Monday, May 2, 2011

ஒசாமாவுக்கு துப்பாக்கி சிகிட்சை

அருமையான துப்பாக்கி சிகிட்சை கொடுத்து இருக்கிறது ஒசாமாவுக்கு அமெரிக்க ராணுவம் வாழ்த்துக்கள் ..,

இருந்தாலும் பதற்றம் அதிகரிக்கிறது இதன் எதிர்வினையை  எண்ணி..,
ஒசாமா இன்னும்  நிறைய இருக்கிறார்கள்....

ஸாரி..உருவாக்கப்படுகிறார்கள்அமெரிக்கர்கள் இந்த சந்தோசத்தை கொண்டாடும் இவ்வேளையில் அமெரிக்கா கொண்டுள்ள சில வீணான காரியங்களை (ஏஹாதிபத்தியம்)  நிறுத்த வேண்டும் நாட்டாமை பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் மற்ற நாடுகளில்  பார்ப்பதை தன் நாட்டிலும் பார்க்கவேண்டும்   


இரட்டை கோபுர அழிவிற்கு 3000 பேரை கொன்ற ஒசாமா பயங்கரவாதி என்றால் அதை அல்லது அது போன்ற பலகாரணங்கள் சொல்லி மற்ற நாட்டு மக்கள் மீது போர் புரிந்து அங்குள்ள அப்பாவி மக்களும் சாக காரணமாயிருந்த அமெரிக்காவை எதில் சேர்ப்பது ? 


இந்திய போன்ற சிறந்த நாடுகள் அமெரிக்காவிற்கு ஜால்ரா போடுவதை நிறுத்திவிட்டு இது பற்றி சிறந்த முடிவை எடுப்பதன் மூலம் மட்டுமே பயங்கரவாதம் சிறிது கட்டுக்கு கொண்டு வரப்படும் என்பது என்னுடைய கருத்து ...,




அன்புடன் 
உதுமான் 


No comments:

Post a Comment