Tuesday, July 26, 2011

ரொம்ப நாளாச்சு இனி தொடரும் .......,

Friday, May 6, 2011

”இஸ்லாமிய பயங்கரவாதம்” என்று லேபிள் ஒட்டுவதை ஏற்க முடியாது: கருணாநிதி!



சாமா பின் லேடன் பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, "இஸ்லாமிய பயங்கரவாதம்” என்று லேபிள் ஒட்ட எத்தனிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகளில் அதிர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தி, உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவுக்கே பெரும் சவாலாக இருந்து வந்த ஒசாமா பின் லேடன் எனும், உசாமா பின் முகமது பின் அவாத் பின் லேடனின் கதையை, 40 நிமிடங்களில் அமெரிக்க சிறப்புப் படை முடித்துவிட்டது.
ஆப்கானிஸ்தானில், சோவியத் படைகளுக்கு எதிராக கலகம் செய்ய வேண்டும் என்பதற்காகவே, தலிபான்களை அமெரிக்கா ஊக்குவித்தது. இன்றைக்கு அதே தலிபான்களை ஒடுக்குவதற்காக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவால் ஊக்குவிக்கப்பட்ட தலிபான்களுக்கு உதவுவதற்காகவே, பின் லேடன் ஆப்கானிஸ்தான் வந்தான் என்று சுட்டிக் காட்டுகின்றனர்.தேசிய பயங்கரவாதம், மத பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம், வலதுசாரி பயங்கரவாதம், அரசையே அழிக்கும் பயங்கரவாதம், அணு பயங்கரவாதம், ரசாயன பயங்கரவாதம், நுண்ணுயிரியல் பயங்கரவாதம், போதை பயங்கரவாதம் என்று பயங்கரவாதம் எந்த உருவெடுக்க முனைந்தாலும் அதை கிள்ளியெறிய வேண்டும்.
ஒசாமாவின் ஆசிரியர் சொன்ன, "வரலாறு தனது வரிகளை ரத்தத்தால் தவிர வேறு எதனாலும் எழுதுவதில்லை. புகழ் எனும் உயர்ந்த மாளிகை, மண்டை ஓடுகளால் தவிர வேறு எதனாலும் கட்டப்படுவதில்லை. கவுரவத்துக்கும், மதிப்பிற்கும், உடைந்த எலும்புகளாலும், பிணங்களாலும் தவிர வேறு எதைக் கொண்டும் அடித்தளம் இடப்படுவதில்லை” என்ற போதனையை அப்படியே உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, அதை நிலை நிறுத்துவதற்கு வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்த ஒசாமா பின் லேடன் எடுத்த கருவி தான் பயங்கரவாதம். ஒசாமா பின்பற்றிய பயங்கரவாதத்திற்கு, "இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற லேபிளை ஒட்ட எத்தனையோ பேர் எத்தனிக்கின்றனர். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்லாம் என்ற சொல்லுக்கு மற்றொருபொருளே சமாதானம்.
எல்லா மதங்களிலிருந்தும் பயங்கரவாதிகள் உருவாவதை, சரித்திரம் சான்றுகளோடு காட்டுகிறது. தனிநபர்களையும், அப்பாவிகளையும் கொல்லும் பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டும்; தண்டிக்கப்பட வேண்டும். இதில், யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. எந்தவித நியாயமான குறைகள் அல்லது கோபம் யார் மீது இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதற்கு அடிப்படை அறவே இல்லை."கத்தியை கையில் எடுத்தவன்; கத்தியாலேயே அழிவான்” என்பது பழமொழி. அந்த பழமொழிக்கான பாடம் தான் ஒசாமா பின் லேடனின் வாழ்க்கை. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
நன்றி:இந்நேரம்.காம்

700 கோடியை நோக்கிச் செல்லும் உலக மக்கள் தொகை



    ரும் அக்டோபர்-31 ஆம் தேதியன்று உலக மக்கள் தொகை 700 கோடியாக இருக்கும் என்றும், கி.பி.2099 ஆம் ஆண்டுக்குள் அது 10 பில்லியனாக அதிகரிக்கும் என்றும் தற்போது வெளியாகியுள்ள ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
21 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே உலக மக்கள் தொகை முந்தைய கணிப்பான 9.15 பில்லியனைத் தாண்டி 9.31 பில்லியனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஹானியா ஜோல்ட்னிக் தலைமையில் அமைக்கப்பட்ட ஐநா குழுவின் கணிப்புப் படியே உலக மக்கள் தொகை 7 பில்லியனாக அக்டோபர்-31 அன்று இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதைத் தெரிவிக்கும் விதமாக ஐநா அமைப்பான UNFPA சார்பில் ஏழுநாள் கவுண்ட் டவுனை அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகை கடந்த 1998 ஆம் ஆண்டு 6 பில்லியனைத் தொட்டது. அதே வருடம் ஜூலையில் 6.89 பில்லியனாக உயர்ந்தது.

கி.பி 2100 இல் சீன மக்கள் தொகை, தற்போதைய அளவான 1.34 இல் இருந்து 1 பில்லியனாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
நன்றி :இந்நேரம். காம்

Tuesday, May 3, 2011

ஒசாமா ...பிரபாகரன் ..,ஒரே மாதிரியான தலை வலி




ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான தகவல்களை வாசிப்பதற்காக இணையத்தில் உலா வந்த போது பல்வேறு வகையான புதுமையான வாதங்களை காண நேரிட்ட்து.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டபோது எழுந்த விவாதம் போலவே, தற்போதைய சூழ்நிலையிலும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.


ஒசாமா கொலையை கண்டிக்கும் பல்வேறு வலைப்பதிவுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதற்கெல்லாம் காரணம் இல்லாமலும் இல்லை.

உலகின் பெரிய அண்ணன் தோரணையில் வலம் வந்து கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த அமெரிக்காவிற்கு மரணபயம் காட்டும்விதமாக, அவர்களது ராணுவ தலைமையகத்தை தாக்கி,
"ஷாக் அட்டாக்" கொடுத்தவர் என்பதால் ஒசாமாவை போற்றுகின்றனர் சிலர்.

பல ஆயிரம் பேரை கொன்றவர் என்ற போர்வையில் ஒசாமா கொல்லப்படுகிறார் என்றால், பல்வேறு நாடுகளில் தனது
நாட்டாமை போர்வையில் அப்பாவி மக்களை அமெரிக்கா கொல்லுவது மட்டும் நியாயமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

2001 செப்டம்பர் இரட்டை கோபுர கட்டடத்தின் மீதான தாக்குதலுக்கு பின் அமெரிக்கா
"பயங்கரவாததிற்கு எதிரான போர்கோலம்" பூண்டபின்
"இது குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிரான போர் அல்ல" என்பதை அடிக்கடி சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமும், பயமும் அமெரிக்காவுக்கு இருந்தது.

முன்பு
சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டபோது ஜார்ஜ் புஷ், சொல்லிய அதே வார்த்தைகளைத்தான் இப்போது ஒசாமாவுக்காக, பாரக் ஒபாமா ஒப்பிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இந்த விஷயத்தில் நன்றாக சிக்கிக்கொண்டிருப்பதாகவே தெரிகிறது. "இது அமெரிக்க- பாகிஸ்தான் ராணுவ
கூட்டு நடவடிக்கை அல்ல" என்று ஆசிப் அலி சர்தாரி சொல்வது கூட இதற்காகத்தான்.

உண்மையில் ஒசாமா இருப்பது பாகிஸ்தானுக்கு தெரியாது என்றால் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தியவர்கள் அங்கே பதுங்கியிருப்பதுவும் பாகிஸ்தான் அரசுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே?


அமெரிக்க படைகள் ஒசாமாவை கொல்ல நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டதை அனுமதித்த பாகிஸ்தான், இந்தியாவை இதே போல களமிறங்க அனுமதிக்குமா?

ஒரு வேளை ஏதாவது ஒரு பாசத்திற்காக ஒசாமா தங்குவதற்கு பாகிஸ்தான் புகலிடம் அளித்திருந்தால், "தீவிரவாதத்தை ஒழிக்கிறேன்" என்று அமெரிக்காவிடம் கை நீட்டி வாங்கிய 19.5 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் = 100 கோடி) பாகிஸ்தானை பொறுத்தவரை துரோகத்திற்கான பணம் தானே?
ஒரு பக்கம் அமெரிக்காவிடம் பணம், இன்னொரு பக்கம் ஒசாமாவுக்கு அடைக்கலம். பாகிஸ்தானின் இந்த அழுகுணி ஆட்டம், தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கையின் சிங்கள அரசு போட்ட இரட்டை வேடம் போல அல்லவா இருக்கிறது?

இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கு என்று
இந்தியா கொடுத்த பணத்தை, தமிழர்களை ஒழிக்க பயன்படுத்திக்கொண்டது இலங்கை. இந்தியாவும் இந்த இரட்டை வேடத்தை ஒப்புக்கொண்டது போலவே
"கள்ளமௌனம்" காத்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டபோது இருந்த நிலையில் தான், இந்தியா ஒசாமா கொல்லப்பட்ட தற்போதும் இருப்பதாக தெரிகிறது. "இது பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் ஏற்பட்ட முன்னேற்றம்" என்று இப்போது கருத்து தெரிவித்து இருக்கும் இந்திய பிரதமர் அப்போது கொஞ்சம் அடக்கி வாசித்தார் அவ்வளவே. இந்தியாவில் பிரபாகரன் தேடப்படும் குற்றவாளி என்ற ரீதியில் மட்டும் அறிக்கை வாசித்து, ராஜபக்ஷேவுக்கான விசுவாசத்தை காட்டியது மட்டும் இந்தியாவின் நடந்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டபோது எழுந்த
"இது போட்டோகிராபிக்ஸ் மாயம்" என்ற சர்ச்சை இப்போதும் எழுந்திருக்கிறது.

பிரபாகரன் இன்னும்
உயிருடன் தான் இருக்கிறார் என்று நம்புபவர்கள் போலவே, இன்னும் ஒசாமா உயிருடன் தான் இருக்கிறார் என்று நம்புபவர்கள் இப்போதும் இருக்கிறார்கள்.
பிரபாகரனை வீழ்த்திவிட்டேன் என்று மார்தட்டியே தன்னுடைய அரசியல் செல்வாக்கினை உயர்த்திக்கொண்ட ராஜபக்ஷேவை போலவே, இனி அதலபாதளத்துக்கு போய்விட்ட தன்னுடைய செல்வாக்கினை ஒபாமா உயர்த்திக்கொள்வார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஒபாமா கொல்லப்பட்டபின், பாரக் ஒபாமா வெளியிட்ட உரையினை கொஞ்சம் பாருங்கள். நம்முடைய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் அறிக்கைகள் போலவே இருக்கும்.

பின்லேடனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க நான் உத்திரவிட்டேன். பின்லேடனை நீதியின் பின் நிறுத்த நான் முடிவு செய்தேன். இதெல்லாம் பாரக் ஒபாமா  உரையில் இருந்த வாசகங்கள்.
மூச்சுக்கு முன்னூறு தடவை நான்,நான்,நான்...

இதெல்லாம் விட ஹைலைட்டாக, "நாம் என்ன நினைக்கிறோமோ அதைச் செய்துகாட்டுவோம் என்பதை இப்போது மீண்டும் நிரூபித்துக்காட்டியுள்ளோம்" என்ற
பஞ்ச் டயலாக் வேறு.

இத்தனை விஷயங்களை மனம்போன போக்கில் யோசித்த போது புலப்பட்டது என்னவோ இது தான்.
"இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா என உலகம் முழுவதும் அரசியல்வாதிகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.மக்களும் நம்மைப்போலவே இருக்கிறார்கள் - தன் ரத்தத்தை உறிஞ்சும் அவர்களை ரசித்து பாராட்டியபடி"

Monday, May 2, 2011

இனிமேலாவது அமெரிக்கா திருந்துமா?


 

பாகிஸ்தானில் மறைவிடத்தில் வசித்துவந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க தனிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டது, அமெரிக்க அரசையும் அமெரிக்கர்களையும் மிகப்பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  உலகம் முழுவதும் தீவிரவாதம் பரவிக் கிடப்பதால், இந்த வெற்றியை உலக நாடுகள் அனைத்தும் பாராட்டியிருக்கின்றன. தீவிரவாத அமைப்பான அல்காய்தா மீதான இந்த பலத்த அடி உலக அளவில் பரவிக் கிடக்கும் வெவ்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும், பாண்டியன் பிரம்படிபோல, வலியை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்புதான் காரணம்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், குழந்தைகளைக் கொன்று குவித்த ஒரு தீவிரவாதியை இன்று கொன்றுவிட்டோம் என்று உலகுக்குச் செய்தி சொன்ன அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தப் போர் முந்தைய அதிபர் கூறியதைப் போல இஸ்லாமியருக்கு எதிரான போர் அல்ல. இது இஸ்லாமியர்களையும் கொன்று தீர்த்தவனும் இஸ்லாமியர்களில் ஒருவனுமான தீவிரவாதிக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார்.


ஆனால், பின்லேடன் போன்ற ஒரு தீவிரவாதியை உருவாக்கியது அமெரிக்காவின் பணமும், அமெரிக்காவின் பேராசையும், ஆப்கனிஸ்தானில் அமெரிக்காவின் அத்துமீறலும்தான் என்பதையும் அவர் நினைவுகூர்ந்திருக்க வேண்டிய தருணம் இது. அமெரிக்காவால் உருவான தீவிரவாதம், அமெரிக்காவை மட்டுமல்ல, வளரும் நாடாகிய இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் பாதித்துள்ளது. புதிய தீவிரவாதிகளை அல்காய்தா வளர்த்தெடுக்கும் நிலையையும் உருவாக்கியது. 

 இன்று தங்களால் வளர்க்கப்பட்ட முன்னாள் நண்பனான இந்நாள் எதிரியை அமெரிக்கா வீழ்த்தி இருக்கிறது. அவர்கள் கொண்டாடுகிறார்கள். இதில் ஒன்றை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அமெரிக்கா போன்ற வல்லரசுக்கே பின்லேடனைக் கொன்று பழிதீர்க்க பத்து ஆண்டுகள் ஆனது என்றால், இந்தியா போன்ற வளரும் நாடுகளால் இந்தத் தீவிரவாதிகளை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பது நினைக்கவே வேதனை தருவதாக இருக்கிறது. 

அமெரிக்காவுக்கு வலிமை இருக்கிறது, பணம் இருக்கிறது, ஆகையால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டவுடன் ஆப்கன் தேசத்துள் புகுந்து ஆட்சியை மாற்றிவிட்டு, தேடுதல் வேட்டையை நடத்த முடிகிறது. பாகிஸ்தானுக்கு ஆயிரமாயிரம் கோடி பணத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டு, அவர்கள் பின் லேடனை தங்கள் பாதுகாப்பில் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தும், புன்னகையுடன் உறவாடவும், மிரட்டவும் முடிகிறது. இல்லையென்றால், பாகிஸ்தானுக்குள், அமெரிக்கா ஒரு தனிப்படையுடன் நுழைந்து, பின்லேடனைச் சுட்டுக் கொன்றுவிட்டு அமெரிக்காவுக்குத் திரும்ப முடியுமா? 


 மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு மூளையாகச் செயல்பட்ட நபர்களைப் பெயரைக் குறிப்பிட்டு பிடித்துக் கொடுங்கள் என்று கேட்டாலே, இந்தியாவை உதாசீனப்படுத்தும் பாகிஸ்தான், இதுவரை தனது நாட்டுக்குள் அமெரிக்காவின் ஒரு சிறிய தனிப்படை உள்ளே வந்து பின்லேடனைச் சுட்டுக் கொன்றுவிட்டுச் சென்றது பற்றி வாய்மூடி ஒரு வார்த்தை பேசாமல் மவுனியாக இருக்கிறதே, அதை என்னவென்று சொல்வது?   

இதுகுறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தபோது, அந்த சிறிய தனிப்படை குறித்த கேள்விக்கு அவர்கள் அளித்த ஒரே பதில், இந்த நேரத்தில் அதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது என்பதுதான். உங்கள் தாக்குதல் திட்டத்தை பாகிஸ்தானுக்குச் சொல்லிவிட்டு அங்கே போனால், பின்லேடனைத் தப்பிச்செல்ல விட்டுவிடுவார்கள் என்று கருதித்தான் நீங்கள் அவர்களிடம் சொல்லவில்லையா என்ற கேள்விக்கும் இந்த நேரத்தில் இதுபற்றி பேச வேண்டாம் என்பதுதான் அவர்களது பதில்.பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம் முகம் கிழிந்து அம்பலப்பட்டிருப்பது பாகிஸ்தான். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது என்ற குற்றச் சாட்டை ஆயிரம் முறை மறுத்த பாகிஸ்தான் இனி எந்த முகத்தோடு மற்ற நாடுகளுடன் பேசும்? எத்தனை பொய்கள், என்னென்ன கதைகள்! அத்தனையும் இன்று அம்பலமாகிவிட்டது.


ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, மிகப் பெரிய மாளிகையில் சகோதரர் மற்றும் தனது இளம்மனைவி உள்ளிட்ட குடும்ப அங்கத்தினர்களுடன் இருப்பதை இத்தனை காலமும் கண்காணித்து, அது பின்லேடன்தான் என்பதை உறுதி செய்து 40 நிமிடத்தில் கதையை முடித்த அமெரிக்காவின் சாதனை பாராட்டுக்குரியதுதான். சுட்டுக்கொல்லப்பட்ட அடுத்த நிமிடம் இந்தத் தகவலை, அமெரிக்க அதிபர் தனது முந்தைய அதிபர்களான ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோரிடம்தான் சொல்கிறார். அவர்கள் தேசத்தை ஒன்றாகப் பார்க்கிறார்கள். உலகம் முழுவதும் அமெரிக்கா அயோக்கியத்தனம் செய்கிறது என்று சொன்னாலும், இந்த அரசியல் பலம்தான் அவர்களது வெற்றிக்கு அடிப்படையாக இருக்கிறது. 

பாகிஸ்தான் சும்மா இருக்குமேயானால், இந்தியாவின் சிறியதொரு தனிப்படை அங்கே சென்று, மும்பைத் தாக்குதலில் 200 பேரைக் கொன்று குவித்தவர்களைப் பிடித்து, இந்தியாவுக்கு கொண்டுவரவும் முடியும். இந்திய ராணுவத்திடமும் புலனாய்வுப் பிரிவிடமும் அதற்கான திறமையும் இருக்கிறது. இந்தியாவுக்கு அரசியல் பலம்தான் இல்லை.   

  அமெரிக்கா செய்தால் அது சாதுர்யம், சாகசம், நியாயம். இந்தியாவோ, வேறொரு நாடோ செய்தால், அது அந்நிய நாட்டுக்குள் நடத்தப்பட்ட அத்துமீறல். ஒரு பயங்கரத் தீவிரவாதி கொல்லப்பட்டான் என்று மகிழ்ச்சியும் அடையலாம். வல்லரசுகளின் அதிகாரபூர்வமான தீவிரவாதம் அங்கீகரிக்கப்படுகிறதே என்று வருத்தமும் படலாம். அது, அவரவர் பார்வையைப் பொருத்தது! 


உதுமான் 

ஒரிஜினல் இதான்


வடிவேலுவின் ”லொஜக்” ”முஜக்” ”பஜக்” 

 இதக்கூட காப்பி பண்ணிறாங்கையா….?


காப்பி

ஒசாமாவுக்கு துப்பாக்கி சிகிட்சை

அருமையான துப்பாக்கி சிகிட்சை கொடுத்து இருக்கிறது ஒசாமாவுக்கு அமெரிக்க ராணுவம் வாழ்த்துக்கள் ..,

இருந்தாலும் பதற்றம் அதிகரிக்கிறது இதன் எதிர்வினையை  எண்ணி..,
ஒசாமா இன்னும்  நிறைய இருக்கிறார்கள்....

ஸாரி..உருவாக்கப்படுகிறார்கள்அமெரிக்கர்கள் இந்த சந்தோசத்தை கொண்டாடும் இவ்வேளையில் அமெரிக்கா கொண்டுள்ள சில வீணான காரியங்களை (ஏஹாதிபத்தியம்)  நிறுத்த வேண்டும் நாட்டாமை பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் மற்ற நாடுகளில்  பார்ப்பதை தன் நாட்டிலும் பார்க்கவேண்டும்   


இரட்டை கோபுர அழிவிற்கு 3000 பேரை கொன்ற ஒசாமா பயங்கரவாதி என்றால் அதை அல்லது அது போன்ற பலகாரணங்கள் சொல்லி மற்ற நாட்டு மக்கள் மீது போர் புரிந்து அங்குள்ள அப்பாவி மக்களும் சாக காரணமாயிருந்த அமெரிக்காவை எதில் சேர்ப்பது ? 


இந்திய போன்ற சிறந்த நாடுகள் அமெரிக்காவிற்கு ஜால்ரா போடுவதை நிறுத்திவிட்டு இது பற்றி சிறந்த முடிவை எடுப்பதன் மூலம் மட்டுமே பயங்கரவாதம் சிறிது கட்டுக்கு கொண்டு வரப்படும் என்பது என்னுடைய கருத்து ...,




அன்புடன் 
உதுமான் 


Sunday, May 1, 2011

குர்ஆன் அடிப்படையில் எகிப்தில் அரசாங்கம் - மக்கள் விருப்பம்





      நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும்
 சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

புரட்சிக்கு பின்னான எகிப்து மக்களின் கண்ணோட்டத்தை
 பிரதிபலிக்கும் விதமாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
 பிரபல ப்யூ ஆய்வு நிறுவனத்தால் (Pew Research Center)
 ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கை
 பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

எதிர்க்கால அரசில் மார்க்கம் சம்பந்தப்பட்ட கட்சிகள்
 இடம்பெற தங்களது தெளிவான ஆதரவை
 வழங்கியிருக்கின்றனர் எகிப்தியர்கள்.   

ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்களை
 இங்கே காண்போம். முழுமையாக படிக்க
விரும்புபவர்கள் இந்த பதிவின் முடிவில்
 கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை சுட்டவும்.     

1. மார்க்க சட்டங்கள் அடிப்படையிலான அரசு: 

கண்டிப்பாக (Strictly) குர்ஆனை பின்பற்றியே
 சட்டங்கள் அமைய வேண்டுமென்று பெரும்பாலான
 எகிப்தியர்கள் (62%) கருத்து தெரிவித்துள்ளனர். 

எகிப்து மக்களின் இத்தகைய கருத்தில் வியப்பேதுமில்லை.
 புரட்சியின் போது, தஹ்ரிர் சதுக்கத்தில் இலட்சக்கணக்கில்
 திரண்டு, அங்கேயே அமைதியான முறையில் போராடி,
அங்கேயே தொழுது என்று பார்ப்போரை வியப்பில்
ஆழ்த்தி நம் ஈமானை அதிகப்படுத்தியவர்கள்
எகிப்தியர்கள். மார்க்க பற்று என்பது அவர்களது
 உள்ளங்களில் ஊறிய ஒன்று. ஆக, அவர்களது
இந்த விருப்பத்தில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.   

மேலும், குர்ஆனின் கோட்பாடுகளை பிரதிபலிக்குமாறு
சட்டங்கள் இருந்தால் போதுமானது என
சுமார் 27% மக்கள் கூறியிருக்கின்றனர்.

மிகக் குறைவான அளவில், ஐந்து சதவித மக்கள்,
 குரானை பின்பற்றி சட்டங்கள் அமையக்கூடாதென்று
 தெரிவித்துள்ளனர். எகிப்து மக்கள் தொகையில்
 குறிப்பிடத்தக்க அளவில் கிருத்துவர்கள்
 உள்ளனர் என்பது இங்கு நினைவுகூறத்தக்கது. 



2. எந்த இயக்கம் மக்களிடையே செல்வாக்கை
 பெற்றிருக்கின்றது?

முபாரக்கை பதவி இறக்கியதில் முக்கிய
 பங்காற்றிய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும்
(இந்த அமைப்பு குறித்து படிக்க <<இங்கே>> சுட்டவும்) ,
 "ஏப்ரல் 6" இயக்கத்திற்கும் எகிப்து
 மக்களிடையே பரவலான ஆதரவு காணப்படுகின்றது. 

நான்கில் மூன்று பேர் முஸ்லிம் சகோதரத்துவ
அமைப்பிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
 பத்தில் ஏழு பேர் "ஏப்ரல் 6" இயக்கத்திற்கு ஆதரவாக
கருத்து தெரிவித்துள்ளனர்.        



தன்னுடைய செல்வாக்கை முஸ்லிம் சகோதரத்துவ
 அமைப்பு இழந்து விட்டதாக அரசியல் வல்லுனர்கள்
 கருதக்கூடிய நிலையில், அந்த அமைப்பிற்கான
 மக்கள் ஆதரவு பலரை வியப்பில் ஆழ்த்தியிருக்கும். 

3. அமெரிக்க ஆதரவு: 

தொடர்ந்து தன்னுடைய ஆதரவை எகிப்து மக்களிடையே
 இழந்து வருகின்றது அமெரிக்கா. பத்தில் எட்டு பேர்
 அமெரிக்கா குறித்து எதிர்மறையான கருத்துக்களை
கொண்டிருகின்றனர். 

2006 ஆம் ஆண்டு 69%மாக இருந்த அமெரிக்க
 ஆதரவின்மை கடந்த ஐந்தாண்டுகளில் 79%மாக
உயர்ந்துள்ளது.  



மிக குறைந்த அளவிலான (15%) எகிப்து மக்களே
 அமெரிக்காவுடனான நெருங்கிய தொடர்பை
விரும்புகின்றனர். அதுபோல, அமெரிக்க அதிபர்
 ஒபாமா குறித்தும் சாதகமாக எண்ணங்கள் எகிப்து
 மக்களிடையே இல்லை. 

4. இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தம்: 

இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தத்தை முடிவுக்கு
கொண்டு வர எகிப்து மக்கள் தயாராகி கொண்டிருப்பதாக
 ப்யூ ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. 

எகிப்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான
 32 வருட கால அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்ய
 வேண்டுமென்று சுமார் 54% எகிப்தியர்கள்
 கூறியிருக்கின்றனர். ஒப்பந்தம் தொடரலாமென்று
 சுமார் 36% மக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.  



நிச்சயமாக இது இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி
 நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவிற்கு அதிர்ச்சியான
 தகவல். முபாரக்கின் வீழ்ச்சி இஸ்ரேலுக்கு மிகுந்த
வருத்தத்தை அளித்ததற்கு காரணம், அடுத்து
வரும் அரசாங்கம் தனக்கு ஆதரவாக செயல்படுமா
 என்பதுதான். குறிப்பாக முஸ்லிம் சகோதரத்துவ
அமைப்பு வரக்கூடாதென்பது இஸ்ரேலின் விருப்பம்.
 மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் விதமாக தேர்த
ல் முடிவுகள் இருந்தால் அது நிச்சயமாக
 இஸ்ரேலுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும். 

5. அடுத்த அரசாங்கம்: 

அடுத்த அரசாங்கத்தை எந்த கட்சி வழி நடத்தி
 செல்லவேண்டுமென்ற கேள்விக்கு வெவ்வேறு
 வகையாக பதில்களை தந்துள்ளனர் எகிப்து மக்கள்.
 முதல் இரண்டு இடத்தில் "New Wafd" கட்சியும்,
 முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமும் உள்ளன. 



நாம் மேலே பார்த்தவை மட்டுமல்லாமல்,
 தாங்கள் ஜனநாயகத்தை விரும்புவதாகவும்,  எகிப்தின் 
தற்போதைய சூழ்நிலை திருப்திகரமாக இருப்பதாகவும்,
 வரக்கூடிய தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும்
 நடக்குமா என்ற சந்தேகம் உள்ளதாகவும் எகிப்து மக்கள்
தெரிவித்துள்ளனர்.

வரப்போகின்ற தேர்தல் நியாயமான முறையில்
 நடந்து, எகிப்து மக்கள் எண்ணப்படி ஆட்சி அமைந்து,
 எகிப்தின் பொருளாதாரம் உயர்ந்து மக்கள் மகிழ்ச்சியோடும்
அமைதியோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன்
உதவி புரிவானாக...ஆமீன். 

இந்த ஆய்வறிக்கையை முழுமையாக படிக்க
கீழ்காணும் சுட்டியை சுட்டவும். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

Reference:
1. U.S. Wins No Friends, End of Treaty With Israel Sought, Egyptians
Embrace Revolt Leaders, Religious Parties and Military,
 As Well - Pew Global. link


எகிப்தில் புரட்சி வெடிக்க ஊழல் காரணம்: அப்துல் கலாம்




அமெரிக்காவின் சிகாகோ நகரில் முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு பொது வரவேற்பு நிகழ்ச்சியை, இந்திய - அமெரிக்க மையம் ஏற்பாடு செய்திருந்தது.

அதில் உரையாற்றிய அப்துல் கலாம்,  ‘’நாட்டில் ஊழலைத் தடுக்க வேண்டும். எகிப்து நாட்டில் புரட்சி வெடித்ததற்கு இது தான் காரணம். புதுமையான கருத்துக்களை அரசியலாக்கக் கூடாது.

வறுமையை ஒழிக்கவும், சுத்தமான குடிநீர் மற்றும் எரிசக்தி கிடைக்கச் செய்யவும், தரமான கல்வி கிடைக்கவும் நல்ல உலகத்தை படைக்க வேண்டும். அணு சக்தி தூய சக்தி தான். எனவே, இந்த சக்தியை உலகம் முழுவதும் பயன்படுத்தச் செய்ய வேண்டும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாக உள்ளது. இன்னும் ஓராண்டில் இது 10 சதவீதத்தை எட்டி விடும். 2020ல் இந்தியா பொருளாதாரத்தில் வல்லமை படைத்த நாடாகி விடும். பார்லிமென்டில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கச் செய்ய வேண்டும்’’என்று பேசினார்.

Wednesday, April 27, 2011

நாடாளப்போகும் நல்லவர்கள்..தமிழகம்: 125 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்!


  "நடைபெறும் 2011 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பிரபல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 679 வேட்பாளர்களில், 125 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இதில் 66 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்றும் தனியார் சேவை அமைப்பான தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் சார்பில் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அடுத்த ஆட்சி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் 2011 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை (ஏப்ரல் 13) நடைபெற உள்ளது. தமிழகத்தின் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 2,773 பேர் போட்டியிடுகின்றனர்.
இதில் சுயேட்சைகள் அல்லாத பிரபல அரசியல் கட்சிகளான திமுக, காங்கிரஸ், பாமக, அதிமுக, தேமுதிக, பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் கமிஷனுக்குச் சமர்ப்பித்துள்ள பிரமாண வாக்குமூலத்தில் 679 வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரத் தகவல்கள் டெல்லியிலிருந்து செயல்படும் ஜனநாயக சீர்த்திருத்த இயக்கத்தின் சார்பில் திரட்டப்பட்டுள்ளது.
திரட்டப்பட்ட தகவல்கள், இந்த அமைப்பின் சார்பு நிறுவனமான தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் மூலம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. வெளியான தகவல்களிலுள்ள 679 வேட்பாளர்களில் 125 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 66 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள விவரங்களும் தெரியவந்துள்ளன.
வெளியிடப்பட்ட தகவல்களில் கிரிமினல் வழக்கு நிலுவையிலுள்ள வேட்பாளர்கள் விவரம் வருமாறு:
திமுக  - 119 வேட்பாளர்களில் 111 பேர் தேர்தல் கமிஷனுக்குப் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்துள்ளனர். இதில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதிமுக - 160 வேட்பாளர்களில் 144 பேர் தேர்தல் கமிஷனுக்குப் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்துள்ளனர். இதில் 43 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
காங்கிரஸ் - 63 வேட்பாளர்களில் 54 பேர் தேர்தல் கமிஷனுக்குப் பிரமாணப் பத்திரம் சமர்ப்பித்துள்ளனர். இதில் 6 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பாஜக - 169 வேட்பாளர்களில் 19 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தேமுதிக - 7 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பாமக - 14 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
விடுதலைச் சிறுத்தைகள் - 10வேட்பாளர்களில்  3 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்திய அணி வீரர்களுக்கு பரிசு தொகை 2 கோடியாக அதிகரிப்பு



உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி  வீரர்களுக்கு பரிசு தொகை 2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதறகான அறிவிப்பை கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் இன்று வெளியிட்டது.
சென்ற மாதம் நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்காக அணி வீரர்கள் அனைவருக்கும் தலா 1 கோடி ரூபாய் பரிசு தொகையாக பிசிசிஐ உடனடியாக அறிவித்தது. இது மிகவும் குறைவான தொகை என அணி வீரர்கள் கருதுவதாக சில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. மேலும் அணி வீரர்கள் அனைவருக்கும் தலா 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என அணியின் மூத்த வீரர்கள் பிசிசிஐக்கு தெரிவித்ததாகவும் செய்தி வெளியாகியிருந்தது.
இது குறித்த கருத்து தெரிவித்த பிசிசிஐ செயலர் சீனிவாசன், அவ்வாறான செய்திகள் உணமையில்லை என்றும், பரிசு தொகை உயர்த்தப்பட்டது குறித்த முடிவிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றார்.

வடிவேலுவுக்கு பதிலளிக்காதது ஏன்? - விஜயகாந்த் விளக்கம்



தேர்தல் பிரசாரத்தின் போது உங்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசிய காமெடி நடிகர்  வடிவேலுவுக்கு நீங்கள் ஏன் பதில் அளிக்கவில்லை என்று நடிகரும் தே மு தி க  தலைவருமான விஜயகாந்த் கேட்கப்பட்ட போது  " வடிவேலுக்குப் பதில் அளிக்கும் அளவுக்கு என் தகுதி குறைந்துவிடவில்லை. அப்படி நான் பதில் அளித்தால், அதையே பெரிய செய்தியாக்கி, ஆளுங்கட்சிக்கு எதிரான பல விஷயங்களை நான் பேசவிடாமல் செய்துவிடுவர். தி.மு.க.வின் இந்தச் சூழ்ச்சிக்கு நான் பலியாக மாட்டேன்" என்று கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கொடுத்துள்ளார் விஜயகாந்த்.

தேர்தல் பிரசாரத்தின் போது வடிவேலுவின் தனிநபர் தாக்குதல், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், வடிவேலுவின் பிரசாரத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது தொடர்பாக இப்படி ஒரு விளக்கம் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, April 24, 2011

கொடி கட்டி பறக்கும் “பிச்சை பிசினஸ்”! அதிர்ச்சித் தகவல்


 

கோவை: கோவையில் போக்குவரத்து நெரிசலான இடங்களில் வட மாநிலத்தவர்கள் பச்சிளம் குழந்தையுடன் பிச்சை எடுக்கும் காட்சி நம் மனதை நெகிழவைக்கும் அதே சமயம் அதன் பின்னணியை பார்த்தபோது அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.
தினமும் 50 ரூபாய் கொடுத்தால் போதும்'  பச்சிளம் குழந்தைகள் தின வாடகைக்கு கிடைக்கும் என, விளம்பரம் ஒன்றுதான் இல்லை அந்தளவுக்கு “பிச்சை பிசினஸ்” கொடிக்கட்டிப்பறக்கிறது. கோவையில் குழந்தைகளை வாடகைக்கு வாங்கி, சாலைகளில் பிச்சையெடுக்க பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முன்பெல்லாம் ஆதரவற்றோர், முதியோர், நோயாளிகள் மட்டுமே கையேந்தி வந்தனர். தற்போது, இளம் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள்கூட ரோட்டில் ஆங்காங்கு அமர்ந்தும் வழிபாட்டு தலங்களில் அமர்ந்தும் பிச்சை எடுப்பதையும் தாராளமாக காண முடிகிறது. இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோய் தற்போது பச்சிளம் குழந்தைகளையும் பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்தி வருகிறது சில  கும்பல். கோவையில் முகாமிட்டிருக்கும் வடமாநில பெண்கள் சிலர், கையில் பச்சிளம் குழந்தைகளுடன் முக்கிய சாலை சந்திப்புகளில் நின்று, சிக்னலுக்காக காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுத்து வருகின்றனர்.
பச்சிளம் குழந்தைகளை இடுப்பில் அமரவைத்து பிச்சை எடுக்கும் பெண்கள், ஒரு சில குழந்தைகளின் கை, கால்களில் ரத்த காயக்கட்டுகளும் போடப்பட்டிருக்கின்றன. சில குழந்தைகளின் முகம், தோள் பகுதிகளில் வெளிப்படையாக காணும் வகையில் காயங்களும் உள்ளன.குழந்தைகளை பார்க்கும் பலரும் நோட்டுகளை கொடுத்து "புண்ணியம்' தேடிக்கொள்கின்றனர். இம்முறையில்  ஒவ்வொரு பெண்ணுக்கும் தினசரி சுமார் 500 ரூபாய் வரை கிடைப்பதாக கூறப்படுகிறது. பார்ப்போர் பரிதாபப்பட வேண்டுமே என்பதற்காக குழந்தைகளுக்கு செயற்கையான காயத்தை ஏற்படுத்துவதாகவும் திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுவரை காவல்துறையில் யாரும் புகார் தர முன்வரவில்லை.
மேலும் பிச்சை எடுக்க பயன்படுத்தப்படும் பச்சிளம் குழந்தைகள் வாடகைக்கும் விடப்படுகின்றனர். கோவை மாநகரில் காந்தி புரம், பார்க் கேட், வ.உ.சி., மைதானம், நேரு ஸ்டேடியம், சிவானந்தாகாலனி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வடமா நிலத்தவர்கள் அதிகளவில் சாலையோரங்களில் தங்கியுள்ளனர். இங்குள்ள பல பெண்கள் தங்களது குழந்தைகளை, பிச்சை எடுக்கும் பெண்களுக்கு நாள் வாடகைக்கு விடுவதாகவும், அதற்கு கூலியாக 50 ரூபாய் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
இந்திய தண்டனை சட்டப்படி பிச்சை எடுப்பது குற்றமாகும். இச்செயலில் ஈடுபடுவோரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தும் அதிகாரம் காவல்துறைக்கு உண்டு. எனினும், இது ஒரு சமூக, பொருளாதாரம் சார்ந்த பிரச்னை என்பதால்,"பிச்சை எடுத்தல் தடைச்சட்டத்தை' அமல்படுத்துவதில் காவல்துறையினர் தீவிர முனைப்பு காட்டுவதில்லை. பிச்சைக்காரர்களை பிடித்து மாநகராட்சி, அரசு காப்பகங்களில் அடைத்தாலும் தப்பி யோடிவிடுகின்றனர். இதனால்  காவல்துறையினரும், சமூக ஆர்வலர்களும் குழப்பமடைந்துள்ளனர்.
இருப்பினும், குழந்தைகளை வாடகைக்கு விடுவதும், பிச்சை எடுக்க வைப்பதும், காயம் ஏற்படுத்தி துன்புறுத்துவதும் கொடூரமான குற்றங்களாகும். இதுபோன்ற குற்றங்களை தடுக்கவாவது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

இன்று காங்கிரஸ்..,

காங்கிரஸ் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம் இந்த தளத்தில் ...,

நாளை பிஜேபி..,

Tuesday, April 19, 2011

தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்




Election Q தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்2011 சட்டமன்ற தேர்தல் பல வித சர்ச்சைகளுக்கிடையே நடைபெற்று முடிவிற்காக காத்து இருக்கிறது. “வரலாறு காணாத” என்ற வார்த்தை தமிழக ஊடகங்களிடையே ரொம்ப பிரபலமானது. ஒன்றுமில்லாத விசயத்திற்குக்கூட பரபரப்பிற்காக இதை பயன்படுத்துவார்கள் ஆனால் இந்த முறை உண்மையாகவே அதற்கு தகுந்த மாதிரி முதல் முறையாக 77.8% வாக்கு சதவீதம் நடைபெற்று அரசியல் கட்சிகளை மட்டுமல்ல அனைவரையும் ஏகத்திற்கும் குழப்பி விட்டு இருக்கிறது. பரபரப்பாக நடந்த தேர்தல் கலாட்டாக்களில் நான் கவனித்தவைகளை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
குறிப்பு: நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவன் அல்ல.
கலைஞர் Vs ஜெ
கடந்த பல தேர்தல்களாக இவர்களே மாறி மாறி வந்துள்ளனர். இந்த முறை கலைஞர் என்றால் அடுத்த முறை ஜெ இது தான் இது வரை நடந்துள்ளது. மக்களுக்கு வேறு சொல்லிக்கொள்ளும்படியான மாற்றுத்தலைவர் இல்லாததால் வேறு வழி இல்லாமல் இவர்கள் இவரையே மாற்றி மாற்றி தேர்வு செய்யவேண்டிய கட்டாயத்தில் இருப்பது ஒரு சோகமான நிகழ்வு.
இலவசம்
இலவசம் இந்தத்தேர்தலில் மிக முக்கிய இடம் பிடித்துள்ளது. இலவசம் என்பது (பொருட்களாக) முதலில் ஆரம்பிக்கப்பட்டது ஜெ ஆட்சியில் தான் என்று நினைக்கிறேன் (தவறு இருந்தால் சுட்டவும்) ஜெ பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுத்தது தான் ஆரம்பம். இது தேர்தலுக்காக இல்லாவிட்டாலும் மக்களிடையே தற்போதைய இலவச தாக்கத்தை போல பெரிய அளவில் ஏற்படுத்தாவிட்டாலும் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்று இருந்தது. ஜெ ஆட்சி முடியும் போது கூட பெரிய அளவில் எதிர்ப்பில்லை. இதனால் இதை சமாளிக்க கலைஞர் எடுத்த பிரம்மாஸ்திரம் தான் இலவச வண்ண தொலைக்காட்சி. கலைஞர் அறிவித்தாலும் ஜெ இது போல சென்ற தேர்தலில் குறிப்பிடும் படியாக எதையும் அறிவிக்கவில்லை. பிறகு பல இடங்களில் குறைந்த அளவு வாக்கு வித்தியாசத்தில் ஜெ தோற்று இன்று வரை மைனாரிட்டி திமுக அரசு என்று கூறிக்கொண்டு இருக்கிறார்.
இந்தத்தேர்தலிலும் கடந்த தேர்தலைப்போல எக்கச்சக்க இலவசங்களை தேர்தல் அறிக்கையாக கலைஞர் அறிவிக்க சென்ற முறை போல இந்த முறை எதுவும் கூறாமல் இருந்தால் பெரும் பாதிப்பு வரும் என்பதை உணர்ந்து ஜெ வும் வரைமுறையே இல்லாத அளவிற்கு இலவசங்களை அள்ளி விட்டார். புதிதாக பார்ப்பவர்கள் எதோ கிண்டலுக்கு கூறி இருப்பார்கள் என்று நினைக்கும் அளவிற்கு இருந்தது. கலைஞர் கடந்த தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததை ஏறக்குறைய நிறைவேற்றி இருந்தது அவருக்கு கூடுதல் பலம். இவர்கள் இருவரும் அறிவித்த இலவசங்களை வட மாநில ஊடகங்கள் கிண்டல் செய்து நமது மாநிலத்தின் மானத்தையே வாங்கி விட்டன.
உள்ளே விஜயகாந்த் வெளியே வைகோ
கடந்த தேர்தலில் தற்போது ஜெ செய்ததைப்போல (இல்லாமல் நாகரீகமாக) கலைஞரும் வைகோவிற்கு “இதயத்தில்” மட்டுமே இடம் கொடுத்ததால் அங்கே இருந்து விலகி ஜெ அளித்த தொகுதிகளைப் பெற்றுக்கொண்டு அதிமுக கூட்டணியில் இணைந்தார். இணைந்ததோடு ஜெ செய்த அராஜகத்தை எல்லாம் பொறுத்துக்கொண்டு அமைதி காத்தார். ஜெ க்கு யாருமே துணை இல்லாத போது அவருக்கு பக்க பலமாக இருந்தார் குறிப்பாக ஈழப்பிரச்சனை ஏற்பட்ட போது கூட சமாளித்து வந்தார் காரணம் ஈழத் தமிழர்கள் விசயத்தில் ஜெ முன்பு என்ன பேசினார் பின் எப்படி பல்டி அடித்தார் அனைவரும் அறிந்தது. இப்படி எந்த சூழ்நிலையிலும் பிரியாமல் இருந்த வைகோ வை படு கேவலமாக நடத்தி வெளியே அனுப்பினார் (வைகோ விற்கு இது தேவை தான் என்பது சிலர் வாதம்). அவர் கேட்ட சீட்டை கொடுக்காததோடு காக்க வைத்து வேறு கூட்டணியிலும் இணைய முடியாமல் செய்து விட்டார். இதன் பிறகு விஜயகாந்த் பல வித போராட்டங்கள் சண்டைகளுக்கிடையே 41 சீட்டைப் பெற்றார். பல காலம் அரசியலில் இருக்கும் வைகோ தற்போது வந்த விஜயகாந்துடன் போட்டி முடியாதது வருத்தமளிக்கும் விஷயம்.
வைகோவை வெளியேற்றியது ஜெ க்கு பலமா பலவீனமா?
நிச்சயம் பலவீனம் தான் காரணம் அதிமுக கூட்டணியில் ஜெ வைத் தவிர உறுதியாகப் பேச நபர் இல்லை. வைகோ இருந்து இருந்தால் மேடைகளில் வெளுத்து வாங்கி இருப்பார். வைகோ ஒரு சிறந்த பேச்சாளர் என்பதை எவரும் மறுக்க முடியாது. தன்னுடைய வாதங்களை அது சரியோ தவறோ ஆணித்தரமாக வைப்பார். கேட்பவர்களை தன் வாதங்களை ஏற்றுக்கொள்ளும்படி அவரது பேச்சு அமைந்து இருக்கும். இது நிச்சயம் அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்து இருக்கும். அதுவுமில்லாமல் வைகோ மீது மற்ற அரசியல்வாதிகள் அளவிற்கு மக்களுக்கு வெறுப்பில்லை. இன்னும் பலர் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இருப்பதில் நல்ல அரசியல்வாதி என்று கூற்றைக்கொண்டுள்ளனர்.
விஜயகாந்த்
Election 4 தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்கடவுளுடன், மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று கூறிக்கொண்டு இருந்த கேப்டன் பின் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். இதற்கு தனியாக நின்று வெற்றி பெற முடியாது மற்றும் கட்சி செலவு அதிகம் ஆகிக்கொண்டு செல்வது காரணமாகக் கூறப்படுகிறது. கூட்டணிக்கு முன்பு கேப்டனை ஜெ குடிகாரர் என்றும் அவர் தான் எனக்கு ஊத்திக்கொடுத்தார் என்று விஜயகாந்தும் கேவலமாக சண்டை இட்டுக்கொண்டார்கள். கேப்டன் குடிகாரர் என்ற பிரச்சனை தேர்தலில் ஆரம்பிக்க பிள்ளையார் சுழி போட்டதே ஜெ தான் என்று நினைக்கிறேன்.
குழப்பமான அதிமுக வேட்பாளர் அறிவிப்பு
ஜெ கூட்டணி கட்சிகள் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டது கூட்டணி கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. இதனால் கூட்டணியை முறித்து மூன்றாவது அணி அமைக்கும் அளவிற்கு சென்று விட்டது. ஜெ அறிவிப்பைப் பார்த்து அதிமுக தொண்டர்களே மிரண்டு விட்டனர் மற்றவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பின்னர் விஷயம் விபரீதம் ஆவதை உணர்ந்த அதிமுக முக்கிய தலைகள் ஜெ விடம் பேசி பின் கூட்டணிக்கட்சிகளை சமாதானப்படுத்தினர். இது மக்களிடையே ஜெ மீது ஒரு வெறுப்பை கொண்டு வந்தது. ஜெ இன்னும் திருந்தவே இல்லை என்பதை நிரூபிப்பது போல இருந்தது.
ஜெ க்கு விஜயகாந்த் பலமா? பலவீனமா?
கூட்டணிக்கு முன்பு என்றால் நிச்சயம் பலம் மட்டுமே என்று கூறி இருக்கலாம் ஆனால் தற்போது கேப்டன் செய்த பல சொதப்பல்கள் பலம் + பலவீனம் என்று கூறும் அளவிற்கு வந்து விட்டது. சென்ற தேர்தலில் மிகச்சிறப்பாக பிரச்சாரம் செய்து 8% வாக்குகளைப் பெற்றவரா இவர்! என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இவரது பல நடவடிக்கைகள் இருந்தன.
வேட்பாளரை அடித்ததாக எழுந்த சர்ச்சையை அதோடு விடாமல் நான் அடித்தால் மகாராஜா ஆவார் என்று கூறி மேலும் சொதப்பியது, அதிமுகவையே தவறுதலாக விமர்சித்தது, அதிமுக, விஜய் மக்கள் கட்சி நபர்களிடம் கடுமையாக நடந்து கொண்டது என்று ரொம்பவும் சொதப்பி விட்டார். இவர் பேசாமல் இருந்தாலே போதும் என்கிற அளவிற்கு சில நேரங்களில் ஆனது. இருப்பினும் ஜெ க்கு பிறகு அவரது கூட்டணியில் விஜயகாந்த் பேச்சிற்கே அதிக வரவேற்பு இருந்தது. இந்த சொதப்பல்களை தவிர்த்து இருந்தால் மேலும் பல வாக்குகளைப் பெற்று இருக்கலாம். இதற்கு முழுக்காரணமே விஜயகாந்த் தான் வேறு யாருமல்ல. விஜயகாந்த் செல்லும் இடங்கள் எல்லாம் திமுக கூட்டணி கட்சிக்காரர்கள் பேசுவதை விட அதிகமாக கேப்டன் பேசுவதை கவர் செய்து ஒன்றுமில்லாத விஷயங்களைக்கூட பூதாகரமாகக் கூறி சன் டிவி செய்த டேமேஜ் ம் ஒரு காரணமாகக் கூறலாம்.
விஜயகாந்த் Vs வடிவேல்
Vadivel praise Captain தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்இந்தத்தேர்தலில் அறிவிக்கப்படாத ஹீரோ வடிவேல் தான். முதல் முறையாக கலைஞரை வைத்துக்கொண்டு மிகவும் கீழ்த்தரமாக பேசி நடந்து கொண்ட வடிவேல் அதன் பிறகு சுதாரித்து ஒவ்வொரு இடத்தில் பேசும் போதும் கேப்டன் மானத்தையே வாங்கி விட்டார். கேப்டன் இதற்கு எந்தவிதமான பதிலும் அளிக்காததால் அவரை சீண்டும் படி மீண்டும் மீண்டும் அவரை உசுப்பேத்திக்கொண்டே இருந்தார் ஆனாலும் கேப்டன் எதற்கும் பதில் தரவில்லை. வடிவேல் உஷாராக ஜெ வை தாக்காமல் கேப்டனை மட்டுமே தாக்கி வந்தாலும் அதிமுக கூட்டணியை வாரிக்கொண்டு இருந்தார்.
கேப்டனை வடிவேல் போட்டு வாங்கியது ஜெ க்கு நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருந்து இருக்கும் ஆனால் இவரது கூட்டணியையும் வாரிக்கொண்டு இருந்ததால் பின்னர் இவருக்கு “ஆப்பு” இருக்கலாம் என்று கருதப்படுகிறது. “தண்ணீரில்” மிதப்பவன் எல்லாம் கேப்டன் அல்ல. நீ கிங் மேக்கர் அல்ல ட்ரிங்க் மேக்கர் என்றது பலத்த வரவேற்ப்பை பெற்றது ஆனாலும் பலரும் முகம் சுழிக்கும் வண்ணம் வடிவேல் பேசியது அருவருக்கத்தக்கதாகவே இருந்தது. குறைந்த பட்ச மேடை நாகரீகம் கூட இல்லாமல் வடிவேல் பேசினார். தேமுதிக வாக்கு குறைவில் வடிவேல் பங்கு மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கேப்டனை குடிகாரராகவே சித்தரித்து விட்டதால் பெண்கள் வாக்கு இவருக்கு குறையும் என்றே கருதுகிறேன்.
இதில் பெரிய காமெடி விஜயகாந்த் மாற்றிக்கூறியதை கிண்டலடித்துக்கொண்டு இருந்த வடிவேலுவே மாற்றி அதிமுக வேட்பாளரை ஆதரித்தது தான் ஆனால் தமிழக மக்கள் பெரும்பாலோனோர் சன் மற்றும் கலைஞர் மட்டுமே பார்ப்பதால் இது பற்றி மக்களுக்கு அதிகம் தெரியவில்லை காரணம் இவர்கள் தான் இதை எல்லாம் காட்டவே மாட்டார்களே! வடிவேலை சமாளிக்க அதிமுக தரப்பு நடிகர் சிங்கமுத்தை களம் இறக்கியது ஆனால் வடிவேல் அளவிற்கு ஈடு கொடுக்கமுடியவில்லை.
பெரிய பேச்சாளர்களை எல்லாம் கொண்ட பெருமை வாய்ந்த கட்சியான திமுக தற்போது வடிவேலையும் குஷ்பூவையும் நம்ப வேண்டிய நிலைமைக்குப் போனது மிக மிக பரிதாபமான ஒன்றாகும். சன் கலைஞர் தொலைக்காட்சிகளில் வடிவேல் பேச்சிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது திமுக விற்கு பலத்த அடியாகும். திறமையான பேச்சாளர்களை திமுக இழந்துவருவதையே இது காட்டுகிறது. எது எப்படியோ இந்தத் தேர்தலில் வடிவேல் தான் “டாக் ஆஃப் தி எலக்சன்” என்பது மறுக்க முடியாத விஷயம்.
தேர்தல் முடிவு வந்த பிறகு விஜயகாந்த் கூட்டணியில் இருந்து விலக்கப்படுவார் அல்லது விலகும் படியான சூழ்நிலை அவருக்கு அமைக்கப்படலாம் என்பது என் கருத்து. இதை கேப்டனும் நன்கு அறிந்து வைத்து இருப்பார் என்று நினைக்கிறேன். அதிமுக கூட்டணியில் மானத்தோடு எவரும் இருக்க முடியாது என்பது அனைவரும் அறிந்தது. அதுக்கு முன்னாடி இருந்ததா? என்று கேட்க வேண்டாம் என்னிடம் பதில் இல்லை icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
வடிவேலு குறித்த ஒரு கொசுறு
அரசியலுக்கு வந்து விட்டாலே நடிப்பு வாழ்க்கை அவ்வளவு தான். முன்பு போல ஜொலிக்க முடியாது. இதற்கு உதாரணமாக எத்தனையோ நடிக நடிகைகளைக் கூறலாம். கட்சி சார்பாகி விட்டாலே வாய்ப்பு கொடுக்க மற்றவர்கள் யோசிப்பார்கள் அதோடு அவர்களுடைய இயல்பான நடிப்பிலும் மாற்றம் வந்து விடும். திமுக வெற்றி பெற்று விட்டால் வடிவேலுக்கு பெரிய அளவில் பிரச்சனை இருக்காது அதிமுக வெற்றி பெற்றால் ஒருவேளை நிஜமாகவே “கைப்புள்ளை” ஆனாலும் ஆகி விடுவார். விடுடா விடுடா சுனா பானான்னுட்டு வடிவேல் போக வேண்டியது தான் icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
ஊடக மூளைச்சலவை
அனைத்து கட்சிகளும் ஆளாளுக்கு ஒரு தொலைக்காட்சியை வைத்து இருந்தாலும் மக்களிடையே சென்றடைவது சன் கலைஞர் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகள் தான். ஜெயா தொலைக்காட்சியை ஜெயா ஆதரவு மக்கள் மட்டும் தான் காண்கிறார்கள் பொதுமக்கள் அதிகம் பார்ப்பதில்லை. சன் கலைஞர் இரு தொலைக்காட்சிகளும் இந்த ஒரு மாதமும் நாட்டில் வேறு எதுவுமே நடக்காதது போல வெறும் திமுக ஆதரவு செய்திகளாகவே காண்பித்துக்கொண்டு இருந்தார்கள். இந்த இரு தொலைக்காட்சியையும் (உடன் தினகரன் செய்தித்தாள்) பார்ப்பவர்கள் நாட்டில் இவர்கள் கூறுவது மட்டுமே நடந்து கொண்டுள்ளது என்று நினைக்கும் அளவிற்கு நடந்து கொண்டனர். கலைஞர் அரசு மீது வெறுப்பில் உள்ளவர்கள் இதை தொடர்ந்து பார்த்தால் கூட திமுக ஆதரவு அல்லது எதிர்க்கட்சி எதிர்ப்பு நிலைக்கு மாறி விடுவார்கள் அந்த அளவிற்கு மூளைச்சலவை செய்தார்கள்.
கிராமங்களில் எல்லாம் இவர்கள் கூறுவதே உண்மை என்று நம்பும் அளவிற்கு இருந்தது. நான் ஊரில் உள்ளவர்களுடன் பேசியதிலேயே இது அப்பட்டமாக தெரிந்தது. குறிப்பாக சன் தொலைக்காட்சியில் என்ன கூறுகிறார்களோ அது தான் இவர்களுக்கு செய்தி அதைத்தவிர வேறு எதுவும் நடக்கவில்லை என்பதைப்போலவே இருந்தது சிலரின் பேச்சு.
ஊடகங்கள் அரசியல் கட்சிகள் கையில் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தமிழகம் ஒரு சிறந்த உதாரணம்.
தேர்தல் ஆணையம்
Election2 தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்அரசியல் கட்சிகளிடையே வடிவேல் என்றால் பொதுமக்களிடையே பட்டையக் கிளப்பியது தேர்தல் ஆணையம் தான் என்பதில் சந்தேகமில்லை. பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க கடும் சோதனைகளை மேற்கொண்டனர். கொடி, பேனர், தோரணம், கட் அவுட் என்று எதையும் வைக்கக்கூடாது என்று ஏகக் கெடுபிடிகளை வைத்து அரசியல் கட்சிகளை கலங்கடித்து விட்டனர். அரசியல் கட்சிகள் தாங்கள் நினைத்ததை சாதிக்க கடும் முயற்சிகளை மேற்க்கொள்ள வேண்டி இருந்தது.
வாகன சோதனையாலும் மற்றும் மற்ற கெடுபிடிகளாலும் பொதுமக்கள் பலர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இத்தனை பெரிய மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் இதைப்போல சிரமங்கள் தவிர்க்க முடியாது என்பது என்னுடைய கருத்து. அரசியல் கட்சிகள் செய்யும் அட்டூழியத்தை அடக்க மக்கள் ஒரு மாதம் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.
பொது மக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி மற்றும் மற்ற தொண்டு நிறுவனங்கள், ஊடகங்கள் உதவியுடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த முறை 77.8% வாக்கு சதவீதத்தை நடத்தி சாதனை செய்துள்ளார்கள். மக்களும் எந்த பிரச்சனையும் நடக்காது என்கிற நம்பிக்கையில் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்தனர். இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் எப்போதும் வாக்களிக்காமல் இருக்கும் மேல்தட்டு மக்களும் வந்து வாக்களித்தது ஆகும்.
எனக்கு தேர்தல் கமிசன் செய்ததில் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது முடிவை ஒரு மாதம் தள்ளி வைத்ததாகும். கலைஞர் தேர்தல் ஆணையத்தை எமர்ஜென்சி போல நடந்து கொள்கிறது என்று கூறிய போதெல்லாம் எரிச்சல் தான் வந்தது ஆனால் இந்த இடைவெளி ஒரு மாதம் விசயத்தில் கலைஞர் கூறியதில் எனக்கு முழு உடன்பாடு அதாவது இந்த மாதம் மாநில அரசு எதுவுமே முழுமையாக செய்ய முடியாது அனைத்தும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இது பற்றி தினமணி கூட தனது தலையங்கத்தில் கூறி இருந்தது.
இது தவிர்த்து எனக்கு தோன்றிய இன்னொரு விஷயம் ஒரு மாதத்திற்கு 25000 காவலர்கள் இதற்கு காவல் காக்கிறார்கள். இவர்களுக்கு ஆகும் செலவு நேர விரயம் எல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால் வீண் செலவாகவே தோன்றுகிறது. இதை சரியான முறையில் திட்டமிட்டு ஒரு மாத இடைவெளியை குறைத்து இருக்கலாம். இது போக ஒரு மணி நேர வாக்குப்பதிவு நேரத்தை குறைக்காமல் வழக்கமான நேரத்தையே வைத்து இருந்தால் இன்னும் கூடுதலாக வாக்கு சதவீதம் வந்து இருக்கும். மற்றபடி இவை தவிர்த்து தேர்தல் ஆணையம் மிகச்சிறப்பாக செயல்பட்டு பொது மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது என்பது மிகையில்லை. என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.
குழப்பத்தை ஏற்படுத்தும் வாக்கு சதவீதம்
எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு அதிக வாக்காளர்கள் 77.8% வாக்களித்து இருப்பது அரசியல் கட்சிகளிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது யாருக்கு ஆதரவான அல்லது எதிரான அலை என்று ஒன்றும் புரியாமல் குழம்பிப் போய் உள்ளனர். இதில் நக்கீரன் மற்றும் விகடனின் கருத்துக்கணிப்பு அனைவரையும் குழப்பியுள்ளது. பின்வரும் கணக்கை பார்த்தால் உங்களால் ஏதாவது ஒரு முடிவிற்கு வர முடியுமா!
அதிமுக 141-திமுக 92 இடங்களில் முன்னிலை – ஜூ.வி
திமுக 140-அதிமுக 94 இடங்களில் முன்னிலை – நக்கீரன்
இவை அல்லாமல் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். இது விலைவாசி உயர்வு போன்றவற்றால் அதிமுகவிற்கு ஆதரவான கூட்டமா! அல்லது இலவசங்கள் மற்றும் சுயஉதவிக்குழு போன்றவற்றால் திமுகவிற்கு ஆதரவான கூட்டமா! என்று ஒரு முடிவிற்கு வர முடியாத அளவிற்கு உள்ளது. கவுண்டர் பாணியில் சொல்வதென்றால் ஒரே குழப்ப்ப்பமா இருக்கே! icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
வடிவேல் மற்றும் சன் டிவி கைங்கர்யத்தால் கேப்டன் குடிகாரன் என்பதும், வேட்பாளரை அடித்ததும் மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே ஆழமாக பதிந்து விட்டது அதனால் இவருக்கு பெண்கள் ஒட்டு அதிகளவில் கிடைக்குமா என்று தெரியவில்லை. இவருடைய ரிஷிவந்தியம் தொகுதியில் 78% வாக்கு பதிவு இதில் ஆண்களை விட பெண்கள் (12,475) அதிகம். இதையும் மீறி கேப்டன் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் கேப்டன் உண்மையிலேயே திறமையான கேப்டன் தான் icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
இதுவரை நடந்த தேர்தல்களில் 84 ம் ஆண்டு முதல் திமுக அதிமுக மாறி மாறி வந்துள்ளன. வெற்றி பெற்ற கட்சியும் அதன் வாக்கு சதவீதமும் கீழே உள்ளது.
1984 – 73.47% அதிமுக வெற்றி
1989 – 69.69% திமுக வெற்றி
1991 – 63.84% அதிமுக வெற்றி
1996 – 66.95% திமுக வெற்றி
2001 – 59.07% அதிமுக வெற்றி
2006 – 70.56% திமுக வெற்றி
2011 – 77.8% ?????? வெற்றி
கொசுறு: எங்கள் ஊர் கோபியில் இந்த முறை 83.29% வாக்கு பதிந்துள்ளது.
அதிகளவு வாக்களிப்பிற்குக் காரணம் என்ன?
ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களை நினைத்து இருப்பார்கள். எனக்கு தோன்றியவை படத்துடன் கூடிய பூத் ஸ்லிப், காவல் துறை பாதுகாப்பு, தேர்தல் ஆணையம் சமூக அமைப்புகள் ஊடகங்கள் ஆகியவை ஏற்படுத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தேர்தல் ஆணையம் ஏற்படுத்திய நம்பிக்கை, கூடுதல் வாக்காளர்கள் சேர்ப்பு, கள்ள ஓட்டு தவிர்ப்பு, வன்முறை சம்பவங்கள் நடக்காதது, இளைஞர்கள் பலரிடையே இணையம் மூலம் (facebook, Twitter, Buzz & Mail) ஆர்வத்தை ஏற்படுத்தியது போன்றவை. இவை தவிர அரசியல் கட்சிகள் வழங்கிய பணம் மற்றும் இலவசம்.
கலைஞர் ஜெ யார் வெற்றி பெறுவார்கள்?
கணிப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த தேர்தல்களிலேயே இந்தத்தேர்தலில் தான் அதிக பட்சமாக வாக்குபதிவு நடந்துள்ளது. இது அனைத்து கட்சிகளின் வயிற்றிலும் புரளியைக் கரைத்துள்ளது. இரு கட்சிக்காரர்களும் தங்களுக்கு ஆதரவான விசயங்களைக் கோடிட்டுக் காட்டி “வெற்றி எங்களுக்குத்தான்” என்று கூறிக்கொண்டு இருந்தாலும் உள்ளூர பயந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்த காரணங்களைப் பட்டியலிட்டுள்ளேன் உங்கள் கருத்துக்களுடன் ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்.
கலைஞர் சாதகங்கள்
இலவசம், 108, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, இலவச வீடு, மகளிர் சுய உதவிக்குழு, ஒரு ரூபாய் அரிசி, அரசு ஊழியர்கள் ஆதரவு, தேர்தல் பணம், வடிவேல்!!!, சன் டிவி, விஜயகாந்த் பேச்சு, ஜெ முதல் வேட்பாளர் பட்டியல் சொதப்பல், ஜெ விஜயகாந்த் சண்டை.
கலைஞர் பாதகங்கள்
Election தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்ஊழல், விலைவாசி உயர்வு, மின்வெட்டு, குடும்ப ஆட்சி, திரைப்படத்துறை ரியல் எஸ்டேட் ஊடகத்துறை கேபிள் டிவி ஆதிக்கம், ஈழத்தமிழர் (50% – 50%), மீனவர் பிரச்சனை, அன்னா ஹசாரேவிற்கு ஆதரவாக எந்த பெரிய விளம்பரமும் இல்லாமல் ஊழலுக்கு எதிராக கோவையில் திரண்ட மக்கள்.
ஜெ சாதகங்கள்
இலவசம், கேப்டன் மற்றும் கூட்டணி, ஆளும் கட்சி அதிருப்தி மற்றும் கலைஞர் பாதகங்களில் உள்ளவைகள்
ஜெ பாதகங்கள்
வேட்பாளர் குழப்படி வெளியீடல், கூட்டணி ஒற்றுமை இல்லாமை, விஜயகாந்த் பேச்சு மற்றும் வேட்பாளரை அடித்தது, ஜெ வின் முரட்டுத்தனம், வைகோ (பேச்சு) இல்லாமை, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒன்றாக மேடையில் பேசாதது, ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பிரச்சாரத்தில் மக்களிடம் சரியாக எடுத்துக் கூறாதது.
கலைஞர் ஜெ இருவரிடமும் உள்ள மிகப்பெரிய தவறாக எனக்குத் தோன்றுவது
கலைஞர் முதலில் ஐடி துறையை பெறவும் கடைசியில் கூட்டணி பேரத்திற்க்காகவும் கூட்டணியில் இருந்து விலகுவதாக மிரட்டியதை ஈழத்தமிழர்கள் விசயத்திற்காக செய்யாதது. இது மட்டுமல்ல வேறு எந்த நல்ல விசயத்திற்க்காகவும் செய்யாதது.
ஜெ இன்னும் கொஞ்சம் கூட திருந்தாமல் அப்படியே இருப்பது.
ஒரு மாதக்கலக்கம்
Election3 தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்அரசியல் கட்சிகள் இந்த ஒரு மாதக்கொடுமையைப் போல வேறு எப்போதும் அனுபவித்து இருக்க மாட்டார்கள். வெற்றியோ தோல்வியோ முடிவு தெரிந்து விட்டால் நிம்மதியாக அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடலாம் ஆனால் இதில் எதுவுமே தெரியாமல் ஆளாளுக்கு கூறும் ஊகங்களைக் கேட்டு வாய்ப்புள்ளதா இல்லையா என்று தினமும் கணக்குப் போட்டுக்கொண்டு தேர்தலுக்கு முன்பு ஒரு நாளை ஒரு மணி நேரமாகக் கடத்தியவர்கள் தற்போது ஒரு நாளை ஒரு மாதம் போல கடத்த வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகி விட்டார்கள் icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல் உண்மையிலேயே இது கொடுமை தான்.
தினமும் இவர்களால் நிம்மதியாக தூங்கக்கூட முடியாது (தெரிந்தவுடன் பொதுமக்கள் நிம்மதியாக இருக்க முடியாது அது வேறு விஷயம்) அந்த அளவிற்கு டென்ஷன் ஆகிக்கொண்டு இருக்கிறார்கள். சாதாரண பொதுமக்களாகிய நமக்கே இவ்வளவு ஆர்வம் என்றால் கட்சிக்காரர்களை எல்லாம் நினைத்துப்பாருங்கள். காமெடிதான் போங்க! சரியான தண்டனை icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
இதில் பல கட்சிக்காரர்கள் அழகரி ஸ்டாலின் கேப்டன் சரத் போன்றவர்கள் தாங்கள் இத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். கலைஞரும் ஜெவும் உஷாராக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறிக்கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் முடிவிற்குப் பிறகு யார் யார் கூறியது என்ன அளவில் உள்ளது என்பதைப் பார்த்தால் காமெடியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அதோடு ஒவ்வொரு ஊடகங்களும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவாக ஏகத்துக்கும் செய்திகளை எழுதிக்கொண்டு இருக்கின்றன அவர்கள் எல்லாம் தேர்தல் முடிவு மாறி வந்தால் சமாளிக்கப்போவதை நினைத்தாலே சிரிப்பாக உள்ளது அதே போல அவர்கள் கூறியது போல நடந்து விட்டால் பாதிக்கப்படும் கட்சிகள் நிலை பாவமோ பாவம். கொஞ்ச நாளைக்கு வறுத்தெடுத்து விடுவார்கள் icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்
எப்படியோ பல வித சர்ச்சைகள் இருந்தாலும் தேர்தல் நல்லபடியாக முடிந்து விட்டது எந்த வித பெரிய அசம்பாவிதமுமில்லாமல். அனைவரையும் போல நானும் யார் வெற்றி பெறுவார்கள்? கூட்டணி ஆட்சி நடக்குமா? மறுபடியும் மைனாரிட்டி அரசு கோஷங்கள் ஒலிக்குமா? தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்களா? என்று ஆவலுடன் இருக்கிறேன். இந்தத்தேர்தல் முடிவு பல வித சந்தேகங்களை தீர்க்கும் பல ஆச்சர்யங்களை மற்றும் நிச்சயம் கடும் அதிர்ச்சியைக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
தேர்தல் முடிவால் நம்மிடம் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை Life will be going on as usual icon smile தமிழக சட்டமன்றத்தேர்தல் 2011 ஒரு விரிவான அலசல்