Wednesday, April 27, 2011

நாடாளப்போகும் நல்லவர்கள்..தமிழகம்: 125 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்!


  "நடைபெறும் 2011 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பிரபல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 679 வேட்பாளர்களில், 125 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இதில் 66 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்றும் தனியார் சேவை அமைப்பான தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் சார்பில் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அடுத்த ஆட்சி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் 2011 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை (ஏப்ரல் 13) நடைபெற உள்ளது. தமிழகத்தின் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 2,773 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் சுயேட்சைகள் அல்லாத பிரபல அரசியல் கட்சிகளான திமுக, காங்கிரஸ், பாமக, அதிமுக, தேமுதிக, பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் கமிஷனுக்குச் சமர்ப்பித்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் 679 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத் தகவல்கள் டெல்லியிலிருந்து செயல்படும் ஜனநாயக சீர்த்திருத்த இயக்கத்தின் சார்பில் திரட்டப்பட்டுள்ளது.
திரட்டப்பட்ட தகவல்கள், இந்த அமைப்பின் சார்பு நிறுவனமான தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் மூலம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. வெளியான தகவல்களிலுள்ள 679 வேட்பாளர்களில் 125 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 66 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள விவரங்களும் தெரியவந்துள்ளன.
வெளியிடப்பட்ட தகவல்களில் கிரிமினல் வழக்கு நிலுவையிலுள்ள வேட்பாளர்கள் விவரம் வருமாறு:
திமுக  - 119 வேட்பாளர்களில் 111 பேர் தேர்தல் கமிஷனுக்குப் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்துள்ளனர். இதில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதிமுக - 160 வேட்பாளர்களில் 144 பேர் தேர்தல் கமிஷனுக்குப் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்துள்ளனர். இதில் 43 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
காங்கிரஸ் - 63 வேட்பாளர்களில் 54 பேர் தேர்தல் கமிஷனுக்குப் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்துள்ளனர். இதில் 6 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பாஜக - 169 வேட்பாளர்களில் 19 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தேமுதிக - 7 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பாமக - 14 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
விடுதலைச் சிறுத்தைகள் - 10வேட்பாளர்களில்  3 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்திய அணி வீரர்களுக்கு பரிசு தொகை 2 கோடியாக அதிகரிப்பு



உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி  வீரர்களுக்கு பரிசு தொகை 2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதறகான அறிவிப்பை கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் இன்று வெளியிட்டது.
சென்ற மாதம் நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்காக அணி வீரர்கள் அனைவருக்கும் தலா 1 கோடி ரூபாய் பரிசு தொகையாக பிசிசிஐ உடனடியாக அறிவித்தது. இது மிகவும் குறைவான தொகை என அணி வீரர்கள் கருதுவதாக சில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. மேலும் அணி வீரர்கள் அனைவருக்கும் தலா 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என அணியின் மூத்த வீரர்கள் பிசிசிஐக்கு தெரிவித்ததாகவும் செய்தி வெளியாகியிருந்தது.
இது குறித்த கருத்து தெரிவித்த பிசிசிஐ செயலர் சீனிவாசன், அவ்வாறான செய்திகள் உணமையில்லை என்றும், பரிசு தொகை உயர்த்தப்பட்டது குறித்த முடிவிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றார்.

வடிவேலுவுக்கு பதிலளிக்காதது ஏன்? - விஜயகாந்த் விளக்கம்



தேர்தல் பிரசாரத்தின் போது உங்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசிய காமெடி நடிகர்  வடிவேலுவுக்கு நீங்கள் ஏன் பதில் அளிக்கவில்லை என்று நடிகரும் தே மு தி க  தலைவருமான விஜயகாந்த் கேட்கப்பட்ட போது  " வடிவேலுக்குப் பதில் அளிக்கும் அளவுக்கு என் தகுதி குறைந்துவிடவில்லை. அப்படி நான் பதில் அளித்தால், அதையே பெரிய செய்தியாக்கி, ஆளுங்கட்சிக்கு எதிரான பல விஷயங்களை நான் பேசவிடாமல் செய்துவிடுவர். தி.மு.க.வின் இந்தச் சூழ்ச்சிக்கு நான் பலியாக மாட்டேன்" என்று கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கொடுத்துள்ளார் விஜயகாந்த்.

தேர்தல் பிரசாரத்தின் போது வடிவேலுவின் தனிநபர் தாக்குதல், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், வடிவேலுவின் பிரசாரத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது தொடர்பாக இப்படி ஒரு விளக்கம் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, April 24, 2011

கொடி கட்டி பறக்கும் “பிச்சை பிசினஸ்”! அதிர்ச்சித் தகவல்


 

கோவை: கோவையில் போக்குவரத்து நெரிசலான இடங்களில் வட மாநிலத்தவர்கள் பச்சிளம் குழந்தையுடன் பிச்சை எடுக்கும் காட்சி நம் மனதை நெகிழவைக்கும் அதே சமயம் அதன் பின்னணியை பார்த்தபோது அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.
தினமும் 50 ரூபாய் கொடுத்தால் போதும்'  பச்சிளம் குழந்தைகள் தின வாடகைக்கு கிடைக்கும் என, விளம்பரம் ஒன்றுதான் இல்லை அந்தளவுக்கு “பிச்சை பிசினஸ்” கொடிக்கட்டிப்பறக்கிறது. கோவையில் குழந்தைகளை வாடகைக்கு வாங்கி, சாலைகளில் பிச்சையெடுக்க பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முன்பெல்லாம் ஆதரவற்றோர், முதியோர், நோயாளிகள் மட்டுமே கையேந்தி வந்தனர். தற்போது, இளம் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள்கூட ரோட்டில் ஆங்காங்கு அமர்ந்தும் வழிபாட்டு தலங்களில் அமர்ந்தும் பிச்சை எடுப்பதையும் தாராளமாக காண முடிகிறது. இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய் தற்போது பச்சிளம் குழந்தைகளையும் பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்தி வருகிறது சில  கும்பல். கோவையில் முகாமிட்டிருக்கும் வடமாநில பெண்கள் சிலர், கையில் பச்சிளம் குழந்தைகளுடன் முக்கிய சாலை சந்திப்புகளில் நின்று, சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுத்து வருகின்றனர்.
பச்சிளம் குழந்தைகளை இடுப்பில் அமரவைத்து பிச்சை எடுக்கும் பெண்கள், ஒரு சில குழந்தைகளின் கை, கால்களில் ரத்த காயக்கட்டுகளும் போடப்பட்டிருக்கின்றன. சில குழந்தைகளின் முகம், தோள் பகுதிகளில் வெளிப்படையாக காணும் வகையில் காயங்களும் உள்ளன.குழந்தைகளை பார்க்கும் பலரும் நோட்டுகளை கொடுத்து "புண்ணியம்' தேடிக்கொள்கின்றனர். இம்முறையில்  ஒவ்வொரு பெண்ணுக்கும் தினசரி சுமார் 500 ரூபாய் வரை கிடைப்பதாக கூறப்படுகிறது. பார்ப்போர் பரிதாபப்பட வேண்டுமே என்பதற்காக குழந்தைகளுக்கு செயற்கையான காயத்தை ஏற்படுத்துவதாகவும் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுவரை காவல்துறையில் யாரும் புகார் தர முன்வரவில்லை.
மேலும் பிச்சை எடுக்க பயன்படுத்தப்படும் பச்சிளம் குழந்தைகள் வாடகைக்கும் விடப்படுகின்றனர். கோவை மாநகரில் காந்தி புரம், பார்க் கேட், வ.உ.சி., மைதானம், நேரு ஸ்டேடியம், சிவானந்தாகாலனி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வடமா நிலத்தவர்கள் அதிகளவில் சாலையோரங்களில் தங்கியுள்ளனர். இங்குள்ள பல பெண்கள் தங்களது குழந்தைகளை, பிச்சை எடுக்கும் பெண்களுக்கு நாள் வாடகைக்கு விடுவதாகவும், அதற்கு கூலியாக 50 ரூபாய் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
இந்திய தண்டனை சட்டப்படி பிச்சை எடுப்பது குற்றமாகும். இச்செயலில் ஈடுபடுவோரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டு. எனினும், இது ஒரு சமூக, பொருளாதாரம் சார்ந்த பிரச்னை என்பதால்,"பிச்சை எடுத்தல் தடைச்சட்டத்தை' அமல்படுத்துவதில் காவல்துறையினர் தீவிர முனைப்பு காட்டுவதில்லை. பிச்சைக்காரர்களை பிடித்து மாநகராட்சி, அரசு காப்பகங்களில் அடைத்தாலும் தப்பி யோடிவிடுகின்றனர். இதனால்  காவல்துறையினரும், சமூக ஆர்வலர்களும் குழப்பமடைந்துள்ளனர்.
இருப்பினும், குழந்தைகளை வாடகைக்கு விடுவதும், பிச்சை எடுக்க வைப்பதும், காயம் ஏற்படுத்தி துன்புறுத்துவதும் கொடூரமான குற்றங்களாகும். இதுபோன்ற குற்றங்களை தடுக்கவாவது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

இன்று காங்கிரஸ்..,

காங்கிரஸ் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் இந்த தளத்தில் ...,

நாளை பிஜேபி..,

Tuesday, April 19, 2011

தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்




Election Q தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்2011 சட்டமன்ற தேர்தல் பல வித சர்ச்சைகளுக்கிடையே நடைபெற்று முடிவிற்காக காத்து இருக்கிறது. “வரலாறு காணாத” என்ற வார்த்தை தமிழக ஊடகங்களிடையே ரொம்ப பிரபலமானது. ஒன்றுமில்லாத விசயத்திற்குக்கூட பரபரப்பிற்காக இதை பயன்படுத்துவார்கள் ஆனால் இந்த முறை உண்மையாகவே அதற்கு தகுந்த மாதிரி முதல் முறையாக 77.8% வாக்கு சதவீதம் நடைபெற்று அரசியல் கட்சிகளை மட்டுமல்ல அனைவரையும் ஏகத்திற்கும் குழப்பி விட்டு இருக்கிறது. பரபரப்பாக நடந்த தேர்தல் கலாட்டாக்களில் நான் கவனித்தவைகளை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
குறிப்பு: நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல.
கலைஞர் Vs ஜெ
கடந்த பல தேர்தல்களாக இவர்களே மாறி மாறி வந்துள்ளனர். இந்த முறை கலைஞர் என்றால் அடுத்த முறை ஜெ இது தான் இது வரை நடந்துள்ளது. மக்களுக்கு வேறு சொல்லிக்கொள்ளும்படியான மாற்றுத்தலைவர் இல்லாததால் வேறு வழி இல்லாமல் இவர்கள் இவரையே மாற்றி மாற்றி தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பது ஒரு சோகமான நிகழ்வு.
இலவசம்
இலவசம் இந்தத்தேர்தலில் மிக முக்கிய இடம் பிடித்துள்ளது. இலவசம் என்பது (பொருட்களாக) முதலில் ஆரம்பிக்கப்பட்டது ஜெ ஆட்சியில் தான் என்று நினைக்கிறேன் (தவறு இருந்தால் சுட்டவும்) ஜெ பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுத்தது தான் ஆரம்பம். இது தேர்தலுக்காக இல்லாவிட்டாலும் மக்களிடையே தற்போதைய இலவச தாக்கத்தை போல பெரிய அளவில் ஏற்படுத்தாவிட்டாலும் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்று இருந்தது. ஜெ ஆட்சி முடியும் போது கூட பெரிய அளவில் எதிர்ப்பில்லை. இதனால் இதை சமாளிக்க கலைஞர் எடுத்த பிரம்மாஸ்திரம் தான் இலவச வண்ண தொலைக்காட்சி. கலைஞர் அறிவித்தாலும் ஜெ இது போல சென்ற தேர்தலில் குறிப்பிடும் படியாக எதையும் அறிவிக்கவில்லை. பிறகு பல இடங்களில் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெ தோற்று இன்று வரை மைனாரிட்டி திமுக அரசு என்று கூறிக்கொண்டு இருக்கிறார்.
இந்தத்தேர்தலிலும் கடந்த தேர்தலைப்போல எக்கச்சக்க இலவசங்களை தேர்தல் அறிக்கையாக கலைஞர் அறிவிக்க சென்ற முறை போல இந்த முறை எதுவும் கூறாமல் இருந்தால் பெரும் பாதிப்பு வரும் என்பதை உணர்ந்து ஜெ வும் வரைமுறையே இல்லாத அளவிற்கு இலவசங்களை அள்ளி விட்டார். புதிதாக பார்ப்பவர்கள் எதோ கிண்டலுக்கு கூறி இருப்பார்கள் என்று நினைக்கும் அளவிற்கு இருந்தது. கலைஞர் கடந்த தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை ஏறக்குறைய நிறைவேற்றி இருந்தது அவருக்கு கூடுதல் பலம். இவர்கள் இருவரும் அறிவித்த இலவசங்களை வட மாநில ஊடகங்கள் கிண்டல் செய்து நமது மாநிலத்தின் மானத்தையே வாங்கி விட்டன.
உள்ளே விஜயகாந்த் வெளியே வைகோ
கடந்த தேர்தலில் தற்போது ஜெ செய்ததைப்போல (இல்லாமல் நாகரீகமாக) கலைஞரும் வைகோவிற்கு “இதயத்தில்” மட்டுமே இடம் கொடுத்ததால் அங்கே இருந்து விலகி ஜெ அளித்த தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு அதிமுக கூட்டணியில் இணைந்தார். இணைந்ததோடு ஜெ செய்த அராஜகத்தை எல்லாம் பொறுத்துக்கொண்டு அமைதி காத்தார். ஜெ க்கு யாருமே துணை இல்லாத போது அவருக்கு பக்க பலமாக இருந்தார் குறிப்பாக ஈழப்பிரச்சனை ஏற்பட்ட போது கூட சமாளித்து வந்தார் காரணம் ஈழத் தமிழர்கள் விசயத்தில் ஜெ முன்பு என்ன பேசினார் பின் எப்படி பல்டி அடித்தார் அனைவரும் அறிந்தது. இப்படி எந்த சூழ்நிலையிலும் பிரியாமல் இருந்த வைகோ வை படு கேவலமாக நடத்தி வெளியே அனுப்பினார் (வைகோ விற்கு இது தேவை தான் என்பது சிலர் வாதம்). அவர் கேட்ட சீட்டை கொடுக்காததோடு காக்க வைத்து வேறு கூட்டணியிலும் இணைய முடியாமல் செய்து விட்டார். இதன் பிறகு விஜயகாந்த் பல வித போராட்டங்கள் சண்டைகளுக்கிடையே 41 சீட்டைப் பெற்றார். பல காலம் அரசியலில் இருக்கும் வைகோ தற்போது வந்த விஜயகாந்துடன் போட்டி முடியாதது வருத்தமளிக்கும் விஷயம்.
வைகோவை வெளியேற்றியது ஜெ க்கு பலமா பலவீனமா?
நிச்சயம் பலவீனம் தான் காரணம் அதிமுக கூட்டணியில் ஜெ வைத் தவிர உறுதியாகப் பேச நபர் இல்லை. வைகோ இருந்து இருந்தால் மேடைகளில் வெளுத்து வாங்கி இருப்பார். வைகோ ஒரு சிறந்த பேச்சாளர் என்பதை எவரும் மறுக்க முடியாது. தன்னுடைய வாதங்களை அது சரியோ தவறோ ஆணித்தரமாக வைப்பார். கேட்பவர்களை தன் வாதங்களை ஏற்றுக்கொள்ளும்படி அவரது பேச்சு அமைந்து இருக்கும். இது நிச்சயம் அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்து இருக்கும். அதுவுமில்லாமல் வைகோ மீது மற்ற அரசியல்வாதிகள் அளவிற்கு மக்களுக்கு வெறுப்பில்லை. இன்னும் பலர் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இருப்பதில் நல்ல அரசியல்வாதி என்று கூற்றைக்கொண்டுள்ளனர்.
விஜயகாந்த்
Election 4 தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்கடவுளுடன், மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று கூறிக்கொண்டு இருந்த கேப்டன் பின் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். இதற்கு தனியாக நின்று வெற்றி பெற முடியாது மற்றும் கட்சி செலவு அதிகம் ஆகிக்கொண்டு செல்வது காரணமாகக் கூறப்படுகிறது. கூட்டணிக்கு முன்பு கேப்டனை ஜெ குடிகாரர் என்றும் அவர் தான் எனக்கு ஊத்திக்கொடுத்தார் என்று விஜயகாந்தும் கேவலமாக சண்டை இட்டுக்கொண்டார்கள். கேப்டன் குடிகாரர் என்ற பிரச்சனை தேர்தலில் ஆரம்பிக்க பிள்ளையார் சுழி போட்டதே ஜெ தான் என்று நினைக்கிறேன்.
குழப்பமான அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
ஜெ கூட்டணி கட்சிகள் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டது கூட்டணி கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் கூட்டணியை முறித்து மூன்றாவது அணி அமைக்கும் அளவிற்கு சென்று விட்டது. ஜெ அறிவிப்பைப் பார்த்து அதிமுக தொண்டர்களே மிரண்டு விட்டனர் மற்றவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பின்னர் விஷயம் விபரீதம் ஆவதை உணர்ந்த அதிமுக முக்கிய தலைகள் ஜெ விடம் பேசி பின் கூட்டணிக்கட்சிகளை சமாதானப்படுத்தினர். இது மக்களிடையே ஜெ மீது ஒரு வெறுப்பை கொண்டு வந்தது. ஜெ இன்னும் திருந்தவே இல்லை என்பதை நிரூபிப்பது போல இருந்தது.
ஜெ க்கு விஜயகாந்த் பலமா? பலவீனமா?
கூட்டணிக்கு முன்பு என்றால் நிச்சயம் பலம் மட்டுமே என்று கூறி இருக்கலாம் ஆனால் தற்போது கேப்டன் செய்த பல சொதப்பல்கள் பலம் + பலவீனம் என்று கூறும் அளவிற்கு வந்து விட்டது. சென்ற தேர்தலில் மிகச்சிறப்பாக பிரச்சாரம் செய்து 8% வாக்குகளைப் பெற்றவரா இவர்! என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இவரது பல நடவடிக்கைகள் இருந்தன.
வேட்பாளரை அடித்ததாக எழுந்த சர்ச்சையை அதோடு விடாமல் நான் அடித்தால் மகாராஜா ஆவார் என்று கூறி மேலும் சொதப்பியது, அதிமுகவையே தவறுதலாக விமர்சித்தது, அதிமுக, விஜய் மக்கள் கட்சி நபர்களிடம் கடுமையாக நடந்து கொண்டது என்று ரொம்பவும் சொதப்பி விட்டார். இவர் பேசாமல் இருந்தாலே போதும் என்கிற அளவிற்கு சில நேரங்களில் ஆனது. இருப்பினும் ஜெ க்கு பிறகு அவரது கூட்டணியில் விஜயகாந்த் பேச்சிற்கே அதிக வரவேற்பு இருந்தது. இந்த சொதப்பல்களை தவிர்த்து இருந்தால் மேலும் பல வாக்குகளைப் பெற்று இருக்கலாம். இதற்கு முழுக்காரணமே விஜயகாந்த் தான் வேறு யாருமல்ல. விஜயகாந்த் செல்லும் இடங்கள் எல்லாம் திமுக கூட்டணி கட்சிக்காரர்கள் பேசுவதை விட அதிகமாக கேப்டன் பேசுவதை கவர் செய்து ஒன்றுமில்லாத விஷயங்களைக்கூட பூதாகரமாகக் கூறி சன் டிவி செய்த டேமேஜ் ம் ஒரு காரணமாகக் கூறலாம்.
விஜயகாந்த் Vs வடிவேல்
Vadivel praise Captain தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்இந்தத்தேர்தலில் அறிவிக்கப்படாத ஹீரோ வடிவேல் தான். முதல் முறையாக கலைஞரை வைத்துக்கொண்டு மிகவும் கீழ்த்தரமாக பேசி நடந்து கொண்ட வடிவேல் அதன் பிறகு சுதாரித்து ஒவ்வொரு இடத்தில் பேசும் போதும் கேப்டன் மானத்தையே வாங்கி விட்டார். கேப்டன் இதற்கு எந்தவிதமான பதிலும் அளிக்காததால் அவரை சீண்டும் படி மீண்டும் மீண்டும் அவரை உசுப்பேத்திக்கொண்டே இருந்தார் ஆனாலும் கேப்டன் எதற்கும் பதில் தரவில்லை. வடிவேல் உஷாராக ஜெ வை தாக்காமல் கேப்டனை மட்டுமே தாக்கி வந்தாலும் அதிமுக கூட்டணியை வாரிக்கொண்டு இருந்தார்.
கேப்டனை வடிவேல் போட்டு வாங்கியது ஜெ க்கு நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருந்து இருக்கும் ஆனால் இவரது கூட்டணியையும் வாரிக்கொண்டு இருந்ததால் பின்னர் இவருக்கு “ஆப்பு” இருக்கலாம் என்று கருதப்படுகிறது. “தண்ணீரில்” மிதப்பவன் எல்லாம் கேப்டன் அல்ல. நீ கிங் மேக்கர் அல்ல ட்ரிங்க் மேக்கர் என்றது பலத்த வரவேற்ப்பை பெற்றது ஆனாலும் பலரும் முகம் சுழிக்கும் வண்ணம் வடிவேல் பேசியது அருவருக்கத்தக்கதாகவே இருந்தது. குறைந்த பட்ச மேடை நாகரீகம் கூட இல்லாமல் வடிவேல் பேசினார். தேமுதிக வாக்கு குறைவில் வடிவேல் பங்கு மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கேப்டனை குடிகாரராகவே சித்தரித்து விட்டதால் பெண்கள் வாக்கு இவருக்கு குறையும் என்றே கருதுகிறேன்.
இதில் பெரிய காமெடி விஜயகாந்த் மாற்றிக்கூறியதை கிண்டலடித்துக்கொண்டு இருந்த வடிவேலுவே மாற்றி அதிமுக வேட்பாளரை ஆதரித்தது தான் ஆனால் தமிழக மக்கள் பெரும்பாலோனோர் சன் மற்றும் கலைஞர் மட்டுமே பார்ப்பதால் இது பற்றி மக்களுக்கு அதிகம் தெரியவில்லை காரணம் இவர்கள் தான் இதை எல்லாம் காட்டவே மாட்டார்களே! வடிவேலை சமாளிக்க அதிமுக தரப்பு நடிகர் சிங்கமுத்தை களம் இறக்கியது ஆனால் வடிவேல் அளவிற்கு ஈடு கொடுக்கமுடியவில்லை.
பெரிய பேச்சாளர்களை எல்லாம் கொண்ட பெருமை வாய்ந்த கட்சியான திமுக தற்போது வடிவேலையும் குஷ்பூவையும் நம்ப வேண்டிய நிலைமைக்குப் போனது மிக மிக பரிதாபமான ஒன்றாகும். சன் கலைஞர் தொலைக்காட்சிகளில் வடிவேல் பேச்சிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது திமுக விற்கு பலத்த அடியாகும். திறமையான பேச்சாளர்களை திமுக இழந்துவருவதையே இது காட்டுகிறது. எது எப்படியோ இந்தத் தேர்தலில் வடிவேல் தான் “டாக் ஆஃப் தி எலக்சன்” என்பது மறுக்க முடியாத விஷயம்.
தேர்தல் முடிவு வந்த பிறகு விஜயகாந்த் கூட்டணியில் இருந்து விலக்கப்படுவார் அல்லது விலகும் படியான சூழ்நிலை அவருக்கு அமைக்கப்படலாம் என்பது என் கருத்து. இதை கேப்டனும் நன்கு அறிந்து வைத்து இருப்பார் என்று நினைக்கிறேன். அதிமுக கூட்டணியில் மானத்தோடு எவரும் இருக்க முடியாது என்பது அனைவரும் அறிந்தது. அதுக்கு முன்னாடி இருந்ததா? என்று கேட்க வேண்டாம் என்னிடம் பதில் இல்லை icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
வடிவேலு குறித்த ஒரு கொசுறு
அரசியலுக்கு வந்து விட்டாலே நடிப்பு வாழ்க்கை அவ்வளவு தான். முன்பு போல ஜொலிக்க முடியாது. இதற்கு உதாரணமாக எத்தனையோ நடிக நடிகைகளைக் கூறலாம். கட்சி சார்பாகி விட்டாலே வாய்ப்பு கொடுக்க மற்றவர்கள் யோசிப்பார்கள் அதோடு அவர்களுடைய இயல்பான நடிப்பிலும் மாற்றம் வந்து விடும். திமுக வெற்றி பெற்று விட்டால் வடிவேலுக்கு பெரிய அளவில் பிரச்சனை இருக்காது அதிமுக வெற்றி பெற்றால் ஒருவேளை நிஜமாகவே “கைப்புள்ளை” ஆனாலும் ஆகி விடுவார். விடுடா விடுடா சுனா பானான்னுட்டு வடிவேல் போக வேண்டியது தான் icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
ஊடக மூளைச்சலவை
அனைத்து கட்சிகளும் ஆளாளுக்கு ஒரு தொலைக்காட்சியை வைத்து இருந்தாலும் மக்களிடையே சென்றடைவது சன் கலைஞர் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகள் தான். ஜெயா தொலைக்காட்சியை ஜெயா ஆதரவு மக்கள் மட்டும் தான் காண்கிறார்கள் பொதுமக்கள் அதிகம் பார்ப்பதில்லை. சன் கலைஞர் இரு தொலைக்காட்சிகளும் இந்த ஒரு மாதமும் நாட்டில் வேறு எதுவுமே நடக்காதது போல வெறும் திமுக ஆதரவு செய்திகளாகவே காண்பித்துக்கொண்டு இருந்தார்கள். இந்த இரு தொலைக்காட்சியையும் (உடன் தினகரன் செய்தித்தாள்) பார்ப்பவர்கள் நாட்டில் இவர்கள் கூறுவது மட்டுமே நடந்து கொண்டுள்ளது என்று நினைக்கும் அளவிற்கு நடந்து கொண்டனர். கலைஞர் அரசு மீது வெறுப்பில் உள்ளவர்கள் இதை தொடர்ந்து பார்த்தால் கூட திமுக ஆதரவு அல்லது எதிர்க்கட்சி எதிர்ப்பு நிலைக்கு மாறி விடுவார்கள் அந்த அளவிற்கு மூளைச்சலவை செய்தார்கள்.
கிராமங்களில் எல்லாம் இவர்கள் கூறுவதே உண்மை என்று நம்பும் அளவிற்கு இருந்தது. நான் ஊரில் உள்ளவர்களுடன் பேசியதிலேயே இது அப்பட்டமாக தெரிந்தது. குறிப்பாக சன் தொலைக்காட்சியில் என்ன கூறுகிறார்களோ அது தான் இவர்களுக்கு செய்தி அதைத்தவிர வேறு எதுவும் நடக்கவில்லை என்பதைப்போலவே இருந்தது சிலரின் பேச்சு.
ஊடகங்கள் அரசியல் கட்சிகள் கையில் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தமிழகம் ஒரு சிறந்த உதாரணம்.
தேர்தல் ஆணையம்
Election2 தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்அரசியல் கட்சிகளிடையே வடிவேல் என்றால் பொதுமக்களிடையே பட்டையக் கிளப்பியது தேர்தல் ஆணையம் தான் என்பதில் சந்தேகமில்லை. பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடும் சோதனைகளை மேற்கொண்டனர். கொடி, பேனர், தோரணம், கட் அவுட் என்று எதையும் வைக்கக்கூடாது என்று ஏகக் கெடுபிடிகளை வைத்து அரசியல் கட்சிகளை கலங்கடித்து விட்டனர். அரசியல் கட்சிகள் தாங்கள் நினைத்ததை சாதிக்க கடும் முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டி இருந்தது.
வாகன சோதனையாலும் மற்றும் மற்ற கெடுபிடிகளாலும் பொதுமக்கள் பலர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இத்தனை பெரிய மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் இதைப்போல சிரமங்கள் தவிர்க்க முடியாது என்பது என்னுடைய கருத்து. அரசியல் கட்சிகள் செய்யும் அட்டூழியத்தை அடக்க மக்கள் ஒரு மாதம் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.
பொது மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி மற்றும் மற்ற தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் உதவியுடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த முறை 77.8% வாக்கு சதவீதத்தை நடத்தி சாதனை செய்துள்ளார்கள். மக்களும் எந்த பிரச்சனையும் நடக்காது என்கிற நம்பிக்கையில் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்தனர். இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் எப்போதும் வாக்களிக்காமல் இருக்கும் மேல்தட்டு மக்களும் வந்து வாக்களித்தது ஆகும்.
எனக்கு தேர்தல் கமிசன் செய்ததில் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது முடிவை ஒரு மாதம் தள்ளி வைத்ததாகும். கலைஞர் தேர்தல் ஆணையத்தை எமர்ஜென்சி போல நடந்து கொள்கிறது என்று கூறிய போதெல்லாம் எரிச்சல் தான் வந்தது ஆனால் இந்த இடைவெளி ஒரு மாதம் விசயத்தில் கலைஞர் கூறியதில் எனக்கு முழு உடன்பாடு அதாவது இந்த மாதம் மாநில அரசு எதுவுமே முழுமையாக செய்ய முடியாது அனைத்தும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இது பற்றி தினமணி கூட தனது தலையங்கத்தில் கூறி இருந்தது.
இது தவிர்த்து எனக்கு தோன்றிய இன்னொரு விஷயம் ஒரு மாதத்திற்கு 25000 காவலர்கள் இதற்கு காவல் காக்கிறார்கள். இவர்களுக்கு ஆகும் செலவு நேர விரயம் எல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால் வீண் செலவாகவே தோன்றுகிறது. இதை சரியான முறையில் திட்டமிட்டு ஒரு மாத இடைவெளியை குறைத்து இருக்கலாம். இது போக ஒரு மணி நேர வாக்குப்பதிவு நேரத்தை குறைக்காமல் வழக்கமான நேரத்தையே வைத்து இருந்தால் இன்னும் கூடுதலாக வாக்கு சதவீதம் வந்து இருக்கும். மற்றபடி இவை தவிர்த்து தேர்தல் ஆணையம் மிகச்சிறப்பாக செயல்பட்டு பொது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது என்பது மிகையில்லை. என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.
குழப்பத்தை ஏற்படுத்தும் வாக்கு சதவீதம்
எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு அதிக வாக்காளர்கள் 77.8% வாக்களித்து இருப்பது அரசியல் கட்சிகளிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது யாருக்கு ஆதரவான அல்லது எதிரான அலை என்று ஒன்றும் புரியாமல் குழம்பிப் போய் உள்ளனர். இதில் நக்கீரன் மற்றும் விகடனின் கருத்துக்கணிப்பு அனைவரையும் குழப்பியுள்ளது. பின்வரும் கணக்கை பார்த்தால் உங்களால் ஏதாவது ஒரு முடிவிற்கு வர முடியுமா!
அதிமுக 141-திமுக 92 இடங்களில் முன்னிலை – ஜூ.வி
திமுக 140-அதிமுக 94 இடங்களில் முன்னிலை – நக்கீரன்
இவை அல்லாமல் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். இது விலைவாசி உயர்வு போன்றவற்றால் அதிமுகவிற்கு ஆதரவான கூட்டமா! அல்லது இலவசங்கள் மற்றும் சுயஉதவிக்குழு போன்றவற்றால் திமுகவிற்கு ஆதரவான கூட்டமா! என்று ஒரு முடிவிற்கு வர முடியாத அளவிற்கு உள்ளது. கவுண்டர் பாணியில் சொல்வதென்றால் ஒரே குழப்ப்ப்பமா இருக்கே! icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
வடிவேல் மற்றும் சன் டிவி கைங்கர்யத்தால் கேப்டன் குடிகாரன் என்பதும், வேட்பாளரை அடித்ததும் மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே ஆழமாக பதிந்து விட்டது அதனால் இவருக்கு பெண்கள் ஒட்டு அதிகளவில் கிடைக்குமா என்று தெரியவில்லை. இவருடைய ரிஷிவந்தியம் தொகுதியில் 78% வாக்கு பதிவு இதில் ஆண்களை விட பெண்கள் (12,475) அதிகம். இதையும் மீறி கேப்டன் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் கேப்டன் உண்மையிலேயே திறமையான கேப்டன் தான் icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
இதுவரை நடந்த தேர்தல்களில் 84 ம் ஆண்டு முதல் திமுக அதிமுக மாறி மாறி வந்துள்ளன. வெற்றி பெற்ற கட்சியும் அதன் வாக்கு சதவீதமும் கீழே உள்ளது.
1984 – 73.47% அதிமுக வெற்றி
1989 – 69.69% திமுக வெற்றி
1991 – 63.84% அதிமுக வெற்றி
1996 – 66.95% திமுக வெற்றி
2001 – 59.07% அதிமுக வெற்றி
2006 – 70.56% திமுக வெற்றி
2011 – 77.8% ?????? வெற்றி
கொசுறு: எங்கள் ஊர் கோபியில் இந்த முறை 83.29% வாக்கு பதிந்துள்ளது.
அதிகளவு வாக்களிப்பிற்குக் காரணம் என்ன?
ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை நினைத்து இருப்பார்கள். எனக்கு தோன்றியவை படத்துடன் கூடிய பூத் ஸ்லிப், காவல் துறை பாதுகாப்பு, தேர்தல் ஆணையம் சமூக அமைப்புகள் ஊடகங்கள் ஆகியவை ஏற்படுத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தேர்தல் ஆணையம் ஏற்படுத்திய நம்பிக்கை, கூடுதல் வாக்காளர்கள் சேர்ப்பு, கள்ள ஓட்டு தவிர்ப்பு, வன்முறை சம்பவங்கள் நடக்காதது, இளைஞர்கள் பலரிடையே இணையம் மூலம் (facebook, Twitter, Buzz & Mail) ஆர்வத்தை ஏற்படுத்தியது போன்றவை. இவை தவிர அரசியல் கட்சிகள் வழங்கிய பணம் மற்றும் இலவசம்.
கலைஞர் ஜெ யார் வெற்றி பெறுவார்கள்?
கணிப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த தேர்தல்களிலேயே இந்தத்தேர்தலில் தான் அதிக பட்சமாக வாக்குபதிவு நடந்துள்ளது. இது அனைத்து கட்சிகளின் வயிற்றிலும் புரளியைக் கரைத்துள்ளது. இரு கட்சிக்காரர்களும் தங்களுக்கு ஆதரவான விசயங்களைக் கோடிட்டுக் காட்டி “வெற்றி எங்களுக்குத்தான்” என்று கூறிக்கொண்டு இருந்தாலும் உள்ளூர பயந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்த காரணங்களைப் பட்டியலிட்டுள்ளேன் உங்கள் கருத்துக்களுடன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்.
கலைஞர் சாதகங்கள்
இலவசம், 108, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, இலவச வீடு, மகளிர் சுய உதவிக்குழு, ஒரு ரூபாய் அரிசி, அரசு ஊழியர்கள் ஆதரவு, தேர்தல் பணம், வடிவேல்!!!, சன் டிவி, விஜயகாந்த் பேச்சு, ஜெ முதல் வேட்பாளர் பட்டியல் சொதப்பல், ஜெ விஜயகாந்த் சண்டை.
கலைஞர் பாதகங்கள்
Election தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்ஊழல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, குடும்ப ஆட்சி, திரைப்படத்துறை ரியல் எஸ்டேட் ஊடகத்துறை கேபிள் டிவி ஆதிக்கம், ஈழத்தமிழர் (50% – 50%), மீனவர் பிரச்சனை, அன்னா ஹசாரேவிற்கு ஆதரவாக எந்த பெரிய விளம்பரமும் இல்லாமல் ஊழலுக்கு எதிராக கோவையில் திரண்ட மக்கள்.
ஜெ சாதகங்கள்
இலவசம், கேப்டன் மற்றும் கூட்டணி, ஆளும் கட்சி அதிருப்தி மற்றும் கலைஞர் பாதகங்களில் உள்ளவைகள்
ஜெ பாதகங்கள்
வேட்பாளர் குழப்படி வெளியீடல், கூட்டணி ஒற்றுமை இல்லாமை, விஜயகாந்த் பேச்சு மற்றும் வேட்பாளரை அடித்தது, ஜெ வின் முரட்டுத்தனம், வைகோ (பேச்சு) இல்லாமை, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒன்றாக மேடையில் பேசாதது, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பிரச்சாரத்தில் மக்களிடம் சரியாக எடுத்துக் கூறாதது.
கலைஞர் ஜெ இருவரிடமும் உள்ள மிகப்பெரிய தவறாக எனக்குத் தோன்றுவது
கலைஞர் முதலில் ஐடி துறையை பெறவும் கடைசியில் கூட்டணி பேரத்திற்க்காகவும் கூட்டணியில் இருந்து விலகுவதாக மிரட்டியதை ஈழத்தமிழர்கள் விசயத்திற்காக செய்யாதது. இது மட்டுமல்ல வேறு எந்த நல்ல விசயத்திற்க்காகவும் செய்யாதது.
ஜெ இன்னும் கொஞ்சம் கூட திருந்தாமல் அப்படியே இருப்பது.
ஒரு மாதக்கலக்கம்
Election3 தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்அரசியல் கட்சிகள் இந்த ஒரு மாதக்கொடுமையைப் போல வேறு எப்போதும் அனுபவித்து இருக்க மாட்டார்கள். வெற்றியோ தோல்வியோ முடிவு தெரிந்து விட்டால் நிம்மதியாக அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடலாம் ஆனால் இதில் எதுவுமே தெரியாமல் ஆளாளுக்கு கூறும் ஊகங்களைக் கேட்டு வாய்ப்புள்ளதா இல்லையா என்று தினமும் கணக்குப் போட்டுக்கொண்டு தேர்தலுக்கு முன்பு ஒரு நாளை ஒரு மணி நேரமாகக் கடத்தியவர்கள் தற்போது ஒரு நாளை ஒரு மாதம் போல கடத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகி விட்டார்கள் icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல் உண்மையிலேயே இது கொடுமை தான்.
தினமும் இவர்களால் நிம்மதியாக தூங்கக்கூட முடியாது (தெரிந்தவுடன் பொதுமக்கள் நிம்மதியாக இருக்க முடியாது அது வேறு விஷயம்) அந்த அளவிற்கு டென்ஷன் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள். சாதாரண பொதுமக்களாகிய நமக்கே இவ்வளவு ஆர்வம் என்றால் கட்சிக்காரர்களை எல்லாம் நினைத்துப்பாருங்கள். காமெடிதான் போங்க! சரியான தண்டனை icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
இதில் பல கட்சிக்காரர்கள் அழகரி ஸ்டாலின் கேப்டன் சரத் போன்றவர்கள் தாங்கள் இத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். கலைஞரும் ஜெவும் உஷாராக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் முடிவிற்குப் பிறகு யார் யார் கூறியது என்ன அளவில் உள்ளது என்பதைப் பார்த்தால் காமெடியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அதோடு ஒவ்வொரு ஊடகங்களும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவாக ஏகத்துக்கும் செய்திகளை எழுதிக்கொண்டு இருக்கின்றன அவர்கள் எல்லாம் தேர்தல் முடிவு மாறி வந்தால் சமாளிக்கப்போவதை நினைத்தாலே சிரிப்பாக உள்ளது அதே போல அவர்கள் கூறியது போல நடந்து விட்டால் பாதிக்கப்படும் கட்சிகள் நிலை பாவமோ பாவம். கொஞ்ச நாளைக்கு வறுத்தெடுத்து விடுவார்கள் icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
எப்படியோ பல வித சர்ச்சைகள் இருந்தாலும் தேர்தல் நல்லபடியாக முடிந்து விட்டது எந்த வித பெரிய அசம்பாவிதமுமில்லாமல். அனைவரையும் போல நானும் யார் வெற்றி பெறுவார்கள்? கூட்டணி ஆட்சி நடக்குமா? மறுபடியும் மைனாரிட்டி அரசு கோஷங்கள் ஒலிக்குமா? தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்களா? என்று ஆவலுடன் இருக்கிறேன். இந்தத்தேர்தல் முடிவு பல வித சந்தேகங்களை தீர்க்கும் பல ஆச்சர்யங்களை மற்றும் நிச்சயம் கடும் அதிர்ச்சியைக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
தேர்தல் முடிவால் நம்மிடம் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை Life will be going on as usual icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்

எப்போது சாத்தியம் அன்னா ஹசாரே?

இந்த தேசத்தில்...,
1 திண்டாமைக்கு எதிரான வலுவானச் சட்டங்கள் இருக்கின்றன.
    தீண்டாமை ஒழிந்தாவிட்டது?
2 பெண்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான எவ்வளவோச் சட்டங்கள்      இருக்கின்றன.
 பெண்கள் நலமாகவா இருக்கிறார்கள்? 
      சட்டங்கள் தேவையென்றாலும்,
      அவற்றை உறுதியோடு அமல்படுத்துகிற அரசு வேண்டும். 
       அது எப்போது சாத்தியம் அன்னா ஹசாரே? 



தேர்தலில் ஜெயலலிதா வென்றால் ...அல்லது தோற்றால்....




நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஒரு வேளை  அண்ணா.தி.மு.க.ஜெயித்தால்.....


நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் கருணாநிதியின்
 பாசிச ஆட்சியை அகற்றி மீண்டும் அனைத்திந்திய
 அண்ணா.திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியமைக்க
 வாய்ப்பளித்துள்ளார்கள்.நான் பிரச்சாரத்திற்க்காக போகும்
 இடமெல்லாம் மக்கள் வெள்ளமென திரண்டு அன்பு 
சகோதரியான எனக்கு ஆதரவு தெரிவித்த போதே 
எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஸ்பெக்ட்ரம்,
 மணல்கொள்ளை, கேபிள் டி.வி .ஆதிக்கம், அரிசி கடத்தல்
, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று கருணாநிதியின் கொடுங்கோல்
  ஆட்சியில் சிக்கித்தவித்த மக்களுக்கு ஒரு விடிவு
 என் மூலம் ஏற்பட்டிருக்கிறது...இவ்வளவு பெரிய
 வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்த தேர்தல் 
ஆணையத்திற்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.
மிரட்டலுக்கு அஞ்சாமல் மிகவும் நியாயமாக தேர்தல்
 நடக்க அவர்கள்தான் காரணம். எங்களுக்கு வாக்களித்த 
 மக்களுக்கு நன்றி.....கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி....
அண்ணா நாமம் வாழ்க......புரட்சி தலைவர் 
எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க...


ஒருவேளை தோற்றால்.....



ஸ்பெக்ட்ரம் மூலம் கொள்ளையடித்த பணத்தை கொண்டு 
செயற்கையான  ஒரு வெற்றியை பணம் கொடுத்து 
வாங்கியுள்ளார்கள் கருணாநிதியும், அவர் கட்சியினரும். 
தமிழ்நாடு முழுவதும் ஒரு வோட்டுக்கு ஆயிரம் ரூபாய் 
என்று பத்தாயிரம் கோடி ரூபாயை வாரி 
இறைத்திருக்கிறார்கள். எங்களுக்கு சாதகமாக 
நடப்பதுபோல் ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டு
 தி.மு.க-விற்கு சாதகமாக நடந்து கொண்ட தேர்தல்
 கமிசனுக்கு என் கண்டனத்தை தெரிவித்து
 கொள்கிறேன். தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் 
இடையே இருந்த ஒரு மாதத்தில், நிறைய இடங்களில் 
வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்பட்டுள்ளது. ஒரு மா
த இடைவெளி இருந்த போதே சுதாரித்து இருக்கணும்.
தேர்தல் ஆணையத்தை நம்பி மோசம் போயிட்டோம் 
முக்கியமாக  தேர்தல் முடிந்து சில நாட்களில்
 மு.க அழகிரிஅமெரிக்காவிற்கு ரகசியமாக
 சென்று வாக்குப்பதிவு எந்திரத்தில் எங்களுக்கு விழுந்த
 ஓட்டுக்களை உதய சூரியன் சின்னத்தில் மாற்றும்
 வசதியுள்ள புதிய நவீன ரிமோட்டை அங்குள்ள 
வல்லுனர்கள் மூலம் தயாரித்து எடுத்து  வந்துள்ள 
தகவல் எனக்கு சுப்ரமணியம்சாமி மூலம் கிடைத்தது.
அந்த நவீன ரிமோட் மூலம்  வீட்டிலிருந்த படியே எல்லா
 வாக்குகளையும் தி.மு.க சின்னத்தில் திருப்பி 
விட்டிருக்கிறார் அழகிரி .அதற்காக சுமார் ரெண்டாயிரம் 
கோடி ரூபாயை ஹவாலா மூலம் கை மாற்றியுள்ளார்.
மேலும்,விஜயகாந்த் குடித்துவிட்டு செய்த பிரச்சாரமே 
எங்களுக்கு எதிராக மாறிவிட்டது.எதற்கும் 
கலங்காமல் களப்பணி ஆற்றுங்கள்...
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி நமதே... 
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் 
முடிவில் தர்மமே வெல்லும். ஜெயிற்றால்
 கோட்டை..தோற்றால் கொடநாடு என்னும் 
எனது கொள்கையின் படி இப்போது கொடநாடு செல்கிறேன்.

அண்ணா நாமம் வாழ்க......புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க...

ஐன்ஸ்டீனும் நீங்களும் ஒன்று தான்...!


மூளையின் கட்டமைப்பை வைத்துப் பார்த்தால் எல்லா மனிதர்களுக்கும் 94% அது ஒரே மாதிரியே இருக்கிறது. ஆம்,நம் மூளைக்கும் ஐன்ஸ்டீன் மூளைக்கும் எதாவது வேறுபாடு இருக்குமேயானால் அது அந்த 6% மீதியில் தான் இருக்க வேண்டும்.



மனித மூளை அமைப்பு (பழையது)

உலகின் மிக சிக்கலான வடிவங்களுள் ஒன்று மூளை, அறிவியல் ஆய்வாளர்களின் மூளையை கசக்கிய மூளையின் செயல்பாடுகளை ஆராய்ந்து வந்த உலகின் முதல் கணினிமயமாக்கப்பட்ட ஜீன் வரைபட நிறுவனம் ஆலன் ஹுமன் பிரைன் அட்லஸ் இத்தகவல்களை வெளியிட்டுதுள்ளது.

55 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நான்கு ஆண்டுகள் அயராத உழைப்பில்,ஆய்வில் விஞ்ஞானிகள் மனித மூளையின் செயல்களை விளக்க முற்பட்டுள்ளனர். மூளை செயல் இழத்தல்,மன நோய்கள் உள்ளிட்ட பல நோய்களும் இதன் மூலம் விரைவில் குணமாக்க ஆய்வு பயன்படும்.

முக்கியமான ஜெனிடிக் வரைபடங்கள் மூலம், மனிதனின் ஜீன்களில் குறைந்தபட்சம்  82% மூளையில் தான் இருக்கிறது என்றும், 94% எல்லா மூளைகளும் ஒரே மாதிரி என்றும் கூறி உள்ளனர். மேலும் இந்த ஆய்வின் மூலம் கிடைத்துள்ள உருவ வரைபடங்கள் பிற்காலத்தில் பெறும் நோய்களை தெற்க்க உதவும் என்று அவர்கள் உறுதி தெரிவித்து இருக்கின்றனர்.

முதன்மை அலுவலர் ஆலன் ஜோன்ஸ், மூளை பல சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஆர்என்ஏ,ரைபோ நியூகிளிக் அமிலம்,டிஎன்ஏ மற்றும் புரதங்கள் என ஒவ்வொரு பகிதியும் தனித்தனியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சற்றேறத்தாழ 25,00 ஜீன்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதிலிருந்து தான் இந்த மூளையின் வரைபடம் உருவானது என்று கூறி இருக்கிறார்.

இந்த அட்லஸ் ஒரு ஜிபிஎஸ் சிஸ்டம் போன்று செயல்படபோவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. மூளையின்  1000 த்திற்கும் மேலான அமைப்புகளில், நூறு மில்லியன் தகவல் புள்ளிகளை இணைத்து இருக்கும் இந்த வரைபடம் எந்த ஒரு ஆய்வாளரும் தான் விரும்பும் உயிரி-வேதிப் பகுதியை முப்பரிமானமாக உருமாற்ற உதவும்.

மூளையில் ஏற்படும் காயங்கள், மன வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் இனி வெகு காலத்திற்கு நமக்கு பிரச்னைகளை தராது. மருத்துவ முறைகளில் மாற்றம் ஏற்படும், எந்த நுண்ணிய மூளையின் இடத்தில் ஊசி போட்டால்  நோய் தீரும் என்பது வரை இதன் மூலம் சாத்தியப் படுகிறது.

உலக நல வாழ்வு அமைப்பு மூளை சார்ந்த நோய்கள் 2020 இல் பெறும் பாதிப்பை உண்டாக்கும், என கூறி வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

மேற்கொண்டு தகவல்கள் அறிய

மூளை வரைபடம்

Monday, April 18, 2011

எங்கள் வேட்பாளருக்கு ஓட்டுப் போடாதீர்கள்!



1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு வாக்குச் சேகரிப்பிற்காய் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு. இன்றைய மத்தியப் பிரதேசம் அப்போது விந்தியப் பிரதேசம்.
அதில் ரேவா சட்டப் பேரவைத் தேர்தலுக்குக் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரேவா சமஸ்தானத்தின் அரசரான ராவ் ஷிவ் பகதூர் சிங் (மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் சிங்கின் தந்தை).

ரேவாவில் பிரம்மாண்டமான பேரணியில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த நேருவிற்கு வேட்பாளரைக் குறித்துச் சில தகவல்கள் கிடைக்கின்றது. விறுவிறுவென்று மேடையேறிப் பேசத் தொடங்கினார் நேருஜி.

"காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியா முழுவதும் சட்டப் பேரவைக்கும், மக்களவைக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். நாங்கள் நிறுத்தியிருக்கும் ஒவ்வொருவரையும் நேரு தேர்ந்தெடுத்து நிறுத்தியிருக்கிறார் என்று நீங்கள் நினைத்தால் தவறு. அது சாத்தியமில்லை.

அந்தந்த மாவட்டக் கமிட்டி மற்றும் பிராந்தியக் கமிட்டிகள் பரிந்துரை செய்பவர்களை டெல்லியில் ஏற்றுக் கொண்டு அறிவித்துள்ளோம். காங்கிரஸின் எல்லா வேட்பாளர்களும் அப்பழுக்கில்லாதவர்கள், தியாகிகள், தரமானவர்கள் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது.

எனக்குக் காங்கிரஸ் முக்கியம். அதைவிட எனக்கு ஜனநாயகம் முக்கியம். ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமெனில் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கொலைகாரர்கள், குற்றப் பின்னணி உடையவர்கள், சமூக விரோதிகள், கள்ள மார்க்கெட் பேர்வழிகள், ஜாதி வெறி பிடித்தவர்கள் இப்படிப்பட்டவர்கள் காங்கிரஸ் வேட்பாளராகவே இருந்தாலும் தேர்ந்தெடுத்து விடாதீர்கள்.

இங்கே போட்டியிடும் ராவ் ஷிவ் பகதூர் சிங் மீது பல கிரிமினல் வழக்குகள் இருக்கிறது. விந்தியப் பிரதேச அமைச்சரவையிலிருந்த அவர் பன்னா வைரச் சுரங்க நிறுவனத்துக்குச் சாதகமாக போலி ஆவணங்கள் தயாரிக்க 25,000 ரூபாய் லஞ்சம் வாங்கியிருப்பதாக சற்று முன் எனக்கு நம்பகமான தகவல் கிடைத்தது.
இப்படிப்பட்டவர்களை ஜவஹர்லால் நேருவின் பிரதிநிதி என்று நினைத்துத் தேர்ந்தெடுத்தால், அது ஜனநாயகத்துக்குச் செய்யும் துரோகம். உங்களுக்குப் பிடித்தமான கட்சி நிறுத்தினாலும் வேட்பாளர்களைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்காதீர்கள்.எங்களது காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகவே இருந்தாலும், ராவ் ஷிவ் பகதூர் சிங் ஒரு தவறான வேட்பாளர் இவரைத் தோற்கடித்து, ஜனநாயகத்தைப் பாதுகாப்பது உங்கள் கடமை'' பேசிவிட்டுச் சென்றார் நேரு.

ரேவா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழந்தார். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு அதே ரேவா சிறைச்சாலையில் மன்னர் ராவ் ஷிங் பகதூர் சிங் இறந்தார்.
இந்தத் தேர்தல் களத்தில் ஒரேயொரு அரசியல்வாதியாவது இந்த நேர்மையின் ஒளியில் தென்படுகிறாரா?

தேடிப்பாருங்களேன்!

நன்றி: இந்நேரம்.காம்

Sunday, April 3, 2011

1983 & 2011 - நம்பமுடியாத ஒற்றுமைகள்

1983 & 2011 - நம்பமுடியாத ஒற்றுமைகள்




1983 மற்றும் 2011 - இந்த வருடங்களுக்கு உள்ள சிறப்பு அம்சம், நமது இந்திய அணி கிரிக்கெட் தொடரில்,உலககோப்பை கோப்பையை வென்றதுதான்.

இதை தவிர, மேலும், சில நம்ப முடியாத சிறப்பு அம்சங்கள் இந்த இரண்டு வருடங்களுக்கு இடையே உள்ளன.

முதலில், நமது இந்திய அணி கோப்பையை வென்ற வருடங்கள் மட்டுமே வேறு.

இருபத்தி எட்டு வருடங்களுக்கு முன்பு இதே ஏப்ரல் 2 , சனிக்கிழமை அன்றுதான் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி, தனது முதல் உலககோப்பையை வென்றது.

1983 மற்றும் 2011 , இந்த இரண்டு வருடங்களின் முதல் நாள், அதாவது ஜனவரி முதல் தேதி, சனிக்கிழமைதான்.

1983 மற்றும் 2011 , இந்த இரண்டு வருடங்களின் கூட்டுத்தொகை 2,( 83 & 11 ).

கோப்பையை வென்ற இந்த இரண்டு முறையும், இந்திய அணி குருப் 'பி' பிரிவில், இரண்டாம் இடத்தில் இருந்தது.

இரண்டு வருடங்களிலும், நமது அணி, ஆறு ஆட்டங்களில் கலந்துகொண்டு, அதில் நான்கில் மட்டுமே வென்றுஇருக்கிறது.

1983 மற்றும் 2011 , இந்த இரண்டு உலககோப்பை தொடர்களிலும், கடைசி லீக் ஆட்டங்கள் நடந்த நாள் : மார்ச், 20. (20 - 03 - 1983 மற்றும் 20 - 03 - 2011 ).

கோப்பையை வென்ற இந்த இரண்டு தொடர்களிலும், அரையிறுதி சுற்றுக்கு முன்னால் நமது அணி மோதிய நாடு , ஆஸ்திரேலியா.

இந்த இரண்டு தொடர்களிலும், மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், ஒரு அணி மற்ற அணியை பத்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருக்கிறது.
1983 ஆம் வருடம் நடந்த அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி, ஜிம்பாப்வே அணியையும், இந்த வருடம் இலங்கை அணி, இங்கிலாந்தையும் பத்து விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருக்கின்றன.


இந்தியா,உலககோப்பை வென்ற இந்த இரண்டு தொடர்களுக்கும் இத்தனை ஒற்றுமைகள் எப்படி வந்தன? ? இதை விதி என்பதா? நமக்கும் மேலே ஒரு சக்தி உண்டு என்று கூறுவதா? தாமாகவே எப்படி இந்த அம்சங்கள் அமைந்து இருக்கின்றன??

What a Moment!!!



What a Moment!!!





April 2 2011 - சனிக்கிழமை இரவு. மறக்க முடியாத மேட்ச்! இந்தியா கையில் கோப்பை!

கோப்பையை வென்றதன் மூலம் பலரின் வாயை அடைத்துவிட்டார் தோனி!

பலர் என்று நான் சொல்வது எதிர் நாட் டு அணியையோ எதிர் நாட்டின் பத்திரிகையையோ அல்ல. நம்ம கூடவே இருந்துட்டு இவனுக ஆகாதுப்பா என்று புலம்புபவர்களைத்தான்!

ஏற்கனவே ஆஸியை ஜெயிச்சப்பவே, இதுக்காக ஒரு போஸ்ட் போட்டு பொங்கீட்டேன். பாகிஸ்தான் கிட்ட உங்க பப்பு வேகாதுன்னாங்க.. அதுக்கும் ஆப்பு வெச்சாச்சு. மறுபடி இலங்கைகூட ஃபைனல்ஸ்ன்னப்ப, 40%தான் இந்தியாவுக்கு சான்ஸ்னாங்க..

மார்ச் 31 அன்னைக்கு ட்விட்டர்ல 'எல்லார்க்கும் முட்டாள்கள் தினம் ஏப்ரல் 1. இலங்கைக்கு மட்டும் ஏப்ரல் 2’ன்னு எழுதினேன். யாரோ வந்து திட்டினாங்க.

இப்ப என்னாச்சு? சொல்லி அடிச்சோம்ல?

------------- ---------------- ------------------

தோனி!


(ஜனாதிபதி மாளிகையில் ஆட்டநாயகன் விருது + கோப்பையுடன்)

சிலர் பேசறாங்க. இவர் விளையாடாத கேப்டன்னு. தேவையே இல்லைப்பா. மேன் மேனேஜ்மெண்ட்னு ஒரு விஷயம் நான் இவர்ட்டேர்ந்து கத்துகிட்டேன். என்னா கூல்!

கீழ பாருங்க..




வின்னிங் ஷாட் அடிச்சுட்டாரா? கண்ல ஏதாவது வெறி தெரியுதா? ஒரு சின்ன ஆர்ப்பாட்டம்? ம்ஹூம்.


சரி.. இந்த ஸ்டில் பாருங்க..



பந்து சிக்ஸுக்கு போயாச்சு. யுவிக்கு தெரிஞ்சுடுச்சு. இது லைஃப் டைம் ஷாட்ன்னு. ஆனா இப்பவும் தோனி முகத்துல ஆரவாரம் இல்லை. அர்ஜூனன்யா அவன். பந்து போய் ராஜபக்ஷே மண்டைல விழுந்து கன்ஃபர்ன் ஆகறதுக்காக பார்த்துட்டே இருக்காரு!


இதுவரைக்கும்கூட ஓகே-ங்க..


இப்ப இந்த ஸ்டில் பாருங்க..




சிக்ஸும் அடிச்சாச்சு. மேட்சும் ஜெயிச்சாச்சு. யுவியால அடக்க முடியல.. ‘இப்பக் கூட கத்தமாட்டியாடா நீ’ங்கற மாதிரி தோனியைப் பார்த்து கேட்கற மாதிரியே இருக்கா?

ஆனா நம்மாளு என்னா சாவகாசமா ஸ்டிக்கை கலெக்ட் பண்றாரு.. மனுஷனாய்யா இவன்? லவ் யூ மேன்!



சச்சின்!

21 வருஷத்துக்கு மேல ஆடிகிட்டிருக்கற ரன்மெஷின். ஆனா ரொம்ப பாவம்.







சச்சினும் சரி, ரஜினிகாந்தும் சரி.. ஒரே மாதிரிதான். தங்களோட ஃபீல்ட்ல டாப்ல இருந்து பல சாதனைகள் செஞ்சிருக்காங்க. ஆனாலும் இந்த ரெண்டு பேரும் என்ன சொன்னாலும், சொல்லலைன்னாலும், செஞ்சாலும், செய்யலைன்னாலும் குத்தம்!

ஃபைனல்ஸ்ல சச்சின் அவுட் ஆனப்ப என் ஃப்ரெண்ட்ஸ் சில பேரே கூப்ட்டு திட்டினாங்க.. அட.. கவலைப்படாதீங்கப்பா.. இன்னும் நாலு விக்கெட் விழுந்தாலும் ஜெயிக்கும்ன்னேன். சச்சினை நம்பி மட்டுமே இருக்கற டீம் இல்ல இது.

யோசிச்சுப் பாருங்க.. எதிரணி எப்படி வியூகம் அமைச்சிருப்பாங்க. சச்சின், சேவக்கை தூக்கிட்டா கப்பைக் கடத்தீட்டுப் போய்டலாம். மிடில்ல யுவராஜை கழட்டிவிட்டா போதும்’ இப்படித்தானே நினைச்சிருப்பாங்க. அவங்க நெனைச்சே பார்க்காத காம்பீர் ஆடினது அன்னைக்கு சர்ப்ரைஸ். அதே மாதிரி, விராட் கோஹ்லி அவுட் ஆனதும் யுவி வந்து சடார்னு ஒரு விக்கெட் விழுந்தாலும் கொஞ்சம் கஷ்டமா போயிருக்கும். அதான் சடார்னு ஒரு டவுன் முன்னாடி வந்து மிரட்டீட்டாரு தோனி.

அந்த முடிவு சரியா அமைஞ்சு மேட்ச் ஜெயிச்சதால ஓகே. இல்லைன்னா? தோனி பேசும்போது சொன்னது செம! ‘ஏன் அஸ்வினுக்கு பதிலா ஸ்ரீசாந்த்? ஏன் நீ ஒரு டவுன் முன்னாடி இறங்கின’ங்கறா மாதிரி கேள்விகள் வரக்கூடாதேன்னு பொறுப்பா ஆடினேன்னு சொன்னாரு.

சச்சின் ரிடயர்மெண்டாம்! அடப்பாவிகளா.. அதுக்கு வேலையே இல்லையே.. இத்தனை வருஷமா ஆடிகிட்டிருந்தாலும், பாருங்க.... இந்த சீரிஸ்லயும் சொச்ச ரன் வித்யாசத்துல இரண்டாமிடம் பிடிச்சிருக்காரு. சச்சின் சிங்கிள்ஸ் எடுக்கறதையும், பவுண்டரியைத் தடுக்கறதையும் பார்த்தா வயசு தெரியுது உங்களுக்கு?




இந்த வெற்றில சச்சினுக்கு கண்டிப்பா பங்கிருக்கு. அவருக்கு நம்மளால கோடி, லட்சமெல்லாம் தரமுடியாது. எனக்காக ஒரே ஒரு உறுதிமொழியைத் தாங்க.

சச்சின் அடிச்ச செஞ்சுரி 48. அதுல இந்தியா தோத்தது 13. பல முறை சொல்லியாச்சு. அடிக்கடி நூறு அடிக்கறதால, தோக்கற மேட்ச்தான் உங்களுக்கு வலியா நினைவில இருக்கு. அதுவும் சமீபமா சச்சின் செஞ்சுரி போட்டா மேட்ச் தோக்கும்ன்னு சொல்றவங்க அதிகமாய்ட்டு வர்றாங்க. அப்படி ஒரு எண்ணமிருந்தா இன்னியோட விட்ருங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் யாரும் அப்டி பேசினா வாய்லயே குத்துங்க..

யுவராஜ், ஜாகிர்ன்னு இன்னும் பலபேரைப் பத்தி பலதும் எழுதலாம். சச்சினைத் தூக்கி தோள்ல வெச்சுட்டு சுத்தினாங்க பாருங்க... எவ்ளோ முக்கியமான தருணம் அது.

ஒரு விஷயம் தெரியுமா? 21 வருஷமா விளையாடறாரே தவிர, பெரிய டோர்ணமெண்ட் கப் எதுவும் சச்சின் கைல வாங்கிப் பாத்ததில்லை. அதாவது 4, 5 டீமுக்கு மேல விளையாடற டி20 கப், ஐ பி எல், சாம்பியன்ஸ் ட்ராஃபின்னு எதுவும் சச்சின் இருக்கறப்ப ஜெயிச்சதில்லை. அவ்ளோ தூரம் விளையாண்டு, உழைப்பைக் கொட்டியும் இவருக்கு சரியான டீம் மேட்ஸ் இந்த தடவைதான் அமைஞ்சிருக்கும்பேன் நான். அந்த வெறிதான் நேத்து. சச்சின் கைல கப்பை கொடுத்த ஒவ்வொருத்தரையும் நான்  பாராட்டுகிறேன் .

------------------

அடுத்த அதிரடி ஐ பி எல் ஆரம்பம். வழக்கம்போல நான் CSK பக்கம்.

ஆனா - கீழ இருக்கற மாதிரி சூழல்கள்ல மட்டும் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். அப்ப மட்டும் நான் க்ரிக்கெட்டின் ரசிகன்!





நீங்க IPLல யார் பக்கம்?