தெரிஞ்சிக்கோங்க!



பயனுள்ள அரசு தொடர்பான சேவைகள்



Services offered by Government of Tamil Nadu

Industrial Policies
Judiciary
Recruitment Services
Schemes of Departments
Employment Portal
Tamil Nadu State Transport Corporations
Municipal Corporations / Municipalities
Tamil Nadu Electricity Board (TNEB)
Acts and Rules
Business and Commerce
Educational Services
Enquiry Services
Government Documents and Reports
Health Services




உயிரைப் பறிக்கும் மின்னலினால் பூமிக்கு நன்மையும் விளைகின்றது.....
[Image: thunder9908292081029316.jpg]
டி மின்னல் என்பது இயற்கை யின் ஒரு தோற்றப்பாடு ஆகும். பிரமாண்டமான வெளிச்சத்தையும், வெப்பத்தையும் தருகின்ற நிகழ்வு மின்னல் தாக்கம் ஆகும்.

மின்னல் என்பது அதிகளவான ‘வோல்ட்’ கொண்ட ஒரு மின் பாய்ச்சலாகும்.

மின்னல் மின்பொறியானது, மேகத்திற்கும், மேகத்துக்குமிடையி லும், மேகத்திற்கும், தரைக்குமிடை யிலும், அல்லது முகில்களின் பகுதிகளுக்கிடையிலும் ஏற்படலாம்.

இதனை வாகன பற்றரியொன்றுடன் ஒப்பிடலாம். அதில் இரு கம்பிகளை இணைக்கும் போது, தொடுகையும் பிரதேசத்தில் பொறி ஏற்படுகின்றதல்லவா? அதனைப் போன்றது தான் இதுவும்.

மின்னலை உருவாக்குகின்ற முகில், கூர்வடிவான ‘குமுலோனியஸ்’ எனப்படுகின்ற விசேட வகைக்குரிய மேகமாகும். இம்முகிலின் மேல் முனையில் அதிகளவான நேரேற்றங்கள் குவிந்து காணப்படும். அம் முகிலின் தாழ்முனையில் மறை ஏற்றங்கள் காணப்படும்.

நேரேற்றம் மறையேற்றம் தொடர்புறும் சந்தர்ப்பங்களில், அவை இரண்டுக்குமிடையே பொறி ஏற்படும். இப் பொறி நிலம் நோக்கிச் செலுத்தப்படும்.

அப்போது, நிலத்தில் காணப்படுகின்ற பொருட்கள் மேல்நோக்கி ஏற்றத்தைச் செலுத்துகின்றன.

முதலில் ஏற்படும் ஏற்ற சங்கமத்தினால் பெருமளவான மின் உற்பத்தியாக்கப்படும்.

அடுத்து, முகிலிலுள்ள மறையேற்றங்கள், படியிறங்கலாம். நிலத்திலுள்ளவை, அதற்கு எதிரான ஏற்றங்களை மேல்நோக்கிச் செலுத்துகின்றன.

ஏற்றங்கள் சந்தித்து சங்கமமாகும் முதல் பொருளினால் ஒளிப்பிளப்பு ஏற்படும்.

முதலில் இறங்கும், உச்சமின்னோட்டம் 30 றிதீ ஆகும். இது 250 கிலோவாற்றுவரை செல்லலாம் எனப் பதியப்பட்டுள்ளது. அவ்விடத்தில் வெப்ப நிலை 40,000 பாகை கெல்வின் காணப்படலாம். இது மறையேற்றத் தரை அடிப்பு மின்னல் எனப்படும்.

‘நேர்மின்’ தரை அடிப்பு மின்னலும் ஏற்படுகின்றது. இது 500 கிலோ வாற்று ஆக இருக்கலாம் எனப் பதிவாகியுள்ளது. இது பாரிய வெடிப்புக்கள், காடுகள் தீப்பற்றல் என்பவைகளை ஏற்படுத்தும்.

அதிகமாக மின்னல், பல்முனைகளினூடாகத் தரைத் தாக்குதலை ஏற்படுத்துகின்றது. உயரமாக உள்ள பொருளிலிருந்து மேல் நோக்கிச் செலுத்தும் ஏற்றம் முதலில் பொறியை ஏற்படுத்தும்.

மின்னல் ஏற்படும் வேளைகளில் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதைப் பார்ப்போம்.

வெளியில் நடமாடுவதைத் தவிர்ப்பது நன்று.

உலோகப் பொருட்களுடன் தொடுகை ஏற்படுத்த வேண்டாம்.

மரத்தின் கீழ் நிற்க வேண்டாம்.

நீரிலுள்ள, ஈரலிப்புள்ள இடங்களை விட்டு அகற்றுவிடுங்கள்.

தொலைபேசித் தொடர்பாடலை நிறுத்துங்கள்.

திறந்த வெளியில் தனிமையில் நிற்காதீர்கள்.

திறந்த வாகனங்களில் பயணம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மின்னலின் போது, ஒளியும், சத்தமும், ஒருங்கே உருவாகினாலும், வெளிச்சத்தை முதலில் கண்ட பின்பே சத்தத்தைக் கேட்கின்aர்கள்.

மின்னலின் போது, வளிமண்ட லத்திலுள்ள நைதரசன் வாயு, ஒட்சி சனுடன் தாக்கமுற்று, றைத்திரிக் ஒட்சைட்டாகப்படுகின்றது. இது மழை நீருடன் கரைந்த நிலையில் நிலத்தை அடைகின்றது. இவ்வாறே மண், நைதரசன் வளத்தைப் பெற்றுக் கொள்வதை அறிவீர்களா? மின்னல் நன்மை பயக்கின்றதல்லவா?


*******************************************************************************

தாஜ்மஹாலைக் கட்டியது சார்ஜகான் இல்லையா?ஒரு உண்மைத் தகவல்!

உலகின் ஏழாவது அற்புதமாக விளங்குகின்ற தாஜ்மஹாலை யார் கட்டியது என்று கேட்டால் அனைவரும் ஷாஜஹான் என்று சொல்லி விடுவார்கள். ஆனால் கட்டிடக் கலைகளின் மகாராணி என்று வர்ணிக்கப்படுகின்ற இந்த தாஜ்மஹாலை வடிவமைத்து, அதன் ஒவ்வொரு கலையம்சத்தையும் மிகுந்த சிரத்தையோடு நிர்மாணித்த ஏராளமான கட்டிடக் கலைஞர்கள் யார் யார் என்பது இப்போது அகழ்வாராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

[Image: images?q=tbn:ANd9GcTjB6w-vNQ5owxXACvdQPE...TryyHQIHpw]

இந்திய அகழ்வாராய்ச்சியினர் தாஜ்மஹாலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சிகள் செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் முக்கியத் திருப்பமாக 17ம் நூற்றாண்டில் இந்த அதி அற்புதக் கட்டிடத்தை கட்டிய 670 க்கும் மேற்பட்ட தொழில் நுட்பக் கலைஞர்கள், பொறியாளர்கள் ஆகியோரது பெயர்கள் அடங்கிய பல கல்வெட்டுக்களை கண்டுபிடித்துள்ளனர்.

பெரும்பாலும் அரபியிலும், பாரசீக மொழியிலும் எழுதப்பட்ட பெயர்கள் தாஜ்மஹாலுக்கு வடக்கில் பூமிக்குள் புதையுண்டுள்ள சிறு கட்டிடங்களின் சுவர்களிலும், அங்குள்ள சிதைப்பாடுகளிலும் காணப்படுவதாக ஆசியன் ஏஜ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சில பெயர்கள் தேவநாகிரி மொழியிலும் எழுதப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் மூத்த அதிகாரி D.தயாளன் என்பவர் தெரிவித்துள்ளார்.

[Image: images?q=tbn:AN9GcS8uhIfSlI-zm02nAK8XGIZ...m9DXhep_ep]

தாஜ்மஹாலைக் குறித்து வரலாற்றுக் குறிப்புகள் தயாரிக்க தொடர்ந்து நடந்து வரும் பணியில் ஏதேச்சையாக இந்த அரும் கண்டுபிடிப்புகள் கிட்டியதாகவும், பெரும்பாலான கட்டிட கலைஞர்கள் இரான், மத்திய ஆசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தயாளன் மற்றும் அவரது குழுவினர் இந்த கல்வெட்டுக்களில் திரிசூலம், நட்சத்திரங்கள், மலர்கள், கணித குறியீடுகள் போன்ற படங்கள் பல கற்களில் வரையப்பட்டுள்ளது பல்வேறு மதங்களைச் சார்ந்த கலைஞர்கள் இந்த பணியில் ஈடுப்பட்டிருப்பதைக் காட்டுகிறது என்று கூறினார்.

[Image: images?q=tbn:ANd9GcQTyGicHX2TjE94qZiUDnb...DbQHeUEIfc]

‘அவர்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருந்திருக்கக் கூடும், ஆகவேதான் தங்களது அடையாளங்களை இவ்வாறு சித்திரங்களின் வாயிலாக பதிவு செய்துள்ளனர்’. இவ்வாறு ஆராய்ச்சிக்குழு தெரிவித்ததோடு, இந்தக் குறியீடுகளின் முழு அர்த்தத்தை வெளிக்கொணற நிபுணர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவலளித்தனர்.

தனது ஆசை மனைவி மும்தாஜ் மஹாலுக்காக தான் கட்ட விரும்பிய இந்த மாளிகையின் கட்டுமான பணிகளில் கிட்டத்தட்ட 20,000 ஆட்களை முகலாய பேரரசர் ஷாஜஹான் நியமித்தார். வெள்ளைப் பளிங்குக் கற்களாலான இந்த மாளிகையின் கட்டுமான பணி 1631ல் துவங்கி 1647ல் முடிவடைந்தது.

பணியாளர்கள் தங்குமிடத்திற்காகவே மகாராணி மும்தாஜின் பெயரில் மும்தாஜாபாத் என்ற தனி நகர் அருகிலேயே உருவாக்கப்பட்டது. இந்த நகர் தற்போது தாஜ்கன்ஜ் என்று அழைக்கப்படுகிறது.

[Image: images?q=tbn:ANd9GcR7w-ohmvQjqCmNAScVLxE...pNnFSM6wZA]

தயாளன் மேலும் கூறுகையில், கல்வெட்டுக்களில் காணப்படும் பெயர்களில் ‘இஸாஃப் அஃபான்டி’ மற்றும் ‘அமானத் கான்’ உள்ளிட்ட குறிப்பிட்ட ஐந்து பெயர்கள் திரும்ப திரும்ப பல இடங்களில் காணப்படுவதாகவும், இது பணியாளர்களில் உயர் பொறுப்புக்கள் அதாவது முதன்மை கட்டிடக் கலைஞர், வரையெழுத்துக் கலைஞர் மற்றும் வடிவமைப்பாளர் போன்ற முக்கியமானவர்களைக் குறிப்பதாகவும் தெரிவித்தார். தற்போது அடுத்தடுத்த மட்டங்களில் பொறுப்பு வகித்த கலைஞர்கள், பொறியாளர்களது பெயர்களையும் கண்டுபிடித்து தொகுக்கும் பணி நடந்து வருவதாகவும், நான்கு மாதங்களில் இந்த பணி நிறைவடையும் என்றும் தயாளன் தெரிவித்தார்.

அமானத் கான் தாஜ்மஹாலின் வரையெழுத்து நிபுணராக (கல்லிகிராஃபர்) இருந்துள்ளார். அவரது பெயர் தாஜ்மஹாலின் கதவுகளில் ஒன்றின் மீது எழுதப்பட்டுள்ள எழுத்துக்களின் கடைக்கோடியில் பொறிக்கப்பட்டுள்ளது. கவிஞர் கியாஸூத்தீன் என்பவர் சில குர்ஆனிய வசனங்களை கோபுரக் கற்களில் எழுதியுள்ளார். இஸ்மாயீல் கான் ஆஃப்ரிதி என்ற துருக்கியர்தான் இந்தக் கோபுரத்தை உருவாக்கியவர். முஹம்மது ஹனீஃப் என்பவர் கட்டிடப் பணியாளர்களுக்கு மேற்பார்வை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இந்த அழகிய வெண் பளிங்கு மாளிகையின் வடிவமைப்பாளர் உஸ்தாத் அஹ்மத் லஹோரி என்பவராவார்.

[Image: images?q=tbn:ANd9GcSYOiFeb6fLlqwIeXe4Pg2...5BByvliQL1]

கட்டுமானப் பொருள்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், மத்திய ஆசியாவிலிருந்தும் ஆயிரம் யானைகள் கொண்ட படைகள் மூலம் கொண்டு வரப்பட்டனவாம். சிகப்பு பளிங்குக் கற்கள் ஃபதேபூர் சிக்ரியிலிருந்தும், ஜாஸ்பெர் என்ற பொருள் பஞ்சாபிலிருந்தும், ஜேட், கிரிஸ்டல் போன்ற வண்ணக் கற்கள் சைனாவிலிருந்தும், டார்கிய்ஸ் என்ற கற்கள் திபெத்திலிருந்தும், லபிஸ் லஜூலி மற்றும் சஃபயர் போன்ற கற்கள் இலங்கையிலிருந்தும், கரனலியன் வகை கற்கள் அரேபியாவிலிருந்தும், வைரக்கற்கள் பண்ணா என்ற இடத்திலிருந்தும் வரவழைக்கப்பட்டன.

‘உலகின் அற்புதங்களில் ஒன்றாக இன்றளவும் திகழும் இந்த பளிங்கு மாளிகையை ஒவ்வொரு கல்லாக செதுக்கி செதுக்கி கட்டிய கட்டிடக் கலைஞர்கள் உலகுக்கு தெரியாமலே மறைந்து போனார்கள், அவர்களை அடையாளம் கண்டு உலக மாந்தருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம்தான் இந்த ஆராய்ச்சியில் எங்களுக்கு அதிமானது’ என்று தாயளன் இறுதியாக தெரிவித்தார்.

[Image: images?q=tbn:ANd9GcRyReKNi-vIvJekDHC1FAo...490-9aCbCg]

[Image: prod_107_1682.gif]




ராமாயணத்தில் ... இவர்கள் யார்?-Ramayanam

[Image: tn1637330000000615011.jpg]

1. அகல்யை - ராமரின் அருளால் சாபம் நீங்கப்பெற்றவள்.

2. அகத்தியர் - ராமனுக்கு போர்க்களத்தில் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்.

3. அகம்பனன் - ராவணனிடம் ராமனைப்பற்றி கோள் சொன்னவன். ராமனின் அம்புக்கு தப்பிப்பிழைத்த அதிசய ராட்சஷன்

4. அங்கதன் - வாலி, தாரையின் மகன். கிஷ்கிந்தையின் இளவரசன்.

5. அத்திரி - அனுசூயா என்ற பத்தினியின் கணவர். ராமதரிசனம் பெற்றவர்.

6. இந்திரஜித் - ராவணனின் மகன். லட்சுமணனால் அழிந்தவன்.
மேகநாதன் என்ற பெயரையும் உடையவன்.

7. கரன், தூஷணன் - ராவணனின் தம்பிகள், ராமனின் கையால் அழிந்தவர்கள். ஜனஸ்தானம் என்ற இடத்திற்கு அதிபதிகள்.

8. கபந்தன் - தலையும் காலும் இல்லாத அரக்கன். ராமனால் வதைக்கப்பட்டவன். கந்தர்வ வடிவம் பெற்று ராம லட்சமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவன்

9. குகன் - வேடர் தலைவன், படகோட்டி

10. கும்பகர்ணன் - ராவணனின் தம்பி, எப்போதும் பெரும் தூக்கம் தூங்குபவன்.

11. கும்பன் - கும்பகர்ணனின் மகன்

12. குசத்வஜன் - ஜனகரின் தம்பி, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை. பரத சத்ருக்கனின் மாமனார்.

13. கவுசல்யா, கைகேயி, சுமித்திரை - தசரதரின் பட்டத்தரசியர்

14. சுநைனா - ஜனகரின் மனைவி, சீதையின் தாய்

15. கவுதமர் - அகல்யையின் கணவர், முனிவர்

16. சதானந்தர் - அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர்.

17. சம்பராசுரன் - இவனுக்கும், தேவர்களுக்கும் நடந்த போரில் தசரதர் தேவர்களுக்கு உதவினார்.

18. சபரி - மதங்க முனிவரின் மாணவ, ராமனை தரிசித்தவள்

19. சதபலி - வடக்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.

20. சம்பாதி - கழுகரசன் ஜடாயுவின் அண்ணன், சீதையைக்காண அங்கதனின் படைக்கு உதவியவன்.

21. சீதா - ராமனின் மனைவி, ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி ஆகிய பெயர்களும் இவளுக்கு உண்டு.

22. சுமந்திரர் - தசரதரின் மந்திரி, தேரோட்டி

23. சுக்ரீவன் - கிஷ்கிந்தையின் மன்னன், வாலியின் தம்பி, சூரியபகவானின் அருளால் பிறந்தவன்.

24. சுஷேணன் - வாலியின் மாமனார், வானர மருத்துவன், மேற்கு திசையில் சீதையை தேடச்சென்றவன்.

25. சூர்ப்பணகை - ராவணனின் தங்கை, கணவனை இழந்தவள்.

26. தசரதர் - ராமனின் தந்தை

27. ததிமுகன் - சுக்ரீவனின் சித்தப்பா, மதுவனம் என்று பகுதியின் பாதுகாவலர்

28. தாடகை - காட்டில் வசித்த அரக்கி, ராமனால் கொல்லப்பட்டவள்.

29. தாரை - வாலியின் மனைவி, அங்கதனின் தாய். அறிவில் சிறந்த வானர ராணி.

30. தான்யமாலினி - ராவணனின் இளைய மனைவி

31. திரிசடை - அரக்கிகளுள் நல்லவள், சீதைக்கு நம்பிக்கை ஊட்டியவள்.

32. திரிசிரஸ் - ராவணனின் தம்பியான கரனின் சேனாதிபதி.

33. நளன் - பொறியியல் அறிந்த வானர வீரன், விஸ்வகர்மாவின் மகன், கடலின் மீது இலங்கைக்கு பாலம் கட்டியவன்

34. நாரதர் - பிரம்மாவின் மனத்தில் பிறந்தவர், கலக முனிவர்.

35. நிகும்பன் - கும்பகர்ணனின் மகன்

36. நீலன் - வானர வீரன் நளனின் நண்பன், வானர சேனாதிபதி, அக்னி தேவனின் அருளால் பிறந்தவன்

37. பரசுராமர் - விஷ்ணுவின் அவதாரம், ஜமத்கனியின் மகன், ராமனுடன் போரிட்டவர்

38. பரத்வாஜர் - பிராயாகை அருகே ஆசிரமம் அமைத்திருந்த முனிவர்

39. பரதன் - கைகேயியின் மகன், ராமனின் தம்பி.

40. மந்தரை - கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த வேலைக்காரி, கூனி என்றும் சொல்வர்.

41. மதங்கர் - தவ முனிவர்

42. மண்டோதரி - தேவலோக சிற்பியான மயனின் மகள், ராவணனின் பட்டத்தரசி, இந்திரஜித்தின் தாய்.

43. மாரீசன், சுபாகு - தாடகையின் மகன்கள். ராமனால் வதம் செய்யப்பட்டவர்கள், மாரீசன் மாய மானாக வந்தவன்.

44. மால்யவான் - ராவணனின் தாய்வழிப்பாட்டன்.

45. மாதலி - இந்திரனின் தேரோட்டி

46. யுதாஜித் - கைகேயியின் தம்பி, பரதனின் தாய்மாமன்

47. ராவணன் - மிச்ரவா என்பரின் மகன், குபேரனின் தம்பி, புலஸ்திய முனிவரின் பேரன்.

48. ராமன் - ராமாயண கதாநாயகன்

49. ரிஷ்யசிருங்கர் - புத்திரகாமேஷ்டி செய்த முனிவர்.

50. ருமை - சுக்ரீவனின் மனைவி, வாலியால் கவரப்பட்டவள்.

51. லங்காதேவி - இலங்கையின் காவல் தெய்வம்

52. வசிஷ்டர் - தசரதனின் குலகுரு, அருந்ததியின் கணவர்.

53. மார்க்கண்டேயர், மவுத்கல்யர், வாமதேவர், காஷ்யபர், கார்த்தியாயனர், கவுதமர், ஜாபாலி - தசரதரின் மற்ற குருமார்கள்

54. வருணன் (சமுத்திரராஜன்) - கடலரசன், தன்மீது அணை கட்ட ராமனை அனுமதித்தவன்

55. வால்மீகி - ராமாயணத்தை எழுதியவர். ரத்னாகரன் என்பது இயற்பெயர், கொள்ளைக்காரனாக இருந்தவர், ராமனின் மகன் குசனுக்க ராமாயணம் போதித்தவர், சீதைக்கு அடைக்கலம் அளித்தவர்.

56. வாலி - இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன்.

57. விஸ்வாமித்ரர் - ராமனுக்கு அஸ்திரவித்தை போதித்தவர், சீதா - ராமன் திருமணத்திற்கு காரணமானவர்.

58. விராதன் - தண்டகவனத்தில் வசித்த அரக்கன், ராமனால் சாபம் தீர்ந்தவன்.

59. விபீஷணன் - ராவணனின் தம்பி, ராமனிடம் அடைக்கலம் அடைந்தவன்.

60. வினதன் - கிழக்குத்திசையில் சீதையை தேடச் சென்றவன்.

61. ஜடாயு - கழுகரசன் சம்பாதியின் தம்பி, தசரதனின் தோழன், சீதைக்காக ராவணனுடன் போராடி உயிர்நீத்தவன்.

62. ஜனகர் - சீதை, ஊர்மிளாவின் தந்தை.

63. ஊர்மிளா - லட்சுமணனின் மனைவி.

64. ஜாம்பவான் - கரடி வேந்தர், பிரம்மாவின் அருள்பெற்று பிறந்தவர்

65. அனுமான் - அஞ்சனை, கேசரி ஆகியோருக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தவன், ஆஞ்சநேயன், மாருதி ஆகியவை வேறு பெயர்கள்.

66. ஸ்வயம்பிரபை - குகையில் வாழ்ந்த தபஸ்வினி, குரங்குப் படையினருக்கு உணவிட்டவள்.

67. மாண்டவி - பரதனின் மனைவி.

68. சுருதகீர்த்தி - சத்ருக்கனனின் மனைவி.

                                               [Image: 0002048D.gif] uthudeer [Image: arsh.gif]                                 




பைத்தியம் பிடிக்காம இருக்க சில டிப்ஸ் !

ரொம்ப யோசிக்காதிங்க .


ரொம்ப ஆசைப்பாடதிங்க .


ரொம்ப பிரெண்ட்ஸ் வச்சிக்காதிங்க .


ரொம்ப படிக்காதிங்க (அதுக்குன்னு படிக்காம இருக்காதிங்க).


ரொம்ப கோபப்படாதிங்க .


ரொம்ப பேசாதிங்க.


வாய் வலிக்கும் அளவு சிரிக்கதிங்க.

[Image: prod_107_1682.gif] நட்புடன்.... uthudeer....Tongue                 




தெரிஞ்சிக்கோங்க!

** கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும் முன்னரே, ஹவாஸ் தீவுக்கு மக்கள் சுற்றுலா சென்று வந்துள்ளனர்.

** ஒட்டகச்சிவிங்கி நாக்கு ஒன்றரை அடி நீளத்துக்கு மேல் இருக்கும்.

** ஒட்டகத்தின் முதுகுப் பகுதி வளைந்திருந்தாலும், அதன் முதுகெலும்பு வளைவுகளில்லாமல் நேராக இருக்கும்.



******************* *****************************  ****************************

குடைக்குள்ள இம்புட்டு மேட்டரு .....Umbrella

[Image: umbrella.jpg]

ழையிலும், வெயிலிலும் நமக்கு உதவி செய்யும் நண்பன்தான் குடை. முற்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பெரிய அளவுடைய பலவிதமான இலைகளைக் குடையாகப் பயன்படுத்தினார்கள். பிற்பாடு புற்களாலும், வைக்கோல்களாலும், இலைகளாலும் அழகான குடைகளை உருவாக்கத் தொடங்கினார்கள். கிறிஸ்துவிற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சீனர்கள்தான் முதன் முதலாகத் துணியால் அமைந்த குடையைக் கண்டுபிடித்தார்கள்.

16- ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் குடைகள் புழக்கத்திற்கு வந்தபோது, குடைக்கு 'மஙஆதஉககஅ' என்ற பெயர் வந்தது. இந்தப் பெயர்,"நிழல்' என்ற அர்த்தமுடைய "அம்ப்ரா' எனும் லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. ஐரோப்பாவில் முதலில் பெண்கள்தான் குடைகளைப் பயன்படுத்தினார்கள். "ஜோனாஸ்ஹான்வே' எனும் பெர்சிய எழுத்தாளர்தான் குடையை ஆண்களுக்கிடையிலும் பரவச் செய்தார். தொடக்கத்தில் குடைகளை, மரத்துண்டுகள், மீன் முட்கள், பளபளப்பான கேன்வாஸ் துணிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தித்தான் உருவாக்கினார்கள்.

உலகிலேயே குடை விற்பனைக் கடை முதன் முதலில், 1830-ஆம் ஆண்டு லண்டனில் உள்ள நியூ ஆக்ஸ்போர்ட் தெருவில் திறக்கப்பட்டது. "ஜேம்ஸ் ஸ்மித் அன்ட் ஸன்ஸ் அம்ப்ரல்லா ஷாப்' என்பதுதான் அந்தக் கடையின் பெயர். ஸôமுவல் பாக்ஸ் என்பவர், ஸ்டீல் தண்டும் வில் கம்பிகளையும் உடைய புதிய குடையை 1852- ஆம் ஆண்டில் உருவாக்கினார். அதன் பிறகு நைலான் துணியால் உருவாக்கப்பட்ட குடைகள் விற்பனைக்கு வந்தன. இப்போது, பித்தானை அழுத்தினால் விரியவும் மடங்கவும் செய்கிற குடைகள் புழக்கத்தில் இருக்கின்றன.
[Image: umbrellasmall.jpg]



உலகின் உயரமான உணவகம் டுபாயில் திறப்பு-Purge Khalifa

[Image: 300buraj0337490.jpg]
லகிலேயே உயரமான கட்டிடமான டுபாயின் பார்ஜ் கலிபாவின் 122வது மாடியில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து 442 மீ உயரத்தில் இருக்கும் இது தான் உலகின் உயரமான உணவகம் ஆகும்.

இந்த உயரமான உணவகத்தின் பெயர் எட்மொஸ்பியர். 828 மீட்டர் உயரம் உள்ள பர்ஜ் கலிபாவின் 122வது மாடியில் அமைந்திருக்கும் இது நேற்று துவங்கப்பட்டது.

உயரமான இடத்தில் சாப்பிட விரும்புவோர் இந்த உணவகத்திற்குச் செல்லலாம். ஆனால் உயரத்திற்கேற்ப விலையும் சற்று அதிகம் தான்.

இந்த உணவகத்திற்கென பிரத்யேக லிப்ட் உள்ளது. இங்கு சுமார் 210 பேர் அமர்ந்து உண்ணலாம்.

இந்த சொகுசு உணவகத்தில் தனியாக டைனிங் பகுதியில் அமர்ந்து உணவருந்த விரும்புபவர்கள் நபர் ஒருவருக்கு சுமார் 20,000ஆயிரத்து செலவாகும். மேலும், மதிய வேளையில் தேநீரின் விலை சுமார் 11 ஆயிரம் ஆகும்.


************************************* ****************************************


ஆம்புலன்ஸ்..பற்றி சுவாரசிய தகவல் ...

நெப்போலியனின் குடும்ப மருத்துவரான "பாரன்லாரே' என்பவர்தான் 1792- ஆம் ஆண்டு ஆம்புலன்ûஸக் கண்டுபிடித்தார். போர்க்களத்தில் காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்காக, திறந்த உந்து வண்டிகளைத்தான் முதலில் பயன்படுத்தினார்கள். இந்த உந்து வண்டிகளை கரடுமுரடான சாலையில் கொண்டு செல்லும்போது வண்டி ஆடியது. இந்தக் காரணத்தால், வண்டியில் படுத்திருக்கும் காயமடைந்த வீரர்களும் அசைந்தாடினார்கள்.

அப்போது அவர்களுக்கு வலி அதிகமானது. இதைத் தவிர்ப்பதற்காக லாரே, உந்து வண்டியில் கம்பிச் சுருள்களைப் பொருத்தினார். 1796- ஆம் ஆண்டு பிரெஞ்சு ராணுவம், போரில் காயம்பட்டவர்களைக் கொண்டு செல்வதற்காக குதிரைகள் இழுத்துச் செல்லும் ஆம்புலன்ûஸ ஏற்படுத்தியது. 1900-ஆம் ஆண்டில் பிரெஞ்சு ராணுவம், மோட்டார் பொருத்தப்பட்ட ஆம்புலன்ûஸ உருவாக்கியது.

[Image: ambulance32076603229344.jpg]



****************************************************************************



இக்வானா...என்றால்...Iguana..
[Image: iguana-closeup.jpg]
மெரிக்காவிலும், அமைதிக் கடல் தீரங்களிலும் காணப்படுகின்ற ஒருவித பெரிய பல்லியின் பெயர்தான் இக்வானா. இது ஆறடிக்கும் அதிகமான நீளமுடையது. நம் நாட்டில் இருக்கும் அரணை மற்றும் ஓணானின் குடும்பத்தைச் சேர்ந்தது இது.

இக்வானாவில் பல வகைகள் இருக்கின்றன. சாதாரண இக்வானாக்கள், தண்ணீர் மீது கிளைத்திருக்கின்ற மரங்களின் மீதுதான் வசிக்கும். கரைகளில் உள்ள பொந்துகளில் முட்டையிடும். பெரும்பாலான நேரம் தண்ணீரிலேயே இருக்கின்ற மற்றொரு வகை இக்வானாக்கள் "கடல் இக்வானாக்கள்' என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் இந்தக் கடல் இக்வானாக்களுக்கு தண்ணீரின் அடியில் சுவாசிக்க முடியாது. சுவாசிப்பதற்கு தண்ணீருக்கு மேலேதான் வரவேண்டும்.

அதுவும் எப்போதாவது ஒரு முறை தண்ணீருக்கு மேலே வந்தால் போதும். ஏன் தெரியுமா? மிகவும் குறைவான இதயத் துடிப்புகள் கொண்ட பிராணிகள் இவை. அதனால் இவற்றிற்கு கொஞ்சம் ஆக்ஸிஜன் இருந்தாலே போதும். குளிர்காலத்தில் வெயில் காய்வதற்காகவும் இவை கரைக்கு வரும்.

பல்லிகளைப்போல இக்வானாக்களும் புழு பூச்சிகளைச் சாப்பிடும். ஆனால், இவற்றிற்கிடையில் தாவர உணவை மட்டுமே உண்ணும் இக்வானாக்களும் உண்டு. இக்வானாக்களிலேயே பெரிய உருவமுடையவைதான் தாவர உணவை உண்ணும். தாவிக் குதிப்பதில் இக்வானாக்கள் அபாரத் திறமை பெற்றவை. ஏதாவது ஆபத்து வருவதாக உணர்ந்தால், மரக்கிளையிலிருந்து அந்த நொடியே தாவும். ஏறத்தாழ இருபது அடி உயரத்திலிருந்து இப்படி இவற்றால் தாவ முடியும்.

**************************************************************************

 
 ஆ… ஆவ்….. கொட்டாவி!

[Image: yawning.png?w=500]
வழக்கமாக அப்பாவின் ஹிம்சை தாங்கமுடியாமல் கடனே என்று புத்தகத்தை வைத்துக்கொண்டு படிப்பதுபோல் பாவனை செய்யும்போது, சாப்பாட்டிற்குப் பிறகு, மதியம் முதல் வகுப்பில் ஆசிரியரின் பாடம் சுகமான தாலாட்டாகக் காதில் விழும்போது கொட்டாவி வருவது இயற்கை. பக்கத்தில் அமர்ந்திருப்பவர் ஒரு கொட்டாவி விட்டால் நம்மை அறியாமல் அது தொற்றிக்கொள்கிறது. நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம்? கொஞ்சம் கொட்டாவி விடாமல் படியுங்கள்!கொட்டாவி என்பது ஒரு அனிச்சைச் செயல். கொட்டாவி விடும்போது நாம் வாயை அகலத் திறந்து ஆறு விநாடிகளுக்கு எவ்வளவு காற்றை உள்ளே இழுக்க முடியுமோ அந்த அளவுக்கு இழுத்துக் கொள்கிறோம். அதெப்படிக் கொட்டாவியை அனிச்சைச் செயல் என்று சொல்ல முடியும் என்று கேட்கலாம். கருவில் வளரும் 11 வார சிசுகூடக் கொட்டாவி விடுகிறது என்று ஆராய்ச்சி சொல்கிறதே! நீங்கள் கொட்டாவி விடும்போது உங்கள் உடல் ஓய்வு நிலையிலோ, பலவீனமான நிலையிலோ இருப்பதில்லை. முதலில் உங்கள் வாய் அகலத் திறந்து தாடை கீழே செல்கிறது. அதனால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியுமோ அவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடிகிறது. கொட்டாவி விடும்போது உங்கள் இதயத்துடிப்பு 30 சதவிகிதம் வரை அதிகமாகலாம்.

உடல் சோர்வினாலோ, களைப்பினாலோ அல்லது தூக்கம் வரும்போதோ கொட்டாவி விடுவதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இவை மட்டும் கொட்டாவிக்கான காரணங்கள் இல்லை. நமது உடலே இயற்கையாக, அதிகமான பிராணவாயு நமக்குத் தேவைப்படும் போதோ அல்லது உள்ளே சேர்ந்திருக்கும் கரியமில வாயுவை வெளியேற்றும் போதோ கொட்டாவி விடச் செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

சில ஆராய்ச்சியாளர்கள் கொட்டாவி என்பது நமது மூதாதையர்கள் வாயைத் திறந்து, பற்களை வெளிக்காட்டி மற்றவர்களை பயமுறுத்துவதற்காகக் கையாண்ட ஆயுதம் என்றும், சிலர் குட்டிபோட்டுப் பாலூட்டும் இனத்தைச் சார்ந்த பூனை, நாய், மீன்கள் போன்று அனைத்துமே கொட்டாவி விடுவதால் இது ஒரு அனிச்சைச் செயல் என்றும் சொல்கிறார்கள். இன்னுமொரு ஆராய்ச்சி கொட்டாவி நமது நுரையீரலிலுள்ள எண்ணை போன்ற பொருளை உறைந்துவிடாமல் தடுக்க வாகனங்களுக்குக் கிரீஸ் போடுவது போன்ற ஒரு பாதுகாப்புச் செயல் என்றும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இந்தக் கருத்துப்படி கொட்டாவி விடவில்லையென்றால் மூச்சை இழுத்து விடுவது கடினமாகலாம.்.
எப்படியோ, மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இந்தக் கொட்டாவிப் பழக்கம் இருந்து வந்தாலும் இன்னும் ஏன் இந்தக் கொட்டாவி வருகிறது என்ற ஆராய்ச்சி முடிவடையவில்லை


*************************************************************************
பொது அறிவு...wow....



நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு?
- ஈத்தேன்.
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
- அம்பேத்கர்.
> 2010 ஆண்டின் உலக கால்பந்துப் போட்டியின் முடிவுகளை கணித்து சர்ச்சைக்கு உள்ளன octopus இன் பெயர்?
- பால்.
> இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை?
- NH 7.
> ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
ஜூலியா கில்போர்ட்.
> கோவா வின் பிராந்திய மொழி எது?
- கொன்கனி.
> தேசிய மனித உரிமை ஆணையம் இந்தியாவில் அமைக்கப்பட்ட ஆண்டு?
- 1993.
> இன்போசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வியகம் எங்கு அமைந்துள்ளது?
- மைசூர்.
> ஈராக் போர் தொடர்பான அமெரிக்க ராணுவத்தின் ரகசிய விவரங்களை வெளியிட்ட இணையத்தளம்?
- விகிலீக்ஸ்.
> 2009 ஆண்டிற்கென இந்திரா காந்தி தேசிய மேம்பாடு விருது யாருக்கு வழங்கப்பட்டது?
- எ ஆர் ரஹ்மான் மற்றும் சென்னையில் அமைதுள்ள ராமகிருஷ்ணா மடம்.


பிறப்பு விகிதமே இல்லாத நாடு - வாடிகன் சிட்டி

உலகில் பெரிய பங்குச்சந்தை - நியூயார்க்

வருடம் தொடும் பூமில் புதைந்து வரும் நாடு -நெதர்லாந்து

டாக்ஸி அதிகம் உள்ள நாடு - மெக்ஸிகோ

கண்ணாடி தொழிலுக்கு பெயர் பெற்ற நாடு - பெல்ஜியம்

படகு வடிவில் அமைத்து உள்ள நாடு - இத்தாலி

கடல் மட்டத்துக்கு கீழே உள்ள நாடு - டென்மார்க்

வருடம் தோறும் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் நாடு - சுவிட்சர்லாந்து

உலகில் மிக பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு - ஐஸ்லாந்து

நீரிலும் , நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம் - ஹோவர் கிராக்ப்ட்

தினசரி பத்திரிக்கை இல்லாத , படிக்க தெரியாத மக்கள் உள்ள நாடு - காம்பியா

உலகில் தட்டையான , சமதளமான நாடு - மாலைதீவு

உலக மக்கள் அமைதியாக வாழ்வதற்கு உகந்த நாடு - நோர்வே

உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு - நூடில்ஸ்

கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை அறிமுகம் செய்த நாடு - நோர்வே

ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு நாடு - லெசதோ ( ஆபிரிக்கா )

ஒரே நாடக இருக்கும் கண்டம் - அவுஸ்ரேலியா

பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் - ரொயிட்டர்

தனக்கு என்று தாய் மொழி இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து

பத்திரிகை வெளிவராத நாடு - திபெத்

ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ

வேர் இல்லாத தாவரம் - இலுப்பை

உலகில் வறுமையான நாடு - ருவாண்டா

விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து

ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4

ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ

அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204

உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு - பனாமா


* உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்

* மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம்

* 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - thorth

* உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே
(தென்அமெரிக்கா )

* பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா

* சத்தில்லாத உணவு - நீர்

* கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை

* பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 தாயகம் - மெச்சிக்கோ

* அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்

* உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு

* சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்

* கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி

* அச்சுப்பிழை உள்ள நாணயங்களுக்கு வழங்கப்படும் பெயர் - fido

* கால்ஷீட் என்பது - எட்டு மணி நேரத்திற்கு நடிப்பதற்கான ஒப்பந்தம்

* விமானத்தில் செல்பவர்களுக்கு வானவில் தெரியும் வடிவம் - வட்டம்










* ஆறுகள் இல்லாத நாடு - அரேபியா


* திருமணத்தின் போது தேசிய கீதம் கட்டாயமாக பாடப்படும் நாடு - நைஜீரியா


* பெண்களுக்கு கட்டாயம் இராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு - இஸ்ரேல்


* கூடிய வானொலி நிலையங்கள் கொண்ட நாடு - அமெரிக்கா


* விமான விபத்துக்களின் காரணத்தை கண்டறிய உதவும் சாதனம் - கருப்பு பெட்டி நிறம் - மஞ்சள் / செம்மஞ்சள் )


* ஒரு தலைமுறை இடைவெளி என்பது - 28 வருடங்கள்


* பல்வேறு இசைக்கருவி , புத்தளிப்புக் கருவிகளை ஒன்றாக வாசித்தல் - பல்லியம்


* உய்ரினங்கள் தோன்றியதாக கருதப்படும் வருடம் - பூமி தோன்றி 150 கோடி வருடங்களின் பின்


* நாட்டின் பெயரை குறிப்பிடாது முத்திரை வெளியிடும் நாடு - இங்கிலாந்து


* பாரளுமன்றங்களின் தாய் என்று சிறப்பிக்கப்படும் பாராளுமன்றம் - பிரிட்டன்


* உலகின் முதல் பெண் ஜனாதிபதி - மரியா எச்தொலோ பெரோன் ( ஆஜன்டீனா 1974 )


* உலகிலே மிக அதிகமான கிளைகளை கொண்ட வங்கி - ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியா


* பழங்களின் அரசன் - மாம்பழம்


* முள்ளங்கி , கரட் கிழங்குகள் அல்ல - வேர்கள் ஆகும்


* காகமே இல்லாத நாடு - நீயுசிலாந்து


* உலகில் மிகப் பழமையான தேசிய கீதம் உள்ள நாடு - ஜப்பான்


* உலகிலே வரிவிகிதம் கூடுதலாக உள்ள நாடு - நோர்வே


* யானைகள் அதிகமாக உள்ள நாடு - சிம்பாப்வே


* கடற்கரை , ரயில் ,சாலை வசதி இல்லாத நாடு - லாவோஸ்


* நிப்பொன் என்ற சொல் பொறிக்கப்படும் முத்திரைக்குரிய நாடு - ஜப்பான்


* பத்து வருடங்களுக்கு ஒரு முறை பிறந்தநாள் கொண்டாடும்
நாட்டினர் - சீனர்



* கருணை கொலையை சட்டபூர்வமாக அனுமதித்த முதல் நாடு - நெதர்லாந்து 


****************************************************

முதல் மனிதன் தோன்றியது எங்கே?ஆசியாவில்...வரலாற்றை திருத்தும் புதிய முடிவு

உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான்’ என, இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இதுநாள் வரையில், கடந்த இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் என்ற இனத்தில் இருந்துதான் நவீன மனிதன் தோன்றினான் என்றும், முதன்முதலில் ஆப்ரிக்காவில் தோன்றிய இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் படிப்படியாக, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்பட்டு வந்தது.

[Image: images?q=tbn:ANd9GcS7uc7kDcpDyODEKkkVpNy...MyvFP1ki4d]

[Image: images?q=tbn:ANd9GcQcaEJx1zvPk9j_5KxmUO9...HkQGfgTYw3]


சமீபத்தில், இஸ்ரேல் நாட்டில் உள்ள பென்-குரியான் விமான நிலையம் அருகில் இருக்கும் குகை ஒன்றில் (குசேம்), அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் உடல் படிவங்களை கண்டெடுத்துள்ளனர்.இதுகுறித்து டெல் அவிவ் பல்கலை விஞ்ஞானிகள் கூறியதாவது:நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன்களின், உடல் படிவங்கள் “குசேம்’ குகையில் கிடைத்துள்ளன. மனித பல் போன்றுள்ள இந்த படிமம் மத்திய “பிளைஸ்தோகின்’ காலத்தை சேர்ந்தது.

[Image: images?q=tbn:ANd9GcQ0QS0EDD_BnTZGP49MnXk...dPp5rPoo2F]

இதை ஆய்வு செய்ததில், உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான் என தெரிய வந்துள்ளது. மேலும், மேற்கு ஆசியாவில் இருந்து தான் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியுள்ளான்.இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.ஆப்ரிக்காவில் தான் முதல் ஹோமோ சேப்பியன் தோன்றினான் எனவும், உலகின் தாய்வீடு ஆப்ரிக்கா எனவும் கூறப்பட்டு வந்த நிலையில், இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகளின் புதிய முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் மூலம், நவீனகால மனிதனின் தோற்றம் குறித்த வரலாறு திருத்தி எழுதப்படும் என தெரிகிறது.

[Image: images?q=tbn:ANd9GcS0v_lSnHnx81tVNv1c4dr...rOoDK20aOA]

[Image: images?q=tbn:ANd9GcT5PBLcy7SHUcRaoP3EIjw...sUrgb53bjQ]

[Image: prod_107_1682.gif]