Wednesday, April 27, 2011

வடிவேலுவுக்கு பதிலளிக்காதது ஏன்? - விஜயகாந்த் விளக்கம்



தேர்தல் பிரசாரத்தின் போது உங்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசிய காமெடி நடிகர்  வடிவேலுவுக்கு நீங்கள் ஏன் பதில் அளிக்கவில்லை என்று நடிகரும் தே மு தி க  தலைவருமான விஜயகாந்த் கேட்கப்பட்ட போது  " வடிவேலுக்குப் பதில் அளிக்கும் அளவுக்கு என் தகுதி குறைந்துவிடவில்லை. அப்படி நான் பதில் அளித்தால், அதையே பெரிய செய்தியாக்கி, ஆளுங்கட்சிக்கு எதிரான பல விஷயங்களை நான் பேசவிடாமல் செய்துவிடுவர். தி.மு.க.வின் இந்தச் சூழ்ச்சிக்கு நான் பலியாக மாட்டேன்" என்று கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கொடுத்துள்ளார் விஜயகாந்த்.

தேர்தல் பிரசாரத்தின் போது வடிவேலுவின் தனிநபர் தாக்குதல், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், வடிவேலுவின் பிரசாரத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது தொடர்பாக இப்படி ஒரு விளக்கம் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment