Wednesday, April 27, 2011

இந்திய அணி வீரர்களுக்கு பரிசு தொகை 2 கோடியாக அதிகரிப்பு



உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி  வீரர்களுக்கு பரிசு தொகை 2 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதறகான அறிவிப்பை கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் இன்று வெளியிட்டது.
சென்ற மாதம் நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்காக அணி வீரர்கள் அனைவருக்கும் தலா 1 கோடி ரூபாய் பரிசு தொகையாக பிசிசிஐ உடனடியாக அறிவித்தது. இது மிகவும் குறைவான தொகை என அணி வீரர்கள் கருதுவதாக சில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. மேலும் அணி வீரர்கள் அனைவருக்கும் தலா 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என அணியின் மூத்த வீரர்கள் பிசிசிஐக்கு தெரிவித்ததாகவும் செய்தி வெளியாகியிருந்தது.
இது குறித்த கருத்து தெரிவித்த பிசிசிஐ செயலர் சீனிவாசன், அவ்வாறான செய்திகள் உணமையில்லை என்றும், பரிசு தொகை உயர்த்தப்பட்டது குறித்த முடிவிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றார்.

No comments:

Post a Comment