேற்ப்பை பெற்றது ஆனாலும் பலரும் முகம் சுழிக்கும் வண்ணம் வடிவேல் பேசியது அருவருக்கத்தக்கதாகவே இருந்தது. குறைந்த பட்ச மேடை நாகரீகம் கூட இல்லாமல் வடிவேல் பேசினார். தேமுதிக வாக்கு குறைவில் வடிவேல் பங்கு மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கேப்டனை குடிகாரராகவே சித்தரித்து விட்டதால் பெண்கள் வாக்கு இவருக்கு குறையும் என்றே கருதுகிறேன்.
இதில் பெரிய காமெடி விஜயகாந்த் மாற்றிக்கூறியதை கிண்டலடித்துக்கொண்டு இருந்த வடிவேலுவே மாற்றி அதிமுக வேட்பாளரை ஆதரித்தது தான் ஆனால் தமிழக மக்கள் பெரும்பாலோனோர் சன் மற்றும் கலைஞர் மட்டுமே பார்ப்பதால் இது பற்றி மக்களுக்கு அதிகம் தெரியவில்லை காரணம் இவர்கள் தான் இதை எல்லாம் காட்டவே மாட்டார்களே! வடிவேலை சமாளிக்க அதிமுக தரப்பு நடிகர் சிங்கமுத்தை களம் இறக்கியது ஆனால் வடிவேல் அளவிற்கு ஈடு கொடுக்கமுடியவில்லை.
பெரிய பேச்சாளர்களை எல்லாம் கொண்ட பெருமை வாய்ந்த கட்சியான திமுக தற்போது வடிவேலையும் குஷ்பூவையும் நம்ப வேண்டிய நிலைமைக்குப் போனது மிக மிக பரிதாபமான ஒன்றாகும். சன் கலைஞர் தொலைக்காட்சிகளில் வடிவேல் பேச்சிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது திமுக விற்கு பலத்த அடியாகும். திறமையான பேச்சாளர்களை திமுக இழந்துவருவதையே இது காட்டுகிறது. எது எப்படியோ இந்தத் தேர்தலில் வடிவேல் தான் “டாக் ஆஃப் தி எலக்சன்” என்பது மறுக்க முடியாத விஷயம்.
தேர்தல் முடிவு வந்த பிறகு விஜயகாந்த் கூட்டணியில் இருந்து விலக்கப்படுவார் அல்லது விலகும் படியான சூழ்நிலை அவருக்கு அமைக்கப்படலாம் என்பது என் கருத்து. இதை கேப்டனும் நன்கு அறிந்து வைத்து இருப்பார் என்று நினைக்கிறேன். அதிமுக கூட்டணியில் மானத்தோடு எவரும் இருக்க முடியாது என்பது அனைவரும் அறிந்தது. அதுக்கு முன்னாடி இருந்ததா? என்று கேட்க வேண்டாம் என்னிடம் பதில் இல்லை icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
வடிவேலு குறித்த ஒரு கொசுறு
அரசியலுக்கு வந்து விட்டாலே நடிப்பு வாழ்க்கை அவ்வளவு தான். முன்பு போல ஜொலிக்க முடியாது. இதற்கு உதாரணமாக எத்தனையோ நடிக நடிகைகளைக் கூறலாம். கட்சி சார்பாகி விட்டாலே வாய்ப்பு கொடுக்க மற்றவர்கள் யோசிப்பார்கள் அதோடு அவர்களுடைய இயல்பான நடிப்பிலும் மாற்றம் வந்து விடும். திமுக வெற்றி பெற்று விட்டால் வடிவேலுக்கு பெரிய அளவில் பிரச்சனை இருக்காது அதிமுக வெற்றி பெற்றால் ஒருவேளை நிஜமாகவே “கைப்புள்ளை” ஆனாலும் ஆகி விடுவார். விடுடா விடுடா சுனா பானான்னுட்டு வடிவேல் போக வேண்டியது தான் icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
ஊடக மூளைச்சலவை
அனைத்து கட்சிகளும் ஆளாளுக்கு ஒரு தொலைக்காட்சியை வைத்து இருந்தாலும் மக்களிடையே சென்றடைவது சன் கலைஞர் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகள் தான். ஜெயா தொலைக்காட்சியை ஜெயா ஆதரவு மக்கள் மட்டும் தான் காண்கிறார்கள் பொதுமக்கள் அதிகம் பார்ப்பதில்லை. சன் கலைஞர் இரு தொலைக்காட்சிகளும் இந்த ஒரு மாதமும் நாட்டில் வேறு எதுவுமே நடக்காதது போல வெறும் திமுக ஆதரவு செய்திகளாகவே காண்பித்துக்கொண்டு இருந்தார்கள். இந்த இரு தொலைக்காட்சியையும் (உடன் தினகரன் செய்தித்தாள்) பார்ப்பவர்கள் நாட்டில் இவர்கள் கூறுவது மட்டுமே நடந்து கொண்டுள்ளது என்று நினைக்கும் அளவிற்கு நடந்து கொண்டனர். கலைஞர் அரசு மீது வெறுப்பில் உள்ளவர்கள் இதை தொடர்ந்து பார்த்தால் கூட திமுக ஆதரவு அல்லது எதிர்க்கட்சி எதிர்ப்பு நிலைக்கு மாறி விடுவார்கள் அந்த அளவிற்கு மூளைச்சலவை செய்தார்கள்.
கிராமங்களில் எல்லாம் இவர்கள் கூறுவதே உண்மை என்று நம்பும் அளவிற்கு இருந்தது. நான் ஊரில் உள்ளவர்களுடன் பேசியதிலேயே இது அப்பட்டமாக தெரிந்தது. குறிப்பாக சன் தொலைக்காட்சியில் என்ன கூறுகிறார்களோ அது தான் இவர்களுக்கு செய்தி அதைத்தவிர வேறு எதுவும் நடக்கவில்லை என்பதைப்போலவே இருந்தது சிலரின் பேச்சு.
ஊடகங்கள் அரசியல் கட்சிகள் கையில் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தமிழகம் ஒரு சிறந்த உதாரணம்.
தேர்தல் ஆணையம்
Election2 தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்அரசியல் கட்சிகளிடையே வடிவேல் என்றால் பொதுமக்களிடையே பட்டையக் கிளப்பியது தேர்தல் ஆணையம் தான் என்பதில் சந்தேகமில்லை. பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடும் சோதனைகளை மேற்கொண்டனர். கொடி, பேனர், தோரணம், கட் அவுட் என்று எதையும் வைக்கக்கூடாது என்று ஏகக் கெடுபிடிகளை வைத்து அரசியல் கட்சிகளை கலங்கடித்து விட்டனர். அரசியல் கட்சிகள் தாங்கள் நினைத்ததை சாதிக்க கடும் முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டி இருந்தது.
வாகன சோதனையாலும் மற்றும் மற்ற கெடுபிடிகளாலும் பொதுமக்கள் பலர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இத்தனை பெரிய மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் இதைப்போல சிரமங்கள் தவிர்க்க முடியாது என்பது என்னுடைய கருத்து. அரசியல் கட்சிகள் செய்யும் அட்டூழியத்தை அடக்க மக்கள் ஒரு மாதம் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.
பொது மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி மற்றும் மற்ற தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் உதவியுடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த முறை 77.8% வாக்கு சதவீதத்தை நடத்தி சாதனை செய்துள்ளார்கள். மக்களும் எந்த பிரச்சனையும் நடக்காது என்கிற நம்பிக்கையில் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்தனர். இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் எப்போதும் வாக்களிக்காமல் இருக்கும் மேல்தட்டு மக்களும் வந்து வாக்களித்தது ஆகும்.
எனக்கு தேர்தல் கமிசன் செய்ததில் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது முடிவை ஒரு மாதம் தள்ளி வைத்ததாகும். கலைஞர் தேர்தல் ஆணையத்தை எமர்ஜென்சி போல நடந்து கொள்கிறது என்று கூறிய போதெல்லாம் எரிச்சல் தான் வந்தது ஆனால் இந்த இடைவெளி ஒரு மாதம் விசயத்தில் கலைஞர் கூறியதில் எனக்கு முழு உடன்பாடு அதாவது இந்த மாதம் மாநில அரசு எதுவுமே முழுமையாக செய்ய முடியாது அனைத்தும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இது பற்றி தினமணி கூட தனது தலையங்கத்தில் கூறி இருந்தது.
இது தவிர்த்து எனக்கு தோன்றிய இன்னொரு விஷயம் ஒரு மாதத்திற்கு 25000 காவலர்கள் இதற்கு காவல் காக்கிறார்கள். இவர்களுக்கு ஆகும் செலவு நேர விரயம் எல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால் வீண் செலவாகவே தோன்றுகிறது. இதை சரியான முறையில் திட்டமிட்டு ஒரு மாத இடைவெளியை குறைத்து இருக்கலாம். இது போக ஒரு மணி நேர வாக்குப்பதிவு நேரத்தை குறைக்காமல் வழக்கமான நேரத்தையே வைத்து இருந்தால் இன்னும் கூடுதலாக வாக்கு சதவீதம் வந்து இருக்கும். மற்றபடி இவை தவிர்த்து தேர்தல் ஆணையம் மிகச்சிறப்பாக செயல்பட்டு பொது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது என்பது மிகையில்லை. என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.
குழப்பத்தை ஏற்படுத்தும் வாக்கு சதவீதம்
எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு அதிக வாக்காளர்கள் 77.8% வாக்களித்து இருப்பது அரசியல் கட்சிகளிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது யாருக்கு ஆதரவான அல்லது எதிரான அலை என்று ஒன்றும் புரியாமல் குழம்பிப் போய் உள்ளனர். இதில் நக்கீரன் மற்றும் விகடனின் கருத்துக்கணிப்பு அனைவரையும் குழப்பியுள்ளது. பின்வரும் கணக்கை பார்த்தால் உங்களால் ஏதாவது ஒரு முடிவிற்கு வர முடியுமா!
அதிமுக 141-திமுக 92 இடங்களில் முன்னிலை – ஜூ.வி
திமுக 140-அதிமுக 94 இடங்களில் முன்னிலை – நக்கீரன்
இவை அல்லாமல் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். இது விலைவாசி உயர்வு போன்றவற்றால் அதிமுகவிற்கு ஆதரவான கூட்டமா! அல்லது இலவசங்கள் மற்றும் சுயஉதவிக்குழு போன்றவற்றால் திமுகவிற்கு ஆதரவான கூட்டமா! என்று ஒரு முடிவிற்கு வர முடியாத அளவிற்கு உள்ளது. கவுண்டர் பாணியில் சொல்வதென்றால் ஒரே குழப்ப்ப்பமா இருக்கே! icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
வடிவேல் மற்றும் சன் டிவி கைங்கர்யத்தால் கேப்டன் குடிகாரன் என்பதும், வேட்பாளரை அடித்ததும் மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே ஆழமாக பதிந்து விட்டது அதனால் இவருக்கு பெண்கள் ஒட்டு அதிகளவில் கிடைக்குமா என்று தெரியவில்லை. இவருடைய ரிஷிவந்தியம் தொகுதியில் 78% வாக்கு பதிவு இதில் ஆண்களை விட பெண்கள் (12,475) அதிகம். இதையும் மீறி கேப்டன் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் கேப்டன் உண்மையிலேயே திறமையான கேப்டன் தான் icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
இதுவரை நடந்த தேர்தல்களில் 84 ம் ஆண்டு முதல் திமுக அதிமுக மாறி மாறி வந்துள்ளன. வெற்றி பெற்ற கட்சியும் அதன் வாக்கு சதவீதமும் கீழே உள்ளது.
1984 – 73.47% அதிமுக வெற்றி
1989 – 69.69% திமுக வெற்றி
1991 – 63.84% அதிமுக வெற்றி
1996 – 66.95% திமுக வெற்றி
2001 – 59.07% அதிமுக வெற்றி
2006 – 70.56% திமுக வெற்றி
2011 – 77.8% ?????? வெற்றி
கொசுறு: எங்கள் ஊர் கோபியில் இந்த முறை 83.29% வாக்கு பதிந்துள்ளது.
அதிகளவு வாக்களிப்பிற்குக் காரணம் என்ன?
ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை நினைத்து இருப்பார்கள். எனக்கு தோன்றியவை படத்துடன் கூடிய பூத் ஸ்லிப், காவல் துறை பாதுகாப்பு, தேர்தல் ஆணையம் சமூக அமைப்புகள் ஊடகங்கள் ஆகியவை ஏற்படுத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தேர்தல் ஆணையம் ஏற்படுத்திய நம்பிக்கை, கூடுதல் வாக்காளர்கள் சேர்ப்பு, கள்ள ஓட்டு தவிர்ப்பு, வன்முறை சம்பவங்கள் நடக்காதது, இளைஞர்கள் பலரிடையே இணையம் மூலம் (facebook, Twitter, Buzz & Mail) ஆர்வத்தை ஏற்படுத்தியது போன்றவை. இவை தவிர அரசியல் கட்சிகள் வழங்கிய பணம் மற்றும் இலவசம்.
கலைஞர் ஜெ யார் வெற்றி பெறுவார்கள்?
கணிப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த தேர்தல்களிலேயே இந்தத்தேர்தலில் தான் அதிக பட்சமாக வாக்குபதிவு நடந்துள்ளது. இது அனைத்து கட்சிகளின் வயிற்றிலும் புரளியைக் கரைத்துள்ளது. இரு கட்சிக்காரர்களும் தங்களுக்கு ஆதரவான விசயங்களைக் கோடிட்டுக் காட்டி “வெற்றி எங்களுக்குத்தான்” என்று கூறிக்கொண்டு இருந்தாலும் உள்ளூர பயந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்த காரணங்களைப் பட்டியலிட்டுள்ளேன் உங்கள் கருத்துக்களுடன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்.
கலைஞர் சாதகங்கள்
இலவசம், 108, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, இலவச வீடு, மகளிர் சுய உதவிக்குழு, ஒரு ரூபாய் அரிசி, அரசு ஊழியர்கள் ஆதரவு, தேர்தல் பணம், வடிவேல்!!!, சன் டிவி, விஜயகாந்த் பேச்சு, ஜெ முதல் வேட்பாளர் பட்டியல் சொதப்பல், ஜெ விஜயகாந்த் சண்டை.
கலைஞர் பாதகங்கள்
Election தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்ஊழல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, குடும்ப ஆட்சி, திரைப்படத்துறை ரியல் எஸ்டேட் ஊடகத்துறை கேபிள் டிவி ஆதிக்கம், ஈழத்தமிழர் (50% – 50%), மீனவர் பிரச்சனை, அன்னா ஹசாரேவிற்கு ஆதரவாக எந்த பெரிய விளம்பரமும் இல்லாமல் ஊழலுக்கு எதிராக கோவையில் திரண்ட மக்கள்.
ஜெ சாதகங்கள்
இலவசம், கேப்டன் மற்றும் கூட்டணி, ஆளும் கட்சி அதிருப்தி மற்றும் கலைஞர் பாதகங்களில் உள்ளவைகள்
ஜெ பாதகங்கள்
வேட்பாளர் குழப்படி வெளியீடல், கூட்டணி ஒற்றுமை இல்லாமை, விஜயகாந்த் பேச்சு மற்றும் வேட்பாளரை அடித்தது, ஜெ வின் முரட்டுத்தனம், வைகோ (பேச்சு) இல்லாமை, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒன்றாக மேடையில் பேசாதது, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பிரச்சாரத்தில் மக்களிடம் சரியாக எடுத்துக் கூறாதது.
கலைஞர் ஜெ இருவரிடமும் உள்ள மிகப்பெரிய தவறாக எனக்குத் தோன்றுவது
கலைஞர் முதலில் ஐடி துறையை பெறவும் கடைசியில் கூட்டணி பேரத்திற்க்காகவும் கூட்டணியில் இருந்து விலகுவதாக மிரட்டியதை ஈழத்தமிழர்கள் விசயத்திற்காக செய்யாதது. இது மட்டுமல்ல வேறு எந்த நல்ல விசயத்திற்க்காகவும் செய்யாதது.
ஜெ இன்னும் கொஞ்சம் கூட திருந்தாமல் அப்படியே இருப்பது.
ஒரு மாதக்கலக்கம்
Election3 தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்அரசியல் கட்சிகள் இந்த ஒரு மாதக்கொடுமையைப் போல வேறு எப்போதும் அனுபவித்து இருக்க மாட்டார்கள். வெற்றியோ தோல்வியோ முடிவு தெரிந்து விட்டால் நிம்மதியாக அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடலாம் ஆனால் இதில் எதுவுமே தெரியாமல் ஆளாளுக்கு கூறும் ஊகங்களைக் கேட்டு வாய்ப்புள்ளதா இல்லையா என்று தினமும் கணக்குப் போட்டுக்கொண்டு தேர்தலுக்கு முன்பு ஒரு நாளை ஒரு மணி நேரமாகக் கடத்தியவர்கள் தற்போது ஒரு நாளை ஒரு மாதம் போல கடத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகி விட்டார்கள் icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல் உண்மையிலேயே இது கொடுமை தான்.
தினமும் இவர்களால் நிம்மதியாக தூங்கக்கூட முடியாது (தெரிந்தவுடன் பொதுமக்கள் நிம்மதியாக இருக்க முடியாது அது வேறு விஷயம்) அந்த அளவிற்கு டென்ஷன் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள். சாதாரண பொதுமக்களாகிய நமக்கே இவ்வளவு ஆர்வம் என்றால் கட்சிக்காரர்களை எல்லாம் நினைத்துப்பாருங்கள். காமெடிதான் போங்க! சரியான தண்டனை icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
இதில் பல கட்சிக்காரர்கள் அழகரி ஸ்டாலின் கேப்டன் சரத் போன்றவர்கள் தாங்கள் இத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். கலைஞரும் ஜெவும் உஷாராக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் முடிவிற்குப் பிறகு யார் யார் கூறியது என்ன அளவில் உள்ளது என்பதைப் பார்த்தால் காமெடியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அதோடு ஒவ்வொரு ஊடகங்களும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவாக ஏகத்துக்கும் செய்திகளை எழுதிக்கொண்டு இருக்கின்றன அவர்கள் எல்லாம் தேர்தல் முடிவு மாறி வந்தால் சமாளிக்கப்போவதை நினைத்தாலே சிரிப்பாக உள்ளது அதே போல அவர்கள் கூறியது போல நடந்து விட்டால் பாதிக்கப்படும் கட்சிகள் நிலை பாவமோ பாவம். கொஞ்ச நாளைக்கு வறுத்தெடுத்து விடுவார்கள் icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
எப்படியோ பல வித சர்ச்சைகள் இருந்தாலும் தேர்தல் நல்லபடியாக முடிந்து விட்டது எந்த வித பெரிய அசம்பாவிதமுமில்லாமல். அனைவரையும் போல நானும் யார் வெற்றி பெறுவார்கள்? கூட்டணி ஆட்சி நடக்குமா? மறுபடியும் மைனாரிட்டி அரசு கோஷங்கள் ஒலிக்குமா? தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்களா? என்று ஆவலுடன் இருக்கிறேன். இந்தத்தேர்தல் முடிவு பல வித சந்தேகங்களை தீர்க்கும் பல ஆச்சர்யங்களை மற்றும் நிச்சயம் கடும் அதிர்ச்சியைக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
தேர்தல் முடிவால் நம்மிடம் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை Life will be going on as usual icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்


நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஒரு வேளை  அண்ணா.தி.மு.க.ஜெயித்தால்.....






நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் கருணாநிதியின்
 பாசிச ஆட்சியை அகற்றி மீண்டும் அனைத்திந்திய
 அண்ணா.திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியமைக்க
 வாய்ப்பளித்துள்ளார்கள்.நான் பிரச்சாரத்திற்க்காக போகும்
 இடமெல்லாம் மக்கள் வெள்ளமென திரண்டு அன்பு 
சகோதரியான எனக்கு ஆதரவு தெரிவித்த போதே 
எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஸ்பெக்ட்ரம்,
 மணல்கொள்ளை, கேபிள் டி.வி .ஆதிக்கம், அரிசி கடத்தல்
, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று கருணாநிதியின் கொடுங்கோல்
  ஆட்சியில் சிக்கித்தவித்த மக்களுக்கு ஒரு விடிவு
 என் மூலம் ஏற்பட்டிருக்கிறது...இவ்வளவு பெரிய
 வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்த தேர்தல் 
ஆணையத்திற்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.
மிரட்டலுக்கு அஞ்சாமல் மிகவும் நியாயமாக தேர்தல்
 நடக்க அவர்கள்தான் காரணம். எங்களுக்கு வாக்களித்த 
 மக்களுக்கு நன்றி.....கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி....
அண்ணா நாமம் வாழ்க......புரட்சி தலைவர் 
எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க...


ஒருவேளை தோற்றால்.....


ஸ்பெக்ட்ரம் மூலம் கொள்ளையடித்த பணத்தை கொண்டு 
செயற்கையான  ஒரு வெற்றியை பணம் கொடுத்து 
வாங்கியுள்ளார்கள் கருணாநிதியும், அவர் கட்சியினரும். 
தமிழ்நாடு முழுவதும் ஒரு வோட்டுக்கு ஆயிரம் ரூபாய் 
என்று பத்தாயிரம் கோடி ரூபாயை வாரி 
இறைத்திருக்கிறார்கள். எங்களுக்கு சாதகமாக 
நடப்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டு
 தி.மு.க-விற்கு சாதகமாக நடந்து கொண்ட தேர்தல்
 கமிசனுக்கு என் கண்டனத்தை தெரிவித்து
 கொள்கிறேன். தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் 
இடையே இருந்த ஒரு மாதத்தில், நிறைய இடங்களில் 
வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டுள்ளது. ஒரு மா
த இடைவெளி இருந்த போதே சுதாரித்து இருக்கணும்.
தேர்தல் ஆணையத்தை நம்பி மோசம் போயிட்டோம் 
முக்கியமாக  தேர்தல் முடிந்து சில நாட்களில்
 மு.க அழகிரிஅமெரிக்காவிற்கு ரகசியமாக
 சென்று வாக்குப்பதிவு எந்திரத்தில் எங்களுக்கு விழுந்த
 ஓட்டுக்களை உதய சூரியன் சின்னத்தில் மாற்றும்
 வசதியுள்ள புதிய நவீன ரிமோட்டை அங்குள்ள 
வல்லுனர்கள் மூலம் தயாரித்து எடுத்து  வந்துள்ள 
தகவல் எனக்கு சுப்ரமணியம்சாமி மூலம் கிடைத்தது.
அந்த நவீன ரிமோட் மூலம்  வீட்டிலிருந்த படியே எல்லா
 வாக்குகளையும் தி.மு.க சின்னத்தில் திருப்பி 
விட்டிருக்கிறார் அழகிரி .அதற்காக சுமார் ரெண்டாயிரம் 
கோடி ரூபாயை ஹவாலா மூலம் கை மாற்றியுள்ளார்.
மேலும்,விஜயகாந்த் குடித்துவிட்டு செய்த பிரச்சாரமே 
எங்களுக்கு எதிராக மாறிவிட்டது.எதற்கும் 
கலங்காமல் களப்பணி ஆற்றுங்கள்...
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி நமதே... 
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் 
முடிவில் தர்மமே வெல்லும். ஜெயிற்றால்
 கோட்டை..தோற்றால் கொடநாடு என்னும் 
எனது கொள்கையின் படி இப்போது கொடநாடு செல்கிறேன்.
அண்ணா நாமம் வாழ்க......புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க...



 எலெக்‌ஷன் முடிஞ்சு

     எப்ரல் 13 எலெக்‌ஷன் முடிஞ்சு, ஒரு மாசம் சம்மர் ஹாலிடே. தேர்தல் பிரசாரத்துக்காக ‘நாக்-அவுட்’ ஆக அலைந்த தலைவருங்க, இந்த இடைவெளில என்ன பண்ணலாம்?
சூர்யா – ஜோதிகா காப்பி குடிச்சா மட்டுந்தான் பார்ப்போமோ என்ன? சரத்குமார், கார்த்திக் எல்லாம் வேட்டி கட்டிட்டு திரியற வெளம்பரத்தை எத்தனை நாள்தான் பார்க்குறது?
ஒரு சேஞ்ச்சுக்காக…. சில விளம்பர கற்பனைகள்.

cofeeee

jewlry

mangooo

Matchboxx

Feviiistk

shirtt

spyware

vicksss
பிரசாரத்துலயே எசகுபிசகா உளறி, எடக்கு மடக்கா ஆக்‌ஷன் பண்ணுன விஜயகாந்துக்கு, விளம்பர வாய்ப்பே கிடைக்கல. அதுக்கெல்லாம் அசருவாரா நம்ம கேப்டன். அவருக்கு சமூக அக்கறை ஜாஸ்தியாச்சே! இருக்கவே இருக்கு கேப்டன் டீவி…


Untid-1

 

 

 

கிரிக்கெட்டிற்காக 40000 - நாட்டிற்காக 1000..! பெருமை கொள்வோம்!

09-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானமே, 'நாக்க முக்க' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ஆடிக் கொண்டிருக்க.. வந்திருக்கும் இந்திய ரசிகர்கள் அனைவரும் பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் ஆவலுடன் காத்திருக்கும் இதே நேரத்தில், இந்தியத் தலைநகர் டில்லியின் ஜந்தர்மந்திர் என்னுமிடத்தில் 72 வயதான ஒரு இந்தியரான முதியவர் அன்னா ஹசாரே.. ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கோரி இன்றோடு 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்..!



சென்னை சேப்பாக்கத்தில் தற்போது திரண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 40000. ஆனால் டெல்லியில் ஹசாரேயைச் சுற்றிலும் வெறும் 1000 பேர் மட்டுமே இருக்கிறார்களாம். ஒரே நாடுதானாம்.. ஆனால் ஒருவரின் பிரச்சினை மற்றவருக்கு பிரச்சினையாக இல்லையாம்..! மற்றவரின் பிரச்சினை இன்னொருவருக்குத் தொல்லையாக இல்லையாம்..!

வருங்கால இளைஞர் சமுதாயம்தான் இந்த நாட்டை வழி நடத்தப் போகிறது என்று கஞ்சா விற்று அரசியல்வியாதியானவர் முதற்கொண்டு அப்துல்கலாம்வரையிலும் சொல்லிவிட்டார்கள். ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் இருக்கும் 40000 இளைஞர்களுக்கு இன்றைக்குக் கிடைக்கின்ற கிரிக்கெட் விருந்துதான் முக்கியமாக இருக்கிறது..!

இதே நேரத்தில் சன் தொலைக்காட்சியினர் தாங்கள் தயாரித்திருக்கும் மாப்பிள்ளை படத்தின் முதல் காட்சியில் திரைக்கு முன்னே இந்திய இளைஞர் சமுதாயம் குத்தாட்டம் போடுவதையும் காலையில் இருந்தே காட்டி வந்து தங்களது தேச பக்தியை பறை சாற்றி வருகின்றனர்..!

பொழுதுபோக்கு என்கின்ற வார்த்தையே இப்போது தொலைந்துபோய் அதுதான் வாழ்க்கை என்கிற அளவுக்கு ஊடகங்கள் நமது இளைஞர்களை மாயவலைக்குள் கொண்டுபோய் சிக்கவைத்துவிட்டார்கள்.

இது மறைமுகமாக நமது பிரச்சினைகளிலிருந்து நம்மை அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய் மறைத்துவைத்துவிட்டு, தெருவில் இருந்த பிரச்சினை நம் வீட்டிற்குள் வந்தவுடன் நம்மை அதேபோல் தூக்கிக் கொண்டு வந்து வீட்டுக்குள் விட்டுவிட்டு வெளிக் கதவைச் சாத்திச் செல்லும் தந்திரத்தை இந்திய அரசியல் வர்க்கமும், அதிகார வர்க்கமும், பணக்காரத் திமிர்த்தனமும் போட்டி போட்டுச் செய்து வருகிறார்கள்.

காலையில் கொல்கத்தாவில் இருந்து கிளம்பும்போது தான் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவளிப்பதாக பேட்டியளித்திருக்கும் ஷாரூக்கான், சாயந்தர வேளையில் இதே மைதானத்தில் ஷ்ரேயாவுடன் நாக்க முக்க.. நாக்க முக்க.. என்று குத்தாட்டம் போடுகிறார். ஆதரவுகளை வாயால் வழங்குவோம்..! அதே நேரத்தில் தாங்கள் சம்பாதிப்பதற்கு மட்டுமே உடல் உழைப்பை நீட்டுவோம் என்ற சுயநலத்திற்கு ஷாரூக்கான் மட்டும் விதிவிலக்கா என்ன..?

அன்ன ஹசாரே அப்படியென்னதான் சொல்கிறார்..? அரசியல்வியாதிகள்.. அதிலும் பிரதமர், ஜனாதிபதி என்று எவரையும் விட்டுவிடாமல் அனைவருமே ஊழல் வழக்குகளின் முன் நின்றால் விசாரிக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பது போன்ற உச்சபட்ச அதிகாரத்துடன் கூடிய லோக்பால் சட்ட மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்கிறார். இது நியாயம்தானே..?

ஆனால் அரசியல்வியாதிகளுக்கு இது எப்படி பிடிக்கும்..? அவர்களுடைய அடிமடியிலேயே கை வைத்து, அவர்களது பொழைப்பைக் கெடுக்கின்ற அளவுக்கு ஒரு சட்டத்தை அவர்களே கொண்டு வர வேண்டும் என்று கூறினால் இதனை ஏற்பதற்கு இவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.

இந்த நாட்டில் இதுவரையிலும் எத்தனையோ லஞ்ச ஊழல் வழக்குகள் அரசியல்வியாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன. மக்கள் முன் ஆதாரங்கள் குவித்து வைக்கப்பட்டாலும், அரசியல்வியாதிகள் தப்பித்து அதிகாரிகளை மட்டும் பகடைக்காயாக்கிவிடுகிறார்கள்..!

எத்தனை எத்தனை ஊழல்கள்..? முந்த்ரா ஊழல் தொடங்கி தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழல்வரையிலும் அத்தனையிலும் அரசியல்வியாதிகளின் கை வண்ணம்தான்..!

1975-ம் ஆண்டு: லாட்டரி ஊழல்

1990-99-ம் ஆண்டு:போபர்ஸ் ஊழல்

1992-ம் ஆண்டு: ஹர்ஷத் மேத்தா ஊழல்

1993-ம் ஆண்டு: ஹவாலா ஊழல்

1996-ம் ஆண்டு: பீகார் கால்நடை தீவன ஊழல்.  முன்னாள் அமைச்சர் சுக்ராம் மீதான டெலிகாம் ஊழல் .

1999 முதல் 2001வரை பங்கு சந்தை புரோக்கர் கேதன் பரேக் செய்த பங்கு சந்தை ஊழல்

2001-ம் ஆண்டு: ராணுவத்துறையில் நடந்த ஆயுத பேர ஊழல்.

2003-ம் ஆண்டு: போலி முத்திரைத்தாள் ஊழல் (அப்துல் கரீம் தெல்கி)

2005-ம் ஆண்டு: உணவுக்காக எண்ணெய் தொடர்பான முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் சம்பந்தப்பட்ட ஊழல்.

2009ம் ஆண்டு: பல்வேறு இடங்களில் சொத்துக்களை குவித்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மீதான 4,000 கோடி ரூபாய் ஊழல்

2010-ம் ஆண்டு: "2-ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், கடைசியாக, காமன்வெல்த் விளையாட்டு ஊழல்.

இப்படி கணக்கு, வழக்கில்லாமல் ஊழல்களை செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட இந்தியத் திருநாட்டின் அரசியல்வியாதிகளை உண்மையாகவே தண்டித்து அரசியலில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த நினைத்துத்தான் இந்த லோக்பால் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.

உச்சநீதிமன்றம் சர்வவல்லமை படைத்ததாக இருந்தாலும், அது இன்னமும் தனது முழு அதிகாரத்தையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. கூடவே அந்த அமைப்பின் உறுப்பினர்கள்கூட அரசியல்வியாதிகளின் அல்லக்கைகளாக மாறிவிட்ட கொடூரமும் நிகழ்ந்துதான் வந்திருக்கிறது..!

அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பாகத்தான் லோக்பால் அமைப்பைக் குறிப்பிடுகிறார்கள்.

பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும். லோக்பால் உருவானால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்கிற அளவுக்கு அவற்றுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும்.

இப்படிப்பட்ட லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை  நிர்ணயிக்கும் சட்டம்தான் லோக்பால் சட்டம்.


ஏற்கெனவே இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் இந்தியத் தண்டனை சட்டம்-1860 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம்-1988 ஆகியவை, அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவற்றின்படி நடவடிக்கை எடுக்க, போலீசோ, வேறு புலனாய்வு துறையோ, மாநில, மத்திய அரசுகளிடமிருந்தோ அனுமதி பெற வேண்டும்.

இதன்படி பார்த்தால் கருணாநிதி மீது ஊழல் வழக்கை இப்போது தெரிவித்தால் அதற்குக் கவர்னர் அனுமதியளித்தால் மட்டுமே நாம் அவர் மீது தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடர முடியும். இல்லையெனில் முடியாது. இது இந்த அரசியல் ஓநாய்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தாங்களே போட்டுக் கொண்ட ஒரு விதிவிலக்கு..!

அரசில் நிர்வாக துறையை பொறுத்தவரை மத்திய புலனாய்வு துறை மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆகிய இரண்டு மட்டுமே, ஊழல் வழக்குகளை கையாள்வதில் பிரதானமாக செயல்படுகின்றன.

இது முறையாக நிறுவப்பட்டால், அரசின் சட்டத் துறை மற்றும் நிர்வாகத் துறையின் கலவையாக இருக்கும். புகார்களைப் பெற்று விசாரணை நடத்துவதில் நிர்வாகத் துறையைப் போன்றும், தண்டனை கொடுப்பதில் நீதித் துறையைப் போன்றும் செயல்படும். மக்களின் பிரச்னை, அலைக்கழிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் தீர்க்கப்படும்.

ஆந்திரா, அசாம், பீகார், சத்திஸ்கர், டில்லி, குஜராத், ஜார்க்கண்ட், அரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள், லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்கியுள்ளன.

இவை, மாநில அளவில் லோக்பாலின் வேலைகளை, குறுகிய அளவில், அதிகாரமற்ற நிலையில் செய்து வருகின்றன. இவற்றில் பிரபலமானது, கர்நாடகாவில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் இயங்கும் லோக் ஆயுக்தா. இந்த அமைப்பு சமீபத்தில் கர்நாடகாவில் அரசியல் பலம் படைத்த பெல்லாரி சகோதரர்களின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டியது.

கடந்த 1968-ம் ஆண்டு முதல், லோக்சபாவில் எட்டு முறை இந்த லோக்பால் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டும், தகுந்த காலவரைக்குள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

தற்போது நிலவும் தொடர் ஊழல் சூழலில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், ஊழலை தடுக்க நடவடிக்கைகள் பரிந்துரைக்க, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் லோக்பால் மசோதாவின் வடிவம் மற்றும் அதை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டது.

லோக்பால் மசோதாவின் வடிவம் குறித்து போராடி வரும் அன்னா ஹசாரே உட்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டால், இந்த ஆண்டே லோக்சபாவில் நிறைவேற வாய்ப்பு உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக இந்த மசோதாவுக்காகக் குரல் கொடுத்து வரும் அன்ன ஹாசரே ஒத்துக் கொள்ளாததற்குக் காரணம்,  தற்போது அரசு பரிந்துரைக்கும் லோக்பால் சட்டம் மிகவும் பலவீனமானது. அதன்படி உருவாக்கப்படும் அமைப்புக்கு, வெறுமனே பரிந்துரை செய்யும் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும்.

இதுவரை வெவ்வேறு அரசு ஆணையங்கள் லோக்பால் குறித்து செய்த பரிந்துரைகளை சேர்த்து, சட்டத்துக்கு வலிமையூட்டும் வகையில், அன்னா ஹசாரே தலைமையில், ஒரு சமூக ஆர்வலர் குழு, மாதிரி மசோதா தயார் செய்திருந்தது. அந்த மாதிரி மசோதாவின் அடிப்படையில் புதிய லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றுதான் அன்னா ஹசாரே கோரியிருக்கிறார்.

அன்னா ஹசாரே தனது பரிந்துரையில் சொல்லியிருப்பது இது :

* அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் மீதும் லஞ்சம் தொடர்பான நீதி விசாரணை நடத்த லோக்பால் கட்டுப்பட்டது. மத்திய ஊழல் கண்காணிப்பு கமிட்டி மற்றும் மத்திய அரசின் அனைத்து கண்காணிப்பு அமைப்புகளும், லோக்பால் அமைப்பிற்குள் கொண்டு  வரப்பட வேண்டும்.

* பொதுமக்களிடமிருந்து, புகார்களை நேரடியாகப் பெற்று, நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரிடமும் சரி பார்க்க வேண்டிய அவசியமோ, அனுமதி பெற வேண்டிய அவசியமோ கமிஷனுக்கு இருக்கக் கூடாது.

* புலனாய்வு முடிந்ததும், வழக்கு தொடரலாம்; ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் அல்லது இரண்டையும் மேற்கொள்ள வேண்டும்.

* லோக்பால் அமைப்புடன் சி.பி.ஐ. அமைப்பும் இணைக்கப்பட்டுவிட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்தல், வழக்கு தொடர்தல் ஆகியவைகளை கமிஷன் மேற்கொள்ள முடியும்.

* லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர், 10 உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்களில் 4 பேர் மட்டுமே முன் அனுபவம் இல்லாத வக்கீல்களாக இருக்கலாம்.

* தேர்வு கமிட்டியில் சட்டம் தொடர்பான பின்னணி உடையவர்கள், தலைமை தேர்தல் கமிஷனர், மத்திய கணக்கு தணிக்கை அலுவலக தலைவர், ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள், லோக்பால் அமைப்பில் இருந்து வெளியேறும் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.

* லோக்பால் அமைப்பின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த எந்த தடையும் இருக்கக் கூடாது.

* ஓராண்டிற்குள் புலனாய்வை முடிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும்.

* ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஊழலில் தொடர்புடைய அனைவரிடமிருந்தும் இழப்பீடு பெறப்பட்டு, அரசு இழப்பைச் சரிகட்ட வேண்டும்.

இப்படி ஆட்டமாய் ஆடுகின்ற அரசியல்வியாதிகளின் தலையைக் கொய்யும் அளவுக்கு நிபந்தனைகளை விதித்தால் அவர்களென்ன செய்வார்கள்..? இதற்காகவாக அவர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்..? ச்சும்மா விட்டு விடுவார்களா என்ன..?

அரசுத் தரப்போ தனது பரிந்துரையாக கமிஷனின் மசோதாவில் சேர்த்துள்ள வெளக்குமாத்துக் குச்சிகளைப் பாருங்கள்...

* இந்த லோக்பால் அமைப்பு நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது மட்டுமே லஞ்சம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தும் உரிமை கொண்டது.

* லஞ்சம் தொடர்பான விசாரணையை துவங்கவோ, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகார்களை பெறவோ இந்தக் கமிஷனுக்கு அதிகாரம் கொடுக்கப்படாது. புகார்களைப் பெறுவதற்கென நியமிக்கப்படும் எம்.பி.,க்கள் மூலமே, அவை பெறப்படலாம்.
(இங்கேயும் எம்.பி.க்களாம். அப்போதுதானே யார் மீது புகார் வந்திருக்கிறது என்று உடனேயே தெரிந்து கொண்டு தப்பிக்க வழி செய்யலாம்.)

* புகாரில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; அமைச்சர்கள் மீதான புகார் குறித்து பிரதமரிடமோ, பிரதமர், அமைச்சர்கள் மீதான புகார் குறித்து, புகார்களை பெற நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.,க்களிடமோ சிபாரிசு மட்டுமே செய்ய முடியும்.

* காவல் துறைக்கான அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு கொடுக்கப்படாது. எனவே, எந்த புகார் மீதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது.

* லோக்பால் அமைப்பில் தவறான புகார் தெரிவித்தது உறுதி செய்யப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்.
(இதை மட்டும் வக்கனையா எழுதிட்டானுகய்யா இந்த நாதாரிகள்)

* இந்த அமைப்பை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய கமிட்டி ஒன்று உருவாக்கப்படும்.

* இவர்கள் மூவரும் இணைந்து, லோக்பால் அமைப்புக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர். உறுப்பினர்கள் அனைவரும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக, குறிப்பாக ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பர்.
(முடிஞ்சது மேட்டர்.. இதுக்கு இப்ப இருக்குற மாதிரியே எதையுமே அமைக்காமல் கொள்ளையடிச்சிட்டுப் போயிரலாமே)

* நாட்டின் பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு தொடர்பாக, பிரதமருக்கு எதிராக புகார் வந்தால், அது குறித்து விசாரிக்க பரிந்துரை செய்ய, இந்த அமைப்புக்கு அதிகாரம் கிடையாது.

* புகாரின் அடிப்படையில் விசாரணையை ஆறு மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் துவக்க வேண்டும். ஆனால், எவ்வளவு மாதங்களில், ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை.
(போபர்ஸ் கேஸ் மாதிரி ஆட்சி மாறி வேற ஆட்சி வந்தாலும் வாய்தா போட்டு இழுத்தடிச்சு மறுபடியும் ஆட்சிக்கு வந்து கடைசீல சங்கு ஊதிரலாம்ல..)

* லஞ்ச அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்டவர், தவறான வழிகளில் ஈட்டிய சொத்துக்களை அனுபவிப்பதற்கு, இந்த அமைப்பின் மூலம் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

இப்படி இந்த அரசியல்வியாதிகள் கொண்டு வரப் போகும் கேவலமான மசோதாவை எதிர்த்துத்தான் இந்த முதியவர் காந்தியாரின் ஆயுதமான உண்ணாவிரதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.

இதிலென்ன பிளாக்மெயில் இருக்கிறது..? உண்மையாக பிளாக்மெயில் செய்திருப்பது இந்தக் கேடு கெட்ட, கேவலங்கெட்ட அரசியல்வியாதிகள்தான்..! எங்களை கேள்வி கேட்கவே எவனுக்கும் உரிமையில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்..! நாடு மக்களுக்காகவா அல்லது இந்த ஓநாய்களுக்காகவா..?

முறைப்படி அனைவருக்கும் முன்கூட்டியே தெரிவித்துவிட்டுத்தான் இந்தப் பெரியவர் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளார். முதல் நாள் அன்ன ஹாசரேவை தனது வீட்டுக்கு அழைத்துப் பேசியிருக்கும் மன்னமோகனசிங்கால் அவருக்கு உரிய பதிலையும், விளக்கத்தையும் அளிக்க முடியவில்லை. பாவம் அந்தாளு என்ன செய்வார்..? இத்தாலி அம்மாவின் பெர்மிஷன் இல்லாமல் தனது தலைப்பாகையைக்கூட அவரால் கழட்ட முடியாது..! அந்த லட்சணத்தில்தான் அவர் இருக்கிறார்.

ஒரு நாட்டின் பிரதமரே இந்த லட்சணத்தில் இருக்கும்போது இவரை நம்பி சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தால் என்னவாகும்..? அந்தக் கிழவருக்கு மன உறுதியும், நல்ல எண்ணமும் இருக்கிறது. இவரைவிட பத்து வயது அதிகமான நமது மாநிலத்தின் பெரிசும் ஏதோ ஒரு நாள் நல்ல ஹாயான சமாதியொன்றில் போய் அரைமணி நேரம் படுத்துறங்கிவிட்டு வெற்றிகரமான உண்ணாவிரதம் என்று சொல்லிவிட்டு வரத் தெரியாத நபர்தான் இந்தத் தாத்தா..

இதோ 4-வது நாளாக உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். அரசுகள் இப்போதும் சல்ஜாப்பு சொல்லி வருகின்றன. தேர்தல் பிரச்சார நேரத்தில் இப்படியொரு லொள்ளு தேவையா என்று மன்னமோகனசிங்குக்கு ஏக டோஸ் விழுந்திருக்கலாம்..!

விவசாயத் துறை அமைச்சராக இருப்பதாக தன்னைக் கொள்ளும் சரத்பவார் இவருடைய கடும் எதிர்ப்பினால் லோக்பாலின் அமைப்புக் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் தப்பித்துவிட்டார். தனது ஜென்ம விரோதியுடன் தேசிய அளவில் மோதி தனது பெயரை ரிப்பேராக்கிக் கொள்ள விரும்பாமல் ஒதுங்கிவிட்டார் சரத்பவார்.

இப்போது ஹசாரேவைச் சுற்றிலும் உள்ள அவரது இயக்கத் தொண்டர்களும், ஆர்வமுள்ள,  உண்மையான இந்தியர்களாக அவருக்குத் தோள் கொடுத்து உற்சாகமளித்து வருகிறார்கள்..!

நாமும், நம்மால் முடிந்த அளவுக்கு பெரியவர் அன்ன ஹசாரேவுக்கும் அவரது இயக்கத்திற்கும், அவரது போராட்டத்திற்கும் நமது ஆதரவை வழங்க வேண்டும் தோழர்களே..!

தமிழகத்தில் சென்னை மற்றும் ஈரோட்டில் இது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன என்பது பாராட்டுக்குரியது..!

சாதுவான முயலைக்கூட சீண்டிக் கொண்டேயிருந்தால்கூட லேசாக கடிக்கக்கூட செய்யும். ஆனால் நம்மை குழி தோண்டி புதைக்கும் அளவுக்கான பிரச்சினைகள் நம்மைச் சூழ்ந்திருக்கும் வேலையிலும், நமது தார்மீகமான எதிர்ப்பையும், ஒற்றுமையையும் இந்தக் களத்தில் நாம் காட்டவில்லையெனில் இதன் பாதிப்பு நமது வாரிசுகளுக்குத்தான்..!

கொண்டாட வேண்டியதை கொண்டாட்ட நேரத்தில் கொண்டாடுவோம் இந்தியர்களே..! கிரிக்கெட் எப்போதும் இங்கேதான் இருக்கும். எங்கேயும் ஓடிப் போகாது..!

இப்போது இந்தியன் என்பதை நாம் உணர்வில் காட்ட வேண்டிய நேரம். மாறாக அந்த உணர்வை உணவில் மட்டுமே காட்டி நாம் சோற்றால் அடித்த பிண்டங்களாகக் காட்டுவதில் அர்த்தமில்லை தோழர்களே..!

இந்தியனாக இரு.. இந்தியனாகவே வாழு.. இந்தியனாகவே சாகு என்பதெல்லாம் சரி.. அதற்கு முன்பாக ஒரு நாளாவது நாம் நல்ல மனிதனாக வாழ்ந்து காட்டுவோமே..!?

 

 

 யார் இந்த அண்ணா ஹசாரே ?

   முனைவர் கிசான் பாபுராவ் ஹசாரே ஜூன் 15, 1938-யில் மராத்திய மாநிலத்தில் பிறந்தவர். இன்று அனைவராலும் அண்ணா ஹசாரே என அழைக்கப்படும் இவரின் ஆரம்பக் கால வாழ்க்கை சுவையாக இருக்கவில்லை என்பதே உண்மை. நான் ஏன் வாழ வேண்டும், ஏன் இந்த வாழ்க்கை என வெறுப்பின் உச்சத்தில் ஒருமுறை தற்கொலை செய்யும் முடிவில் இரண்டுப் பக்கத்துக்கு தான் ஏன் தற்கொலை செய்யப் போகின்றேன் என எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால் அம்முயற்சி கைக்கூடவில்லை.
அவரது வாழ்வின் மாற்றம் எப்போது ஏற்பட்டது என்றுப் பார்த்தால் ஒரு முறை புதுதில்லி ரயில் நிலையத்துக்கு சென்றிருந்தப் போது சுவாமி விவேகானந்தரின் புத்தகம் ஒன்றினை அவர் படிக்க நேர்ந்தது. அந்தப் புத்தகம் அவரை மிகவும் ஈர்த்துவிட்டதாம், அந்தப் புத்தகத்தில் கூறப்பட்ட ஒரு வாசகம் அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றிவிட்டது. வாழ்வின் நோக்கமே பிறருக்கு உதவுவதே என்பதே அவ்வாசகம் ஆகும்.
இன்று அண்ணா ஹசாரே இந்தியாவின் ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் மாபெரும் நபர் ஆவார். அவர் சமூகத்தின் அனைத்து முட்டுகளில் முட்டி மோதியவர். உயர்பதவிகளில் இருக்கும் பலரை எதிர்த்து முழங்கியவர். வெகுசன மக்கள் பலர் ஆயிரக்கணக்கானோர் அவருக்காக ஆதரவுக் குரல் கொடுத்து வருகின்றார்கள்.
இப்படி போராடுவது அவருக்குப் புதிதல்ல. இந்திய இராணுவத்தில் 15 ஆண்டு காலம் எல்லையில் நின்றுப் போராடியவர் தான் அண்ணா ஹசாரே. 1962யில் இந்தோ – சீன யுத்தத்தில் இளைஞர்கள் பங்கேற்கும் படி அரசு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி தம்மை இராணுவத்தில் இணைத்துக் கொண்டவர் அண்ணா ஹசாரே.
ஆனால் இராணுவத்தில் அவர் மனம் முழுமையாக ஈடுபடவில்லை. தமது வாழ்வின் நோக்கம் என்ன் என்பதே தெரியாமல் இருந்த நிலையில், தானாகவே தமது இராணுவப் பணிக்கு விடை சொல்லிவிட்டு மராத்தியத்தில் உள்ள தமது சொந்த ஊரான ராலேகாவன் சித்திக்கு 1978-ம் ஆண்டு தனது 39-ஆவது வயதில் திரும்பினார்.
அப்போது தான் தமது கிராம மக்கள் தமது வாழ்க்கையை வாழவே துன்பப் படுகின்றார்கள் என்பதைக் கண்டு துடி துடித்தார். அவர்களின் வாழ்வை மாற்ற, துன்பத்தைத் துடைக்க உலகிலேயே முன்மாதிரியான மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி பெரும் சாதனை புரிந்தார்.
இன்றளவும் அக்கிராம மக்கள் அண்ணா ஹசாரேவின் சாதனையை நினைவுக் கூர்ந்து வருகின்றார்கள். அத்தோடு மட்டும் நிற்காமல் தமது கிராமத்து மக்களுக்காக அனைத்து வசதிகளையும் அரசிடம் பெற்றுத்தர முயன்றார். ஆனால் ஆரம்பத்தில் அது அவ்வளாவு எளிதாக இருக்கவில்லை. லஞ்சமும், ஊழலும் ஏழை எளியவர்களை துரத்தியது. அரசுக் கொடுக்கும் குறைந்தப் பட்ச உதவிகள் கூட மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது கண்டு வெகுண்டு எழுந்தார் ஹசாரே.
இப்போது தான் முதன் முறையாக லஞ்சத்துக்கு எதிரான போராட்டத்தை ஹசாரே தொடங்கினார். இந்த லஞ்சம் தான் கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருந்தது என்பதை உணர்ந்த அவர் ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டம் என்ற அமைப்பை நிறுவி போராட ஆரம்பித்தார். காந்திய வழிகளிலான அவரதுப் போராட்டம் உண்ணாவிரதம் இருப்பதும், அரசியல் வாதிகளை குறிவைப்பதுமாகவே இருந்தது.
குறிப்பாக அவரதுப் போராட்டத்தைக் கண்டு மிரண்ட மராத்திய சிவசேனை- பிஜேபி அரசு அவருக்கு சொல்ல முடியாத துன்பங்களைக் கொடுத்தன. ஆனால் அவரது போராட்டத்தின் உக்கிரம் தாங்க முடியாமல் 1995-1996 களில் ஊழல் செய்த சிவசேனை – பிஜேபி மந்திரிகளை பதவி இறங்க வைத்தார். அத்தோடு நிற்காமல் 2003-யில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசின் நான்கு மந்திரிகள் செய்த ஊழலுக்கு எதிராக மாநில அரசை வைத்தே விசாரணைக் குழு ஒன்றை ஏற்பாடு செய்ய வைத்தார். ஒரு தனி மனிதனாக இவரதுப் போராட்டம் வலிமையானது ஒரு வேளை காந்தியடிகள் உயிரோடு இருப்பாராயின் இதனைத் தான் செய்திருப்பார் என்பது நிச்சயம்.
மராத்த மாநிலத்தின் அரசியல் வாதிகளான பால் தாக்கரே, சரத் பவார் போன்றோரை கதி கலங்க வைத்தவர் ஹசாரே. அவர்கள் ஹசாரேவின் செயல்களை மிரட்டல் தனம் என கடிந்துரைத்து இருப்பதே ஹசாரேவைக் கண்டு அவர்கள் எப்படி அஞ்சுகிறார்கள் என்பதனை உணர்த்துகின்றது.
இன்று தகவல் அறியும் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்ட ஹசாரவின் மாபெரும் போராடமும் ஒரு முதன்மையான காரணம். ஓய்வு என்பதை சிறிதும் அறியாத ஹசாரே இப்போது எடுத்துள்ள மாபெரும் ஆயுதம் நாற்பது ஆண்டுகளாக அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்டு வரும் லோக்பால் மசோதாவை அரசு நிறைவேற்றும் போராட்டம் ஆகும். சிலர் இந்த மசோதாவால் ஒன்றையும் சாதிக்கமுடியாது எனக் கூறினாலும், பல மனித உரிமை, மக்கள் இயக்கங்கள் இதனை நிறைவேற்ற நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த மசோதா இந்திய தேசத்தின் மாபெரும் ஊழல் மலைகளை தகர்த்து எறிய முதல் அடியாக இருந்தாலும் நமக்கு அது மாபெரும் வெற்றியே ஆகும்.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் 72 வயது அண்ணா ஹசாரே தில்லியில் நேற்று முதல் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். நமது நாட்டின் ஊழல் பெருச்சாளிகளை ஒழிக்க ஒரு உன்னத வாழும் காந்தியின் உயிர் நமக்கு மிகவும் முக்கியம். நாம் ஒவ்வொருவரும் பேடிகளாய் இருந்து வாழும் காந்தியின் உயிரைக் குடித்து விடாமல் அவரது இம்மாபெரும் போராட்டம் வெற்றியடைய நமது முழு சக்தியையும், உழைப்பையும் கொடுக்க முன் வர வேண்டும்.

 

குவிகிறது கோடிகள்! கொட்டும் பரிசு மழை!


28 வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் தலா 1 கோடி ரூபாய் வழங்கப் படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

வீரர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாயும் பயிற்சியாளர், மருத்துவ ஆலோசகர் போன்றோருக்கு தலா ரூ 50 லட்சமும் தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ 25 லட்சமும் வழங்கப்படும் என பி சி சி ஐ தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநில அரசு கேப்டன் டோனிக்கும் டெண்டுல்கருக்கும் வீடு வழங்கப் படும் என அறிவித்துள்ளது. டெல்லி மாநில முதல்வர் ஷீலா தீக்சித் கேப்டன் தோனிக்கு ரூ 2 கோடியும்  டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த காம்பிர்,சேவாக்,ஹோலி மற்றும் நெஹ்ரா ஆகியோருக்கு தலா ரூ 1 கோடி வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

 

டோனிதான் கேப்டன்: வடிவேலு

 
மதுரை திருமங்கலத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய நகைச்சுவை நடிகர் வடிவேலு, கேப்டன் யார் டோனியா அல்லது விஜயகாந்தா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இனி விஜயகாந்த் தம்மை  கேப்டன் என்று அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் யாரும் இனி அவரை கேப்டன் என அழைக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலத் திட்டங்கள் தொடர திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை வடிவேலு கேட்டுக் கொண்டுள்ளார்.

 

கமுதியில் பதற்றம்; நடிகர் வடிவேலு பிரசாரக் கூட்டத்தில் கல்வீச்சு

 
கமுதியில் நடிகர் வடிவேலு கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக மாறியுள்ள நகைச்சுவை நடிகர் வடிவேலு கமுதியில் நடந்த திமுக பிரசாரக் கூட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசினார். அவர், நடிகர் விஜயகாந்த் ஒரு ஹீரோ அல்ல; அவர் என்றுமே ஜீரோதான் என்று பேசினார்.

அப்போது கூட்டத்தை நோக்கி கல்வீச்சு நடந்தது. கல்வீச்சில் வடிவேலுவுக்கு காயம் எதுவும் படவில்லை. இதனால் கமுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

 

 

 

பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தும் : இம்ரான் கான்!

 
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் மோத உள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் இந்திய அணியே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"பழைய வரலாறுகளை வைத்து யார் வெற்றிபெறுவார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாது. சமீபத்திய ஆட்டங்களை வைத்துப் பார்க்கும்போது இந்திய அணிக்கே கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது. இதுவரை போட்டியை நடத்திய நாடுகள் கோப்பையை வென்றதில்லை. என்றாலும், இந்த முறை அதற்கான வாய்ப்புள்ளது. 
பாகிஸ்தான் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனாலும் இதுபோன்ற சிறந்த வாய்ப்பு இந்திய அணிக்குக் கிடைக்காது. சமீபத்திய சாதனைகளைப் பார்க்கும்போது இந்தியா பலம் வாய்ந்த அணியாகும். இந்திய அணிக்கு கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற வாய்ப்புகள் அரிதாகவே கிடைக்கும். இந்த வாய்ப்பு அடுத்த உலகக் கோப்பையில் கிடைப்பது கடினம். 
பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதியுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் தோனியே சிறந்த கேப்டன். டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என அனைத்து ஆட்டங்களுக்கும் இந்திய அணிக்கு அவரே கேப்டன். ஆனால் அப்ரிதி டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் கிடையாது. ஒருநாள் போட்டியைவிட டெஸ்ட் போட்டி நெருக்கடி மிகுந்தது. டெஸ்ட் கேப்டனாக இல்லாதபட்சத்தில் ஒருநாள் போட்டியில் நெருக்கடியைச் சமாளிப்பது கடினமாகும்" என்று கூறியுள்ளார்.

 

 

 

கட்டத்துரை விஜயகாந்தும், கைப்புள்ள வடிவேலுவும் - அன்றைய அலப்பறை.

 
 ஒரு காமெடியனை ஹீரோவாகும் முயற்சியா இல்லை ஒரு ஹீரோவை காமெடியனாக்கும் முயற்சியா என இதுவரை அந்த அலப்பறைக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.

திருவாரூரில் நடைப்பெற்ற திமுகவின் பிரச்சார தொடக்க பொதுக்கூட்டத்தில் பேசிய வடிவேலு, ஆரம்பத்தில் ஆளுங்கட்சியின் திட்டங்கள் பற்றி பேசிய போது சாதாரணமாகத்தான் இருந்தது.

இப்ப நான் மேட்டருக்கு வரேன் என விஜயகாந்த் பற்றி ஆரம்பித்த
கொஞ்சநேரத்தில், திமுக தலைமை அவரை எப்படி பயன்படுத்த இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமானது.

தியாகங்கள் எதுவுமே செய்யாமல், நேற்று  கட்சி தொடங்கி , (அந்த கட்சி பேரு என்ன?  நாக்கமூக்கவா?) இன்று தேர்தலை சந்தித்து, நாளை ஆட்சியைப்பிடித்து முதல்வர் ஆகிவிடுவேன் என்று  நினைக்கிறார் விஜயகாந்த் என்று ஆரம்பித்த வடிவேலு அதன்பிறகு பேசியதெல்லாம் ஏகவசனம் தான்.

"தண்ணிய போட்டா நீ என்ன வேணா பேசலாமா?
நீ முதல்வர்னா நான் பிரதமர்... நீ பிரதமர்னா நான் ஜனாதிபதி
நீ பிரதமர்னா நான் ஒபாமா"
என  வடிவேலு அள்ளி வீச, முதல்வர், ஸ்டாலின், அழகிரி உள்பட எல்லோரும் சிரித்தனர். சினிமாக்காரங்களே ஆகாது-னு சொன்ன நம்ம ராமதாஸ் கூட சிரிச்சுட்டார்னா பாத்துக்கோங்களேன்...
(நல்லவேள நீ ஒபாமா-னா நான் பின்லேடன் அப்படினு சொல்லல... )  

தண்ணில போற கப்பல் இருக்கறவனுக்கு பேரு கேப்டன்-னு பேரு..
எந்நேரமும் தண்ணில இருக்கிறவனுக்கு பேரு கேப்டனா?

இது வடிவேலு சொன்னதன் ஹைலைட்.

தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தை நடைப்பெற்று கொண்டிருந்தபோது, வெளியே காத்திருந்த நிருபர்கள் கேட்டா, முதல் ரவுண்டு, இரண்டாவது ரவுண்டு அப்படினு அடுக்கிட்டே போனாங்க... கடைசியா ஒன்பதாவது ரவுண்ட் முடிஞ்சதுக்கு பின்னாடி மொத்தமா ஃபிளாட்-னு சொன்னாங்க.. இது தான் நீ பேச்சுவார்த்தை நடத்துற லட்சணமா?

ஒன்ணரை ரூபாய்க்கு கண்ணாடி வாங்கி போட்டுட்டு, இரண்டரை ரூபாய்க்கு தொப்பிய வாங்கி போட்டுட்டா நீயெல்லாம் எம்ஜியாரா? இதுல கறுப்பு எம்ஜியாருனு பேரு வேற...

நான் கறுப்பு நேரு-னு  சொல்லிட்டு போயி சீட்டு கேட்டா சோனியா அம்மா சீட்டு குடுக்குமா?


41 சீட்டை வெச்சிட்டு எப்படி நீ முதலமைச்சர் ஆக முடியும்???

இதெல்லாம் வடிவேலு, வெடிவேலுவாய் மாறி  கேட்ட கேள்விகள்..
                           


திருவாரூர் கூட்டத்தில் வடிவேலு களமிறக்கப்பட்டதன் பின்ணணி:
* தனது சொந்த பிரச்சனையின் போது, தமிழகத்தில் எங்கே போட்டியிட்டாலும் விஜயகாந்தை எதிர்த்து களமிறங்குவேன் என சொல்லியிருந்த வடிவேலுவை எல்லா தொகுதிகளிலும் பயன்படுத்துவதுதான் திமுகவின் திட்டம்.

*தன் மதுரைக்கார பேச்சால் விஜயகாந்தின் வண்டவாளங்களை, மேடையில் ஏற்றுவது தான் வடிவேலுவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மெண்ட்.

*விஜயகாந்திற்கு அதிகம் செல்வாக்கு இருப்பதாக கருதப்படும் தென்மாவட்டங்களில், வடிவேலு மூலம் விஜயகாந்தை டேமேஜ் செய்வது தான் அழகிரியின் திட்டம்.

* நீ, வா, போ என்பது ஒரு கட்டத்தில் லூசு என நீண்டது வடிவேலுவின் அரசியல் பரிமாணத்தின் வளர்ச்சியோ?

*தமிழக அரசியல் மேடைகளில்  அடுத்த எஸ்.எஸ்.சந்திரனாகவோ அல்லது வெற்றி கொண்டானாகவோ இனிவரும் நாட்களில் வடிவேலுவை காணலாம்.

*அரசியல் மேடைகளில் தனிமனித தாக்குதல் சரியா, நாகரீகமா என
கேள்வி எழுப்புபவர்கள் அன்று மேடையில் இருந்தவர்களை விட கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உடையவர்களாக இருந்தால் மட்டும் பின்னூட்டதில் ருத்ர தாண்டவம் ஆடலாம். மற்றவர்கள் கவுண்டமணியின் புகழ்பெற்ற வசனத்தை சொல்லி ஆறுதல் பெற்றுக்கொள்ளவும்.

*அதெல்லாம் சரிங்க, தன்னை கறுப்பு எம்ஜியார் அப்படினு சொல்லிக்கொள்ளும்  விஜயகாந்துடன், , எம்ஜியார் ஆரம்பித்த கட்சியை நடத்துபவர்கள் கூட்டணி வைத்திருப்பது என்ன லாஜிக்? (விஜயகாந்த் ,கறுப்பு எம்ஜியார் என்பதை ஒத்துக்கொள்கிறதா அதிமுக?)

copy from -http://bharathbharathi.blogspot.com/2011/03/blog-post_25.html

 

இந்தியா அபாரம், அரையிறுதியில் நுழைந்தது; ஆஸ்திரேலியா தோல்வி!

 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையே இன்று நடந்த உலகக் கோப்பை இரண்டாவது காலிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.
உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது காலிறுதி ஆட்டம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடையே இன்று அலஹபாத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் இழந்து 260 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் அபாரமாக ஆடி சதமடித்தார்.

பின்னர் வெற்றிபெற 261 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 47.4 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இன்று இந்திய அணியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. 2 விக்கெட்கள் வீழ்த்தி நன்றாக பந்து வீசிய யுவராஜ் சிங் பேட்டிங்கிலும் ஜொலித்தார். 64 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து இறுதி வரை அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் டெண்டுல்கரும் கவுதம் கம்பீரும் இணைந்து அமைத்துக் கொடுத்த உறுதியான அடித்தளத்தில் தொடர்ந்து ஆட வந்த யுவராஜ் மற்றும் ரெய்னா ஜோடி இந்தியாவை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது. ரெய்னாவின் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பை போட்டியினைவிட்டு வெளியேறியது. அரையிறுதி போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறது.

 



காலிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா மோதல்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்
ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளில் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்தன.
குருப் 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகள் கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
அப் பிரிவின் கடைசி போட்டியில் போட்டியில் ஜிம்பாப்வே கென்ய அணியை 161 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இருந்தும் இந்த இரு அணிகளும் ஏ பிரிவில் கால் இறுதிக்கு தகுதி பெறவில்லை. அதே போல கனடா அணியும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
ஞாயிற்றுக்கிழமையன்று குருப் 'பி' பிரிவில் சென்னையில் நடந்த போட்டியில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
'பி' பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணி ஆகியவை அடுத்த கட்டமான காலிறுதிக்கு தகுதியடைந்துள்ளது. இப்பிரிவில் நெதர்லாந்து, வங்கதேசம், அயர்லாந்து ஆகிய நாடுகள் தகுதிபெறவில்லை.
புதன்கிழமை நடக்கும் முதல் காலிறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளும், வியாழக்கிழமை இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடும்.

அணுசக்தியின் நிறம் பச்சையல்ல; இரத்தச்சிவப்பு!

 
ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரும் பூகம்பம் அணுமின் சக்தி பற்றிய விவாதத்தை மீண்டும் தொடக்கியுள்ளது. அணுசக்தியின் நிறம் நமக்கு காட்டப்பட்டிருப்பதைப் போல பச்சையல்ல; இரத்தச்சிவப்பு. அணுமின் நிலையம் நிச்சயமாக வெடிக்கக்கூடிய டைம்பாம். தற்போதுள்ளவை ஹிரோஷிமா நாகசாகியில் வெடித்தவைகளைவிட பல லட்சம் படங்கு அழிவை ஏற்படுத்தக் கூடியவை. இயங்கு நிலையில் இருக்கும் (வெடிக்காமல்) ஒரு அணுமின் நிலையத்தின் ஏற்றுக் கொள்ளக்கூடிய கதிரியக்க அளவு என்பதே மிக அபாயகரமான அளவே. இதுவரை வெடிக்கப்பட்டுள்ள இரண்டு அணுகுண்டுகளினால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை விட அமெரிக்காவில் மட்டும் அணுமின் உலைகளினாலும் சோதனைகளினாலும் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது அதிர்ச்சி தரும் செய்தி. அனல்மின் / நிலவாயு மின் நிலையங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை விட அல்லது போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலை வெளியிட்டதை விட மிக அதிக சுற்றுச்சூழல் அபாயத்தை அணுமின் நிலையங்கள் ஏற்படுத்துகின்றன. அணுமின் நிலையங்கள் மீது ஒரு பூகம்பம் அல்லது தீவிரவாத தாக்குதல் போதும்; மனித குலத்தின் மிகப்பெரும் பகுதியை, மிருகங்கள் மற்றும் பசுமை உலகத்தை ஒரே வீச்சில் அழித்து முடிக்க. இதற்கு ஒரே தீர்வு இனியொரு அணுமின் உலைகளை கட்டமைக்காமல் இருப்பதும், இருக்கும் உலைகளை உடனடியாக செயலற்று போகச்செய்வதும்தான். "நாம் இயற்கையுடன் வாழ கற்றுக் கொள்ளவேண்டும்; இயற்க்கையைத் திண்று அல்ல" என்ற காந்தியின் வார்த்தை இங்கு பொருத்தமாக இருக்கும். நமக்கு உண்மையிலேயே தேவைப்படும் அளவு வாழ்க்கை சாதனங்கள், சக்தி மற்றும் வசதிகளை மட்டுமே கொண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும். நுகர்வு கலாச்சார மோகத்தினால் உந்தப்பட்டு அணுசக்தி மட்டுமல்ல சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடு, உடல் திசுக்களை கொல்லும் செல்போன் பயன்பாடு போன்ற அனைத்தும் மனிதகுல நலனுக்கெதிராக நாமே குழி தோண்டிக்கொண்டுள்ளோம் என்பதையே காட்டுகிறது. கே. ராஜ ராஜன் நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

பஹ்ரைன் பதட்டம் - ஆறு பேர் பலி

பஹ்ரைனில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 6 பேர் கொல்லப் பட்டுள்ளனர். முத்து சதுக்கத்தில் குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகுமாறு ராணுவம் விடுத்த வேண்டுகோளை ஆர்ப்பாட்டக்காரர்கள் புறக்கணித்து மோதலில் ஈடுபட்டனர்.கண்ணீர் புகையை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களை ராணுவத்தினர் விரட்டினர். இந்த மோதலின் போது மூவர் கொல்லப்பட்டனர். மேலும் இரு காவல்துறையினர் வாகனங்கள் மோதி இறந்துள்ளதாக பஹ்ரைன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவைச் சார்ந்த ஒரு வீரரும் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நேற்றைய அவசர நிலை பிரகடனத்திற்கு பின்னர் ஆர்ப்பாட்டங்கள் எதனையும் நடத்தக் கூடாது என பஹ்ரைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது தாக்குதல் நடத்தியதற்கு  ஷியா பிரிவைச் சார்ந்த முஸ்லிம்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஈரானைச் சார்ந்த கடுங்கோட்பாட்டாளர்கள் பஹ்ரைனை ஈரானின் 14வது மாகாணமாக சொல்லி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கோப்பையை வெல்லாது டோனி காண்பது கனவு - டீன் ஜோன்ஸ்!

 
தற்போதுள்ள இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று என்னால் நம்ப முடிய வில்லை என்றும் இந்திய அணி கோப்பையை வென்று விடும் என கேப்டன் டோனி கனவு கண்டு வருவதாகவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
தி ஏஜ் எனும் இணையதளத்தில் இது குறித்து தெரிவித்துள்ள டீன் ஜோன்ஸ் இது வரை உலகக் கோப்பையை வென்ற அணிகளை பார்த்த வரையில் பேட்டிங்,பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் பலம் வாய்ந்த அணிகளே கோப்பையை வென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
புதிய பந்தில் விளையாடும் திறமை படைத்தவர்களாகவும், 50 ஓவர் வரை நிலைத்து நின்று விளையாடக் கூடியவர்களாகவும், பவர் பிளே ஓவர்களில் சூழ்நிலைகேற்ப விளையாடும் திறமை படைத்த பேட்ஸ்மேன்களும் , நெருக்கடிக்கு தகுந்தவாறும், பவர் பிளே ஓவர்களில் ரன்களை விட்டுக் கொடுக்காமல் திறமையாக பந்து வீசக் கூடிய பௌலர்களும் , திறமையான பீல்டர்களும் இருக்கும் அணிக்கே வெற்றி வாய்ப்பு என்றும் அந்த வகையில் இந்திய வீரர்கள் தனிப் பட்ட முறையில் நிறைய சாதனைகளை வைத்து இருப்பதும் டெண்டுல்கர் மற்றும் சேவாக் அதிரடியாக விளையாடி வருவதையும் வைத்து இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் எனக் கருத முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணியின்  ஜாகீர் கான், ஆஷிஸ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங் மற்றும் பியுஷ் சாவ்லா என்ற பந்து வீச்சு  வரிசையை இதற்கு முன் கோப்பையை வென்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் தரமாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஹர்பஜன் சிங் பந்து வீச்சு டோனியின் கவலையை அதிகரித்துள்ளதாகவும் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஹர்பஜன் தடுமாறி வருவதாகவும் டெஸ்ட் விளையாடும் அணிகளுடன் இது வரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்பஜன் 6 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி உள்ளதாகவும் 10 ஓவர்கள் வீசி 50 ரன்கள் வரை விட்டுக் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சனிக் கிழமை தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதிய உலகக் கோப்பை கிரிக்கெட்  போட்டியில் இந்திய அணி வீரர்கள்   29 ரன்களுக்கு 9 விக்கெட்களை மளமளவென பறி கொடுத்ததும் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு பந்துகள்  மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றதும் குறிப்பிடத் தக்கது. 

உலக கோப்பை கிரிக்கெட் : காலிறுதியில் மோதும் அணிகள் ஓர் சிறப்பு அலசல்

 

  1. குரூப் ஆட்டங்களில் வெல்லப் போவது யார் - இந்தியா – பாகிஸ்தான் காலிறுதிக்கு வாய்ப்பு !

  • உலக கோப்பை கிரிக்கெட் 2011ன் எல்லா போட்டிகளின் வர்ணனைகளையும் இந்நேரத்தில் வாசகர்கள் அனைவரும் படித்திருப்பீர்கள். இந்தியா பரபரப்பான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்திருக்கும் சூழலில் காலிறுதிக்கு முந்திய 13 குழு  ஆட்டங்கள் 8 தினங்களில் முடிவடைய உள்ள நிலையில் காலிறுதியில் மோத உள்ள அணிகள் குறித்த சிறப்பு அலசல் இதோ நம் இந்நேரம் வாசகர்களுக்காக.
குரூப் ஏ ஆட்டங்களில் இது வரை விளையாடியுள்ள போட்டிகளில் இலங்கை 5 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகியவை 4 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் இரண்டு, மூன்றாம் இடத்திலும், ஆஸ்திரேலியா 3 ஆட்டங்களில் 5 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும் உள்ளது. இப்போதுள்ள சூழலில் இக்குழுவில் 2 புள்ளிகளுடன் உள்ள ஜிம்பாப்வே, கனடா மற்றும் புள்ளி கணக்கை தொடங்காத கென்யா கண்டிப்பாக காலிறுதிக்கு நுழையும் வாய்ப்பு அறவே இல்லை என்று சொல்லி விடலாம். ஏ குரூப்பில் ஆஸ்திரேலியா மீதம் உள்ள ஆட்டங்களில் கென்யா, கனடா ஆகியவற்றிக்கு எதிராக எளிதாகவும் பாகிஸ்தானுக்கு எதிராக போராடியும் வெற்றி பெறும் என்று கொண்டால் ஆஸ்திரேலியா 11 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு செல்லும். ஒரு வேளை பாகிஸ்தானுடனான போட்டியில் தோற்று போனால் 9 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்கு செல்லும். இலங்கை தன் எஞ்சிய ஒரு போட்டியில் நியூசிலாந்தை வென்றால் 9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்துக்கு செல்லும். ஜிம்பாப்வேயுடன் எஞ்சியுள்ள போட்டியில் வெற்றி பெறும் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான் போட்டியில் வென்றால் 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலோ தோற்றால் ரன் ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு செல்லும். பாகிஸ்தான் முதல் இடத்திற்கு சென்றால் நியூசிலாந்து 8 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் பாகிஸ்தான் 4வது இடத்திற்கு சென்றால் நியூசிலாந்து மூன்றாம் இடத்திற்கும் செல்லும். பி குரூப்பில் தற்போது இந்தியா 7 புள்ளிகளுடன் முதலாமிடத்திலும் மேற்கந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா 4 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் இரண்டாம், மூன்றாமிடத்திலும், இங்கிலாந்து 5 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும் உள்ளது. வங்காள தேசம் 4 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் உள்ளது. அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் காலிறுதி கனவை மறந்து விட வேண்டியது தான். பி குரூப்பில் தென் ஆப்பிரிக்கா மீதம் உள்ள ஆட்டங்களில் வங்காள தேசம், அயர்லாந்தை வென்று 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றாலும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வென்றால் 8 புள்ளிகளுடன் மேற்கந்திய தீவுகள் அணி மூன்றாம் இடத்திற்கும் தோற்றால் 6 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் 4 வது இடத்திலும் இருக்கும். அதே சமயத்தில் இங்கிலாந்து மேற்கந்திய தீவுகளுக்கு எதிராக வென்றால் 7 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தோற்றால் ரன் ரேட் அடிப்படையில் காலிறுதிக்கு தகுதி பெறாமலும் போகும், இந்தியா மேற்கந்திய தீவுகளுக்கு எதிராக வெல்லும் என்று நம்பினால் 9 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருக்கும். இங்கிலாந்து மேற்கத்திய தீவுகளுக்கு எதிராக தோற்றால் நெதர்லாந்தை வென்று வங்காள தேசம் 6 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கும். நாம் மேலே சொன்ன கணிப்புகள் நடக்கும் பட்சத்தில் கீழ்கண்டவாறு அணிகளின் ரேங்க் இருக்கும். குரூப் ஏ : 1. ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் (ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணி ஆட்டத்தை பொறுத்தது) 2. இலங்கை 3. நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் 4. பாகிஸ்தான் அல்லது நியூசிலாந்து குரூப் பி : 1. தென் ஆப்பிரிக்கா 2. இந்தியா 3. மேற்கந்திய தீவுகள் அல்லது இங்கிலாந்து 4. மேற்கந்திய தீவுகள் அல்லது வங்காளதேசம். மேற்காணும் முடிவுகள் அமைந்தால் காலிறுதியில் மோத உள்ள அணிகள் பின் வருமாறு இருக்கும். மார்ச் 23 : A1 Vs B4 –    ஆஸ்திரேலியா Vs மேற்கந்திய தீவுகள் அல்லது ஆஸ்திரேலியா Vs வங்காள தேசம் அல்லது பாகிஸ்தான் Vs மேற்கந்திய தீவுகள் அல்லது பாகிஸ்தான் Vs வங்காள தேசம் மார்ச் 24 அன்று நடக்கும் இரண்டாம் ஆட்டத்தில் A2 Vs B3 இலங்கை Vs மேற்கந்திய தீவுகள் அல்லது இலங்கை Vs இங்கிலாந்து மார்ச் 25 அன்று நடக்கும் மூன்றாம் காலிறுதி ஆட்டத்தில் A3 Vs B2 இந்தியா Vs பாகிஸ்தான் இந்தியா Vs நியூசிலாந்து மார்ச் 26 அன்று நடக்கும் இறுதி காலிறுதி ஆட்டத்தில் A4 Vs B1 தென் ஆப்பிரிக்கா Vs பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா Vs நியூசிலாந்து இதில் மார்ச் 23, 26 நடக்கும் காலிறுதி ஆட்டங்கள் வங்காளதேசத்திலும் 24 அன்று இலங்கையில் 25 அன்று இந்தியாவிலும் நடக்கும் என தெரிகிறது.

திகைப்பில் திராவிட கட்சிகள்!

நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க கட்சி சார்பாக தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட கிடைக்கப்பெற்ற மனுக்களின் எண்ணிக்கையைக் கண்டு திராவிட கட்சிகள் திகைத்து போயுள்ளன.
அ.தி.மு.க. - தி.மு.க. - தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அ.தி.மு.க.வில், 12 ஆயிரத்து 200 பேரும், தி.மு.க. சார்பில் 15 ஆயிரம் பேரும்,  தே.மு.தி.க.சார்பில் 7,750 பேரும் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
தமிழ்நாட்டில் தே.மு.தி.க., 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஒரு தொகுதிக்குச் சராசரியாக, 189 பேர் பணம் கட்டியுள்ளனர். அதுவே, தி.மு.க.,வில் ஒரு தொகுதிக்கு, 120 பேரும், அ.தி.மு.க.,வில் 85 பேரும் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
விருப்பமனு தாக்கல் விஷயத்தில், திராவிட கட்சிகளைப் பின்னுக்குத்தள்ளி தே.மு.தி.க.,வினர் அதிக சதவீதத்தில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளது, பெரிய திராவிட கட்சிகளைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.


"பாலஸ்தீன் அரபுகளுக்கே சொந்தம்" - மகாத்மா காந்தி!

 
பாலஸ்தீன் நெருக்கடி குறித்தும் ஜெர்மனியில் யூதர்கள் மீது இழைக்கப்பட்ட அக்கிரமங்கள் குறித்தும் என்னுடைய கருத்தைக் கேட்டு ஏராளமான கடிதங்கள் எனக்கு வந்துள்ளன. இந்தக் கடினமான பிரச்சினை தொடர்பாக என்னுடைய கருத்துக்களை வெளியிடுவதில் எனக்குத் தயக்கம் இல்லை எனச் சொல்ல முடியாது.
எனது அனுதாபங்கள் எல்லாமே யூதர்களுக்கே. தென் ஆபிரிக்காவில் நான் கழித்த காலத்திலிருந்து யூதர்களை நெருக்கமாக அறிந்து வந்துள்ளேன். சில யூதர்களுடன் என்னுடைய நட்பு இன்று வரை தொடர்கின்றது. இந்த யூத நண்பர்கள் மூலம் காலங்காலமாக அவர்கள் மீது இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை அறிந்துகொண்டேன். அவர்கள் கிறிஸ்தவ மதத்தின் தீண்டத் தகாதவர்களாக இருந்திருக்கிறார்கள். தீண்டத் தகாத மக்கள் மீது இந்துக்கள் இழைத்த கொடுமைகளுக்கும் இதற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.  தீண்டத் தகாத மக்கள் மீதும் யூதர்கள் மீதும் இழைக்கப்பட்ட மனிதத்தன்மையற்ற கொடுமைகளுக்கு மத அங்கீகாரம் தரப்பட்டிருக்கிறது. யூதர்களின் நட்பு மட்டுமல்ல, உலகெங்கும் யூதர்கள் மீது காட்டப்படுகிற அனுதாபமும் அவர்கள் மீதான எனது அபிமானத்துக்குக் காரணமாகும்.
ஆனால், யூதர்கள் மீதான எனது அனுதாபம் என்னைக் கட்டிப் போடவில்லை. நீதிக்கு முரணான அவர்களின் நடத்தையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. யூதர்களுக்கு ஒரு தேசிய இல்லம் (தனி நாடு) வேண்டும் என்ற முழக்கத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் இதற்கான அங்கீகாரத்தைப் பைபிளில் காட்டுகிறார்கள். எங்கு பிறந்தார்களோ, எங்கு பொருள் சம்பாதித்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அந்தந்த நாடுகளை தமது சொந்த நாடாக அவர்கள் ஏன் எடுத்துக்கொள்ளக் கூடாது? உலகெங்கும் எல்லா நாட்டு மக்களும் இப்படித்தானே நடந்து கொள்கிறார்கள்..! ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்து எப்படிச் சொந்தமோ, பிரெஞ்சுக்காரர்களுக்கு பிரான்ஸ் எப்படிச் சொந்தமோ அப்படித்தான் பாலஸ்தீனும் அரபு மக்களுக்கே சொந்தம். அரபுகள் மீது யூதர்களைத் திணிப்பது தவறானதும் மனித விரோதமானதுமாகும்.
இன்று பாலஸ்தீனில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது? அவற்றில் யாதொன்றையும் எந்தவொரு தார்மீக நெறிமுறையின் படியும் நியாயப்படுத்தவே முடியாது. அங்கு நடத்தப்பட்டு வரும் அட்டூழியங்களை எந்நிலையிலும் ஏற்றுகொள்ளவே முடியாது. பாலஸ்தீன் முழுவதையோ அல்லது அதன் பகுதியோ யூதர்களுக்குத் தந்துவிட்டு கண்ணியம் மிக்க அரபுகளை அவமானப்படுத்துவது மனித குலத்துக்கு விரோதமான குற்றமாகவே கருதப்படும். இதற்கு மாற்றமான நன்மையான அணுகுமுறை ஒன்று இருக்கிறது என்று சொன்னால், அது இன்று உலகெங்கிலும் எந்தெந்த நாடுகளில் பிறந்து, வணிகம் புரிந்து வாழ்ந்து வருகிறார்களோ அந்தந்த நாடுகளிலேயே அவர்கள் நியாயமாகவும் நீதியுடனும் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவது தான். பிரான்ஸில் பிறந்த கிறிஸ்தவர்கள் பிரெஞ்சுக்காரர்களாக இருப்பதைப் போல பிரான்ஸில் பிறந்த யூதர்களும் பிரெஞ்சுக்காரர்களே!
'எங்களுக்குப் பாலஸ்தீன் தான் வேண்டும், பாலஸ்தீனத்தைத் தவிர வேறு எந்த நாடும் எங்களுக்குச் சொந்தமல்ல' என யூதர்கள் முரண்டு பிடித்தால் உலகில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் அவர்கள் செட்டிலாகி வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அந்த நாடுகளில் இருந்தெல்லாம் அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதை ஏற்றுகொள்வார்களா அல்லது 'எங்கு வேண்டுமானாலும் வாழ்வோம் இரண்டு நாட்டுக் குடியுரிமையும் வேண்டும்' என இவர்கள் எதிர்பார்க்கிறார்களா?
இவர்கள் தனிநாடு வேண்டும் என வாதாடுவதற்கு ஆதாரமாக முன்வைப்பது ஜெர்மனியில் இவர்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்த கதைகளைத்தான். இந்த ஜெர்மன் கொடுமை ஈடிணையில்லாததுதான். ஆனால், அதற்காக அப்பாவிப் பாலஸ்தீனர்கள் தான் பலிக்கடா ஆக்கப்பட வேண்டுமா? மனிதகுலத்துக்கான நன்மைக்காக ஒரு போரை நியாயப்படுத்த முடியும் என்றால், அது ஜெர்மனிக்கு எதிரான போராகத்தான் இருக்க முடியும். ஆனால், எந்தவொரு போர் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆக, அப்படிப்பட்ட போருக்கான சாதக பாதகங்களை அலசுவது எனது வேலையாகாது.
யூதர்கள் மீது இழைத்த கொடுமைகளுக்காக ஜெர்மனி மீது போர் தொடுக்கவே முடியாது எனில், குறைந்த பட்சம் ஜெர்மனியுடன் எத்தகைய உறவும் இருக்கக்கூடாதுதான். நீதி, ஜனநாயகத்துக்காகப் பாடுபடுகின்றோம் என முழங்குகின்ற நாட்டுக்கும் (இங்கிலாந்து) அந்த இரண்டுக்கும் வெளிப்படையான விரோதி என அறிவிக்கப்பட்ட நாட்டுக்கும் இடையே உறவு எப்படி மலரும்? அல்லது இங்கிலாந்து ஆயுதபாணி சர்வாதிகாரத்துவப் பக்கம் நெருங்குகின்றதா? இரட்டை வேடம், இரட்டைத் துலாக்கோல் போன்ற இடர்பாடுகளின்றி மனிதநேயப் போர்வையுடுத்துகின்ற பலவீனம் இன்றி அப்பட்டமாக வன்முறையையும் அராஜகத்தையும் கட்டவிழ்ப்பது எப்படி என்பதை ஜெர்மனி உலகுக்கு உணர்த்தியுள்ளது. எந்தவித மூடு மறைப்புமின்றி, சால்ஜாப்பு சாக்குப்போக்கும் இல்லாமல், வார்த்தை ஜாலங்கள் எப்படி பயங்கரமாக இருக்க முடியும் என்பதையும் அது உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றது.
இந்தத் திட்டமிட்ட, வெட்கமற்ற அராஜகத்தை யூதர்களால் எதிர்க்க முடியாதா? திக்கற்றவர்களாகி விட்டோம் என்கிற உணர்வுக்காளாகாமல், சுயமரியாதையைக் கட்டிக் காப்பாற்ற வழியே இல்லையா? உயிர் துடிப்புள்ள, இறைவன் மீது நம்பிக்கை உள்ள எந்தவொரு நபரும் விரக்தி அடையவோ நாதியற்றுப் போனோம் என வருத்தப்படவோ தேவையில்லை. யூதர்களின் ஜெஹோவா கடவுள் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்களின் இறைவனைப் போன்றவரே. அவர் எல்லாருக்கும் பொதுவானவர். அவருக்குத் துணையில்லை. அவரை விவரிக்க வார்த்தைகளும் இல்லை.
தாங்கள் வழிபடும் கடவுளுக்கு மேன்மை மிகு சிறப்புக்கூறுகள் இருப்பதாகவும், அவன் தங்களின் எல்லாச் செயல்பாடுகளையும் நிருவகிப்பதாகவும் நம்புகின்ற யூதர்கள் நாதியற்றுப் போனோமே என நிராசையடையக் கூடாது. நான் ஒரு யூதனாக இருந்து, ஜெர்மனியில் பிறந்து அங்கேயே வாழ்பவனாக இருந்தால், நான் ஜெர்மனியையே எனது தாய்நாடாக அறிவிப்பேன். எவ்வளவு வலுவான ஜெர்மனியன் வந்து என்னை எதிர்த்தாலும் "என்னைச் சுட்டுத் தள்ளு அல்லது மரணக்குழியில் வீசு. ஆனாலும் எனது கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன்" எனச் சவால் விடுவேன். நாடுகடத்தப்படவும் அல்லது பாரபட்சமாக நடத்தப்படவும் அனுமதிக்கவே மாட்டேன். இதற்காக மற்ற யூதர்களும் என்னோடு சேரும்வரை நான் காத்திருக்கமாட்டேன். ஆனால், இறுதியில் எல்லாரும் என்னுடைய உதாரணத்தைப் பின்பற்றுவார்கள் என உறுதியாக நம்புவேன்.
பாலஸ்தீனில் இருக்கிற யூதர்களுக்குச் சில வார்த்தைகள். அவர்கள் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. பைபிளில் சித்திரிக்கப்பட்ட பாலஸ்தீனுக்கு புவியியல் சான்றோ வடிவமோ இல்லை. அது அவர்களின் இதயங்களில் இருக்கிறது. இப்போதைய பாலஸ்தீனம்தான் அவர்களின் சொந்த நாடு என அவர்கள் நம்பினால், பிரிட்டிஷ் துப்பாக்கிகளின் நிழலில் அவர்கள் அதற்குள் நுழைவது தவறானதாகும். துப்பாக்கித் தோட்டாக்களுடனோ வெடிகுண்டுகளுடனோ ஒரு மதச் சடங்கை செய்ய முடியாது. செய்யவும் கூடாது. அரபுகளின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக்கொண்டு அவர்களது அனுமதியுடன் வேண்டுமானால் பாலஸ்தீனில் குடியேறட்டும். அவர்கள் முதலில் அரபுகளின் இதயங்களை வெல்லட்டும். யூத இதயத்தை ஆளுகின்ற இறைவன் தானே அரபு இதயத்தையும் ஆளுகின்றான்!
அவர்களது மத விழைவுக்கு உலகமும் ஆதரவளிக்கும். அரபுகளோடு இணக்கமாகப் போவதற்கு நூற்றுக்கணக்கான வழிகள் இருக்கின்றன. ஒன்றை மட்டும் அவர்கள் செய்ய வேண்டும். உடனடியாக பிரிட்டிஷ் துப்பாக்கிகளின் உதவியைக் கைவிட வேண்டும். எவ்வகையிலும் அவர்களுக்குத் தீங்கிழைக்காத மக்களை பிரிட்டிஷாரோடு சேர்ந்து சூறையாடுவது தகுமா?
அரபுகளின் அத்துமீறல்களை நான் ஆதரிக்கவில்லை. அரபுகளும் தங்கள் நாட்டின் மீதான தேவையற்ற ஆக்கிரமிப்பை தடுத்து முறியடிப்பதற்கு வன்முறையற்ற அமைதியான வழிமுறைகளை மேற்கொண்டிருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என நான் ஆசைப்படுகிறேன். ஆனால், அரபுகள் மீதான கொடுமைகளும் அராஜகங்களும் எல்லை மீறிப்போன நிலையில், அரபுகளின் கிளர்ச்சியை விமர்சித்து ஒன்றும் சொல்ல முடியாது.
இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் எனத் தங்களைக் குறித்துச் சொல்லிக் கொள்ளும் யூதர்கள் பூமியில் தங்களுக்குச் சொந்தம் எனச் சொல்லிக் கொள்கிற பிரதேசத்தை அடைவதற்கும் வன்முறையற்ற அமைதியான வழிமுறைகளை மேற்கொள்ளட்டும். அதுவே அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்பதற்குப் பொருத்தமானதாக இருக்கும். பாலஸ்தீனம் உட்பட எல்லா நாடுகளும் அவர்களுக்குச் சொந்தமாகிவிடும். அதற்கு வழிமுறை வன்முறை அல்ல. அன்பான சேவை தான்.
சிசில் ரோத் எழுதிய 'பண்பாட்டு யூதர்கள் அளித்த பங்களிப்புகள்' என்கிற நூலை ஒரு யூத நண்பர் எனக்கு அனுப்பியுள்ளார். உலகில் இலக்கியம், கலை, இசை, நாடகம், அறிவியல், மருத்துவம், விவசாயம் போன்ற துறைகளைச் செம்மைப்படுத்த யூதர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை அந்த நூல் விளக்குகிறது. யூதர்கள் மேற்கத்தேய உலகின் ஒதுக்கப்பட்டவர்களாகவும் வெறுத்தொதுக்கப்படலாம் அல்லது செல்லப் பிள்ளைகளாகச் சீராட்டப்படலாம். இரண்டுமே யூதர்களின் கையில் தான் இருக்கின்றது.
இறைவனால் வெறுக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான முறையில் நடந்துகொள்வதைத் தவிர்த்து இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தவர்களாக அமைதியான வழிமுறைகளை மேற்கொண்டு உலகின் மரியாதையையும் கவனத்தையும் ஈர்க்கலாம். அவர்களது பங்களிப்புகளின் மணி மகுடமாக வன்முறையற்ற செயலையும் அவர்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
(ஆதாரம்: ஹரிஜன் 26-11-1938) - நன்றி: "அல் வஹ்தா"-2004

கம்ரான் அக்மல் ஜோக்ஸ்

 
உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கெதிராக நியுஸிலாந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரைடர் சதமடித்து நியுஸிலாந்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இவர் ரன் எடுக்கும் முன்பும் 4 ரன்களில் இரு்நதபோதும் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் எளிதான இரண்டு கேட்ச்களை தவறவிட்டார். இந்தப் போட்டியில் மொத்தம் 3 கேட்ச்களை இவர் பிடிக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் இவர் மீது கடும் கோபத்துடன் இருக்கின்றனர். சில ரசிகர்கள் இவரைக் கேலி செய்து குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். இந்நேர வாசகர்களுக்காக அதில் சில - ஒவ்வொரு சிறந்த பேட்ஸ்மேனுக்கு பின்னாடியும் கம்ரான் அக்மல் ( behind every successful batsman stands kamran akmal) கம்ரானுக்கு பிடித்த படம்: Catch Me If You Can" கம்ரானுக்கு பிடித்த புத்தகம் - The dropper in the rye கம்ரானின் மனைவி குழந்தைகளை வைத்துக் கொள்ள அவரிடம் கொடுக்க மாட்டார். ( Kamran's wife doesnt let him hold their babies) தேவையில்லாமல் கிளவுஸ் போடும் இரண்டு நபர்கள் - மைக்கேல் ஜாக்ஸன் மற்றும் கம்ரான் அக்மல் இனிமேல் யாரும் கேட்சை கோட்டை விட்டால் ரசிகர்களிடமிருந்து தப்பிக்க முடியாது ....

கைகளே இல்லாத மாணவி கால்களால் + 2 பரீட்சை எழுதுகிறார்  

திருக்கோவிலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை என்பவரின்   மூத்த மகள் வித்யாஸ்ரீ இரண்டு கைகளும் பிறவியிலேயே இல்லாதவர். 17 வயது வித்யாஸ்ரீ திருக்கோவிலூர் டேனிஸ் மிஷன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வந்தார் 2 கைகளும் இல்லாவிட்டாலும் மனம் சோர்வடையாமல் சிறப்பாக படிக்கும் மாணவியாகத் திகழ்ந்தார் செவ்வாய்க் கிழமையன்று அவர் டேனிஷ் மிஷன் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதினார். கைகள் இல்லாததால் அவர் கால் விரல்களில் இடையில் பேனாவை வைத்து தரையில் அமர்ந்து தேர்வு எழுதினார். அரசு அவருக்கு ஒருமணி நேரம் கூடுதலாக நேரம் ஒதுக்கியது. ஆனாலும் அவர் 3 மணி நேரத்திற்குள் தேர்வை எழுதி முடித்தார் "கடந்த 10-ம் வகுப்பு பொதுத்  தேர்வை கால்களால் எழுதி 329 மதிப்பெண்கள் பெற்றேன். தற்போது 12-ம் வகுப்பில் வரலாறு பிரிவை தேர்வு செய்து படித்து வந்தேன். 1200க்கும் 1100 மதிப்பெண் குறையாமல் எடுப்பேன். தேர்வில் வெற்றிப் பெற்று வருங்காலத்தில் உயர் கல்வி படித்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாவதே என் லட்சியம். நான் உயர் கல்வி படிக்க அரசு உதவி செய்ய வேண்டும்" என்று மாணவி வித்யாஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்.


11 வயதில் தாயாகி, 23 வயதில் பாட்டியாகி உலக சாதனை!

ருமேனியாவைச் சேர்ந்த ஒரு பெண்மனி 11 வயதில் தாயாகி, 23 வயதில் பாட்டியாகி, உலகிலேயே "இளம் பாட்டி" என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். ருமேனியாவைச் சேர்ந்தவர் ரிப்கா ஸ்டேன்ங்கு (23).   இவர்   கணவர் அயோனஸ் ஸ்டேன்ஸ் (25). தங்க நகை வியாபாரி. ரிப்கா தனது 11 வயதில் ஸ்டேன்ஸ்சைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்போது கணவர்  ஸ்டேன்ஸ்சுக்கு 13 வயது. இந்த நிலையில் தனது 12-வது வயதில் ரிப்கா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதற்கு மரியா என பெயரிட்டார். அதன் பின்னர் நிக்கோல் என்ற மகன் பிறந்தான். குறைந்த வயதில் சிறுமியாக இருந்த போதே குழந்தை பெற்ற ரிப்கா இருந்த நிலை தனது மகள் மரியாவுக்கு வரக்கூடாது என விரும்பினார். எனவே, அவரை ஒரு பள்ளியில் தங்க வைத்து படிக்க வைத்தார். ஆனால் விதி யாரை விட்டது. படிக்கும் பொழுதே மரியா ஒரு மாணவனைக் காதலித்தாள். அவனுடன் நெருங்கி பழகினாள். விளைவு கர்ப்பம் அடைந்தாள். சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். இதன் மூலம் தனது 23-வது வயதில் ரிப்கா பாட்டி ஆகவும், அவரது கணவர் ஸ்டேன்ங்கு தாத்தாவாகவும் ஆகி விட்டனர். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து ரிப்கா கூறும்போது, "எனது நிலை என் மகளுக்கும் வரக்கூடாது என நினைத்தேன். 40 வயதில் தான் பாட்டியாகவேண்டும் என விரும்பினேன். ஆனால் என்னை 23 வயதிலேயே என் மகள் பாட்டியாக்கி விட்டாள்" என்று தனது பேரனைக் கொஞ்சியபடியே கூறினார். இதற்கு முன்பு ரோதர்ம் நகரைச்சேர்ந்த 26 வயது பெண்தான் இங்கிலாந்தின் மிக இளமையான பாட்டி என்ற பெருமையைப் பெற்று இருந்தார். இப்போது 23-வது வயதில் ரிப்கா இங்கிலாந்தின் மிக இளமையான பாட்டி ஆகவும், அவரது கணவர் ஸ்டேன்ங்கு 25-வது வயதில் இங்கிலாந்தின் மிக இளமையான தாத்தாவாகவும் பெருமையைத் தட்டிச் சென்றுவிட்டனர்.

பல்கலைக்கழக விருந்தில் மாணவ-மாணவிகள் நிர்வாண நடனம்!

அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் யேழ் பல்கலைக் கழகம் உள்ளது. இங்கு இரவு நேர விருந்து விழா நடந்தது. இதில் 50 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். விழா முடிவில் அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள், சங்கத்தினர் மாணவர்களுக்கு விருந்து அளித்தனர். விருந்தில் மது பரி மாறப்பட்டது. தொடக்கத்தில் உடை அலங்காரத்துடன் மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். விருந்து ஆட்டம்- பாட்டம் கொண்டாட்டத்துடன் அமர்க்களப்பட்டது. நள்ளிரவில் கொண்டாட்டம் களை கட்டியது. போதை தலைக்கேறியதும் மாணவ- மாணவிகள் தங்கள் உடைகளை களைந்து நிர்வாணமாகினர். ஒருவரை யொருவர் முத்தமிட்டபடி நடனமாடினர். “செக்ஸ்” மோதல்களும் ஏற்பட்டன. இதில் 10 மாணவ- மாணவிகள் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மாணவ- மாணவிகள் நடவடிக்கைக்கு யேழ் பல்கலைக்கழக முதல்வர் மேரிமில்லர் கண்டனம் தெரிவித்துள்ளார். "இந்தச் சம்பவம் மிகவும் வெறுக்கத்தக்கது" என அவர் கூறியுள்ளார். ஆனால், "விருந்தில் தாங்கள் மது அருந்த கட்டாயப்படுத்தப் பட்டதாக" மாணவ- மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

புதுக் கட்சி உதயம்: பெருந்தலைவர் மக்கள் கட்சி!

அனைத்து நாடார் சமுதாய சங்கங்கள் ஒன்றாக இணைந்து “பெருந்தலைவர் மக்கள் கட்சி” என்று காமராஜர் பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளது.   நாடார் சமுதாய ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னையில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு நாடார் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தலைமை தாங்கினார். நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் ஜி.கரிக் கோல்ராஜ் கூட்டத்தின் நோக்கம் பற்றி பேசினார். கூட்டத்தில் இந்திய நாடார்கள் கூட்டமைப்பு தலைவர் எஸ்.டி.நெல்லை நெடுமாறன், தட்சணமாற நாடார் சங்க தலைவர் எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், சென்னை வாழ் நாடார்கள் சங்க தலைவர் பி.சின்னமணி நாடார், நாடார் பேரவை தலைவர் ஏ.நாராயணன், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன், நாடார் பேரவை பொதுச் செயலாளர் சூலூர் சந்திரசேகரன், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் ஏ.சுபாஷ் பண்ணையார், தமிழ்நாடு கிராமணி குல முன்னோர் சங்க தலைவர் த.மோகன், காமராஜ் ஆதித்தனார் கழக தலைவர் சிலம்பு சுரேஷ், எம்.என்.ராஜா, ஜாகுவார் தங்கம், ஈரோடு மாரியப்பன், சேலம் செல்லப்பன் உள்பட பலர் பேசினார்கள். முன்னதாக தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை தலைவர் டி.ராஜ்குமார் வரவேற்றார். இறுதியாக சென்னை வாழ் நாடார்கள் சங்க பொதுச் செயலாளர் டி.தங்கமுத்து நன்றி கூறினார்.கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்விவரம் வருமாறு:- 1. அனைத்து நாடார் சங்க அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டத்தில் புதிய கட்சி தொடங்குவது என்றும், அந்தக் கட்சிக்கு “பெருந் தலைவர் மக்கள் கட்சி” என்று பெயரிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்த கட்சியின் தலைவராக ஆர்.சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். மாநில, மாவட்ட நிர்வாகிகளின் பெயர்கள் உயர்மட்ட குழுவால் விரைவில் அறிவிக்கப்படும். 2. இந்க்த கட்சிக்காக பெருந் தலைவர் காமராஜரின் திருவுருவப்படம் பொறிக்கப்பட்டுள்ள கொடி ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும். இந்தக் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 3. கீழ்க்கண்டவர்கள் இந்தப் புதிய கட்சிக்காக உயர்மட்ட குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். அவர்கள் கட்சியின் கொள்கைகள், செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை வகுப்பார்கள். 1.எஸ்.டி.நெல்லை நெடுமாறன், 2.எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், 3.ஆர்.சரத்குமார், 4.பி.சின்னமணி நாடார், 5.ஜி.கரிக்கோல்ராஜ், 6.என்.ஆர்.தனபாலன், 7.ஏ.நாராயணன், 8.டி. ராஜ்குமார், 9.ஈரோடு மாரியப்பன், 10.சூலூர் சந்திரசேகரன், 11.டி.தங்க முத்து. கூட்டத்தில் நாடார் மகா ஜன சங்க பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் பேசும்போது, "நாடார் சமுதாயத்தில் பல பெரிய அமைப்புகள் இருந்தாலும் அரசியல் சக்தியாக எந்த அமைப்பும் இல்லாமல் இருந்தது. நமது சமுதாயத்திற்கு அரசியல் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதற்காகவே அனைத்து சங்கங்களும் இணைந்து ஒரே கட்சியாக வருகிற தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம்" என்றார். நாடார் பேரவை தலைவர் ஏ.நாராயணன் பேசும்போது, "தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு அணியிலும் பல்வேறு சமுதாய கட்சிகள் தொகுதி பங்கீடுகள் பெற்றுள்ளன. அவைகள் முந்தையைத் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு தங்கள் பலத்தை நிரூபித்துள்ளன. ஆனால் நாம் இரு அணிகளிலுமே தொகுதி பங்கீடு கேட்டுச் சென்றால் ஆதரவு மட்டும் தெரிவியுங்கள் என்று கூறிவிடுகிறார்கள். இதற்குக் காரணம் நாம் நம் பலத்தை இதுவரை நிரூபிக்காதது தான். எனவே இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு நமது பலத்தை நிரூபிக்க வேண்டும்" என்றார். பின்னர் ஆர்.சரத்குமார் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து கூறியதாவது:- நாடார் சமுதாய ஒற்றுமை இப்போது சிறந்த முறையில் ஏற்பட்டுள்ளது. முன்னர் நடந்த பேச்சுவார்த்தைகளை அப்புறப்படுத்திவிட்டோம். எங்களுக்கு உரிய மரியாதையை யார் தருகிறார்கள் என்று பார்ப்போம். எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதெல்லாம் ஓரிரு நாளில் அறிவிப்போம். அப்படி இல்லை என்றால் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு செய்வோம். 62 தொகுதிகளில் நாங்கள் பலமாக இருக்கிறோம். இந்தத் தேர்தலில் எங்கள் பலத்தை, வாக்கு வங்கியைக் காட்ட முடியும். நாங்கள் அணி சேரும் கட்சியை வெற்றிபெற வைக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு ஆர்.சரத்குமார் கூறினார்.

ஆ.ராசாவுக்கு ஆதரவாக தியாகிகள் உண்ணாவிரதம்

2ஜி அலைக்கற்றை ஊழலில் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக தியாகிகள், திருச்சியில் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஆயினும், உண்ணாவிரதத்துக்கு ஏற்பாடு செய்த தலைவர், தன்னை ஆசை காட்டி மோசம் செய்ததாகக் கூறி, இளம் பெண் ஒருவர் திடீர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, 2ஜி  அலைக்கற்றை ஊழல் வழக்கு தொடர்பாக, மத்திய புலனாய்வுத் துறையினரால்  கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆ.ராசாவுக்கு ஆதரவாக, அகில இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகள் - வாரிசுகள் நல வாழ்வு இயக்கம் என்ற ஒரு இயக்கம்  சார்பில், திருச்சி, தொடர் வண்டி சந்திப்பு, காதிகிராப்ட் அருகே, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது. அப்போது, உண்ணாவிரதப் பந்தலுக்கு மதியம் 12 மணிக்கு மேல் தஞ்சாவூர், பர்மா காலனியைச் சேர்ந்த தமிழரசி என்ற பெண் தனது நான்கு வயது மகனுடன் வந்து,  "இந்த இயக்கத் தலைவர் துரை என்னை ஆசை காட்டி திருமணம் செய்து கொண்டு மோசம் செய்துவிட்டார். என் 20 சவரன் நகைகளைப் பறித்துக் கொண்டார். அதைத் திரும்ப பெற்றுத் தர வேண்டும்" என்று கூறி ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து துரை, அங்கிருந்து, நழுவினார். உண்ணாவிரதப் பந்தலில் இருந்தவர்கள், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களிடம் கூறி, அந்தப் பெண்ணை அப்புறப்படுத்தும்படி கூறினர். இதையடுத்து, அப்பெண் காவலர்களால் அப்புறப்படுத்தப்பட்டார்.

பிளஸ் 2 வினாத் தாள் அவுட்? அதிகாரிகள் விசாரணை!

 
திருச்செந்தூரில் பிளஸ் 2 ஆங்கில முதல் தாளுக்குப் பதிலாக 2ம் தாளுக்குரிய வினாத்தாள் மாற்றி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கி நடந்து வருகிறது. தேர்வு நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், வினாத்தாள் கையாளும் முறை, விடைத்தாள்களைச் சேகரித்து பாதுகாப்பாக அனுப்புதல் குறித்து தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்குக் கல்வித்துறை சார்பில் அறிவுரைகள், பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 53 தேர்வு மையங்களில் மொத்தம் 16 ஆயிரத்து 830 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு மையம் அமைக்கப்பட்டு இப்பள்ளி மாணவர்களும், காயாமொழி மேல்நிலைப் பள்ளி, அடைக்கலபுரம் புனித ஜோசப் பள்ளி, வீரபாண்டியப் பட்டணம் புனித தோமையார் பள்ளி, மாவடிப்பண்ணை அரசு பள்ளி, காஞ்சி சங்கரா மெட்ரிக் பள்ளி உள்ளிட்ட 6 பள்ளிகளில் படிக்கும் 396 மாணவ, மாணவிகளும், 131 தனித்தேர்வர்களும் உள்பட மொத்தம் 527 பேர் பிளஸ் 2 தேர்வெழுதுகின்றனர். இந்த மையத்திற்கு திருச்செந்தூர் செந்தில்முருகன் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் இருந்து வினாத்தாள் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடந்தது. இதற்காக மையத்தில் இருந்து ஆட்டோவில் தேர்வு அலுவலர்கள் வினாத் தாளை ஏற்றி வந்தனர். பள்ளியில் வந்து உடைத்து பார்த்த போது அதில் ஆங்கிலம் 2ம் தாளுக்குரிய வினாத் தாள் இருந்ததாகவும், உடனே வினாத்தாளை மையத்திற்குக் கொண்டு சென்று மாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. வினாத்தாள் கட்டை உடைத்தவர்கள் அதில் கேட்கப்பட்டிருந்த காந்தி குறித்த கட்டுரை, 10 மார்க் வினாக்கள் உள்ளிட்ட முக்கிய வினாக்களை அறிந்து கொண்டு தங்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் வழங்கியதாக பிற மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிமளம், மாவட்ட கல்வி அலுவலர் தமிழ் செல்வி ஆகியோர் சம்பந்தபட்ட தேர்வு மையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இன்று காலை தாசில்தார் வீராசாமிக்குத் தகவல் கிடைத்தது. அவர் வினாத்தாள் பாதுகாப்பு மையத்திற்குச் சென்று கட்டுக்கள் ஏதேனும் உடைக்கப்பட்டுள்ளனவா என ஆய்வு செய்தார். வினாத்தாள் வெளியானதாக பரவிய தகவலால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கிரசுக்கு 63 தொகுதிகள்! கருணாநிதி அறிவிப்பு

 
சென்னை: கடந்த சிலநாட்களாக இழுபறி நிலைமையில் இருந்த திமுக காங். கூட்டணி தொகுதிப்பங்கீடு பிரச்சனை இன்று 63 தொகுதிகளை காங்கிரசுக்கு அளிக்க முதல்வர் கருணாநிதி அறிவித்ததை தொடர்ந்து கூட்டணி பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 63 சீட் கேட்பது நியாயமா?' என்று கேட்டு இதனால் மத்திய அமைச்சரவையில் இருந்து நாங்கள் விலகுகிறோம் என்று அறிவித்த முதல்வர் கருணாநிதி, இரண்டே நாளில் தன் முடிவை மாற்றிக் கொண்டார். காங்கிரஸ் கேட்ட 63 சீட்களை தர ஒப்புக்கொண்டார். அமைச்சர்களின் ராஜினாமா நாடகமும் முடிவுக்கு வந்தது.
தி.மு.க., அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் திங்கள் கிழமை காலையில் அளிப்பர்' என்று தி.மு.க., ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் நேற்று காலை டில்லி வந்திறங்கிய ஆறு திமுக அமைச்சர்களும் நேரடியாக அமைச்சர் அழகிரியின் இல்லத்திற்கு விரைந்தனர். அங்கிருந்து அனைவரும் ஒன்றாக சேர்ந்து பிரதமரை சந்திக்கச் செல்வர் என்றும் கூறப்பட்டது.
மத்திய ஊழல் ஆணையத்தின் தலைவராக தாமஸ் நியமிக்கப்பட்ட விவகாரம் குறித்து பார்லிமென்டில் அறிக்கை தாக்கல் செய்வதில் பிரதமர் வட்டாரங்கள் முனைப்பாக இருந்ததால் இந்த சந்திப்பு நடைபெற வாய்ப்பில்லாமல் போகவே,. மதியம் 12 மணியளவில் பார்லிமென்டில் பிரணாப் முகர்ஜியை தி.மு.க., தரப்பிலிருந்து அமைச்சர் ஒருவர் மட்டும் வந்து சந்தித்து விட்டு போனார். அவர் சென்ற சில நிமிடங்களில் வந்த. குலாம் நபி ஆசாத் "பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை; முட்டுக்கட்டை நீடிக்கிறது' என்று கூறிவிட்டு சென்றார்.
பின்னர் 4 மணியளவில் முதல்வர் கருணாநிதியை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். சென்னையில் இதை உறுதிப்படுத்திய துணை முதல்வர் ஸ்டாலின், "மேலும் ஒரு நாள் கால அவகாசம் காங்கிரஸ் கேட்டிருப்பதாக அறிவித்தார். இதையடுத்து, பரபரப்பு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.  துணை முதல்வரின் அறிவிப்பையடுத்து, நேற்று நாள் பூராவும் அழகிரி வீட்டில் ராஜினாமா கடிதங்களோடு காத்திருந்த தி.மு.க., அமைச்சர்கள், பிரதமருடனான சந்திப்பு நிகழ்ச்சியை கைவிட்டனர்.
காங்கிரசுக்கு தி.மு.க., 60 தொகுதிகள் வரை தருவதற்கு ஒப்புக் கொண்டது. பா.ம.க., தரப்பில் இருந்து 3 தொகுதிகள் வரை விட்டுக் கொடுத்து மொத்தம் 63 தொகுதிகளாக அளித்து சுமுகமான ஒரு முடிவை எடுத்து, இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தீப்பிடித்தது மேலும் ஒரு நானோ கார் !

அகமதாபாத்தில் மேலும் ஒரு நானோ கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த விபுல் ஜானி என்பவர் தனது நானோ காரில் சிவரஞ்சனிகிராஸ் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்து புகை வரத் துவங்கியது. அடுத்த சில நிமிடங்களில் அவரது நானோ கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுவரை ஏழு நானோ கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் மீண்டும் ஒரு கார் தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். அந்த காரில் கூடுதலாக செய்யப்பட்ட தவறான ஒயரிங் காரணமாக தீப்பிடித்திருக்காலம் என கருதுவதாக டாடா மோட்டார்ஸ் விளக்கம் அளித்துள்ளதாகவும் இதனை காரின் உரிமையாளரும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், நானோ கார்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிவது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கீழ்த்தட்டு மக்களின் கார் கனவை பூர்த்தி செய்யும் என்று எதிபார்க்கப்பட்ட, உலகின் விலை குறைந்த கார் என்று நம்பப்பட்ட டாடா நானோ கார், தொடர்ந்து எரிந்து வருவது வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'டாக்டர்' பட்டத்தை மறுத்தார் சச்சின் டெண்டுல்கர்!

 
தனக்கு இவ்வாண்டு வழங்கப்பட உள்ள கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்துள்ளார் இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். கர்நாடக மாநிலத்தின் 'ராஜீவ் காந்தி மருத்துவப் பல்கலைக்கழகமும் மைசூர் பல்கலைக்கழகமும் இவ்வாண்டு 'டாக்டர்' பட்டத்தை, கிரிக்கெட் சாதனை வீரர்  சச்சின் டெண்டுல்கருக்கு வழங்க முன் வந்திருந்தன. ஆயினும் அந்தப் பட்டங்களைப் பெறுவதற்கு இயலாது என்று டெண்டுல்கர் அதிரடியாக மறுத்துள்ளார். ராஜீவ் காந்தி மருத்துவப் பல்கலைக் கழகத் துணை வேந்தருக்கும் ஆட்சிமன்றக் குழுவின் இரு உறுப்பினர்களுக்கும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், "டாக்டர் பட்டம் வழங்க முன் வந்துள்ள உங்கள் பல்கலைக் கழகத்தின் முடிவை பெரிதும் மதிக்கிறேன். ஆனாலும், இன்னமும் களம் காணும் வீரராக இருக்கும் நிலையில், இவ்வெகுமதியை ஏற்க இயலாமல் இருக்கிறேன். இதே காரணத்தால் தான், வெளிநாட்டுப் பல்கலைகழகங்கள் அளித்த பட்டங்களையும் மறுத்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார். டெண்டுல்கரின் கடிதம் குறித்து வரும் மார்ச் எட்டாம் தேதி பல்கலை ஆட்சிமன்ற குழு கூடி விவாதிக்க இருக்கிறது. டெண்டுல்கர் மறுக்கும் நிலையில், வேறு யாருக்கும், இவ்வாண்டு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப் போவதில்லை என்று ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். மைசூர் பல்கலைகழகம் இதுபற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது.

உலக கோப்பை: இந்தியாவிடம் அயர்லாந்து தோல்வி!

 
பெங்களூர்: உலக கோப்பை கிரிக்கெட் 'பி' பிரிவில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 46 ஓவர்களில் 210 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை ‌தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய அயர்லாந்து அணி 47.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதில் போர்ட்டர் பீல்டு 75 ரன்கள் எடுத்தார். நியல் ஓபிரையன் 46 ரன்களும், குசக் 24 ரன்களும் எடுத்தனர்.   இந்திய வீர்ர்கள் யுவராஜ் சிங் 5 விக்கெட்டுகளையும் ஜாகீர்கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் ஆட்டம் இழக்காமல் 50 ரன்கள் (75 பந்து, 3 பவுண்டரி) எடுத்தார். தெண்டுல்கர் 38 ரன்கள் (56 பந்து, 4 பவுண்டரி), கோக்லி 34 ரன்கள் (53 பந்து, 3 பவுண்டரி), கேப்டன் டோனி 34 ரன்கள் (50 பந்து, 2 பவுண்டரி) எடுத்தனர்.
அடுத்து யுவராஜ் சிங்குடன் ஜோடி சேர்ந்த யூசுப் பதான் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி  24 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 30 ரன்கள் எடுத்து  இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

ஏ.ஆர். ரஹ்மானைத் தேடி அனிமேஷன் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு

 
குங்குஃபூ ஃபாண்டா, மடகாஸ்கர், ஸ்ரெக் ஆகிய மறக்க முடியாத அனிமேஷன் படங்களைக் கொடுத்த ஹாலிவுட்டின் ட்ரீம்ஸ் ஒர்க்ஸ் அனிமேஷன் நிறுவனம் இராமயணத்தைத் தழுவி ‘தி மங்க்கீஸ் ஆஃப் பாலிவுட்’ என்னும் அனிமெஷன் படத்தை தயாரிக்கிறது ஹாலிவுட் படங்களுக்கு இசையமைப்பதை விட முழுநீள அனிமேஷன் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது. அத்தகைய வாய்ப்பு இப்போது ஏ.ஆர். ரஹ்மானைத் தேடி வந்திருக்கிறது. இந்த ‘தி மங்க்கீஸ் ஆஃப் பாலிவுட்’ என்னும் அனிமெஷன் படத்துக்குத்தான் இசையமைக்கிறார்  மோசார்ட் ஆஃப் மெட்ராஸ் என்று அழைக்கப்படும் ரஹ்மான்! இந்த படம் பாலிவுட்டில் தயாராவதால் இந்தப் படத்தின் எக்ஸிகியூட்டிவிவ் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் ரஹ்மானை இந்நிறுவனம் நியமித்திருக்கிறது. பிரைட் அண்ட் பிரிஜடீஸ், பென்ட் இட் லைக் பெக்காம் போன்ற கிராஸ் கல்சர் படங்களுக்குத் திரைக்கதை எழுதிய குரீந்தர் சத்தா மற்றும் பால் பெர்கெஸ் ஆகிய இரண்டுபேர் ஹனுமானை ஹீரோவாகக் கொண்டு இதற்கான திரைக்கதையை எழுதி, இயக்க இருக்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் ரஹ்மான் புது யுகத்தின் புது இசையை உருவாக்குவார் என்கிறார்கள்.

விஜயகாந்த் கல்லூரியின் முதல்வராகக் கூட ஆகமுடியாது: நெப்போலியன்

 
விஜயகாந்த் முதல்வராக வேண்டும் என ஆசைப்படுகிறார். அவரது கல்லூரிக்குக் கூட அவர் முதல்வராக முடியாது என நிகழ்ச்சியொன்றில் பேசிய நெப்போலியன் கூறினார் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ரவீந்திரன், ராதாகிருஷ்ணன், செந்தூர்மணி, சின்னப்பாண்டியன், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் அன்புராஜன் வரவேற்றார். சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய அமைச்சர் நெப்போலியன் பேசியதாவது: தி.மு.க. ஆட்சியில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடியின்றி அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விஜயகாந்த் முதல்வராக ஆசைப்படுகிறார். ஆனால் அவரது கல்லூரிக்குக்கூட முதல்வராக முடியாது. நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்தபோது, நான் துணைத்தலைவராக இருந்தேன். அப்பொழுதே விஜயகாந்திற்கு அரசியல் என்னவென்று தெரியாது. படவாய்ப்பு குறைந்து விட்டதால், அரசியலுக்கு வந்துவிட்டார். நான் 16 வயதிலேயே அரசியலில் இணைந்து விட்டேன். ஜெயலலிதா அரசியலில் எனக்கு இளையவர். நடிகர்கள் அரசியலுக்கு வந்தவுடனே முதல்வர் ஆகி விட வேண்டும் என்று எண்ணுகிறார்கள். முதலில் கவுன்சிலர், எம்.எல்.ஏ. போன்ற பதவிகள் போட்டியிட்டு, அதன்பிறகு முதல்வர் பதவிக்கு ஆசைப்பட வேண்டும். 40 ஆண்டு ஆட்சியை பிடிக்க முடியாத காங்கிரஸ் இப்பொழுது முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு, கூட்டணி பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.வில் இருந்து காங்கிரஸ் விலகி போனது நல்லதுதான். நான் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலக இப்பொழுதே எழுதி வைத்துவிட்டேன். வரும் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

திமுக - காங்கிரஸ் சமரசம் - மீண்டும் கூட்டணி!

 
மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக வெளியேறும் முடிவெடுக்கப் பட்ட நிலையில் திமுக அமைச்சர்கள் இன்று மாலை பிரதமைரைச் சந்தித்து ராஜினாமாக் கடிதம் அளிக்க உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு டி.ஆர்.பாலுவிடம் தொலைபேசியில் பேசிய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர் இன்று காலையில் பிரணாப் முகர்ஜி திமுக தலைவர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் தெரிகிறது. கருணாநிதியும் 60 தொகுதிக்கு மேல் தர முடியாது என உறுதியாக சொல்லி விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இன்று காலையில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் உள்ள திமுக அமைச்சர் தயாநிதிமாறனையும் சந்தித்து பேசியுள்ளார். மாறனைச் சந்தித்த பிறகு காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும் முகர்ஜி சந்தித்து மாறனிடம் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து தெரிவித்துள்ளார்.
முகர்ஜியின் சமாதான பேச்சுவார்த்தையால் மீண்டும் திமுக  - காங்கிரஸ் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.


U†‡V AWpÁ TyÙ^y h½†‰
R–ZL AWpV¥ RÛXYŸL· L£†‰


ÙNÁÛ], UÖŸo.1-

U†‡V AWpÁ TyÙ^y h½†‰ R–ZL†‡Á AWpV¥ RÛXYŸL· TXŸ L£†‰L· ÙR¡«†‰·[]Ÿ.

ARÁ «YW• Y£UÖ¿:-

RjLTÖ¨

R–ZL LÖjfWÍ RÛXYŸ ÚL.«.RjLTÖ¨ A½eÛL:-

Y¡L· H‰–Á½ U†‡V YW°-ÙNX° A½eÛL SÖyzÁ Jy|ÙUÖ†R ÚU•TÖyÛP�•, HÛZG¸V UeL¸Á ÙTÖ£[ÖRÖW Y[ŸopÛV�• ÙUÁÚU¨• ÚU•T|†‰• EÁ]RUÖ] A½eÛLVÖh•. «YNÖV• U¼¿• «YNÖ›Lºeh Y[• ÚNŸeL AT¡–RUÖ] ‡yPjL· A½«eL�Ty|·[].

ÙNÁÛ] ÙUyÚWÖ W›¥ ‡ëyP†‡¼LÖ] Œ‡�R«eh J�“R¥ RW�Ty|·[ ÙNš‡ ÙNÁÛ] SLW UeLºeh ÙT£• Uf²op R£•.

UÖŸepÍy L•ïÂÍ|

UÖŸepÍy L•ïÂÍ| Lyp ÙY¸›y|·[ A½eÛL:-

UeLÛ[ ÙYhYÖL TÖ‡eh• ‘WopÛ]L· T¼½�• ÙTÖ£[ÖRÖW• T¼½�• C‹R TyÙ^yz¥ i\�TP«¥ÛX. UeLÛ[ AY‡�TP ÛY†‰·[ TQ ®eL•, G¡ÙTÖ£·, EQ° «ÛXYÖp EVŸ° ÚTÖÁ\Y¼½Á LÖXLyP†‡¥ RÖeL¥ ÙNšV�Ty|·[ C‹R TyÙ^yz¥ ¤.20 B›W• ÚLÖzeLÖ] UÖÂV†ÛR AWr Œ¿†‡ C£�T‰ –L� ÙT¡V A‡Ÿop. C‰ AWpÁ UeL· «ÚWÖR SPYzeÛLÛV LÖy|f\‰.

«^VLÖ‹†

ÚR.˜.‡.L. RÛXYŸ «^VLÖ‹† A½eÛL:-

U†‡V TyÙ^y TÖUW UeL¸Á YÖ²eÛL RW†ÛR EVŸ†‰YRÖL C¥ÛX. YN‡ TÛP†ÚRÖŸ —‰ Y¡ «‡†‰, HÛZLºeh ER« ÙNš�• YÛL›¥ C¥ÛX. CR¼h ÚSŸUÖ\ÖL TQeLÖWŸL· ÚU¨• TQeLÖWŸL[ÖL°•, HÛZL· TWU HÛZL[ÖL°• �zeLÚY Y³YÛL ÙNšf\‰.

«ÛXYÖp hÛ\�TR¼LÖ] E£�TzVÖ] SPYzeÛLL· G‰°• C¥ÛX. AÚR ÚSW†‡¥ AWr A½«†R TXÁ E�ÛUVÖ] HÛZLºeh fÛPeLÖ‰. BºjLypÛVo ÚNŸ‹RYŸL· BRÖV• AÛPYR¼h C‹R ‡yP• SÛP˜Û\›¥ TVÁT|•.

«ÛXYÖp EVŸ°, ÚYÛX›¥XÖ† ‡�PÖyP•, XtN FZ¥ ÚTÖÁ\ N˜RÖV†ÛR qW³eh• ‘WopÛ]Lºeh G†RÛLV ‡yP˜• A½«eL�TPÖU¥ UeL¸Á YÖ²eÛL† RW• ÚU¨• S¦YÛPVo ÙNšYR¼ÚL C‹R TyÙ^y TVÁT|•. LÖfR�” UQeLÖ‰, LÖjfWÍ NURŸU• CÂeLÖ‰. C‹R Œ‡ŒÛX A½eÛL�• HÛZLºeh TVÁTPÖ‰.

ÛYÚLÖ

U.‡.˜.L. ÙTÖ‰o ÙNVXÖ[Ÿ ÛYÚLÖ A½eÛL:-

ÙY¸SÖ|L¸¥ T‰ef ÛYeL�Tyz£eh• XyNeLQeLÖ] ÚLÖz ¤TÖš L¿�“ TQ†ÛR —yL E¿‡VÖ] SPYzeÛL G|eLÖU¥ 5 A•N† ‡yP†ÛRe ÙLÖ�| Y‹‡£�T‰ L¿�“� TQ† ‡–jLXjL· R�‘eL LÖXRÖUR• ÙNš�• ˜V¼pVÖh•.

AWr ŒŸYÖL†‡¥ “ÛWÚVÖze fPeh• FZ¥LÛ[ LÛ[V ‡yPYyPUÖ] SPYzeÛLL· C¥ÛX. “‡V ÚYÛXYÖš�“L· E£YÖeLÚYÖ, ÙRÖ³XÖ[Ÿ SXÁLÛ[� TÖ‰LÖeLÚYÖ Œ‡ U‹‡¡ ˜V¼peL«¥ÛX. B]Ö¥, XÖT• Dy|• ÙTÖ‰†‰Û\ Œ¿Y]jLÛ[ «¼TÛ] ÙNšV�ÚTÖYRÖL A½«†‰·[‰, L�P]†‡¼h E¡VRÖh•. ÙUÖ†R†‡¥ U†‡V TyÙ^y, UeLºeh –eL HUÖ¼\†ÛR R‹‰·[‰.

NW†hUÖŸ

AfX C‹‡V NU†‰Y UeL· Lyp† RÛXYŸ BŸ.NW†hUÖŸ A½eÛL:-

RÂSTŸ Y£UÖ]Y¡ EoNYW•“ ¤.20 B›W• Uy|ÚU EVŸ†‡›£�T‰ HUÖ¼\• A¸ef\‰. CRÛ] ¤.3 XyNUÖL EVŸ†R ÚY�|•. ÙY¸SÖy| YjfL¸¥ E·[ L£�“ TQ†ÛR A½«�ÚTÖ| C£‹‰«PÖU¥ ‡£�‘e ÙLÖ�|YW E¡V SPYzeÛL G|eL�TP ÚY�|•. FZ¥ h¼\oNÖy|L¸¥ C‰YÛW h¼\•NÖyP�TyPYŸL· R�zeL�TyPÖŸL· GÁ\ YWXÖ¿ C¥ÛX. G]ÚY FZ¥ J³�‘¼LÖ] NyPjL· L|ÛUVÖeL�Ty| h¼\YÖ¸L· R�zeL�TyPÖ¥ RÖÁ UeL· Y¡�TQ• UeLºeÚL ÙNÁ\ÛP�•. C‰ ‰‚oNXÖ] TyÙ^yPÖL C¥XÖU¥ LYŸopLWUÖ] TyÙ^yPÖLÚY RVÖ¡eL�Ty|·[‰.

H.p.N�˜L•

“‡V �‡eLyp† RÛXYŸ H.p.N�˜L• A½eÛL:-

U†‡V TyÙ^yz¥ ÙT¡‰• G‡ŸTÖŸeL�TyP ÙSNYÖ[Ÿ LPÁ W†‰ ÙNšV�T|Y‰ h½†‰ Gª«R A½«�“• C¥XÖR‰ HUÖ¼\†ÛR A¸ef\‰. ÙSNYÖ[Ÿ ÚU•TÖyz¼LÖL “‡V ‡yP• A½«eL�TyP‰ N¼¿ B¿RXÖL C£ef\‰. «YNÖ›Lºeh YZjL�Ty|·[ N¨ÛLLÛ[ YWÚY¼fÚ\Ö•.

CªYÖ¿ RÛXYŸL· L£†‰ ÙR¡«†‰·[]Ÿ.



_______________________________________________________________________


‘[Í-2 ÚRŸ° SÖÛ[ ÙRÖPjhf\‰
7 3/4 XyN• UÖQY-UÖQ«L· Gµ‰f\ÖŸL·

ÙNÁÛ], UÖŸo.1-

R–²SÖyz¥ ‘[Í-2 ÚRŸ° SÖÛ[ (“RÁfZÛU) ÙRÖPjhf\‰. 7 3/4 XyN• UÖQY-UÖQ«L· ÚRŸ° Gµ‰f\ÖŸL·.

‘[Í-2 ÚRŸ° SÖÛ[ ÙRÖPjhf\‰

R–²SÖ| U¼¿• “‰oÚN¡›¥ ‘[Í-2 ÚRŸ° UÖŸo 2-‹ ÚR‡�•, GÍ.GÍ.G¥.p. ÚRŸ° UÖŸo 28-‹ ÚR‡�• ÙRÖPjh• GÁ¿ A‡LÖW�”ŸYUÖL A½«eL�TyP‰. ARÁTz ‘[Í-2 ÚRŸ° SÖÛ[ R–² ˜R¥ RÖºPÁ ÙRÖPjhf\‰.

‘[Í-2 ÚRŸÛY 7 XyN†‰ 80 B›W†‰ 631 ÚTŸ Gµ‰f\ÖŸL·. AYŸL¸¥ 5477 T·¸LÛ[ ÚNŸ‹R 7 XyN†‰ 23 B›W• UÖQY-UÖQ«L· Gµ‰f\ÖŸL·. AYŸL¸¥ 3 XyN†‰ 36 B›W†‰ 443 ÚTŸ UÖQYŸL·. 3 XyN†‰ 87 B›W†‰ 102 ÚTŸ UÖQ«L·. UÖQYŸLÛ[ «P 50 B›W†‰ 659 UÖQ«L· ÚRŸ° Gµ‰f\ÖŸL·.

ÙNÁÛ]

ÙNÁÛ] UÖSL¡¥ 445 ÚU¥ŒÛX�T·¸LÛ[ ÚNŸ‹R 49 B›W†‰ 8 UÖQY-UÖQ«L· ‘[Í-2 ÚRŸ° Gµ‰f\ÖŸL·.

“‰oÚN¡›¥ 31 ÚRŸ° ÛUVjL¸¥ 95 T·¸LÛ[ ÚNŸ‹R 11 B›W†‰ 517 ÚTŸ ÚRŸ° Gµ‰f\ÖŸL·. AYŸL¸¥ 5 B›W†‰ 212 ÚTŸ UÖQ«L·. 6 B›W†‰ 305 ÚTŸ UÖQYŸL·. ÙUÖ†R†‡¥ R–²SÖ| U¼¿• “‰oÚN¡›¥ ‘[Í-2 ÚRŸ°eLÖL 1,890 ÚRŸ° ÛUVjL· AÛUeL�Ty|·[].

T·¸eiP UÖQYŸLÛ[ R«W R†ÚRŸYŸL[ÖL 57 B›W†‰ 86 ÚTŸ Gµ‰f\ÖŸL·.

ÚRŸ° LÖÛX 10 U‚eh ÙRÖPjf TL¥ 1-15 U‚eh ˜zf\‰. C‡¥ ÚL·«LÛ[ YÖpeL YZeL•ÚTÖX 15 Œ–P• J‰eL�T|f\‰.

zÍÙXepVÖ, TÖŸÛYV¼\YŸL·, LÖ‰ÚL[ÖRYŸL·, YÖš ÚTNÖRYŸL· U¼¿• CRW EP¥ F]˜¼Ú\ÖŸL· ÙNÖ¥YÛR ÚRŸ«¥ GµR i|RXÖL J£ U‚ ÚSW• ÚTÖÁ\ N¨ÛLL· ÙLÖ|eL�Ty|·[‰.

«]Ö†RÖ· TÖ‰LÖ�“

«]Ö†RÖ· Ly| E·[ ÛUVjL· TÖ‰LÖ�TÖ] CPjL¸¥ AÛU‹‰·[RÖ GÁ¿ ˜RÁÛU L¥« A‡LÖ¡L·, UÖYyP L¥« A‡LÖ¡L· ÚS¡¥ Bš° ÙNš‰ AÛUeL�Ty|·[]. Ajh B�R• RÖjfV ÚTÖ§NÖŸ LÖY¥ LÖef\ÖŸL·. TÖ‰LÖ�“ H¼TÖ|L· A‹R‹R UÖYyP LÙXePŸL·, UÖYyP ÚTÖ§Í A‡LÖ¡L· BfÚVÖWÖ¥ ÙNšV�Ty|·[]. AzeLz Bš° ÛUVjLÛ[ L�LÖ‚eL AÛ]†‰ Bš° A‡LÖ¡Lºeh• ÙR¡«eL�Ty|·[‰. UÖYyP LÙXePŸL· RÛXÛU›¥ ÚRŸ° hµ AÛUeL�Ty|·[‰. ÚRŸ° ÛUVjL¸¨• ÚTÖ§Í TÖ‰LÖ�“ ˆ«W�T|†R�Ty|·[‰. A‹R hµ«¥ ÚTÖ§Í s�‘W�|, UÖYyP Y£YÖš A‡LÖ¡, ER« LÙXePŸ, Y£YÖš ÚLÖyPÖypVŸ BfÚVÖ£• CP•ÙT¼¿·[]Ÿ.

AYŸL· AYŸL¸Á G¥ÛXehyTyP Th‡L¸¥ ÚRŸ° ÛUVjLÛ[ ‡{Ÿ GÁ¿ TÖŸÛY›y| UÖQYŸL· ˜Û\ÚL|L·, Jµjg]jL· G‰°• SÛPÙT\Ö Y�Q• ˆ«WUÖL L�LÖ‚�TÖŸL·.

LÖ�‘ Az†RÖ¥ R�PÛ]

R–²SÖ| ˜µY‰• 4 B›W• L�LÖ‚�“ E¿�‘]ŸL· ÚRŸ° ÛUVjLÛ[ TÖŸÛY›|YÖŸL·. T\eh• TÛP›]Ÿ ÚRŸ° ÛUVjLÛ[ TÖŸÛY›|YÖŸL·. UÖQYŸL· ÚRŸ«¥ LÖ�‘ Az†RÖ¥ L|• SPYzeÛL G|eL�T|•. ‰�| qy| ÛY†‡£†R¥, A|†R UÖQYÛW TÖŸ†‰ GµR ˜V¼p ÙNšR¥, ÚRŸ° A‡LÖ¡L¸P• ˜Û\ÚLPÖL SP†R¥, B· UÖ\ÖyP• ÙNš‰ ÚRŸ° Gµ‰R¥ BfVÛY h¼\UÖh•. C‡¥ A‡LTyN R�PÛ]VÖL pÛ\†R�PÛQ fÛPeh•. AYŸL· ÚRŸ° GµR ˜zVÖ‰. ÚLÖŸy| YZeh ˜z‹R‘Á]Ÿ RÖÁ A‰T¼½ ˜z° ÙNšV�T|•. ÚRŸÛY S¥X ˜Û\›¥ SP†‡P UÖQYŸLº• J†‰ÛZeLÚY�|•.

LyPQ• W†‰

R–² Y³›¥ Tz�TYŸLºeh ÚRŸ° LyPQ• W†‰ ÙNšV�Ty|·[‰. ARÁTz C‹R Y£P• 5 XyN†‰ 15 B›W†‰ 281 ÚTŸ TVÁ AÛP‹‰·[]Ÿ.

SÖÛ[ ÙRÖPjhf\‰

‘[Í-2 ÚRŸ°eLÖ] LÖX AyPYÛQ «YW• Y£UÖ¿:-

UÖŸo 2-‹ ÚR‡- R–² ˜R¥ SÖ·

3-‹ ÚR‡- R–² CW�PÖ• RÖ·

7-‹ ÚR‡- BjfX• ˜R¥ RÖ·

8-‹ ÚR‡- BjfX• CW�PÖ• RÖ·

11-‹ ÚR‡- CV¼‘V¥, ÙTÖ£[ÖRÖW•, E[«V¥

14-‹ ÚR‡- ÚY‡›V¥, AeL°�PÁp, r£eÙLµ†‰

17-‹ ÚR‡- L‚R•, «XjfV¥, ÛUeÚWÖ TVÖXÈ, Œïy¡pVÁ AÁy PVyzeÍ

18-‹ ÚR‡- Y‚L«V¥, UÛ] A½«V¥, “«›V¥

21-‹ ÚR‡- E›¡V¥, YWXÖ¿, RÖYW«V¥, Az�TÛP A½«V¥, YŸ†RL L‚R•

23-‹ ÚR‡- RyPor, L•ïÂÚLyzª Cjf§Ð, C‹‡V LXÖNÖW•, L•�ïyPŸ N›ÁÍ, TÚVÖ ÙL–Íy¡, p\�“ ÙUÖ³ TÖP•

25-‹ ÚR‡- AÛ]†‰ ÙRÖ³¥TÖP ÚRŸ°L·, AWpV¥ A½«V¥, SŸpj (ÙTÖ‰), “·¸›V¥

GÍ.GÍ.G¥.p.

GÍ.GÍ.G¥.p. ÚRŸ° UÖŸo 28-‹ ÚR‡ ÙRÖPjf H�W¥ 11-‹ÚR‡ ˜zf\‰. GÍ.GÍ.G¥.p. ÚRŸÛY T·¸LÛ[ ÚNŸ‹R 7 XyN†‰ 54 B›W†‰ 679 ÚTŸ GµR E·[]Ÿ. ÚU¨• R†ÚRŸYŸL· J£ XyN• ÚTŸ Gµ‰f\ÖŸL·. ÙUÖ†R†‡¥ 8 XyN†‰ 55 B›W• ÚTŸ Gµ‰f\ÖŸL·.

ÙUy¡hÚXNÁ ÚRŸ°, BjfÚXÖ C‹‡VÁ ÚRŸ°, K.GÍ.G¥.p. BfV ÚRŸ°L· UÖŸo 22-‹ÚR‡ ÙRÖPjf H�W¥ 11-‹ ÚR‡ ˜zf\‰. ÙUy¡hÚXNÁ ÚRŸÛY J£ XyN†‰ 45 B›W†‰ 252 ÚTŸ Gµ‰f\ÖŸL·.

C‹R RLYÛX AWr ÚRŸ°L· CVeh]Ÿ Yr‹RWÖ ÚR« ÙR¡«†‰·[ÖŸ.

 _______________________________________________

           

வானில் ஒரு அற்புத நிகழ்வு

 
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்டுவரும் ஆய்வில், கடந்த வியாழன் அன்று  விண்ணில் இதுவரை நிகழாத அற்புத நிகழ்வு ஒன்று நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பூமியில் நில அதிர்வு ஏற்படுவதைப்போன்று, கடந்த வியாழன் அன்று சூரியனில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சூரியனில் அதிர்வு உண்டான பகுதியில் தீப்பிழம்பு 90 நிமிடங்களுக்கு மேலெழுந்தவாரியாக எரிந்துகொண்டிருந்தது. இது சூரியனின் மிதமான நில அதிர்வுதான் என்றும், இதனால் விண்வெளியில் எந்த மாற்றமும் நிகழாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
_______________________________________________

சி என் என் விருது - சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு.

 
சி.என்.என்.-ஐ.பி.என். செய்தி நிறுவனம் சார்பில் வழங்கப்படும் விருதுகளில்  இந்திய அளவில், பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற சிறப்பு விருதினையும், குடிநீர் மற்றும் சுகாதாரம், குடிமக்கள் பாதுகாப்பு, மகளிர் மேம்பாடு ஆகிய 3 பிரிவுகளில் சிறந்த மாநிலத்திற்கான வைர மாநில விருதுகளையும் தமிழகம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் சார்பில் நேற்று டெல்லியில் நடைபெற்ற விழாவில்,  குடியரசுத் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இந்த விருதுகளை வழங்கினார். அப்போது முதலமைச்சர் கருணாநிதிக்குத் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவிக்குமாறு ஹமீத் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார். சி.என்.என்.-ஐ.பி.என். செய்தி நிறுவனம் வழங்கிய இந்த விருதுகளை முதல் அமைச்சர் கருணாநிதியிடம் இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு காண்பித்தார். சி.என்.என்.-ஐ.பி.என். என்னும் முன்னணி செய்தி நிறுவனம், 2008ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தகுந்த நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களைத் தேர்வு செய்து, அம்மாநிலங்களுக்கு வைர மாநில விருதுகள்  வழங்கி வருகிறது. 2010ஆம் ஆண்டிற்கு 9 பிரிவுகளின் கீழ் வைர மாநில விருதுகளும், சிறப்பு விருதுகளாக இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம், சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் செய்திக் குறிப்பொன்று இத்தகவல்களைத் தெரிவித்துள்ளது.

 ________________________________________________________________________________

பெண்கள் 99 ரூபாயில் விமானப் பயணம் - சிறப்புத் திட்டம்!

 
மகளிர் தினத்தன்று இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் 99 ரூபாயில் பெண்கள் பயணம் செய்யும் சிறப்புத் திட்டத்தை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் நாளில் பெண்களை கவுரவப்படுத்தும் வகையிலும் பொது விமானப் போக்குவரத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா பெண்களுக்கு சிறப்புத் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. மார்ச் 8ஆம் தேதி ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமானங்களில் எகானமி வகுப்பில் 99 ரூபாய் கட்டணத்தில் பெண்கள் பயணயம் செய்யலாம். வணிக வகுப்புக் கட்டணம் 1,199 ரூபாய்கள். விமான நிலைய வரி மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும். இந்தக் கட்டணத்தில் இந்தியாவுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். இதற்கான டிக்கெட்டுகளை ஏர் இந்தியா அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.




______________________________________________________________________________


அமைச்சர் மீது மிளகாய்ப் பொடி வீச்சு!


 
இராஜஸ்தான் மாநிலத்தில் சுகாதார அமைச்சராக பதவி வகித்து வரும் ராஜ்குமார் சர்மா மீது மிளகாய்ப் பொடி வீசிய சம்பவம்  நேற்று நிகழ்ந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு, தும்ரா என்ற கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக  அமைச்சர் ராஜ்குமார் சர்மா சென்றிருந்தப் போது, அங்கு கூட்டத்தில் நின்றிருந்த சிலர், அமைச்சர் கண்களை குறிவைத்து, மிளகாய்ப் பொடியை வீசினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மிளகாய்ப் பொடியை வீசிய நபர்களில் ஒருவர், பெண்களைப் போல் உடையணிந்திருந்தார். மிளகாய்ப் பொடியை வீசியதும், அந்த கும்பல் அங்கிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி, தப்பிச் செல்ல முயற்சித்தது. இருந்தாலும், அவர்களில் சிலரை காவல்துறையினர்  கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான புத்ராம் என்பவன் தப்பி ஓடி விட்டான். கைது செய்யப்பட்ட ஐந்து பேரிடமும், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

"அரசியல் காரணங்களுக்காகவே, அவர்கள் இதைச் செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். முக்கிய குற்றவாளியான புத்ராமை தேடி வருகிறோம்' என்றனர் காவல்துறையினர்இந்தச் சம்பவம் குறித்து.


___________________________________________________________________________________________ 

G]‰ ‘\‹RSÖÛ[ ÙLÖ�PÖP «£•‘]Ö¥
HÛZ, G¸V UeLºeh ‰‚U‚L· YZjhjL·
ÙRÖ�PŸLºeh Ù^VX¦RÖ ÚY�|ÚLÖ· 





ÙNÁÛ], ‘�.22-

ÙRÖ�PŸL· G]‰ ‘\‹R SÖÛ[ ÙLÖ�PÖP «£•‘]Ö¥ HÛZ, G¸V UeLºeh ‰‚U‚L· YZjhR¥ ÚTÖÁ\ S¼LÖ¡VjL¸¥ D|T|jL· GÁ¿ Ù^VX¦RÖ ÚY�|ÚLÖ· «|†‰·[ÖŸ.

A.‡.˜.L. ÙTÖ‰oÙNVXÖ[Ÿ Ù^VX¦RÖ ÙY¸›y|·[ A½eÛL›¥ i½›£�TRÖY‰:-

UeLÛ[ LÖ�TÖ¼¿• T‚

«�ÛQ ˜y|• «ÛXYÖp, L|ÛUVÖ] –ÁÙYy|, ÙTyÚWÖ¥ «ÛX EVŸ°, Ly|UÖ]� ÙTÖ£yL¸Á «ÛX EVŸ°, hz�Ÿ� T¼\ÖehÛ\, U£†‰Y YN‡›ÁÛU, NÖÛX YN‡›ÁÛU G] T¥ÚY¿ CÁ]¥Lºeh R–ZL UeL· B[ÖeL�Ty| C£ef\ÖŸL·.

C‰ R«W, UQ¥ ÙLÖ·Û[, ÚWcÁ ÙTÖ£yL· LP†R¥, L·[ XÖyP¡ qy| «¼TÛ], T‰eL¥, ÙLÖÛX, ÙLÖ·Û[, G] AÛ]†‰ NyP«ÚWÖRo ÙNV¥Lº• NŸY NÖRÖWQUÖL R–ZL†‡¥ SÛPÙT¼¿ Y£fÁ\]. T†‡¡ÛL rR‹‡W• T½ÚTÖš«yP‰. ^]SÖVL• h³ÚRÖ�z “ÛReL�Ty|«yP‰. A�ÛP UÖŒXjLºP]Ö] AÛ]†‰ S‡�Ÿ� ‘WopÛ]L¸¨• R–²SÖyzÁ E¡ÛUL· T½ÚTÖše ÙLÖ�| C£efÁ\]. CXjÛL LP¼TÛP›]¡Á D° CWeLU¼\ ÙLÖ}W† RÖehR¥L· LÖWQUÖL —Á‘z† ÙRÖ³ÛXÚV «y|«|• ŒÛXeh R–ZL —]YŸL· R·[�Ty|·[]Ÿ. NyP•-Jµjh AzÚVÖ| qW³‹‰ «yP‰.

AÛ]†‰ UyPjL¸¨• FZ¥ RÛX«¡†‰ B|f\‰. C‹R† R£Q†‡¥, G]‰ ‘\‹R SÖÛ[ ÙLÖ�PÖ|YÛR «P R–ZL UeLÛ[ LÖ�TÖ¼¿• T‚L¸¥ D|T|Y‰ RÖÁ G]eh Uf²op A¸eh•.

ÙY¼½†‡£SÖ·

ÙTÖ‰YÖL G]‰ ‘\‹R SÖÛ[ SÖÁ ÙLÖ�PÖP «£•“Y‡¥ÛX. C£�‘Ä•, GÁ E›¡Ä• ÚUXÖ] G]R£ÛU LZL ÙRÖ�PŸL·, G]‰ ‘\‹R SÖÛ[ ÙLÖ�PÖP ÚY�|• GÁ¿ L£‡]Ö¥, HÛZ, G¸V UeLºeh ‰‚U‚L· YZjhR¥, U£†‰Y ÚNÛYVÖ¼¿R¥, AÁ]RÖ]•, W†RRÖ]•, ÚTÖÁ\ S¼LÖ¡VjL¸¥ RjLÛ[ D|T|†‡e ÙLÖ·ºUÖ¿ AÁÚTÖ| ÚLy|e ÙLÖ·fÚ\Á.

G•.È.B¡Á S¥XÖypÛV R–ZL†‡¥ H¼T|†‡P G]‰ ‘\‹R SÖ[Á¿ E¿‡ÙUÖ³ H¼¿eÙLÖ�|, AÛR ŒÛ\ÚY¼½|• YÛL›¥ ÙRÖ�PŸL· ÚRŸR¥ T‚VÖ¼\ ÚY�|• GÁTÚR G]‰ «£�T•. CR¼ÚL¼\Ö¼ ÚTÖ¥ L[�T‚ AÛUV ÚY�|•. S¥XÖyp AÛU�• SÖÚ[ R–ZL UeLºeh Uf²op R£• SÖ· GÁTRÖ¥, AÛ]†‰ Uf²opLWUÖ] ÙLÖ�PÖyPjLÛ[�• A‹R ÙY¼½† ‡£SÖ[Á¿ ÛY†‰e ÙLÖ·[XÖ• GÁ¿ ÙRÖ�PŸL· AÛ]YÛW�• AÁÚTÖ| ÚLy|e ÙLÖ·fÚ\Á.

CªYÖ¿ AYŸ i½�·[ÖŸ.

AYŸ ÙY¸›y|·[ U¼Ù\Ö£ A½eÛL›¥ i½›£�TRÖY‰:-

‡£†R‚›¥ BŸ�TÖyP•

‡£Y·»Ÿ UÖYyP•, ‡£†R‚ JÁ½V• qÂYÖN“W•, ˜Í§• SLŸ U¼¿• A£‹R‡TÖÛ[V• fWÖUjLºeh EyTyP 160 HeLŸ ŒX†ÛR, ¤.1 ÚLÖzÚV 76 XyN†‰eh, J£ ÙT�U‚eh «¼L ‡£†R‚ NÖŸ T‡YÖ[Ÿ A¨YXL†‡¥ 28.10.2010 AÁ¿ T‡° ÙNšV�Ty|·[‰.

C‹R «¼TÛ]›Á ™X• 1,200 h|•TjLÛ[o ÚNŸ‹R 5000-eh• ÚU¼TyÚPÖŸ ÙY¸ÚV¼\�T|• ATÖV• H¼Ty|·[‰.

™Á¿ fWÖUjL· «¼TÛ] h½†‰ EP]zVÖL «NÖWÛQ ÙNš‰ SPYzeÛL G|eL Y¦�¿†‡�•, UeL¸Á ÚLÖ¡eÛLLÛ[ EP]zVÖL ŒÛ\ÚY¼\ Y¦�¿†‡�• A.‡.˜.L. LÖtq“W• ÚU¼h UÖYyPe LZL†‡Á NÖŸ‘¥, CÁ¿ (ÙNªYÖšefZÛU) LÖÛX 10 U‚ A[«¥, ‡£†R‚ LUXÖ ‡ÛWVWjL• A£f¥ L�P] BŸ�TÖyP• AÛY† RÛXYŸ C.U‰sR]Á RÛXÛU›¨•, LÖtq“W• ÚU¼h UÖYyP ÙNVXÖ[Ÿ «.ÚNÖUr‹RW•, ÚLÖ.A¡ G•.G¥.H. BfÚVÖŸ ˜ÁÂÛX›¨• SÛPÙT¿•.

CªYÖ¿ AYŸ i½�·[ÖŸ.

 

 

9½ XyN• ÚTŸ Gµ‡V «.H.K. ÚRŸ°:
EjL· U‡�ÙT�ÛQ �jLÚ[ LQefy| ÙLÖ·[XÖ•
UÂRÚSV• CÛQVR[†‡¥ «ÛPL· ÙY¸œ|


ÙNÁÛ], ‘�.22-

ÚS¼¿ ˜Á‡]• SÛPÙT¼\ «.H.K. ÚRŸ«Á «ÛPL· ÛNÛR ‰ÛWNÖ–›Á UÂRÚSV• CÛQVR[†‡¥ ÙY¸›P�Ty| E·[]. CRÁ™X•, ÚRŸ° Gµ‡V UÖQY-UÖQ«L· RjL· U‡�ÙT�ÛQ RÖjLÚ[ LQefy| ÙLÖ·[XÖ•.

«.H.K. ÚRŸ°

R–ZL AWpÁ Y£YÖš ‰Û\›¥ 3,484 fWÖU ŒŸYÖL A‡LÖ¡ T‚ CPjLÛ[ ŒW�“YR¼LÖL z.GÁ.‘.GÍ.p. ÚS¼¿ ˜Á‡]• ÚTÖyz†ÚRŸÛY SP†‡V‰. R–ZL• ˜µY‰• 9½ XyN• ÚTŸ C‹R ÚRŸÛY Gµ‡]ÖŸL·. ÚRŸ«Á ˜z° 4 UÖR†‡¥ ÙY¸›P�T|• GÁ¿ A½«eL�Ty| C£ef\‰.

«.H.K. ÚRŸ°eh ÚSŸ˜L†ÚRŸ° fÛPVÖ‰. Gµ†‰†ÚRŸ«¥ G|eh• U‡�ÙT�ÛQ Az�TÛPVÖL ÛY†ÚR ÙY¼½-ÚRÖ¥« ŒŸQ›eL�T|f\‰. G]ÚY, Gµ†‰†ÚRŸ«¥ ÙT¿• UÖŸe –L°• ˜efV†‰Y• ÙT¿f\‰. ÙTÖ‰YÖLÚY, z.GÁ.‘.GÍ.p. ÚTÖyz†ÚRŸ°L¸¥ ÚLyL�T|• ÚL·«LºeLÖ] «ÛPL· A½«eL�T|Y‰ C¥ÛX.

UÂRÚSV• CÛQVR[•

TÖP�“†RLjL· U¼¿• ÙTÖ‰A½° “†RLjL¸Á ™X• «ÛPLÛ[ N¡TÖŸ†‰eÙLÖ·[ ˜z�•. ÙTÖ‰YÖ] ÚL·«LºeLÖ] «ÛPL· GÂ¥ N¡VÖL L‚†‰«PXÖ•. B]Ö¥, ÚRŸ«¥ ÚLyL�T|• J£pX peLXÖ] «]ÖeLºeh N¡VÖ] «ÛPÛV ˜z° ÙNšY‡¥ N‹ÚRL• H¼T|•.

C‹R ŒÛX›¥, «.H.K. ÚRŸ° Gµ‡V UÖQY-UÖQ«L· ÚL·«LºeLÖ] «ÛPLÛ[ ÙR¡‹‰ÙLÖ·[ ÛNÛR ‰ÛWNÖ–›Á UÂRÚSV• CXYN I.H.GÍ., T›¼p ÛUV• CÛQVR[†‡¥ «ÛPLÛ[ ÙY¸›y| C£ef\‰. AÛ]†‰ ÚL·«LºeLÖ] «ÛPLÛ[�• www.saidais.com GÁ\ CÛQVR[†‡¥ ÙR¡‹‰ ÙLÖ·[XÖ•. «.H.K. ÚRŸ«¥ ÚLyL�TyP 200 ÚL·«LÛ[�• (100 ÙTÖ‰ A½° «]ÖeL· U¼¿• 100 ÙTÖ‰†R–²) AY¼¿eLÖ] N¡VÖ] «ÛPLÛ[�• h½�‘y|·[]Ÿ.

C‹R CÛQVR[†‡Á ™X•, UÖQY-UÖQ«L· RÖjL· G†RÛ] ÚL·«Lºeh N¡VÖ] T‡¥ A¸†‰·Ú[Ö•? G†RÛ] U‡�ÙT�L· fÛPeh•? GÁTÛR ‰¥¦VUÖL AYŸLÚ[ LQefy| ÙLÖ·[XÖ•.

 

 


C‰YÛW ¤.34,601 ÚLÖz Y¡ i|RXÖL Ys¥:
L¿�“ TQ†ÛR C‹‡VÖ°eh —y| ÙLÖ�| Y£ÚYÖ•
^]Ö‡T‡ ‘WˆTÖ Ty{¥ E¿‡



ÙY¸SÖyz¥ E·[ L¿�“ TQ†ÛR C‹‡VÖ°eh —y| ÙLÖ�| Y£ÚYÖ•, L¿�“ TQeLÖWŸL¸P• C£‹‰ C‰YÛW ¤.34,601 ÚLÖz Y¡ i|RXÖL Ys¥ ÙNšV�Ty| C£�TRÖL ^]Ö‡T‡ ‘WˆTÖ Ty{¥ i½�·[ÖŸ.

^]Ö‡T‡ EÛW

TÖWÖºUÁ\ TyÙ^y iyP†ÙRÖPŸ ÚS¼¿ ÙRÖPjfV‰. CÛRÙVÖyz, C£ AÛYLº• APjfV iy|eiyP†‡¥ ^]Ö‡T‡ ‘WˆTÖ Ty{¥ EÛWVÖ¼½]ÖŸ. AYŸ ÚTpVRÖY‰:-

TQ ®eL EVŸ°, –L°• LYÛX A¸ef\‰. Y£• Œ‡VÖ�z¥, TQ ®eL†ÛR Ly|�T|†‰Y‰PÁ, EQ°�ÙTÖ£yL¸Á «ÛX EVŸ«¥ C£‹‰ UeLÛ[ LÖ�TR¼h ˜R¥ ˜ÁÄ¡ÛU A¸�ÚTÖ•.

ÚU¨•, J£jfÛQ‹R ÙTÖ£[ÖRÖW Y[ŸopÛV Gy|R¥, E·SÖy|, ÙY¸SÖy| TÖ‰LÖ�“eh ˆ«W SPYzeÛL G|†R¥, C‹‡VÖ«Á SXÁLÛ[ TÖ‰LÖeLeizV ÙY¸�\° ÙLÖ·ÛLÛV ‘ÁT¼¿R¥ BfVY¼¿eh• ˜ÁÄ¡ÛU A¸eL�T|•.

FZÛX Ly|�T|†R...

SÖy| UeLºeh S¥XÖyp R£Y‰ AYpV•. ÚLyT‰ AYŸL· E¡ÛU, R£Y‰ GjL· LPÛU. ŒŸYÖL†‡Á RW†ÛR A‡L�T|†‰Y‰PÁ, ÙTÖ‰YÖ²«¥ ÚSŸÛU, ŠšÛU, J¸°UÛ\Y¼\ RÁÛUÛV ÚU•T|†R G]‰ AWr E¿‡”�|·[‰.

ÙTÖ‰YÖ²«¥ ÚSŸÛU�•, ŠšÛU�• T¼\ÖehÛ\VÖL C£�TÛR N¡ÙNšYR¼h G]‰ AWr ˜ÁÄ¡ÛU A¸eh•. FZÛX J³�T‰ h½†‰ U‹‡¡L· hµ BÚXÖNÛ] SP†‡ Y£f\‰.

U‹‡¡LºeLÖ] «£�“¡ÛU A‡LÖW†ÛR W†‰ ÙNšY‰ E·¸yP T¥ÚY¿ SPYzeÛLL· h½†‰ A‹Rehµ Bš° ÙNš‰ Y£f\‰. AWr F³VŸL· —RÖ] FZ¥ YZehLÛ[ «ÛWYÖL «NÖ¡�T‰ T¼½�•, AYŸL· —‰ «ÛWYÖL SPYzeÛL G|�TR¼h NyP ‡£†R• ÙLÖ�| Y£Y‰ T¼½�• U‹‡¡L· hµ SPYzeÛL G|†‰ Y£f\‰.

L¿�“ TQ•

ÙY¸SÖy| YjfL¸¥ L¿�“ TQ• ÚTÖP�Ty|·[ «YLÖW•, SÖ| ˜µY‰• LY]†ÛR DŸ†‰·[‰. NyP¢‡VÖLÚYÖ, NyP«ÚWÖRUÖ] Y³L¸ÚXÖ ‡WyP�TyP L¿�“ TQ• h½†R LYÛXÛV U†‡V AWr TfŸ‹‰ ÙLÖ·f\‰. L¿�“ TQ†ÛR C‹‡VÖ°eh —y| Y£Y‰PÁ, h¼\YÖ¸LÛ[ NyP†‡Á ˜Á“ Œ¿†‰Y‡¥ G‹R YÖš�ÛT�• G]‰ AWr RY\ «PÖ‰. CR¼h UÖŒX AWrL¸Á J†‰ÛZ�“• ÚRÛY�T|f\‰.

L¿�“ TQ†ÛR —y| ÙLÖ�| Y£Y‡¥, È-20 AÛU�“ ™XUÖL EXL SÖ|LºPÁ U†‡V AWr ÙRÖPŸ“ ÙLÖ�|·[‰. RLY¥LÛ[ TfŸ‹‰ ÙLÖ·[ J�T‹R• ÙNš‰ ÙLÖ�|·[‰. CR¼h S¥X TXÁ fÛP†‰·[‰. L¿�“ TQeLÖWŸL¸P–£‹‰ i|RXÖL ¤.34,601 ÚLÖz Y¡ Ys¦eL�Ty|·[‰. i|RXÖL ¤.48,784 ÚLÖz Y£UÖ]• L�P½V�Ty|·[‰.

ÚRŸR¥ qŸ‡£†R•

ÚRŸR¥ qŸ‡£†R• ÙLÖ�|YW AÛ]†‰ LypLº• J†‰ÛZ�“ A¸†‰ Y£fÁ\]. CÛR «ÛW°T|†R J£ L–yz AÛUeL�Ty|·[‰. AeL–yz, UÖŒX YÖ¡VÖL L£†‰ ÚLy| Y£f\‰. C¿‡VÖL, H�W¥ UÖR•, ÚRpV A[«¥ BÚXÖNÛ] iyP• SÛPÙT¿•. ÚRŸR¥ ÙNX°Lºeh AWNÖjLÚU Œ‡�R« A¸eh• ‡yP• T¡q¦eL�Ty| Y£f\‰.

ÚLÖŸy|L¸¥ YZehL· ÚRjhYÛR R|eL SPYzeÛL G|eL�T|•. ÙT�L· CP J‰eg| UÚNÖRÖ, TÖWÖºUÁ\†‡¨• ŒÛ\ÚY¼\�T|• GÁ¿ S•“fÚ\Á. ÙT� hZ‹ÛRLÛ[ TÖ¦V¥ h¼\jL¸¥ C£‹‰ TÖ‰LÖ�TR¼LÖ] UÚNÖRÖ, TÖWÖºUÁ\†‡¥ RÖeL¥ ÙNšV�TP E·[‰.

TÖfÍRÖÁ

A�ÛP SÖ|L¸¥ AÛU‡, ͇W†RÁÛU ŒX°YÛRÚV C‹‡VÖ «£•“f\‰. TÖfÍRÖÄPÁ AŸ†R˜·[ ÚTorYÖŸ†ÛR ™X• AÛ]†‰ ‘WopÛ]Lºeh• ˆŸ°LÖQ «£•“f\‰. AÚR NUV†‡¥, C‹‡VÖ°eh G‡WÖ] LÖ¡VjL·, TÖfÍRÖÁ U�‚¥ SÛPÙT¿YÛR A‹SÖ| AÄU‡eLeiPÖ‰.

LP‹R B�|, SeN¥ YÁ˜Û\L[Ö¥ peLXÖ] B�PÖLÚY C£‹R‰. SeN¥ ‘WopÛ]ÛV J|eL, 60 TZjhz›] UÖYyPjL¸¥ Y[Ÿop ‡yPjL· ŒÛ\ÚY¼\�T|fÁ\]. U†‡V AWr G|†R SPYzeÛLL[Ö¥, LÖЗ¡¨•, YPfZeh UÖŒXjL¸¨• AÛU‡ ‡£•‘�·[‰.

CªYÖ¿ ^]Ö‡T‡ ‘WˆTÖ Ty{¥ ÚTp]ÖŸ.

 

 


ÙLÖÛX, L¼T³�“ YZef¥ CWyÛP B�· R�PÛ] ÙT¼\
‘ÚWUÖ]‹RÖ NÖ–VÖŸ UWQ•
ÙNÁÛ] RÂVÖŸ BÍT†‡¡›¥ E›Ÿ ‘¡‹R‰




ÙLÖÛX, L¼T³�“ YZehL¸¥ CWyÛP B�· R�PÛ] «‡eL�TyP ‘ÚWUÖ]‹RÖ NÖ–VÖŸ, ÙNÁÛ] RÂVÖŸ BÍT†‡¡›¥ UWQ• AÛP‹RÖŸ. AY£eh YV‰ 60.

‡£op TÖ†‡UÖ SL¡¥ BpW• SP†‡ Y‹RYŸ, ‘ÚWUÖ]‹RÖ NÖ–VÖŸ.

EP¥ŒÛX ÚUÖN• AÛP‹R‰

LP‹R 1995-• B�z¥, ÙLÖÛX U¼¿• L¼T³�“ YZehL¸¥ pefV ‘ÚWUÖ]‹RÖÛY ÚTÖ§NÖŸ ÛL‰ ÙNš‰ YZeh ÙRÖPŸ‹R]Ÿ. C‹R YZehL¸¥, “‰eÚLÖyÛP ÙNNÁr ÚLÖŸyz¥, ‘ÚWUÖ]‹RÖ°eh CWyÛP B�· R�PÛ] «‡eL�TyP‰.

ÙNÁÛ] IÚLÖŸy| U¼¿• r�¢• ÚLÖŸy|L¸¥ C‹R R�PÛ] E¿‡ ÙNšV�TyPÛR† ÙRÖPŸ‹‰ LP©Ÿ U†‡V pÛ\›¥ ‘ÚWUÖ]‹RÖ AÛPeL�Ty| C£‹RÖŸ. H¼L]ÚY NŸeLÛW ÚSÖ›]Ö¥ TÖ‡eL�Ty| C£‹R AY£ÛPV EP¥ ŒÛX ÚUÖN• AÛP‹RRÖ¥, Ajf£‹‰ ÙNÁÛ] “Z¥ pÛ\eh UÖ¼\�TyPÖŸ.

RÂVÖŸ BÍT†‡¡›¥...

LP‹R 11-‹ÚR‡ AÁ¿ ÙNÁÛ] ÍPÖÁ¦ BÍT†‡¡›¥ ‘ÚWUÖ]‹RÖ pfoÛNeLÖL ÚNŸeL�TyPÖŸ. UtN· LÖUÖÛX U¼¿• L¥§W¥ TÖ‡�“ LÖWQUÖL rV ŒÛ]° CZ‹R ŒÛX›¥ AY£eh ˆ«W pfoÛN A¸eL�Ty| Y‹R‰. L¥§W¥ UÖ¼¿ A¿ÛY pfoÛN ÙNšRÖ¥RÖÁ AY£ÛPV E›ÛW LÖ�TÖ¼\ ˜z�• GÁ\ ŒÛX H¼TyP‰.

AÛR† ÙRÖPŸ‹‰ ‘ÚWUÖ]‹RÖ«Á E\«]ŸL· NÖŸ‘¥ ÙNÁÛ] IÚLÖŸyz¥ YZeh ÙRÖPW�Ty| ÚLÖŸy| E†RW°�Tz ÙNÁÛ] “\SLŸ Th‡VÖ] ÚUPYÖeL• A£f¥ E·[ ÙT£•TÖeL• hÚ[ÖT¥ BÍT†‡¡›¥ ‘ÚWUÖ]‹RÖ AÄU‡eL�TyPÖŸ. L¥§W¥ ˜µÛUVÖL TÖ‡eL�Ty| rVŒÛ]° CZ‹R AY£eh L¥§W¥ ÚSÖš p\�“ PÖePŸ ^ÖšYŸgÍ RÛXÛU›¥ ˆ«W pfoÛN A¸eL�TyP‰.

L¥§W¥ UÖ¼¿ pfoÛN T¡ÚNÖRÛ]

‘ÚWUÖ]‹RÖ°eh L¥§W¥ UÖ¼¿ A¿ÛY pfoÛN ÙNšY‰ h½†‰ PÖePŸL· T¡q¦†R]Ÿ. CR¼LÖL L¥§WÛX RÖ]UÖL RW ˜ÁY‹R AY£ÛPV E\«]ŸL¸P• ‘ÚWUÖ]‹RÖ°eh AYŸLºÛPV L¥§W¥ ÙTÖ£‹‰UÖ? GÁ¿ T¡ÚNÖRÛ] SÛPÙT¼\‰.

ÙRÖPŸ‹‰ rV ŒÛ]° C¥XÖU¥ C£‹‰ Y‹RRÖ¥, C‹R A¿ÛY pfoÛNÛV RÖjh• Ne‡ ‘ÚWUÖ]‹RÖ°eh C£ef\RÖ? GÁ¿• ÚNÖRÛ] SP†R�TyP‰.

E›Ÿ ‘¡‹R‰

C‹R ŒÛX›¥, ÚS¼¿ TL¥ 1.25 U‚eh ‘ÚWUÖ]‹RÖ«Á E›Ÿ ‘¡‹R‰. ‘ÚWUÖ]‹RÖ«Á EP¥, hÚWÖ•ÚTyÛP AWr BÍT†‡¡eh ÙLÖ�| ÙN¥X�T|f\‰.

UÖÈ͇ÚWy| J£YŸ ÚSWzVÖL Y‹‰ «NÖWÛQ SP†‰YÖŸ GÁ¿•, ARÁ‘\h ‘ÚWR T¡ÚNÖRÛ] ÙNšV�Ty|, E\«]ŸL¸P• ‘ÚWUÖ]‹RÖ«Á EP¥ J�TÛPeL�T|• GÁ¿•, Ù^›¥ A‡LÖ¡L· ÙR¡«†R]Ÿ.

CXjÛL›¥ C£‹‰ Y‹RYŸ

60 YVRÖ] ‘ÚWUÖ]‹RÖ, CXjÛL›¥ C£‹‰ LP‹R 1983-• B�z¥ R–²SÖy|eh Y‹RÖŸ. ‡£op A£f¥ E·[ TÖ†‡UÖ SL¡¥ BpWU• U¼¿• BRWY¼\ hZ‹ÛRLºeLÖ] C¥X†ÛR SP†‡ Y‹RÖŸ.

BpWU†‰eh Y‹R 13 ÙT�LÛ[ UVeL U£‹‰ ÙLÖ|†R L¼T³†RRÖL°•, CÛ[OŸ J£YÛW ÙLÖÛX ÙNšRRÖL°• ÙRÖPW�TyP YZehL¸¥ ‘ÚWUÖ]‹RÖ°eh CWyÛP B�· R�PÛ] «‡eL�Ty| LP‹R 14 B�|L[ÖL LP©Ÿ pÛ\›¥ AÛPeL�Ty| C£‹RÖŸ.

 

 

பால்வீதி மண்டலத்தில் ஐயாயிரம் கோடி கிரகங்கள்.


 
லட்சம் கோடிகளுக்கு எத்தனை சைபர் என்று நாம் முட்டை போட்டு போட்டு கொண்டிருக்கையில், நமது பால் வீதி மண்டலத்தில் சுமார் ஐயாயிரம் கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். அதில் சுமார் ஐநூறு கோடி கிரகங்கள் உயிரினங்கள் வாழ தோதுவான - குளிருமல்லாத வெப்பமுமல்லாத - பகுதியில் உள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கெப்ளர் டெலஸ்கோப்பின் மூலம் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரவு வானின் ஒரு சிறு பகுதியில் ஒரு வருடம் இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டு, அதன் முடிவுகளை கொண்டு வரையப்பட்ட ஒரு எண்ணிக்கை விபரமே இது என்று கெப்ளர் சயின்ஸின் தலைவர் விழியம் பருக்கி தெரிவித்தார். ஒரு கிரகம் அது சுற்றி வரும் நட்சத்திரத்திற்கும் பூமிக்கும் இடையில் கடக்கையில்  கெப்ளர் அதனை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. கெப்லரின் பணி தனித்த உலகங்களை கண்டறிவது அல்ல எனினும் விஞ்ஞானிகளுக்கு நமது பால்வீதி மண்டலத்தில் எத்தனை கிரகங்கள் உயிர்வாழ தகுதியாக அமைந்திருக்கலாம் என்பது பற்றிய ஒரு தோராய காட்சியினை இது தருவிக்கும். கெப்ளர் ஆராயும் இரவு வானின் நானூறில் ஒரு பகுதியைத்தான் இதற்கென அவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
லட்சம் கோடிகளுக்கு எத்தனை சைபர் என்று நாம் முட்டை  போட்டு கொண்டிருக்கையில், நமது பால் வீதி மண்டலத்தில் சுமார் ஐயாயிரம் கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். அதில் சுமார் ஐநூறு கோடி கிரகங்கள் உயிரினங்கள் வாழ தோதுவான - குளிருமல்லாத வெப்பமுமல்லாத - பகுதியில் உள்ளதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கெப்ளர் டெலஸ்கோப்பின் மூலம் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இரவு வானின் ஒரு சிறு பகுதியில் ஒரு வருடம் இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டு, அதன் முடிவுகளைக் கொண்டு வரையப்பட்ட ஒரு எண்ணிக்கை விபரமே இது என்று கெப்ளர் சயின்ஸின் தலைவர் விழியம் பருக்கி தெரிவித்தார். ஒரு கிரகம் அது சுற்றி வரும் நட்சத்திரத்திற்கும் பூமிக்கும் இடையில் கடக்கையில் கெப்ளர் அதனைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. கெப்லரின் பணி தனித்த உலகங்களைக் கண்டறிவது அல்ல எனினும் விஞ்ஞானிகளுக்கு நமது பால்வீதி மண்டலத்தில் எத்தனை கிரகங்கள் உயிர்வாழ தகுதியாக அமைந்திருக்கலாம் என்பது பற்றிய ஒரு தோராய காட்சியினை இது தருவிக்கும். கெப்ளர் ஆராயும் இரவு வானின் நானூறில் ஒரு பகுதியைத்தான் இதற்கென அவர்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

 

கசாப்பிற்கு மரணதண்டனை உறுதி


மும்பை தாக்குலில் தொடர்புடைய அஜ்மல் கசாபுக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனையை உறுதி செய்து மும்பை உயர் நீதிமன்றம் netru  தீர்ப்பளித்தது.

2008 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலின்போது உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் அமீர் கசாப். 166 பேர் கொல்லப்படவும் 300க்கு மேற்பட்டவர்கள் காயமடையவும் காரணமாக இருந்ததற்காக ஏற்கனவே விசாரிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது.


இதை எதித்து கசாப் செய்திருந்த மேல் முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மும்பை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கசாப்பின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பு வழங்கினர்.


இதன் விளைவாக, மும்பை தீவிரவாத தாக்குதலில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அஜ்மல் அமீர் கசாப்பிற்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.


“இத்தாலி பண்பாட்டை இங்கே கொண்டு வராதீர்கள்” – சோனியாவுக்கு பெண் எம்.எல்.ஏ கடிதம்.

E-mail அச்செடுக்க
இத்தாலி பண்பாட்டை இங்கே புகுத்தி குழப்பம் ஏற்படுத்தாதீர்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார் ஆந்திர மாநில பெண் சட்டமன்ற உறுப்பினர் கரேகா என்பவர்.
சிரஞ்சீவி  கட்சி சார்பாக ச.ம.உ ஆன கரேகா, ஜெகன்மோகன் தனிக்கட்சி கண்ட போது அவர் கட்சியில் இணைந்தார். அதன்பிறகு சிரஞ்சீவியே தன பிரஜா இராஜ்யம் கட்சியை காங்கிரசில் இணைத்துவிடவும் அந்தக் கோபத்தில் இவ்வாறு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது.
நம்பிக்கை துரோகம், பண ஆசை, இரக்கம் இல்லாத தன்மை உடையது தான் இத்தாலிய கலாசாரம். மற்றவர்கள் தங்கள் கண் எதிரில் கஷ்டப்பட்டால் கூட அதை கண்டு கொள்ளாமல் இருப்பது தான் இத்தாலியர்களின் குணம். அந்த இத்தாலிய கலாசாரத்தை ஆந்திராவில் புகுத்தி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. சோனியா காந்தியின் தவறான முடிவால் ஆந்திராவில் பல்வேறு குழப்பங்கள் நடந்து வருகிறது.
ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் 6 மாதங்களாக கலவரத்  தீ பற்றிய போது அதை அடக்காமல் வேடிக்கை பார்த்தவர் சோனியா காந்தி. அவரால் நியமிக்கப்பட்ட பொம்மை முதல்வர் ரோசையாவாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை. இதே போல் தற்போதைய முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் செயல்படாத முதல்வராக உள்ளார்.
ஆந்திராவில் நீங்கள் தொடர்ந்து இத்தாலிய கலாசாரத்தை புகுத்தினால் மாநில மக்கள் நிம்மதி இழந்து விடுவார்கள். அடுத்த தேர்தலில் ஆந்திர மக்கள் உங்களுக்கு (சோனியாவுக்கு) நல்ல பாடம் கற்பிப்பார்கள்.
என்று   கரேகா அந்தக் கடிதத்தில்  காட்டமாக தெரிவித்துள்ளார்.




உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் இம்ரான் கான்

அடுத்த வாரம் முதல் நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியே வாகை சூட வாய்ப்பு உள்ளது என்று பாக்.அணியின்  முன்னாள் தலைவர் இம்ரான்கான் கருத்து தெரிவித்துள்ளார்.  “இந்திய  அணி இருக்கும் தற்போதைய சிறப்பு நிலை, உள்ளூரில் விளையாடுவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதைச்  சொல்கிறேன். சிறந்த மட்டையாளர்களால் இந்திய அணி பலம் பெற்று திகழ்கிறது. அவர்கள் தங்களது ஆடுகளங்களில் சிறப்பாக ஆடுபவர்கள்” என்றார் அவர். “ஷேவாக், யூசுப் பதான் சிறந்த அதிரடி வீரர்கள். இந்த இருவரும் இந்த உலகக்  கோப்பை போட்டியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இடது சுழல் வீச்சாளர்  பியூஸ் சாவ்லாவின் தேர்வு நல்ல முடிவு. ஒருநாள் போட்டிக்கு இத்தகைய சுழலகர்கள்  கண்டிப்பாகத்  தேவை. அவரும், ஹர்பஜன் சிங்கும் இணைந்து பந்து வீச்சில் அறைகூவல்  விடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
இந்திய அணிக்கு இருக்கும் ஒரே பிரச்சினை கூடுதல் நெருக்கடிதான். உலக கோப்பையில் பகல்-இரவு ஆட்டத்தில் பனித்துளி முக்கிய பங்கு வகிக்கும். உலக கோப்பை போட்டியில் மொத்தம் 49 ஆட்டங்கள் இந்தியா-இலங்கை, வங்காள தேசத்தில் நடக்கிறது. இதில் 36 போட்டிகள் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. கால்இறுதி, அரைஇறுதி, இறுதிப் போட்டியும் பகல்- இரவாக நடக்கிறது. பனி கொட்டுவதும் ஆட்டத்தின் போக்கில் பங்களிக்கும். 1996-ம் ஆண்டு உலகக்  கோப்பை போட்டியில் இலங்கை இறுதிப் போட்டியில் வெற்றி பெற இதுவும் ஒரு காரணமாக இருந்தது.”
என்றும் இம்ரான் கான் கூறியுள்ளார்.








சச்சினுக்காக உலகக் கோப்பை வெல்வது என்பது சரியல்ல : கபில்தேவ்

 
“சச்சினுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும் எனக் கூறுவது மற்ற 14 வீரர்களையும் இழிவு படுத்துவது போன்றது” என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
இந்திய அணித்தலைவர் தோனி, காம்பிர் மற்றும் சில முன்னாள் வீரர்கள் சச்சினுக்காக(வாவது) இம்முறையேனும்  உலக கோப்பையை இந்தியா  வெல்ல வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.
இதுபற்றி இந்திய அணியின் முன்னாள் தலைவரும், 28 ஆண்டுகளுக்கு முன், 1983 ல் இந்திய அணி கோப்பையை வெல்லக் காரணமாக இருந்தவருமான கபில்தேவிடம் கேட்ட போது “தோனி, காம்பிர் மற்றும் சில முன்னாள் வீரர்கள் சச்சினுக்காக உலக கோப்பை வெல்ல வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறு. சச்சின் மட்டும் கிரிக்கெட் விளையாடவில்லை. கிரிக்கெட் என்பது அணியாக விளையாடப்படும் விளையாட்டு. இவ்வாறு கூறுவது மற்ற 14 வீரர்களையும் இழிவு படுத்துவது போன்றது. சச்சின் சிறந்த வீரர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இம்முறை எந்த அணி உலக கோப்பை வெல்லும் என்பதைத் தற்போது கூற இயலாது. ஏழு அணிகளுக்கு உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன். இதில் இந்திய அணியும் ஒன்று. இதுவரை தொடரை நடத்திய அணி, கோப்பை வென்றதில்லை. இம்முறை அதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது” என்று கூறி அதிரடித்துள்ளார்


thanks to inneram.com