நகைச்சுவை(ங்க)...,

உல்டா புகைப்படங்கள்



1.தல போல வருமா?...



அஜித் ரசிகரிகள் சும்மா இருப்பாங்களா அதுக்காக அடுத்து...


2. 6 pack Vijay



3. Avatharam Ajith




4. Avatharam : Ajith & Vijay





5. Mokkai Vijay



6. Baby Ajith



இது சும்மா நகைச்சுவைக்காக ....

யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்துக்காக அல்ல...



14) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?


லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...

எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?


16) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?

மனைவி: பல்லி விழும் பலன்...

கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?

மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...


  நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.


நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?


* J to the A to the V to the A --- JAVA
கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்லாத்தான் வரும்.
* C 
க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++

வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1. 
படிப்பு

2. 
விளையாட்டு
3. 
பொழுது போக்கு
4. 
காதல்
5.
6.
7.

ஹலோ... என்ன தேடுறீங்ககாதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...!


 ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...

போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.


மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா 


  மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள். 
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....



செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்க பிதாஜி....

தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(
ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

 
நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..


முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்லுக்கு டாப்-அப் பண்ண

முடியுமா...முடியாதா...?


காதலன் : ஐ லவ் யூ

காதலி : நான் உன்ன லவ் பண்ணலன்னா?

காதலன்: இப்படியே பஸ் பிடிச்சு 'சுள்ளான்' படம் பாக்க போயிடுவேன்.

காதலி: எனக்காக எப்போ நீ உயிரவே கொடுக்க துணிஞ்சிட்டீயோ, இதுக்கு மேல என் லவ்வ

மறைக்க விரும்பல. ஐ லவ் யூ டூ! 



நிருபர்: நீங்க நடிச்ச கீரிடம் படம் 100 நாள் ஓடனும்னு நாங்க வாழ்த்துறோம்

அஜித்: நோ..200 நாள் ஓடும்!

நிருபர்: ஹிஹி ஜோக் அடிக்குறீங்களா சார்

அஜித் : அடிங்க கொய்யால யாருடா முதல ஜோக் அடிச்சா?



முதலாளி: உங்க 'சபரி' படத்தால எங்களுக்கு நல்ல collection சார்

விஜய்காந்த்: ரொம்ப நல்லது. எந்த தியேட்டர் ஓனர் நீங்க?

முதலாளி: ஐயோ, நான் AMRUTANJAN கம்பெனி ஓனர்!


 
ஒரு கடைக்காரர் பெருமையாக தனது விளம்பர போர்டில் “ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் கடை” என்று எழுதி வைத்தார்.

அடுத்த கடைக்காரர், “எங்கள் கடை தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் கடையில் பழைய இருப்பு எதுவுமில்லை” என்று பதிலுக்கு எழுதிப் போட்டார்.

ஒருவன்: நேத்து புதுப்படம் பார்க்கப் போனியே படம் எப்படி?
மற்றவன்: இடைவேளை நல்லா இருந்தது...!


ஒருவன்: மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்...
மற்றவன்: உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா...?



கணவன்: என்னடி சர்க்கரை பொங்கல் வெள்ளையா இருக்கு"

மனைவி: பொங்கலிலே சர்க்கரை போட்டிருக்கேன்...!



ஒருவன்: மாட்டுக்கு பொங்கல் வைக்கும் போது மாடு ஏன் உன்னை முட்டுச்சு...
மற்றவன்: பொங்கலில் இருந்த முந்திரியை எடுத்து திண்ணுட்டேன்.

 சர்தார்ஜி: ஐயா என் வீட்டில் திருடன் வந்துட்டான் போலிஸ்: அப்படியா அவ என்ன பன்னினே
சர்தார்ஜி: அவன திருட விடாம கைய கட்டி போட்டு வச்சுட்டேன்
போலிஸ்: லூசாயா நீ அவன் கால கட்டினாவது ஒடாம இருப்பான் கைய கட்டி என்ன பயன்
சர்தார்ஜி: அவன் கைய கட்டனா தானே திருடாம இருப்பான்


கணவன்:அன்பே,உனக்காக தாஜ்மஹால் எழுப்பவா,கோவில் எழுப்பவா?
மனைவி:நீங்கள் எதை வேண்டுமானாலும் எழுப்புங்கள்.ஆனால் தூங்கும் போது மட்டும் எழுப்பாதீங்க.
 _____________________________________________________________________
இரண்டு தந்தைமார்கள் தங்களுக்கள் பேசிக்கொண்டார்கள்.
ஒருவர்:என் மகன் கடிதம் எழுதினால் கடிதத்தைப் படிக்க எப்போதும் அகராதியைத் தேடித் போக வேண்டியிருக்கிறது.
மற்றவர்:உங்கள் மகனாவது பரவாயில்லை.என் மகன் கடிதம் எழுதினால் நான் வங்கியை அல்லவா தேடிப் போக வேண்டியிருக்கிறது!
 ________________________________________________________________________
தமிழறிஞர் ஒருவர் படிப்பறிவில்லாத முதியவருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அறிஞர்:என்ன வியாபாரம் செய்றீங்க?
முதியவர்:வாயப்பயம்.
அறிஞர்:எந்த ஊர்?
முதியவர்:கெயக்கே.
அறிஞர்:ஏன் இந்த வயதில் இப்படி வெயிலில் அலைகிறீர்கள்?
முதியவர்:எதோ பொயப்பு.
அறிஞர்:தமிழை இப்படியா பேசுவது?
முதியவர்:என்ன செய்ய?பயக்கமாப் போச்சு.
அறிஞர்:(கோபத்துடன்)போய்யா கெயவா.
************
''அடடா,உனக்கு அல்வா வாங்கிட்டு வர மறந்துட்டேன்,கமலா''
'சரி,அதனாலென்ன?'
''எங்க அம்மா ஒரு சதிகாரி,மோசக்காரி,கூனி.....''
'இப்ப உங்க அம்மாவை ஏன் திட்டுறீங்க?'
''அவங்களைத் திட்டினா உனக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி இருக்குமே!''
________________________________________________________________________
டாக்டர்:கவலைப்படாதீங்க,நீங்க நிச்சயமாய் அறுபது வயது வரை உயிரோடு இருப்பீங்க.
நோயாளி:ஐயோ டாக்டர்,எனக்கு ஏற்கனவே அறுபது வயது ஆகிடுச்சி.
________________________________________________________________________
கணவன்:உன்னைக் கட்டினதுக்குப் பதலா ஒரு எருமை மாடைக் கட்டியிருக்கலாம்.
மனைவி:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?

_________________________________________________________________________




பொருட்களைஎடுத்து சென்று வீட்டுக்கு வீடு விற்பனை செய்வதில் சிறந்து விளங்கிய ஒருவரைப் பார்த்து அவர் நண்பர் கேட்டார்,''உங்களின் இந்த வெற்றிக்கு கரணம் என்ன?''அவர் சொன்னார்,''எந்தப் பெண் வந்து கதவைத் திறந்தாலும் நான் கேட்கும் முதல் கேள்வி,'உங்க அம்மா உள்ளே இருக்காங்களா?'என்பதுதான்,''
**********
சிறுவன் ஒருவன் சாலையோரம் சிறுநீர்கழித்துக் கொண்டிருந்தான்.அப்போது அங்கே வந்த ஒரு பெரியவர்,''தம்பி,இங்கு சிறுநீர் கழிக்கக்கூடாது.போலீசார் வந்தால் பிடித்துக் கொள்வார்கள்,''என்றார்.சிறுவன் சொன்னான்,''பிடித்தால் பிடித்துக் கொள்ளட்டும்,கீழே வீணாய்த்தானே போகிறது.''
**********
பேருந்தில் நல்ல கூட்டம்.பெண்கள் நின்று கொண்டிருந்தனர்.இளைஞர்கள்  அமர்ந்திருந்தனர்.அவர்கள் யாரும் பெண்களுக்கு உட்கார இடம் தரவில்லை.நின்று கொண்டிருந்த ஒரு பெண் கேலியாக,''பாவம்,எல்லோரும் வயதான கிழவர்கள்.அதனால்தான் எழுந்து நின்று நமக்கு இடம் தர முடியவில்லை.''என்று பக்கத்தில் இருந்தவளிடம் சொன்னாள்.உட்கார்ந்திருந்த இளைஞன் ஒருவன் சொன்னான்,''பேத்தி!இந்தத் தாத்தாவின் மடியில் வேண்டுமானால் உட்கார்ந்து கொள் அம்மா.''
***********
கடன் கேட்க வந்தவனிடம் பணக்காரன் சொன்னான்,''என் காலில் நீ விழுந்தால் கடன் தருகிறேன்,''அவனும் காலில் விழுந்து கடன் வாங்கி சென்றான்.அவன் நண்பன் ஒருவன் இதைப் பார்த்துக் கேட்டான்,''இப்படி மரியாதை இழந்து கடன் வாங்க வேண்டுமா?''கடன் வாங்கினவன் சொன்னான்,''இதென்ன பெரிய அவமானம்?இந்த கடனைத் திரும்ப வாங்குவதற்குள் அவன் எத்தனை தரம் என் காலில் விழப் போகிறானோ!''
**********


மேய்ப்பது யாரை?


ஆசிரியர்:உங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதைக் காட்டிலும் மாடு மேய்க்கப் போகலாம்.
மாணவன்:அப்படிப் போவதானால் சொல்லுங்கள் சார்,எங்கள் வீட்டில் மேய்ப்பதற்கு இரண்டு மாடுகள் இருக்கின்றன.
**********
கொட்டுகின்ற அருவியை ஒருவர் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.அருகில் இருந்த ஒருவர் கேட்டார்,''நீங்கள் ஒரு ஓவியரா?'' அவர் சொன்னார்,''இல்லீங்க,நான் ஒரு பால் வியாபாரி.''
**********
''உங்கள் பூனை என் கார் ஏறி செத்து விட்டது.நான் அதற்காக வருந்துகிறேன்.நான் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் சொல்லுங்கள்.நான் கண்டிப்பாக செய்கிறேன்.''
'உங்களால் எலி பிடிக்க முடியுமா?'
**********
நீதிபதி:ஒரு நல்ல மனிதனை இப்படி ஏமாற்றித் திருடி இருக்கிறாயே,உனக்கு வெட்கமாக இல்லை?
குற்றவாளி:அய்யா,ஏமாற்றுக்காரன்,அயோக்கியன்,எவனையாவது என்னால் ஏமாற்ற முடியுமா?
**********
பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.நின்று கொண்டிருந்த ஒரு இளம் பெண் தன தோழியிடம் சப்தமாக சொன்னாள்,''அந்த அழகான ஆள் மட்டும் இடம் கொடுத்தால் உட்காரலாம்.''உடனே பேருந்தில் இருந்த ஆண்கள் அனைவரும் தங்கள் இடத்தை விட்டு எழுந்து நின்றனர்.
**********
அரசியல் ஊர்வலம் ஒன்று பெரிதாக சென்று கொண்டிருந்தது.கூட்டத்தில் ஒரு தொண்டனின் பணப்பை திருடு போய் விட்டது.உடனே அவன் தன தலைவரிடம் சென்று புகார் சொன்னான்.தலைவர் கேட்டார்,''உனக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?''அவனும் தன பக்கத்தில் ஊர்வலத்தில் வந்த ஒருவனைக் காட்டினான்.''நீ இங்கேயே இரு''என்று தொண்டனை அமைதிப் படுத்திவிட்டு கூட்டத்திற்குள் சென்ற தலைவர் சிறிது நேரத்தில் பணப்பையுடன் வந்தார்.தொண்டன் மிகுந்த மகிழ்ச்சியில்,''இது தான் எனது பணப்பை.நீங்கள் கேட்ட உடன் கொடுத்து விட்டானா?''என்று கேட்டான்.தலைவர் சொன்னார்,''சப்தம் போட்டுப் பேசாதே!நான் இந்தப் பணப்பையை  எடுத்தது அவனுக்குத் தெரியாது.''
**********


கண்டுபிடி


அவர்கள் சமீபத்தில் திருமணமானவர்கள்.அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது அதில் புதிய திரைப்படம் ஒன்றிற்கு ஊரின் சிறந்த திரை அரங்கில் உயர்ந்த வகுப்புக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.மேலும் ,''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள்,பார்க்கலாம்,''என்றொரு குறிப்பும் இருந்தது.இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.இருந்தாலும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்.வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.வீட்டில் ஒரு கடிதமும் கிடந்தது.அதில்,''இப்போது உங்களுக்கு டிக்கெட் யார் அனுப்பியிருப்பார்கள் என்று கண்டு பிடித்திருப்பீர்களே!''என்று எழுதியிருந்தது.
**********
கணவன் சொன்னார்,''நம்ம பையன் என் சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்திருக்கிறான் போலத் தெரிகிறதே!''
மனைவி கேட்டாள்,'' அதெப்படி சொல்கிறீர்கள்?நான் எடுத்திருக்கக் கூடாதா?
கணவன் சொன்னான்,''பையில் கொஞ்சம் மீதிப் பணம் இருக்கிறது.அதனால் அவன் தான் எடுத்திருப்பான்.''
**********
கணவன்:(கோபத்துடன்) உன்னைத் திருமணம் செய்தபோது நான் முட்டாளாக இருந்திருக்கிறேன்.
மனைவி:(அமைதியாக) நானும் கூடக் காதல் வேகத்தில் அப்போது இதைக் கவனிக்கவில்லை.
**********
மனைவி:நீங்கள் எனக்கு அழகிய பட்டுப் புடவை எடுத்துக் கொடுப்பதாகக் கனவு கண்டேன்.
கணவன்:அப்படியா?அடுத்த முறை கனவு காணும்போது அதை உடுத்தி மகிழ்ச்சியாக இரு.
**********


அப்பளம்


ஒருவர் ஒரு ஹோட்டலில் பல வருடங்களாகத் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.எனவே அவரை நன்றாகக் கவனிக்கும்படி முதலாளி உத்தரவிட்டார்.அவருக்கு என்ன வேண்டும் எனக் கேட்கப்பட்டது.''நீங்கள் கஞ்சத்தனமாக ஒரே ஒரு அப்பளம் வைக்கிறார்கள்.எனக்கு அது போதவில்லை'' என்றார்.உடனே அவருக்குமறுநாள் இரண்டு அப்பளம் வைக்கப்பட்டது.அதுவும் போதவில்லை என்றதும் மூன்று அப்பளம்  வைக்கப்பட்டது.அதிலும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.முதலாளி,அவருக்கு அப்பளம் பிடிக்கிறது என்று தெரிந்து மறுநாள் தரமான விலை கூடுதலான ஒரு பெரிய அப்பளம் வைக்கச்சொன்னார்.அதுவும் செய்யப்பட்டது.''பார்த்தீர்களா!நீங்கள் கஞ்சர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும் இன்று மறுபடியும் ஒரு அப்பளம் தான் வைத்திருக்கிறீர்களே?''என்று கோபமான பதில் வந்தது.முதலாளிக்கு மயக்கமே வந்துவிட்டது.


முத்தம்


ஒரு பெண் காவல் நிலையம் வந்து,ஒருவன் தன்னை நாடு ரோட்டில் நிறுத்தி முத்தமிட்டதாகவும் அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினாள். காவல் அதிகாரி  அவனுடைய அடையாளங்களைக் கூறுமாறு கேட்டார்.அந்தப் பெண்ணோ அடையாளம் ஏதும் தெரியாதென்றாள்.காவல் அதிகாரிக்கு ஆச்சரியம்.''என்ன,உன்னை முத்தமிட்டவனை உனக்கு எப்படி  அடையாளம் தெரியாமல் போகும்?''அந்தப் பெண் சொன்னாள்.''என்னை யாராவது முத்தமிட்டால் நான் கண்ணை இருக்க மூடிக் கொள்வேன்.''


பரோபகாரி


இளைஞன் ஒருவன் நிறைய கோழி முட்டைகளை ஒரு மூன்று சக்கர வண்டியில் வைத்து மக்கள் கூட்டம் மிகுதியாக உள்ள கடைத்தெரு வழியே சென்று கொண்டிருந்தான்.ஒரு திருப்பத்தில் எதிர் பாராதவிதமாக வண்டி கவிழ்ந்து விட்டது.முட்டைகள் அனைத்தும் உடைந்து சிதறி விட்டன.இளைஞன் அழ ஆரம்பித்து விட்டான்,''ஐயோ,என் முதலாளிக்கு என்ன பதில் சொல்வேன்? இவ்வளவு முட்டைக்குரிய  காசுக்கு நான் என்ன செய்வேன்?''அங்கே பெரும் கூட்டம் கூடி விட்டது.எல்லோருக்கும் அழுது கொண்டிருந்த இளைஞனைப் பார்த்து பரிதாபம் ஏற்பட்டது.அப்போது அங்கே வந்த ஒரு பெரியவர்,''தம்பி,ஏன் அழுகிறாய்?உடைந்த முட்டைகளுக்கான காசை உன்னால் கொடுக்க முடியாது என்பது தானே  உன் வருத்தம்?''என்று கேட்க இளைஞனும் ஆம் என்றான்.உடனே அப்பெரியவர் தன துண்டை எடுத்தார்.''இந்தக் கூட்டத்தில் இரக்க குணமுடையவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்,''என்று சொல்லியபடியே அதில் தன பையிலிருந்து எடுத்துஒரு பத்து ரூபாய் நோட்டைப் போட்டார்.பின் அந்தத் துண்டுடன் அந்தக் கூட்டத்தை சுற்றி வந்தார்.எல்லோரும் அதில் காசு போட்டார்கள்.எல்லோர் முன்னிலும் பணத்தை எண்ணினார்.அதை அப்படியே இளைஞனிடம் கொடுத்துவிட்டு,''இனியாவதுகவனமாக நடந்துகொள்,''என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு  சென்று விட்டார்.கூட்டத்திலிருந்த அனைவரும் அவரை பரோபகாரி என்று வாழ்த்தினர்.கூட்டம் கலைந்தது.எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் இளைஞனிடம்,''அவர் மட்டும் வரவில்லைஎன்றால் உன் கதி என்ன ஆகி இருக்கும்?என்ன நல்ல குணம் அவருக்கு?அவரை உனக்கு முன்னரே தெரியுமா?''என்று கேட்டார்.அந்த இளைஞன் சொன்னான்,''அவர் தாங்க என் முதலாளி.இந்த முட்டைகளை ஏற்றி அனுப்பியவர்.''


கடவுள் எங்கே?


ஒரு ஆசிரியர் ஒரு மாணவனிடம்,''கடவுள் எங்கே இருக்கிறார்?''என்று கேட்டார்.மாணவன் சொன்னான்,''எங்கள் வீட்டுக் குளியல்  அறையில்,''ஆசிரியர் இப்பதிலை சற்றும் எதிர் பார்க்கவில்லை.அவர் அவனிடம் கேட்டார்,''உனக்கு யார் இப்படி சொன்னது?''மாணவனும் உடனே சொன்னான்,''எனக்கு யாரும் சொல்லவில்லை.எனது தந்தைதினமும் குளித்துக் கொண்டிருக்கும்போது,என் தாயார் குளியல் அறைக் கதவின் முன் நின்று கொண்டு,'அடக்கடவுளே,இன்னுமா குளித்து முடிக்கவில்லை?'என்று கூவுவாள்.இதனால் கடவுள் குளியல் அறையில் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்.''


ஹி!ஹி!


காதலி: என் தந்தை எனக்காக நிறைய சொத்து சேர்த்து வைத்திருப்பதால் தான் என்னை விரும்புகிறீர்களா?
காதலன்:சே!சே!உனக்காக யார் சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் உன்னைக் காதலித்திருப்பேன்.இது சத்தியம்.
**********
ஒரு சிலர் தனியாக இருந்து அதிசயங்களை நிகழ்த்துகிறார்கள்.
ஒரு சிலர் நண்பர்களுடன் சேர்ந்து அதிசயங்களை நிகழ்த்துகிறார்கள்.
ஒரு சிலர் திருமணம் செய்து கொண்டு,நிகழ்வதை அதிசயமாகப் பார்க்கிறார்கள்.
**********
ஒரு அழகான பெண் ஜவுளிக் கடைக்கு வந்தாள்.ஒரு துணியைத் தேர்வு செய்து அதன் விலையைக் கேட்டாள்.கடையின் உரிமையாளர் சொன்னான்,''ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம் விலை.''அந்தப் பெண்ணும் உடனே பத்து மீட்டர் துணி தரச் சொன்னாள்.அவனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வேகமாக பத்து மீட்டர் துணியை அளந்து கொடுத்தான்.அதை வாங்கிக் கொண்டு அந்தப் பெண் சொன்னாள்,''இந்தத் துணிக்கான விலையை அதோ  என்னுடன் வந்திருக்கும் என் தாத்தா தருவார்.''
**********
ஆசிரியர்:1947 ல் என்ன நடந்தது?
மாணவன்:இந்தியா சுதந்திரம் அடைந்தது.
ஆசிரியர்:நன்று.1950 ல் என்ன நடந்தது?
மாணவன்:சுதந்திரம் அடைந்து மூன்று  ஆண்டு ஆகி இருந்தது.
**********



சிரிக்கத்தானே


''ஏன் சார்,நீங்க சாப்பிடும் முன் பிரார்த்தனை செய்வீங்களா?''
'அதெல்லாம் இல்லேங்க,என் மனைவி பரவாயில்லாமல் சமைப்பாள்.'
**********
''என் மனைவி தேவதைங்க!''
'நீங்க கொடுத்து வைத்தவர்.என் மனைவி உயிருடன் இருக்கிறாள்.'
**********
''என்னங்க,நேத்து இரவு  நீங்க முத்து மாலை வாங்கித் தருவதாகக்  கனவு கண்டேன்.அதற்கு என்ன அர்த்தம்?''
'இன்று இரவு வரை பொறுத்திரு.இரவில் உனக்கு விளக்கம் தருகிறேன்.'
இரவில் கணவன்ஒரு பார்சலுடன் வந்தார்.மனைவி அதை வாங்கி பரபரப்புடன் பிரித்துப் பார்த்தாள்.உள்ளே ஒரு புத்தகம் இருந்தது.அந்தப் புத்தகத்தின் தலைப்பு,'கனவுகளின் பலன்கள்'.
**********
கப்பல் கவிழ்ந்து கொண்டிருந்தது.கேப்டன் பயணிகளிடம் கேட்டார்,''உங்களில் யாருக்காவது பிரார்த்தனை செய்யத் தெரியுமா?''ஒருவர் உடனே சொன்னார்,'நான் நன்றாகப் பிரார்த்தனை செய்வேன்.'இப்போது கேப்டன் சொன்னார்,''இவர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கட்டும்.மற்றவர்கள் எல்லோரும் மூழ்காமல் தப்பிப்பதற்கான லைப் ஜாக்கெட்டை அணிந்து கொள்ளுங்கள்.மொத்தத்தில் ஒரு ஜாக்கெட் குறைவாக உள்ளது.''
**********


இரண்டு செய்திகள்


ஒரு செல்வந்தர் ஒரு ஓவியரின் படங்களால் கவரப்பட்டு அவற்றை விற்றுக் கொடுப்பதற்கு வசதியாக ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்தார் இரண்டு நாள் கழித்து அந்த ஓவியர் அவரிடம் வந்து தன ஓவியங்கள் ஏதேனும் விற்றனவா எனக் கேட்டார்.அதற்கு அந்த செல்வந்தர்,''உங்களுக்கு இரண்டு செய்திகள் வைத்துள்ளேன்.ஒன்று நல்ல செய்தி இன்னொன்று கெட்டசெய்தி.''என்றார்.ஓவியர் முதலில் நல்ல செய்தியைக் கூறச் சொன்னார்.செல்வந்தரும்,,''நேற்று ஒருவர் வந்து உங்கள் ஓவியங்கள் நீங்கள் இறந்தபின் புகழ் பெறுமா எனக் கேட்டார்.ஏன் அவ்வாறு கேட்கிறீர்கள் என்று கேட்டேன்.அதற்கு அவர் அப்படியானால் பின்னால் நல்ல விலைக்குப் போகும் அல்லவா என்றார்..நானும் அவ்வாறு கண்டிப்பாக நடக்கும் என்று சொன்னேன்.உடனே அவர் உங்களுடைய ஓவியங்கள் அனைத்தையும் நல்ல விலைக்கு வாங்கிச் சென்று விட்டார்.இதுதான் நல்ல செய்தி''என்றார்..ஓவியர் அடுத்த் கெட்ட செய்தியைக் கேட்க ,செல்வந்தர் சொன்னார்,''உங்கள் படங்களை வாங்கியது வேறு யாருமில்லை,உங்கள் குடும்ப டாக்டர் தான்.''


அற்புத விளக்கு


ஒரு வயதான மனிதன் கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்தபோது ஒரு பழைய விளக்கினைக் கண்டு எடுத்தார்.அதை எடுத்து தேய்த்தபோது ,அதிலிருந்து ஒரு பூதம் வந்தது,பூதம் அவரிடம் சொன்னது,''நீங்கள் எனக்கு விடுதலை அளித்ததால் நான் உங்களுக்கு ஒரு வரம் தருகிறேன்.என்ன வேண்டும்?''அவர் சொன்னார்,''எனக்கும் என் அண்ணனுக்கும் நான் செய்த ஒரு சிறு தவறினால் முப்பது ஆண்டுகளாகப் பேச்சு வார்த்தை இல்லை.அவர் எனது தவறை மறந்து மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.''பூதம் உடனே,''உங்கள் ஆசை நிறைவேறிவிட்டது.ஆனால் எனக்கு ஒரு ஆச்சரியம்.எல்லோரும் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் பெரும் பணமும்,புகழும் கேட்டிருப்பார்கள்.ஆனால் உங்களுக்கு அன்பு தான் பெரிதாகப் பட்டது.உங்கள் அண்ணனின் உறவைத்தான் விரும்பினீர்கள்.என்ன காரணம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?''என்று கேட்டது.அவர் சொன்னார்,''வாரிசில்லா என் அண்ணனிடம் பல கோடி பெறுமானமுள்ள சொத்து உள்ளது.நான் அவருக்கு ஒரே தம்பி.''


வழுக்கை


ஆசிரியரொருவர் பின்னே இரண்டு மாணவர்கள் போய்க்கொண்டிருந்தனர்.அவர்கள் இருவரும் குறும்புக்காரர்கள்.ஆசிரியருக்கு தலை வழுக்கை.ஒரு மாணவன் சொன்னான்,''நண்பா,வழுக்க போகுது,பார்த்து வா,''இதை திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே வந்தான்.ஆசிரியருக்கு கோபம் வந்துவிட்டது நேரே தலைமை ஆசிரியரிடம் சென்று புகார் கொடுத்தார்.தலைமை ஆசிரியர் இரு மாணவர்களையும் வரவழைத்து விசாரித்தார்.அப்போது அந்த பையன் சொன்னான்,''அய்யா,நேற்று பெய்த கடும் மழையில் பள்ளிக்கு வரும் பாதை முழுவதும் சேறாக இருந்தது.அதனால் சேற்றில் என் நண்பன் வழுக்கி விழுந்து விடக்கூடாதே என்றுதான்,திரும்பத்திரும்ப,வழுக்க போகுது ,பார்த்துவா,என்று சொன்னேன்.''
**********
ஒருவர் வெளிநாடு சென்று திரும்பினார்.நண்பர் கேட்டார்,''அங்கு உங்களுக்கு என்ன பிடித்தது?''அவர் சொன்னார்,''குளிர் அதிகமாக இருந்ததால் சளி பிடித்தது.''
**********





புத்தாண்டு வாழ்த்து


சாராயக் கடையில் நல்ல கூட்டம்.ஒரே சப்தம்.அப்போது ஒரு குடிகாரன் திடீரென உரத்த குரலில்,''எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,''என்று கத்தினான்.உடனே ஒருவன் கேட்டான்,''ஏனப்பா இன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்கிறாய்?புத்தாண்டு பிறந்து இருபது நாட்கள் ஆகி விட்டனவே!''குடிகாரனுக்கு ஒரே குழப்பம்.பலரும் இதேபோல சொல்ல அவன் கூவினான்,''ஐயையோஇதுவரை நான் இவ்வளவு தாமதமாக வீட்டுக்குப் போனதில்லையே.என் மனைவி என்னைக் கொன்று விடுவாளே!''
**********
கல்லூரியில் படிக்கும் பையன் தந்தைக்குக் கடிதம் எழுதினான்,''அன்புள்ள தந்தைக்கு,உங்களிடம் இருந்து செய்தி வந்து நீண்ட நாட்களாகி விட்டன.உடனடியாக ஒரு செக் அனுப்பினால் நீங்கள் நலமுடன் இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்வேன் அல்லவா?''
**********
ஒரு கடையில் சேலை திருடிய குற்றத்திற்காக ஒருவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.நீதிபதி கூறினார்,''இதே குற்றத்திற்காக முன் ஒரு முறை தண்டனை பெற்றிருக்கிறாயே?மீண்டும் அதே தவறை செய்யலாமா?''திருடன் சொன்னான்,''என் மனைவி முதலில் திருடிய சேலை கிழிந்து விட்டது என்று கூறினாள்.அவளும் எவ்வளவு நாள் தான் கிழிந்த சேலையை உடுத்துவாள்?''
**********
ஒரு கூட்டத்தில் பெண்கள் பகுதியில் ஒரே அரட்டை.பேச்சாளருக்கு அது இடையூறாயிருந்தது.''அமைதி,அமைதி,''என்று சொல்லியும் சத்தம் நின்றபாடில்லை.அப்போது பேச்சாளர்,''பெண்மணிகள் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்,''என்றார்.உடனே கூச்சல் நின்றது.
**********


வாடகை வீடு


ஒரு இளைஞன் இரு ஏரிக்கரை வழியே போய்க் கொண்டிருந்தான்.அப்போது ஒருவர் நீரில் மூழ்கிக் கொண்டிருந்ததைக் கண்டான்.அவர் உதவி கேட்டு அலறவே இளைஞனும் உடனே நீரில் குதித்து அவரைதூக்கினான். அந்த ஆளுக்கு நினைவு இருந்தது.இளைஞன் நீந்திக் கொண்டே அவர் குடியிருப்பது ,சொந்த வீடா வாடகி வீடா என்று கேட்டான்.அவரும் வாடகை வீட்டில்குடியிருப்பதாகச் சொன்னார்.அவருடைய வீட்டு முகவரி கேட்டான்.அவரும் சொன்னார்.உடனே இளைஞன் அவரை அப்படியே நீரில் விட்டுவிட்டு தான் மட்டும் கரைக்கு நீந்தி வந்து அவர் சொன்ன முகவரிக்கு ஓடினான்.அந்த வீட்டின் சொந்தக்காரரை அணுகி,''ஐயா,உங்கள் வீட்டில் குடியிருந்தவர் ஏரியில் மூழ்கி விட்டார்.எனக்கு அந்த வீட்டை வாடகைக்குக் கொடுப்பீர்களா?''வீட்டின் உரிமையாளர் சொன்னார்,''அடப்பாவமே,கொஞ்சம் முந்தி வந்திருக்கக் கூடாதா?இப்போதுதான் அவரைத் தண்ணீரில் தள்ளிவிட்டவர் வந்து வாடகைக்கு வீட்டைப் பிடித்து விட்டார்.''


உதவாக்கரை


ராமுவும் சோமுவும் நண்பர்கள்.ராமு சொன்னான்,''நீ ஒரு உதவாக்கரை.உனக்கு ஒன்றும் தெரியாது.''சோமு சொன்னான்,''என்னை அடிக்கடி உதவாக்கரை என்று சொல்கிறாய்.நான் ஒரு வாரத்தில் ஹெலிகாப்டர் ஓட்டிக்காட்டுகிறேன் பார்,''என்று சொன்னான்.சரியாக ஒரு வாரம் கழித்து சொன்னதுபோல ஒரு ஹெலிகாப்டரில் சோமு ஏறினான்.ராமுவும் சுற்றியிருந்தவர்களும் கைதட்டி அவனை உற்சாகப் படுத்தினர்.சோமுவும் ஹெலிகாப்டரில் ஜம்மென்று பறந்தான்.சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் வானிலிருந்து கீழே விழுது சிதைந்தது.அனைவரும் அங்கு ஓடினர்.அதிர்ஷ்டவசமாக சோமு சிறு காயங்களுடன் உயிர் தப்பினான்.''என்ன ஆயிற்று?''என்று ராமு வினவினான்.சோமு சொன்னான்,''ஹெலிகாப்டர் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.ஆனால் மேலே போகப்போக அதிகமாகக் குளிர்ந்தது.எனவே மேலே ஓடிக் கொண்டிருந்த காற்றாடியை நிறுத்தி விட்டேன்.''


கண்டுபிடி


ஒருவன் போலீஸ் வேலைக்கு நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டான் .ஆப்ரஹாம் லிங்கனை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா?''என்று அவனிடம் கேட்கப்பட்டது.உடனே அவன் தேர்வு அதிகாரிகளிடம் ,''எனக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்,''என்றான்.அதிகாரியும் சிரித்துக் கொண்டே,''சரி,ஒரு வாரம் தருகிறோம்.விடையுடன் வா,''என்றார்.அவன் வீடு திரும்பினான்.வேலை கிடைத்து விட்டதா என்று அவன் மனைவி கேட்டாள்.அவன் சொன்னான்,''அநேகமாக வேலை கிடைத்த மாதிரிதான்.இல்லாவிட்டால் நேர்முகத் தேர்வின் போதே கண்டுபிடிக்க எனக்கு ஒரு கேசைத் தருவார்களா?ஒரு வாரத்திற்குள் அந்தக் கொலையாளியை நான் கண்டு பிடிக்க வேண்டும்.''


சான்றிதழ்


டாக்டர்:இதற்கு முன்னாள் டாக்டர் ரவியிடம் வேலை பார்த்ததாகச் சொல்கிறாயே,உன்னை எப்படி நம்புவது?சான்றிதழ் ஏதேனும் வைத்திருக்கிறாயா?
வந்தவர்:சான்றிதழ் எல்லாம் எதற்கு டாக்டர்?இதோ அவருடைய ஸ்டெதாஸ்கோப், தெர்மாமீட்டர் எல்லாம் வைத்திருக்கிறேனே!
**********
எஜமான்:ஏம்பா,இன்றைக்கு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றலையா?
வேலைக்காரன்:இன்றைக்கு மழை பெஞ்சதில்ல எஜமான்!
எஜமான்:உனக்கு எப்பவும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லணும்.குடையைப் பிடிச்சுக்கிட்டு தண்ணீர் ஊற்றியிருக்கலாம் இல்லையா?
**********
பயணி:குழந்தைகளுக்கு அரை டிக்கட் வாங்க வேண்டுமா?
நடத்துனர்:ஐந்துக்குக் கீழ் என்றால் வேண்டாம்.
பயணி:நல்ல வேளை, நான் நான்கு பிள்ளைகளைத்தான் கூட்டி வந்திருக்கிறேன்.
**********
ஒரு பேருந்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் வாயில் சிகரெட் வைத்திருந்தார்.அதைப் பார்த்த நடத்துனர்,பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த,'புகை பிடிக்காதீர்'என்ற அறிவிப்பினை சுட்டிக் காட்டி,;;இங்கு புகை பிடிக்கக் கூடாது,''என்றார்.பயணி சொன்னார்,''நான் புகைக்கவில்லை,''நடத்துனர் கேட்டார்,''நீங்கள்தான் வாயில் சிகரெட் வைத்திருக்கிறீர்களே?''பயணி பதிலுரைத்தார்,''அதனால் என்ன?இதோ பாருங்கள்!காலில் நான் செருப்பு அணிந்துள்ளேன்.அதற்காக நான் இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் என்று அர்த்தமா?''
**********


வந்தாண்டா பால்காரன்!


தண்ணீர் கலந்து பால் விற்கும் ஒருவன் முன் கடவுள் தோன்றி,பாலில் தண்ணீர் கலக்கும் காரணம் என்ன என்று கேட்டார்.அவன் சொன்னான்,''ஒரு குடம் பாலில் ஒரு குடம் தண்ணீர் கலந்தால் இரட்டிப்பாகப் பணம் கிடைக்கும்,''என்றான்.கடவுள் உடனே அவனுக்கு ஒரு குடம் பால் வரவழைத்துக் கொடுத்தார்.அவனும் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு அவன் வழியே நடக்கலானான்.வேறேதேனும் வேண்டுமா எனக் கடவுள் அவனிடம் கேட்டார்.''உங்களால் முடிந்தால்...''என்று அவன் இழுக்க,''இன்னொரு குடம் பால் வேண்டுமா என்று கடவுள் கேட்டார்.அவன் சொன்னான்,''நான் அவ்வளவு பேராசைக்காரன் அல்ல.இன்னொரு குடம் தண்ணீர் கொடுத்தால் போதும்.அதை நீங்கள் கொடுத்த பாலில் ஊற்றி இரட்டிப்பாக்கி விடுவேன்.''அடுத்த நிமிடம் கடவுள் அந்த இடத்தில் நிற்க வில்லை.


தாமதம்


படைவீரர்களின் காலை பெரேடுக்கு எட்டு பேர் சரியான நேரத்துக்கு வரவில்லை.பத்து நிமிட தாமதத்தில் ஒருவன் வந்தான்.தாமதத்திற்கான காரணத்தை அதிகாரி கேட்க அவன் சொன்னா,''என் தாயாருக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவரைப் பார்த்து விட்டு வந்ததில் சிறிது தாமதமாயிற்று.பின்னர் நான் வந்த பேருந்து வழியில் ரிப்பேர் ஆகி விட்டது.எனவே ஒரு குதிரையை வாடகைக்கு பிடித்து வந்தேன்.வரும் வழியில் திடீரென குதிரை கீழே விழுந்து இறந்து விட்டது.எனவே எஞ்சிய பத்து கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே வந்தேன்.அதனால் சற்று தாமதமாகி விட்டது,''அதிகாரி அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டு அவனை அனுமதித்தார்.அடுத்து இரண்டாவது ஒருவன் வந்தான்.இவனும் முதலாமவன் சொன்னது போலவே சொன்னான்.அரைகுறை மனதோடு அவனும் அனுமதிக்கப் பட்டான்.பின்னர் வந்த ஐந்து பேர் அதே காரணத்தை சொல்ல அதிகாரி ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை நிறுத்தி வைத்தார்.அப்போது எட்டாவது ஆளும் வந்து,''சார், உடல் நலமில்லாத தாயாரைப் பார்க்கப் போயிருந்தேன்பெருந்து ரிப்பேர் ஆகி விட்டது.எனவே ஒரு டாக்சியை பிடித்து வந்தேன்.''என்று ஆரம்பித்தான்.உடனே அதிகாரி,''நிறுத்து.அடுத்து டாக்சி ரிப்பேர் ஆகி விட்டது என்று சொல்லப் போகிறாய்.அப்படித்தானே?''அந்த ஆள் சொன்னான்,''இல்லை சார்,டாக்சி ரிப்பேர் ஆகவில்லை.வரும் வழியில் ஏழு குதிரைகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்ததால் அதைத் தாண்டி வரமுடிய வில்லை.எனவே அங்கிருந்து நடந்தே வந்தேன்.''


பாவங்கள்


நான்கு பாதிரியார்கள் ஒரு இடத்தில் மகிழ்ச்சியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் சொன்னார்,''நாமெல்லாம் நல்ல நண்பர்கள்.பிறரிடம் சொல்ல முடியாத நம் பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசலாமே?''என்றார்.எல்லோரும் சம்மதிக்கவே அவர் சொன்னார்,''இப்போதெல்லாம் நான் அதிகம் குடிக்கிறேன்.அதை நிறுத்த முடியவில்லை.'' அவர் வெளிப்படையாகப் பேசியதைப் பார்த்து அடுத்தவர் தைரியம் அடைந்து ,''என்னுடைய பிரச்சினையே நான் அதிகம் சூதாடுவதுதான்.எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் அதிலிருந்து மீள முடியவில்லை.''மூன்றாமவர் சொன்னார்,''சமீப காலமாக என் கவனம் எல்லாம் ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பெண்ணை எப்படி அடைவது என்பதுதான்.பாவம் என்று தெரிந்தும் என் மனம் அதையே நாடுகிறது.''நான்காமவர் சொன்னார்,''என்னுடைய கெட்ட பழக்கம் என்னவென்றால்,ஏதாவது ஒரு செய்தியைக் கேள்விப்பட்டால்,அதை எல்லோரிடமும் சொல்லாமல் என்னால் இருக்க முடிவதில்லை.''மற்ற மூவரும் மயக்கம் அடையாத குறைதான்.